– தனுஜா ஜெயராமன்.சமீபத்தில் ஒரு தனியார் தொலைக்காட்சியின் பழைய நிகழ்ச்சி ஒன்றை பார்க்க நேர்ந்தது. அதில் எனக்குக் கிடைத்தது ஆச்சர்யமும் அதிர்ச்சியும்… அதாவது வளர்ப்புப் பிராணிகள் (பெட்) வளர்ப்பவர்கள் குறித்த நிகழ்ச்சி அது. வழக்கமாக வீடுகளில் ஒன்றிரண்டு நாய் வளர்ப்பவர்களைக் கண்டிருக்கிறேன். பூனை அல்லது கிளி வளர்ப்பவர்களைப் பார்த்திருக்கிறேன். ஆனால், இத்தனை பிராணிகளை வளர்க்க முடியுமா? என வியப்பின் எல்லைக்கே சென்றுவிட்டேன்..ஒருவர் இருபது பாம்புகளை வளர்க்கிறார். பெயர் தெரியாத வெளிநாட்டு பறவைகள், ஆமைகள், ராட்சத பல்லிகள், குரங்குகள் என ஒன்றிரண்டல்ல, இருபது முப்பது வளர்க்கிறார்கள். அது ஆச்சர்யம் மட்டுமல்ல பெருத்த அதிர்ச்சியாகவும் இருந்தது. ஒரு பெண்மணி, கணவருடன் சேர்ந்து இருபதிற்கும் மேற்பட்ட நாட்டு நாய்களை வளர்க்கிறார்..இதனை கருணை, ஈகை, இரக்கம் எனப் பெயரிட்டு அவர்களேஅழைத்துக்கொள்கிறார்கள். இதற்காக மாதம்தோறும் இவர்கள் செலவழிக்கும் தொகை அதிகபட்சமாக எண்பதாயிரத்திலிருந்து குறைந்தப்பட்சமாக பத்தாயிரம் வரையாம். சிலர்தானே சம்பாதிக் கிறார்கள். சிலர் இந்தச் செலவினைப் பெற்றவர்கள் தலையில் கட்டுகிறார்கள்.ஒரு இளம் வயது பெண், தான் வளர்க்கும் நாய்களுக்காக, தன் திருமணம் குறித்து யோசிப்பேன் என்கிறாள். திருமணத்திற்குப் பிறகு கணவன் நாய் வளர்ப்பதை ஆட்சேபித்தால் கணவனை விவாகரத்து செய்வேன் என்கிறாள்..இன்னொரு நடுத்தர வயதை தாண்டிய நபர் மாதம் இரண்டு லட்சம் சம்பாதிப்பவர், தனது இருபது நாய்களுக்காக மாதம் எண்பதாயிரம் வரை செலவழிப்பவர் . திருமணம் ஆனால் தனக்கு வரப்போகும் மனைவி இதனை ஒப்புக்கொள்ள மாட்டார்கள் என இதுவரை திருமணம் செய்துகொள்ளாமல் தனியாகவே வாழ்ந்து வருகிறார்..தனது கணவருடன் நாட்டு நாய்களை வளர்த்து வரும் பெண்மணி நடுத்தர வயதை தாண்டியவர் இதற்காக குழந்தையே பெற்றுக்கொள்வதில்லை என முடிவு செய்திருக்கிறார்..இதில் சிலர் அதேபோன்ற எதிர்பாலின வளர்ப்பு பிராணி ஆர்வலரைத் திருமணம் செய்துகொண்டு குழந்தைகள் பெற்று, அந்த குழந்தைகள் இராட்சத பல்லிகளுடனும், பலவித பாம்புகளுடனும், குரங்குகளுடனும் சேர்த்து விளையாடி மகிழ்வதை பெருமிதமாக சொல்லிக்கொள்கிறார்கள்..இவர்கள் யாரும் பண்ணை அமைத்து, தனியாக இதனை வளர்ப்பதில்லை. தங்கள் வீடுகளுக்குள் வைத்து வீட்டு மனிதர்களாக வளர்க்கிறார்கள் என்பது பேராச்சர்யம். தங்கள் குழந்தைகளும், வளர்ப்பு பிராணிகளும் சமம் என கருதுவதைக்கூடப் பெருமையாகவே நினைத்துக்கொள்கிறார்கள்..ஆவேசமாக பேசுகிறார்கள், உணர்ச்சிவசப்படுகிறார்கள். நாய் என்று சொல்லாமல் தமது குழந்தைகள் என்கிறார்கள். மனிதர்களிடமிருந்து விலகி தனித்து வாழ்கிறார்கள். மனிதர்களை மனித உறவுகளைத் துச்சமாகப் பேசுகிறார்கள். இவர்களின் உலகங்கங்கள் தனியாக இயங்குகிறது..பல கிடுக்கிப்பிடி கேள்விகளுக்கு பிறகு, பலர் கருணை என்பதிலிருந்து இடம்மாறி விற்பனை என்பதின் உள்நோக்கத்தைத் தடம் மாறாமல் சொல்லிவிடுகிறார்கள். பல வெளிநாட்டுப் பறவைகள், வெளிநாட்டு நாய்கள் இலட்சம் வரை விலைபோகிறதாம். செலவெல்லாம் போக 50% லாபம் என்கிறார்கள். இதுபோன்ற விற்பனையாளர்களைத் தவிர்த்து மீதமுள்ள பலர் பரிதாபத்திற்குரியவர்களாக இருக்கிறார்கள். ஒருவர் பலத்தரப்பட்ட மீன்களை வளர்க்க ஒரு நாளைக்கு 2000 லிட்டர் தண்ணீரைச் செல வழிக்கிறார். இலவசமாக அரசு குளத்திலிருந்துப் பயன்படுத்தி வருகிறார்..மனநல மருத்துவர் நேரிடையாகவே இவர்களைப் போதைக்கு அடிமையானவர்கள் என்று ஒரே போடாக போட்டுவிட்டார். ஒரு சிகரெட் இருபது சிகரெட்டாக மாறுவதுபோல… ஒரு நாய் இருபது, முப்பது என மாறுவது போதையின் உச்சக்கட்டம் என உளவியல் மருத்துவம் சொல்கிறதாம்… இவர்களில் பலரும் மனிதர்களிடமிருந்து விலகி, வளர்ப்பு பிராணிகளிடம் மட்டுமே நெருங்கிப் பழகுகிறார்கள். வாழ்வில் தனித்து விடப்படவர்களுக்கு உளவியல் ஆலோசனைகளாக பெட் வளர்ப்பதை பரிந்துரைக்கிறார்களாம் மனநல மருத்துவர்கள். ஆனால் பெட் வளர்ப்பதாலேயே மற்ற மனிதர்களிடமிருந்து விலகி இருப்பவர்கள் மனநலம் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள் என்கிறார்கள் அதே மனநல மருத்துவர்கள்..கருணை, ஈகை என ஆவேசமாக பேசிய ஒரு பெண் தனது இருபது நாய்களுக்கும் ஒரு நாளைக்கு போடக்கூடிய இறைச்சியின் அளவு எவ்வளவு தெரியுமா? கருணை என்பது நாய்களுக்கு மட்டுமா? ஆடு, மாடு, கோழி இவைகளுக்குக் கிடையாதா? கருணை பற்றி மற்றவர்களுக்கு வகுப்பெடுக்கும் இவர்களில் எவ்வளவு பேர் புலால் உணவை மறுக்கிறார்கள்?.பெரும்பாலான வளர்ப்பு பிராணி ஆர்வலர்கள் வீடெங்கும் நாய்வாசம் சூழ, பறவைகளின் விலங்குகளின் எச்சங்கள் சூழ வாழ்வது நார்மலான வாழ்க்கையா? என்பது புரியவில்லை..இதனால் வீசிங் உட்பட பல்வேறு சுவாசக்கோளாறுகள் அவர்களுக்கும் அவர்களை பெற்ற அல்லது அவர்களுக்குப் பிறந்த குழந்தைகளுக்கும் வருவது குறித்த கவலைகள் ஏதும் அற்றவர்களாகவே வலம் வருகிறார்கள். இவர்கள் பலர் சிறுவயது முதலே இவர்களின் பெற்றவர்களால் ஒன்றிரண்டு வளர்ப்பு பிராணிகளோடு நெருங்கி பழகியவர்களே அல்லது அப்படி பழக்கப்படுத்தபட்டவர்களே!.சுமார் ஆயிரம் சதுர அடி வீடுகளில் பல எண்ணிக்கையில் நாய்களையோ, விலங்குகளையோ, பறவைகளையோ மூச்சு மூட்ட அடைத்து வைப்பது கருணையில் வருமா அல்லது இரக்கத்தில் சேர்த்தியா?.பொதுவாக இயற்கையின் நியதியாக விலங்குகளோ பறவைகளோ தன் உணவை, தானே சேகரித்துக்கொள்ளும் ஆற்றலையும், வலிமையையும் பெற்றவைதானே! அதனை கூண்டில் அடைத்து வைத்து உணவு தர நாம் யார்? அதன் சுதந்திரத்தைப் பறித்துவிட்டு கருணைப் பற்றி வகுப்பெடுக்கிறார்கள். நம்மை யாராவது அடைத்து வைத்து மூன்று வேளை பாலும் தேனுமாக உணவுகளை வேளாவேளைக்குத் தந்துவிட்டால் மகிழ்ச்சியாக அடைந்துக் கிடப்போமா? அப்போது இதற்கு மட்டும் ஏனிந்த நிலை?.கொடைக்கானல் மலையில் கீழே இறங்கும் போது வனவிலங்குகள் துறை விளம்பர பலகை ஒன்றை வைத்திருக்கிறார்கள். அது என்னவென்று தெரியுமா? தயவுசெய்து குரங்குகளுக்கு உணவளிக்காதீர்கள். அவர்களின் வாழ்வியல் முறைகளை மாற்றாதீர்கள் என்று… எவ்வளவு நிஜம்!.உண்மையில் பிராணிகள் மீதான காதலென்பது அதனைச் சுதந்திரமாக உலவவிடுவதே… அதன் வாழ்வியல் முறைகளிலிருந்து மாற்றாமல் இருப்பதே. இயற்கையின் சூட்சமத்தைச் சுழற்றிப் போடாமல் இருப்பதே… அதன் வாழ்விடங்களை நாம் ஆக்கிரமித்துக் கொள்ளாமல் இருப்பதே…காடு, மலை என இயற்கையின் கொடையை அழிக்காமல் பாதுகாப்பதே … மரங்களை வெட்டி அதன் வயிற்றில் அடிக்காமல் இருப்பதே… நமது சுயநலங்களுக்காக கூட்டில், வீட்டில் வைத்து அடைப்பது அல்ல!.என்ன தோழிகளே! நான் சொல்வது சரிதானே?
– தனுஜா ஜெயராமன்.சமீபத்தில் ஒரு தனியார் தொலைக்காட்சியின் பழைய நிகழ்ச்சி ஒன்றை பார்க்க நேர்ந்தது. அதில் எனக்குக் கிடைத்தது ஆச்சர்யமும் அதிர்ச்சியும்… அதாவது வளர்ப்புப் பிராணிகள் (பெட்) வளர்ப்பவர்கள் குறித்த நிகழ்ச்சி அது. வழக்கமாக வீடுகளில் ஒன்றிரண்டு நாய் வளர்ப்பவர்களைக் கண்டிருக்கிறேன். பூனை அல்லது கிளி வளர்ப்பவர்களைப் பார்த்திருக்கிறேன். ஆனால், இத்தனை பிராணிகளை வளர்க்க முடியுமா? என வியப்பின் எல்லைக்கே சென்றுவிட்டேன்..ஒருவர் இருபது பாம்புகளை வளர்க்கிறார். பெயர் தெரியாத வெளிநாட்டு பறவைகள், ஆமைகள், ராட்சத பல்லிகள், குரங்குகள் என ஒன்றிரண்டல்ல, இருபது முப்பது வளர்க்கிறார்கள். அது ஆச்சர்யம் மட்டுமல்ல பெருத்த அதிர்ச்சியாகவும் இருந்தது. ஒரு பெண்மணி, கணவருடன் சேர்ந்து இருபதிற்கும் மேற்பட்ட நாட்டு நாய்களை வளர்க்கிறார்..இதனை கருணை, ஈகை, இரக்கம் எனப் பெயரிட்டு அவர்களேஅழைத்துக்கொள்கிறார்கள். இதற்காக மாதம்தோறும் இவர்கள் செலவழிக்கும் தொகை அதிகபட்சமாக எண்பதாயிரத்திலிருந்து குறைந்தப்பட்சமாக பத்தாயிரம் வரையாம். சிலர்தானே சம்பாதிக் கிறார்கள். சிலர் இந்தச் செலவினைப் பெற்றவர்கள் தலையில் கட்டுகிறார்கள்.ஒரு இளம் வயது பெண், தான் வளர்க்கும் நாய்களுக்காக, தன் திருமணம் குறித்து யோசிப்பேன் என்கிறாள். திருமணத்திற்குப் பிறகு கணவன் நாய் வளர்ப்பதை ஆட்சேபித்தால் கணவனை விவாகரத்து செய்வேன் என்கிறாள்..இன்னொரு நடுத்தர வயதை தாண்டிய நபர் மாதம் இரண்டு லட்சம் சம்பாதிப்பவர், தனது இருபது நாய்களுக்காக மாதம் எண்பதாயிரம் வரை செலவழிப்பவர் . திருமணம் ஆனால் தனக்கு வரப்போகும் மனைவி இதனை ஒப்புக்கொள்ள மாட்டார்கள் என இதுவரை திருமணம் செய்துகொள்ளாமல் தனியாகவே வாழ்ந்து வருகிறார்..தனது கணவருடன் நாட்டு நாய்களை வளர்த்து வரும் பெண்மணி நடுத்தர வயதை தாண்டியவர் இதற்காக குழந்தையே பெற்றுக்கொள்வதில்லை என முடிவு செய்திருக்கிறார்..இதில் சிலர் அதேபோன்ற எதிர்பாலின வளர்ப்பு பிராணி ஆர்வலரைத் திருமணம் செய்துகொண்டு குழந்தைகள் பெற்று, அந்த குழந்தைகள் இராட்சத பல்லிகளுடனும், பலவித பாம்புகளுடனும், குரங்குகளுடனும் சேர்த்து விளையாடி மகிழ்வதை பெருமிதமாக சொல்லிக்கொள்கிறார்கள்..இவர்கள் யாரும் பண்ணை அமைத்து, தனியாக இதனை வளர்ப்பதில்லை. தங்கள் வீடுகளுக்குள் வைத்து வீட்டு மனிதர்களாக வளர்க்கிறார்கள் என்பது பேராச்சர்யம். தங்கள் குழந்தைகளும், வளர்ப்பு பிராணிகளும் சமம் என கருதுவதைக்கூடப் பெருமையாகவே நினைத்துக்கொள்கிறார்கள்..ஆவேசமாக பேசுகிறார்கள், உணர்ச்சிவசப்படுகிறார்கள். நாய் என்று சொல்லாமல் தமது குழந்தைகள் என்கிறார்கள். மனிதர்களிடமிருந்து விலகி தனித்து வாழ்கிறார்கள். மனிதர்களை மனித உறவுகளைத் துச்சமாகப் பேசுகிறார்கள். இவர்களின் உலகங்கங்கள் தனியாக இயங்குகிறது..பல கிடுக்கிப்பிடி கேள்விகளுக்கு பிறகு, பலர் கருணை என்பதிலிருந்து இடம்மாறி விற்பனை என்பதின் உள்நோக்கத்தைத் தடம் மாறாமல் சொல்லிவிடுகிறார்கள். பல வெளிநாட்டுப் பறவைகள், வெளிநாட்டு நாய்கள் இலட்சம் வரை விலைபோகிறதாம். செலவெல்லாம் போக 50% லாபம் என்கிறார்கள். இதுபோன்ற விற்பனையாளர்களைத் தவிர்த்து மீதமுள்ள பலர் பரிதாபத்திற்குரியவர்களாக இருக்கிறார்கள். ஒருவர் பலத்தரப்பட்ட மீன்களை வளர்க்க ஒரு நாளைக்கு 2000 லிட்டர் தண்ணீரைச் செல வழிக்கிறார். இலவசமாக அரசு குளத்திலிருந்துப் பயன்படுத்தி வருகிறார்..மனநல மருத்துவர் நேரிடையாகவே இவர்களைப் போதைக்கு அடிமையானவர்கள் என்று ஒரே போடாக போட்டுவிட்டார். ஒரு சிகரெட் இருபது சிகரெட்டாக மாறுவதுபோல… ஒரு நாய் இருபது, முப்பது என மாறுவது போதையின் உச்சக்கட்டம் என உளவியல் மருத்துவம் சொல்கிறதாம்… இவர்களில் பலரும் மனிதர்களிடமிருந்து விலகி, வளர்ப்பு பிராணிகளிடம் மட்டுமே நெருங்கிப் பழகுகிறார்கள். வாழ்வில் தனித்து விடப்படவர்களுக்கு உளவியல் ஆலோசனைகளாக பெட் வளர்ப்பதை பரிந்துரைக்கிறார்களாம் மனநல மருத்துவர்கள். ஆனால் பெட் வளர்ப்பதாலேயே மற்ற மனிதர்களிடமிருந்து விலகி இருப்பவர்கள் மனநலம் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள் என்கிறார்கள் அதே மனநல மருத்துவர்கள்..கருணை, ஈகை என ஆவேசமாக பேசிய ஒரு பெண் தனது இருபது நாய்களுக்கும் ஒரு நாளைக்கு போடக்கூடிய இறைச்சியின் அளவு எவ்வளவு தெரியுமா? கருணை என்பது நாய்களுக்கு மட்டுமா? ஆடு, மாடு, கோழி இவைகளுக்குக் கிடையாதா? கருணை பற்றி மற்றவர்களுக்கு வகுப்பெடுக்கும் இவர்களில் எவ்வளவு பேர் புலால் உணவை மறுக்கிறார்கள்?.பெரும்பாலான வளர்ப்பு பிராணி ஆர்வலர்கள் வீடெங்கும் நாய்வாசம் சூழ, பறவைகளின் விலங்குகளின் எச்சங்கள் சூழ வாழ்வது நார்மலான வாழ்க்கையா? என்பது புரியவில்லை..இதனால் வீசிங் உட்பட பல்வேறு சுவாசக்கோளாறுகள் அவர்களுக்கும் அவர்களை பெற்ற அல்லது அவர்களுக்குப் பிறந்த குழந்தைகளுக்கும் வருவது குறித்த கவலைகள் ஏதும் அற்றவர்களாகவே வலம் வருகிறார்கள். இவர்கள் பலர் சிறுவயது முதலே இவர்களின் பெற்றவர்களால் ஒன்றிரண்டு வளர்ப்பு பிராணிகளோடு நெருங்கி பழகியவர்களே அல்லது அப்படி பழக்கப்படுத்தபட்டவர்களே!.சுமார் ஆயிரம் சதுர அடி வீடுகளில் பல எண்ணிக்கையில் நாய்களையோ, விலங்குகளையோ, பறவைகளையோ மூச்சு மூட்ட அடைத்து வைப்பது கருணையில் வருமா அல்லது இரக்கத்தில் சேர்த்தியா?.பொதுவாக இயற்கையின் நியதியாக விலங்குகளோ பறவைகளோ தன் உணவை, தானே சேகரித்துக்கொள்ளும் ஆற்றலையும், வலிமையையும் பெற்றவைதானே! அதனை கூண்டில் அடைத்து வைத்து உணவு தர நாம் யார்? அதன் சுதந்திரத்தைப் பறித்துவிட்டு கருணைப் பற்றி வகுப்பெடுக்கிறார்கள். நம்மை யாராவது அடைத்து வைத்து மூன்று வேளை பாலும் தேனுமாக உணவுகளை வேளாவேளைக்குத் தந்துவிட்டால் மகிழ்ச்சியாக அடைந்துக் கிடப்போமா? அப்போது இதற்கு மட்டும் ஏனிந்த நிலை?.கொடைக்கானல் மலையில் கீழே இறங்கும் போது வனவிலங்குகள் துறை விளம்பர பலகை ஒன்றை வைத்திருக்கிறார்கள். அது என்னவென்று தெரியுமா? தயவுசெய்து குரங்குகளுக்கு உணவளிக்காதீர்கள். அவர்களின் வாழ்வியல் முறைகளை மாற்றாதீர்கள் என்று… எவ்வளவு நிஜம்!.உண்மையில் பிராணிகள் மீதான காதலென்பது அதனைச் சுதந்திரமாக உலவவிடுவதே… அதன் வாழ்வியல் முறைகளிலிருந்து மாற்றாமல் இருப்பதே. இயற்கையின் சூட்சமத்தைச் சுழற்றிப் போடாமல் இருப்பதே… அதன் வாழ்விடங்களை நாம் ஆக்கிரமித்துக் கொள்ளாமல் இருப்பதே…காடு, மலை என இயற்கையின் கொடையை அழிக்காமல் பாதுகாப்பதே … மரங்களை வெட்டி அதன் வயிற்றில் அடிக்காமல் இருப்பதே… நமது சுயநலங்களுக்காக கூட்டில், வீட்டில் வைத்து அடைப்பது அல்ல!.என்ன தோழிகளே! நான் சொல்வது சரிதானே?