– சுசீலா மாணிக்கம்.ஓவியம்: பத்மவாசன்.பாகம்-11.திருக்குறளின் பதினொன்றாம் அதிகாரம் 'செய்ந்நன்றி அறிதல்'.. "நன்றியுள்ள மனிதன் எது சொன்னாலும் நம்பலாம். அவன் நிச்சயம் துரோகம் செய்யமாட்டான்". (ஸ்பெயின் தேசப் பழமொழி) "உப்பிட்டவரை உள்ளளவும் நினை" போன்று உலகெங்கும் பல பதிவுகள் நன்றியுணர்வின் அடையாளங்களைக்கொண்டிருக்கின்றன. இன்னும் மகாபாரதத்தில் கர்ணனும், ராமாயணத்தில் கும்பகர்ணனும் என இதிகாசங்களும் நன்றிக்கடனை ஆணித்தரமாக பதிவு செய்திருப்பதும் குறிப்பிடத்தக்கது..இங்கும், உலகப் பொதுமறை, உலகளவில் அதிகம் மொழிபெயர்க்கப்பட்ட நூல்களில் ஒன்று. ஈரடி வேதம் என பல சிறப்புகளைப் பெற்ற திருக்குறள் தந்த திருவள்ளுவப் பெருமானுக்கும்,படிக்கும் எந்த இதயத்தையும் தன் எழுத்துக்கள் பின்னே ஓடி வரச் செய்து புதினம் முழுவதையும் மனக்காட்சிகளாய் கொண்டு வரச் செய்யும் மந்திரக்கோலை கையில் கொண்ட பொன்னியின் செல்வன் தந்த கல்கி அவர்களுக்கும் கைகூப்பி சிரம் தாழ்த்தி நன்றி கூறி ஆரம்பித்தால்தானே நம் செய்ந்நன்றி பதிவும் சிறப்புறும்..கொன்றன்ன இன்னா செயினும் அவர்செய்தஒன்றுநன்று உள்ளக் கெடும்.முன்பு நன்மை செய்தவரே பின்பு நம்மைக் கொலை செய்வது போன்ற தீமையைச் செய்தாலும் அவர் முன்பு செய்த ஒப்பற்ற நன்மையை நினைத்த அளவில் அத்தீமை மறையும்..(இப்படி திருவள்ளுவப்பெருமான் குறிப்பிட்டு இருக்கிறார் என்றால் நன்றி அறிதல் எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்தது என்பதை நாம் உணரமுடிகிறது..நம் பொன்னியின் செல்வனில் நந்தினி… காண்போரை எல்லாம் கவர்ந்திழக்கும் மோகன உருவம். பொன்னியின் செல்வன் புதினத்தில் பல உணர்வுபூர்வமான இடங்களான கடம்பூர் மாளிகை, பழுவேட்டரையர் மாளிகை, கரிகாலன் கொலையுண்ட இடம், பள்ளிப்படை வீடுகள், மந்திரவாதி சந்திப்பு என பல்வேறு முகங்கள் காட்டும் மாயமோகினி நந்தினியின் சுயரூபத்தை கடைசியில் தெரிந்துகொண்ட பெரிய பழுவேட்டரையர் சிறிய பிராட்டியிடம் ஆத்திரத்துடன் பேசுவதைக் கேளுங்கள்…)."தாயே! நான் உன்னை மன்னிப்பதற்கு ஒரு காரணமும் ஏற்படவில்லை. உன்னிடந்தான் நான் மன்னிப்புக் கேட்கவேண்டும். மன்னிப்புக் கோரத் தகுதியுடையவனா என்பதே எனக்குச் சந்தேகமாயிருக்கிறது. இன்றிரவுக்குள் கடம்பூர் சென்று, பட்டத்து இளவரசருக்கு எதுவும் நேராமல் தடுத்தேனானால், உன்னிடம் மன்னிப்புக் கோருவதற்கு நான் தகுதி பெறுவேன். மூன்று வருஷங்களாக இந்தக் கிழவனின் கண்கள், மோகாந்தகாரத்தினால் மூடியிருந்தன. என் கண்களைத் திறப்பதற்கு நீ எவ்வளவோ பிரயத்தனம் செய்தாய், எத்தனையோ குறிப்புக்கள் சொன்னாய். ஒன்றும் என் காதில் ஏறவில்லை. என் சகோதரன் காலாந்தக கண்டனும் என் கண்களைத் திறக்க முயன்றான். அவன் முயற்சியும் பலிக்கவில்லை. நேற்றிரவு தூர்க்கா பரமேசுவரியின் கருணையினால் பாண்டிய நாட்டுச் சதிகாரர்கள் இருவரின் சம்பாஷணையை ஒட்டுக் கேட்க நேர்ந்தது. அதன் பலனாகவே உண்மையை அறிந்தேன். அந்தச் சண்டாளியை, சதிகாரியை, விஷநாகத்தை, என் அரண்மனையிலேயே வைத்திருந்து பாலுட்டிச் சீராட்டி வளர்த்தேன். அவள் என்னைக் குலத் துரோகியாக்கினாள்; இராஜத் துரோகியாக்கினாள். சோழ நாட்டுப் பொக்கிஷத்திலிருந்த பொருளை எடுத்துப் பாண்டிய நாட்டுச் சதிகாரர்களுக்குக் கொடுத்தாள். அந்த பாதகி நந்தினியை இன்று இரவு கழிவதற்குள் என் கையினாலேயே கொன்றாலொழிய என் நெஞ்சில் கொழுந்துவிடும் நெருப்பு அணையாது…".(இவ்வளவு ஆக்ரோஷத்துடன் பேசிய பெரிய பழுவேட்டரையர் தனது மரணத்தருவாயில் பேசும் வார்த்தைகளையும் கவனியுங்கள்.)."அச்சமயம், சின்னப் பழுவேட்டரையர் ஆழ்வார்கடியானை அழைத்துக் கொண்டு வந்தார். பெரிய பழுவேட்டையருக்கு எதிரில் கொண்டுவந்து அவனை உட்கார வைத்துவிட்டுத் தாமும் அருகில் அமர்ந்தார். பார்வை விரைவாக மங்கிவந்த கண்களினால் பெரிய பழுவேட்டரையர் ஆழ்வார்கடியானைப் பார்த்துவிட்டு," ஆகா! இந்த வைஷ்ணவன் இங்கு எதற்காக வந்தான்? நான் வைகுண்டத்துக்கு போக விரும்பவில்லை, தம்பி! சிவபதம் அடைய விரும்புகிறேன்!" என்றார்.."ஐயா! நான் மகாவிஷ்ணுவின் தூதனாக இப்போது வரவில்லை .என் சகோதரியிடமிருந்து செய்தி கொண்டுவந்தேன்.."அது யார் உன் சகோதரி?."என்னுடன் பல நாள் வளர்ந்த சகோதரி, நந்தினியைச் சொல்லுகிறேன். ஐயா! நந்தினி தங்களுக்கு அவளுடைய நன்றியை தெரியப்படுத்தும்படி என்னை அனுப்பினாள். கரிகாலரைக் கொன்று பழி அவள் பேரில் விழாதிருக்கும் பொருட்டுத் தாங்கள் அதை ஏற்றுக்கொண்டதற்காக நன்றி தெரிவிக்கச் சொன்னாள். எத்தனை ஜன்மம் எடுத்தாலும் தங்கள் அன்பை மறக்க முடியாது என்றும் தெரிவிக்கும்படி சொன்னார்!" என்றான் ஆழ்வார்க்கடியான். ."ஆகா! அவள் இன்னும் அப்படி நினைக்கிறாளா! நினைத்துக்கொண்டு சந்தோஷப்படட்டும். எவ்வளவுதான் அவள் வஞ்சகம் செய்து எனக்குத் தீங்கு புரிந்தாலும், அவளை என்னால் மறக்க முடியவில்லை. தன் உயிரைக் கொடுத்துச் சக்கரவர்த்தியைக் காப்பாற்றிய உத்தமியின் புதல்வி அல்லவா அவள்? உண்மையாகவே அடுத்த பிறவிகளிலும் அவள் என்னைத் தேடிக்கொண்டு வந்துவிடுவாளோ, என்னமோ?" என்றார் பழுவேட்டரையர்..ஏற்கனவே மரணத்தின் சாயை படர்ந்திருந்த அவருடைய முகத்தில் இப்போது இலேசான புன்னகை தோன்றியது.."வைஷ்ணவனே! யாராவது ஒருவரிடம் என் உண்மையைச் சொல்ல வேண்டும். உன்னிடமே சொல்லுகிறேன் நான் ஏறிந்த கத்தி இளவரசர் பேரில் விழவில்லை. அதற்கு முன்பே அவர் விழுந்து விட்டார். நானே இளவரசரைக் கொன்றதாக ஒப்புக்கொண்டதற்குக் காரணம் நந்தினியின் பேரில் பழி விழாமல் தடுப்பதற்கு மட்டுமல்ல; அதைவிட நூறு மடங்கு முக்கியமான காரணம் உண்டு. அருகில் வா! சொல்லுகிறேன்! உன் சிநேகிதன் வந்தியத்தேவன் இருக்கிறானே, அவன் அருமையான பிள்ளை! அவனுக்குச் சோழ குலம் ரொம்பக் கடமைப்பட்டிருக்கிறது. இளைய பிராட்டியின் உள்ளத்தை அவன் கவர்ந்துவிட்டான். இளைய பிராட்டியிடம் நான் அநாவசியமாகக் குரோதம் பாராட்டினேன். அதற்கெல்லாம் பரிகாரமாகக் குற்றத்தை நான் ஒப்புக்கொண்டேன். நான் அப்படிப் பகிரங்கமாக ஒப்புக்கொண்டு என்னையும் பலி கொடுத்திராவிட்டால், வந்தியத்தேவன் பேரில் யாராவது களங்கம் கற்பித்துக்கொண்டே இருப்பார்கள். இனி ஒருவரும் அவ்வாறு பேசத் துணியமாட்டார்கள். வைஷ்ணவனே! என்றாவது ஒரு நாள் இளைய பிராட்டியிடம் அவரை நான் துவேஷித்ததற்காக என்னைத் தயைகூர்ந்து மன்னிக்கும்படி சொல்லு!".நெடுநேரம் பேசியதால் அந்தத் தீரக் கிழவருக்கு மூச்சு வாங்கத் தொடங்கியது. அவர் கூறியதையெல்லாம் கேட்டுக்கொண்டிருந்த ஆழ்வார்க்கடியானின் உள்ளமே உருகிவிட்டது என்றால், பின்னால் மறைவிடத்தில் நின்று கேட்டுக்கொண்டிருந்த குந்தவை தேவியின் கண்ணிலிருந்து கண்ணீர் கலகலவென்று பொழிந்ததில் வியப்பில்லை அல்லவா?".(இப்படி சோழகுலத்தையே பூண்டோடு அழிக்க சபதமேற்ற நந்தினியையே மன்னிக்கிறார்கள். காரணம் நந்தினியின் தாய் செய்த தியாகம். வந்திய தேவனுக்கும் குந்தவைக்கும் கூட தனது நன்றியை மரண தருவாயில் இப்படி நிறைவேற்றிச் செல்கிறார் பெரிய பழுவேட்டரையர். செய்நன்றி அறிதல் எவ்வளவு சக்தி மிகுந்தது என்பது இந்த நிகழ்வின் மூலம் நன்றாக விளங்குகிறது…).எழுமை எழுபிறப்பும் உள்ளுவர் தங்கண்விழுமந் துடைத்தவர் நட்பு .தம்முடைய துன்பத்தை போக்கி உதவியவரின் நட்பைப் பல்வேறு வகையான பிறவியிலும் மறவாமல் போற்றுவர் பெரியோர்..(சோழகுலத் தெய்வமாய் போற்றப்படும் மந்தாகினி தேவியை மறவாமல் தஞ்சையில் ஒரு கோயிலும் எடுப்பித்தார் இராஜராஜ சோழன். நன்றியறிதலுக்கு இதை விடவோர் சிறப்புச் செய்து விட முடியுமா என்ன?). "மந்தாகினியின் உயிர் அவளுடைய உடலை விட்டுப் பிரிந்தது..சுந்தர சோழ சக்கரவர்த்தி விம்மி அழுததை இன்று வரை யாரும் பார்த்ததுமில்லை; கேட்டதுமில்லை..இன்றைக்கு அவர் 'ஓ' வென்று கதறி அழுததைப் பார்த்தும் கேட்டும் எல்லாரும் திகைத்துப்போனார்கள்.".இளவரசர் அருள்மொழி வர்மர் மட்டுமே மனத் தெளிவுடன் இருந்தார்..அவர் சக்கரவர்த்தியைப் பார்த்துக் கூறினார்: "தந்தையே! என் அன்னையின் மரணத்துக்காகத் தாங்கள் வருந்த வேண்டியதில்லை. அவர் மரணமடைய வேயில்லை. தெய்வமாக அல்லவோ மாறியிருக்கிறார்? என்றென்றைக்கும் நம் சோழ வம்சத்துக்கு அவர் குலத் தெய்வமாக விளங்கி வருவார்!" என்றார்.."இளவரசர் அருள்மொழி வர்மர் கூறிய தேறுதல் மொழி மட்டும் உண்மையாயிற்று. பொன்னியின் செல்வர் பிற்காலத்தில் இராஜராஜ சோழர் என்ற பெயருடன் சிங்காதனம் ஏறியபோது 'ஈழத்து ராணி' என்று அவர் அழைத்த மந்தாகினி தேவிக்காகத் தஞ்சையில் ஒரு கோயில் எடுப்பித்தார். அது சில காலம் 'சிங்கள நாச்சியார் கோவில்' என்ற பெயருடன் பிரபலமாக விளங்கி வந்தது. நாளடைவில் அதன் பெயர் திரிந்து 'சிங்காச்சியார் கோயில்' என்று ஆயிற்று. இன்றைக்கும் தஞ்சை நகரின் ஒரு பகுதியில் 'சிங்காச்சியார் கோயில்' என்ற பெயருடன் ஒரு சிறிய சிதிலமான கோயில் இருந்து வருவதைத் தஞ்சை செல்லுகிறவர்கள் விசாரித்து தெரிந்துக்கொள்ளலாம்.".அடடே…! நாம் செய்ந்நன்றியில் மூழ்கி நடுவு நிலைமையைத் தவற விட்டு விடப் போகிறோம். வாருங்கள் செல்வோம்…
– சுசீலா மாணிக்கம்.ஓவியம்: பத்மவாசன்.பாகம்-11.திருக்குறளின் பதினொன்றாம் அதிகாரம் 'செய்ந்நன்றி அறிதல்'.. "நன்றியுள்ள மனிதன் எது சொன்னாலும் நம்பலாம். அவன் நிச்சயம் துரோகம் செய்யமாட்டான்". (ஸ்பெயின் தேசப் பழமொழி) "உப்பிட்டவரை உள்ளளவும் நினை" போன்று உலகெங்கும் பல பதிவுகள் நன்றியுணர்வின் அடையாளங்களைக்கொண்டிருக்கின்றன. இன்னும் மகாபாரதத்தில் கர்ணனும், ராமாயணத்தில் கும்பகர்ணனும் என இதிகாசங்களும் நன்றிக்கடனை ஆணித்தரமாக பதிவு செய்திருப்பதும் குறிப்பிடத்தக்கது..இங்கும், உலகப் பொதுமறை, உலகளவில் அதிகம் மொழிபெயர்க்கப்பட்ட நூல்களில் ஒன்று. ஈரடி வேதம் என பல சிறப்புகளைப் பெற்ற திருக்குறள் தந்த திருவள்ளுவப் பெருமானுக்கும்,படிக்கும் எந்த இதயத்தையும் தன் எழுத்துக்கள் பின்னே ஓடி வரச் செய்து புதினம் முழுவதையும் மனக்காட்சிகளாய் கொண்டு வரச் செய்யும் மந்திரக்கோலை கையில் கொண்ட பொன்னியின் செல்வன் தந்த கல்கி அவர்களுக்கும் கைகூப்பி சிரம் தாழ்த்தி நன்றி கூறி ஆரம்பித்தால்தானே நம் செய்ந்நன்றி பதிவும் சிறப்புறும்..கொன்றன்ன இன்னா செயினும் அவர்செய்தஒன்றுநன்று உள்ளக் கெடும்.முன்பு நன்மை செய்தவரே பின்பு நம்மைக் கொலை செய்வது போன்ற தீமையைச் செய்தாலும் அவர் முன்பு செய்த ஒப்பற்ற நன்மையை நினைத்த அளவில் அத்தீமை மறையும்..(இப்படி திருவள்ளுவப்பெருமான் குறிப்பிட்டு இருக்கிறார் என்றால் நன்றி அறிதல் எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்தது என்பதை நாம் உணரமுடிகிறது..நம் பொன்னியின் செல்வனில் நந்தினி… காண்போரை எல்லாம் கவர்ந்திழக்கும் மோகன உருவம். பொன்னியின் செல்வன் புதினத்தில் பல உணர்வுபூர்வமான இடங்களான கடம்பூர் மாளிகை, பழுவேட்டரையர் மாளிகை, கரிகாலன் கொலையுண்ட இடம், பள்ளிப்படை வீடுகள், மந்திரவாதி சந்திப்பு என பல்வேறு முகங்கள் காட்டும் மாயமோகினி நந்தினியின் சுயரூபத்தை கடைசியில் தெரிந்துகொண்ட பெரிய பழுவேட்டரையர் சிறிய பிராட்டியிடம் ஆத்திரத்துடன் பேசுவதைக் கேளுங்கள்…)."தாயே! நான் உன்னை மன்னிப்பதற்கு ஒரு காரணமும் ஏற்படவில்லை. உன்னிடந்தான் நான் மன்னிப்புக் கேட்கவேண்டும். மன்னிப்புக் கோரத் தகுதியுடையவனா என்பதே எனக்குச் சந்தேகமாயிருக்கிறது. இன்றிரவுக்குள் கடம்பூர் சென்று, பட்டத்து இளவரசருக்கு எதுவும் நேராமல் தடுத்தேனானால், உன்னிடம் மன்னிப்புக் கோருவதற்கு நான் தகுதி பெறுவேன். மூன்று வருஷங்களாக இந்தக் கிழவனின் கண்கள், மோகாந்தகாரத்தினால் மூடியிருந்தன. என் கண்களைத் திறப்பதற்கு நீ எவ்வளவோ பிரயத்தனம் செய்தாய், எத்தனையோ குறிப்புக்கள் சொன்னாய். ஒன்றும் என் காதில் ஏறவில்லை. என் சகோதரன் காலாந்தக கண்டனும் என் கண்களைத் திறக்க முயன்றான். அவன் முயற்சியும் பலிக்கவில்லை. நேற்றிரவு தூர்க்கா பரமேசுவரியின் கருணையினால் பாண்டிய நாட்டுச் சதிகாரர்கள் இருவரின் சம்பாஷணையை ஒட்டுக் கேட்க நேர்ந்தது. அதன் பலனாகவே உண்மையை அறிந்தேன். அந்தச் சண்டாளியை, சதிகாரியை, விஷநாகத்தை, என் அரண்மனையிலேயே வைத்திருந்து பாலுட்டிச் சீராட்டி வளர்த்தேன். அவள் என்னைக் குலத் துரோகியாக்கினாள்; இராஜத் துரோகியாக்கினாள். சோழ நாட்டுப் பொக்கிஷத்திலிருந்த பொருளை எடுத்துப் பாண்டிய நாட்டுச் சதிகாரர்களுக்குக் கொடுத்தாள். அந்த பாதகி நந்தினியை இன்று இரவு கழிவதற்குள் என் கையினாலேயே கொன்றாலொழிய என் நெஞ்சில் கொழுந்துவிடும் நெருப்பு அணையாது…".(இவ்வளவு ஆக்ரோஷத்துடன் பேசிய பெரிய பழுவேட்டரையர் தனது மரணத்தருவாயில் பேசும் வார்த்தைகளையும் கவனியுங்கள்.)."அச்சமயம், சின்னப் பழுவேட்டரையர் ஆழ்வார்கடியானை அழைத்துக் கொண்டு வந்தார். பெரிய பழுவேட்டையருக்கு எதிரில் கொண்டுவந்து அவனை உட்கார வைத்துவிட்டுத் தாமும் அருகில் அமர்ந்தார். பார்வை விரைவாக மங்கிவந்த கண்களினால் பெரிய பழுவேட்டரையர் ஆழ்வார்கடியானைப் பார்த்துவிட்டு," ஆகா! இந்த வைஷ்ணவன் இங்கு எதற்காக வந்தான்? நான் வைகுண்டத்துக்கு போக விரும்பவில்லை, தம்பி! சிவபதம் அடைய விரும்புகிறேன்!" என்றார்.."ஐயா! நான் மகாவிஷ்ணுவின் தூதனாக இப்போது வரவில்லை .என் சகோதரியிடமிருந்து செய்தி கொண்டுவந்தேன்.."அது யார் உன் சகோதரி?."என்னுடன் பல நாள் வளர்ந்த சகோதரி, நந்தினியைச் சொல்லுகிறேன். ஐயா! நந்தினி தங்களுக்கு அவளுடைய நன்றியை தெரியப்படுத்தும்படி என்னை அனுப்பினாள். கரிகாலரைக் கொன்று பழி அவள் பேரில் விழாதிருக்கும் பொருட்டுத் தாங்கள் அதை ஏற்றுக்கொண்டதற்காக நன்றி தெரிவிக்கச் சொன்னாள். எத்தனை ஜன்மம் எடுத்தாலும் தங்கள் அன்பை மறக்க முடியாது என்றும் தெரிவிக்கும்படி சொன்னார்!" என்றான் ஆழ்வார்க்கடியான். ."ஆகா! அவள் இன்னும் அப்படி நினைக்கிறாளா! நினைத்துக்கொண்டு சந்தோஷப்படட்டும். எவ்வளவுதான் அவள் வஞ்சகம் செய்து எனக்குத் தீங்கு புரிந்தாலும், அவளை என்னால் மறக்க முடியவில்லை. தன் உயிரைக் கொடுத்துச் சக்கரவர்த்தியைக் காப்பாற்றிய உத்தமியின் புதல்வி அல்லவா அவள்? உண்மையாகவே அடுத்த பிறவிகளிலும் அவள் என்னைத் தேடிக்கொண்டு வந்துவிடுவாளோ, என்னமோ?" என்றார் பழுவேட்டரையர்..ஏற்கனவே மரணத்தின் சாயை படர்ந்திருந்த அவருடைய முகத்தில் இப்போது இலேசான புன்னகை தோன்றியது.."வைஷ்ணவனே! யாராவது ஒருவரிடம் என் உண்மையைச் சொல்ல வேண்டும். உன்னிடமே சொல்லுகிறேன் நான் ஏறிந்த கத்தி இளவரசர் பேரில் விழவில்லை. அதற்கு முன்பே அவர் விழுந்து விட்டார். நானே இளவரசரைக் கொன்றதாக ஒப்புக்கொண்டதற்குக் காரணம் நந்தினியின் பேரில் பழி விழாமல் தடுப்பதற்கு மட்டுமல்ல; அதைவிட நூறு மடங்கு முக்கியமான காரணம் உண்டு. அருகில் வா! சொல்லுகிறேன்! உன் சிநேகிதன் வந்தியத்தேவன் இருக்கிறானே, அவன் அருமையான பிள்ளை! அவனுக்குச் சோழ குலம் ரொம்பக் கடமைப்பட்டிருக்கிறது. இளைய பிராட்டியின் உள்ளத்தை அவன் கவர்ந்துவிட்டான். இளைய பிராட்டியிடம் நான் அநாவசியமாகக் குரோதம் பாராட்டினேன். அதற்கெல்லாம் பரிகாரமாகக் குற்றத்தை நான் ஒப்புக்கொண்டேன். நான் அப்படிப் பகிரங்கமாக ஒப்புக்கொண்டு என்னையும் பலி கொடுத்திராவிட்டால், வந்தியத்தேவன் பேரில் யாராவது களங்கம் கற்பித்துக்கொண்டே இருப்பார்கள். இனி ஒருவரும் அவ்வாறு பேசத் துணியமாட்டார்கள். வைஷ்ணவனே! என்றாவது ஒரு நாள் இளைய பிராட்டியிடம் அவரை நான் துவேஷித்ததற்காக என்னைத் தயைகூர்ந்து மன்னிக்கும்படி சொல்லு!".நெடுநேரம் பேசியதால் அந்தத் தீரக் கிழவருக்கு மூச்சு வாங்கத் தொடங்கியது. அவர் கூறியதையெல்லாம் கேட்டுக்கொண்டிருந்த ஆழ்வார்க்கடியானின் உள்ளமே உருகிவிட்டது என்றால், பின்னால் மறைவிடத்தில் நின்று கேட்டுக்கொண்டிருந்த குந்தவை தேவியின் கண்ணிலிருந்து கண்ணீர் கலகலவென்று பொழிந்ததில் வியப்பில்லை அல்லவா?".(இப்படி சோழகுலத்தையே பூண்டோடு அழிக்க சபதமேற்ற நந்தினியையே மன்னிக்கிறார்கள். காரணம் நந்தினியின் தாய் செய்த தியாகம். வந்திய தேவனுக்கும் குந்தவைக்கும் கூட தனது நன்றியை மரண தருவாயில் இப்படி நிறைவேற்றிச் செல்கிறார் பெரிய பழுவேட்டரையர். செய்நன்றி அறிதல் எவ்வளவு சக்தி மிகுந்தது என்பது இந்த நிகழ்வின் மூலம் நன்றாக விளங்குகிறது…).எழுமை எழுபிறப்பும் உள்ளுவர் தங்கண்விழுமந் துடைத்தவர் நட்பு .தம்முடைய துன்பத்தை போக்கி உதவியவரின் நட்பைப் பல்வேறு வகையான பிறவியிலும் மறவாமல் போற்றுவர் பெரியோர்..(சோழகுலத் தெய்வமாய் போற்றப்படும் மந்தாகினி தேவியை மறவாமல் தஞ்சையில் ஒரு கோயிலும் எடுப்பித்தார் இராஜராஜ சோழன். நன்றியறிதலுக்கு இதை விடவோர் சிறப்புச் செய்து விட முடியுமா என்ன?). "மந்தாகினியின் உயிர் அவளுடைய உடலை விட்டுப் பிரிந்தது..சுந்தர சோழ சக்கரவர்த்தி விம்மி அழுததை இன்று வரை யாரும் பார்த்ததுமில்லை; கேட்டதுமில்லை..இன்றைக்கு அவர் 'ஓ' வென்று கதறி அழுததைப் பார்த்தும் கேட்டும் எல்லாரும் திகைத்துப்போனார்கள்.".இளவரசர் அருள்மொழி வர்மர் மட்டுமே மனத் தெளிவுடன் இருந்தார்..அவர் சக்கரவர்த்தியைப் பார்த்துக் கூறினார்: "தந்தையே! என் அன்னையின் மரணத்துக்காகத் தாங்கள் வருந்த வேண்டியதில்லை. அவர் மரணமடைய வேயில்லை. தெய்வமாக அல்லவோ மாறியிருக்கிறார்? என்றென்றைக்கும் நம் சோழ வம்சத்துக்கு அவர் குலத் தெய்வமாக விளங்கி வருவார்!" என்றார்.."இளவரசர் அருள்மொழி வர்மர் கூறிய தேறுதல் மொழி மட்டும் உண்மையாயிற்று. பொன்னியின் செல்வர் பிற்காலத்தில் இராஜராஜ சோழர் என்ற பெயருடன் சிங்காதனம் ஏறியபோது 'ஈழத்து ராணி' என்று அவர் அழைத்த மந்தாகினி தேவிக்காகத் தஞ்சையில் ஒரு கோயில் எடுப்பித்தார். அது சில காலம் 'சிங்கள நாச்சியார் கோவில்' என்ற பெயருடன் பிரபலமாக விளங்கி வந்தது. நாளடைவில் அதன் பெயர் திரிந்து 'சிங்காச்சியார் கோயில்' என்று ஆயிற்று. இன்றைக்கும் தஞ்சை நகரின் ஒரு பகுதியில் 'சிங்காச்சியார் கோயில்' என்ற பெயருடன் ஒரு சிறிய சிதிலமான கோயில் இருந்து வருவதைத் தஞ்சை செல்லுகிறவர்கள் விசாரித்து தெரிந்துக்கொள்ளலாம்.".அடடே…! நாம் செய்ந்நன்றியில் மூழ்கி நடுவு நிலைமையைத் தவற விட்டு விடப் போகிறோம். வாருங்கள் செல்வோம்…