வாசகர் ஜமாய்க்கிறாங்க!.– எம்.வசந்தா மாரிமுத்து, சென்னை.தனியா விதை சூப்:.ஒரு டீஸ்பூன் தனியா விதையை மூன்று தம்ளர் நீரில் போட்டு, அது ஒரு தம்ளராக சுண்டும் வரை கொதிக்க விடவும். பின் தேவையான அளவு உப்பு, மிளகுத்தூள் சேர்த்து இறக்கி, கொத்துமல்லி தழை தூவினால் தனியா விதை சூப் ரெடி. இது பனிக் காலத்தில் ஏற்படும் அஜீரணத்துக்கு சிறந்த நிவாரணம் தரும் சூப்பர் சூப்..கொத்துமல்லி சூப்:.பிரட் துண்டுகள் – 2 உதிர்த்து, இரண்டு தம்ளர் நீரில் போட்டு கொதிக்க வைத்து, இரண்டு ஸ்பூன் கார்ன் ஃப்ளார் மாவை நீரில் கரைத்து இதில் சேர்த்து, ஒரு ஸ்பூன் வெண்ணெய் கலந்தால் கெட்டியாகும். இதில் நறுக்கிய கொத்துமல்லி தழையை சேர்த்து இரண்டு நிமிடங்கள் கழித்து இறக்கவும். இதில் உப்பு, மிளகுத்தூள் சேர்த்து குடிக்கவும். இந்த சூப் பனிக்கால மந்தத்தைப் போக்கி பசியைத் தூண்டும்!.ஆவாரம் சூப்:.தேவையானவை : ஆவாரம் பூ இதழ்கள் – 1 பிடி (நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும்), முருங்கைக் கீரை – 1 பிடி, நறுக்கிய வெங்காயம் – 1, பூண்டு – 2 பல், சீரகத்தூள், மிளகுத்தூள் – தலா 1 டீஸ்பூன், வெண்ணெய் – 1 டீஸ்பூன், உப்பு – ருசிக்கு..செய்முறை : வாணலியில் வெண்ணெய் போட்டு உருகியதும் நறுக்கிய பூண்டு, வெங்காயம் சேர்த்து வதக்கி அதனுடன் ஆவாரம்பூ, முருங்கைக் கீரையையும் சேர்த்து வதக்கவும். தேவையான அளவு தண்ணீர் விட்டு கொதித்ததும் இறக்கி உப்பு, மிளகுத்தூள், சீரகத் தூள் தூவினால் ஆவாரம் சூப் தயார். நீரிழிவு நோயாளிகளுக்கேற்ற சூப் இது!.வல்லாரை சூப்:.தேவையானவை : வல்லாரை இலை – அரை கப், பாதாம் – 10, காய்ச்சி ஆறிய பால் – 1 கப், வெண்ணெய் – 1 ஸ்பூன், சீரகம் – 1சிட்டிகை, மிளகுத்தூள் – 1 ஸ்பூன், உப்பு – தேவைக்கு..செய்முறை : வாணலியில் வெண்ணெயை சூடாக்கி, வல்லாரை இலை, சீரகம் சேர்த்து லேசாக வதக்கி, தண்ணீர் சேர்த்து வேக விடவும். பின் ஆற வைத்து மிக்ஸியில் அரைத்து எடுக்கவும். பாதாமை ஊற வைத்து விழுதாக அரைத்து, பரிமாறு முன் வல்லாரை விழுது, பாதாம் விழுது கலந்து சூடாக்கி உப்பு, மிளகுத்தூள் சேர்த்து குடிக்கவும். ஞாபக சக்திக்கு ஏற்ற சூப் இது..தூதுவளை கஷாயம்:.தேவையானவை : சுக்கு – 1 துண்டு, மிளகு – 10, தனியா – 2 டேபிள் ஸ்பூன்..செய்முறை : மூன்றையும் கலந்து மிக்ஸியில் பொடிக்கவும். ஒரு பாத்திரத்தில் மூன்று தம்ளர் நீர் விட்டு கைப்பிடி தூதுவளை, சிறிது திப்பிலி அரைத்த பொடி போட்டு கொதிக்க விடவும். பாதியாக சுண்டும் அளவுக்குக் கொதிக்கவிட்டு, வடிகட்டி பனங்கற்கண்டு சேர்த்து குடிக்கவும். பனிக்காலத்தில் இருமல், ஜலதோஷத்திற்கு மிகச் சிறந்த நிவாரணி இது..குளிருக்கேற்ற குழம்பு!. இஞ்சி குழம்பு:.தேவையானவை : புளி – 2 எலுமிச்சை அளவு, இளசான இஞ்சி – 50 கிராம், காய்ந்த மிளகு – 5, வெந்தயம் – 1 டீஸ்பூன், தேங்காய்த் துருவல் – 1 டேபிள் ஸ்பூன், பெரிய வெங்காயம் – 1, பச்சை மிளகாய் – 1, கறிவேப்பிலை – சிறிது, வெல்லம் – கொஞ்சம், கடுகு, எண்ணெய், உப்பு, பெருங்காயம் – தேவைக்கேற்ப..செய்முறை : இஞ்சியை கழுவி தோல் சீவி, பொடியாக நறுக்கி வைக்கவும். கடாயில் எண்ணெய் விடாமல் தேங்காய் துருவல், மிளகு, வெந்தயத்தை வறுக்கவும். ஆறியதும் இதை மிக்ஸியில் அரைக்கவும். கடாயில் எண்ணெய் விட்டு, இஞ்சி, வெங்காயம், மிளகாயை நன்கு வதக்கவும். புளியைக் கரைத்து இதில் ஊற்றி கூடவே அரைத்த விழுது, உப்பு, பெருங்காயம், வெல்லம் சேர்த்து கொதிக்க விடவும். நன்றாகக் கொதித்ததும் இறக்கி கடுகு, கறிவேப்பிலை தாளித்துக் கொட்டவும். இது அஜீரணத்துக்கேற்ற குழம்பு இது..மிளகு–மோர்க் குழம்பு:.தேவையானவை : மிளகு – 10, கறிவேப்பிலை – 1 கைப்பிடி, கெட்டி மோர் – 1 கப், மிளகாய் வற்றல் – 5, சேப்பங்கிழங்கு – 5, நல்லெண்ணெய் – 5 ஸ்பூன், கடுகு, உப்பு – தேவையானது, உளுத்தம் பருப்பு, துவரம் பருப்பு, சீரகம் – தலா கால் ஸ்பூன்..செய்முறை : வாணலியில் சிறிது நல்லெண்ணெய் விட்டு மிளகு, மிளகாய் வற்றல், உளுத்தம் பருப்பு, துவரம் பருப்பு, சீரகத்தை வறுக்கவும். கறிவேப்பிலையை தனியாக வதக்கவும். பின்பு அனைத்தையும் கெட்டியாக மிக்ஸியில் நீர் விட்டு நைசாக அரைக்கவும். பிறகு அதை மோருடன் கலந்து, தேவையான உப்பு சேர்த்துக் கொதிக்கவிடவும். வேகவைத்த சேப்பங்கிழங்கை தோல் உரித்து, கடுகு தாளித்துப் போடவும்..வேப்பம் பூ குழம்பு:.தேவையானவை : வேப்பம் பூ – 1 கப், துவரம் பருப்பு – கால் கப், பாசிப் பருப்பு – கால் கப் (அரைக்க), மிளகாய் வற்றல் – 8, வெங்காயம், தக்காளி – தலா 2 (நறுக்கியது), புளி – சிறு எலுமிச்சை அளவு, கடலை பருப்பு – 1 ஸ்பூன், உளுத்தம் பருப்பு – 1 ஸ்பூன், கடுகு, மஞ்சள் பொடி – தாளிக்க, ஒன்றிலிருந்து இரண்டு கப் தேங்காய்ப் பால், உப்பு – தேவைக்கு..செய்முறை : பருப்புகளை தனியாக வேக வைக்கவும். வாணலியில் எண்ணெய் விட்டு வேப்பம் பூ, மிளகாய், கடலை பருப்பு, உளுத்தம் பருப்பு வறுக்கவும். ஆறியதும் இதைப் பொடிக்கவும். வாணலியில் எண்ணெய் விட்டு கடுகு, மஞ்சள் தாளித்து, வெங்காயம், தக்காளி போட்டு வதக்கி, புளி கரைசலில் உப்பு சேர்த்து ஊற்றி வேக வைத்த பருப்புகளைச் சேர்க்கவும். வறுத்து அரைத்த பொடியைக் குழம்பில் கொட்டி, தேங்காய்ப் பால் சேர்த்து கொதிக்க விடவும். வயிற்றுக்கு இதமான குழம்பு இது..சித்தரத்தைக் குழம்பு:.தேவையானவை : சித்தரத்தை, அதிமதுரம் – தலா 1 துண்டு, அரிசி திப்பிலி, சுக்கு – சிறிது, மிளகு, சீரகம் – தலா 2 டீஸ்பூன், நறுக்கிய சின்ன வெங்காயம் – 1 கப், பூண்டு – 6 பல், மிளகாய் வற்றல் – 4, புளி – சிறிது, எண்ணெய், உப்பு – தேவைக்கேற்ப..செய்முறை : ஒரு வாணலியில் மிளகாய், மிளகு, சீரகம், சித்தரத்தை, அதிமதுரம், அரிசி திப்பிலி, சுக்கு ஆகியவற்றை வறுத்துப் பொடிக்கவும்..வாணலியில் எண்ணெயைச் சூடாக்கி அரைத்த விழுது, பூண்டை வதக்கி நறுக்கிய வெங்காயம் சேர்த்து உப்பு போட்டு கொதிக்க வைத்து, வறுத்துப் பொடித்த பொடியைப் போட்டு மூன்று நிமிடங்கள் கொதிக்க விட்டு இறக்கவும். ஜலதோஷத்துக்கும், ஜுரத்துக்கும் நிவாரணம் தரும் குழம்பு இது.
வாசகர் ஜமாய்க்கிறாங்க!.– எம்.வசந்தா மாரிமுத்து, சென்னை.தனியா விதை சூப்:.ஒரு டீஸ்பூன் தனியா விதையை மூன்று தம்ளர் நீரில் போட்டு, அது ஒரு தம்ளராக சுண்டும் வரை கொதிக்க விடவும். பின் தேவையான அளவு உப்பு, மிளகுத்தூள் சேர்த்து இறக்கி, கொத்துமல்லி தழை தூவினால் தனியா விதை சூப் ரெடி. இது பனிக் காலத்தில் ஏற்படும் அஜீரணத்துக்கு சிறந்த நிவாரணம் தரும் சூப்பர் சூப்..கொத்துமல்லி சூப்:.பிரட் துண்டுகள் – 2 உதிர்த்து, இரண்டு தம்ளர் நீரில் போட்டு கொதிக்க வைத்து, இரண்டு ஸ்பூன் கார்ன் ஃப்ளார் மாவை நீரில் கரைத்து இதில் சேர்த்து, ஒரு ஸ்பூன் வெண்ணெய் கலந்தால் கெட்டியாகும். இதில் நறுக்கிய கொத்துமல்லி தழையை சேர்த்து இரண்டு நிமிடங்கள் கழித்து இறக்கவும். இதில் உப்பு, மிளகுத்தூள் சேர்த்து குடிக்கவும். இந்த சூப் பனிக்கால மந்தத்தைப் போக்கி பசியைத் தூண்டும்!.ஆவாரம் சூப்:.தேவையானவை : ஆவாரம் பூ இதழ்கள் – 1 பிடி (நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும்), முருங்கைக் கீரை – 1 பிடி, நறுக்கிய வெங்காயம் – 1, பூண்டு – 2 பல், சீரகத்தூள், மிளகுத்தூள் – தலா 1 டீஸ்பூன், வெண்ணெய் – 1 டீஸ்பூன், உப்பு – ருசிக்கு..செய்முறை : வாணலியில் வெண்ணெய் போட்டு உருகியதும் நறுக்கிய பூண்டு, வெங்காயம் சேர்த்து வதக்கி அதனுடன் ஆவாரம்பூ, முருங்கைக் கீரையையும் சேர்த்து வதக்கவும். தேவையான அளவு தண்ணீர் விட்டு கொதித்ததும் இறக்கி உப்பு, மிளகுத்தூள், சீரகத் தூள் தூவினால் ஆவாரம் சூப் தயார். நீரிழிவு நோயாளிகளுக்கேற்ற சூப் இது!.வல்லாரை சூப்:.தேவையானவை : வல்லாரை இலை – அரை கப், பாதாம் – 10, காய்ச்சி ஆறிய பால் – 1 கப், வெண்ணெய் – 1 ஸ்பூன், சீரகம் – 1சிட்டிகை, மிளகுத்தூள் – 1 ஸ்பூன், உப்பு – தேவைக்கு..செய்முறை : வாணலியில் வெண்ணெயை சூடாக்கி, வல்லாரை இலை, சீரகம் சேர்த்து லேசாக வதக்கி, தண்ணீர் சேர்த்து வேக விடவும். பின் ஆற வைத்து மிக்ஸியில் அரைத்து எடுக்கவும். பாதாமை ஊற வைத்து விழுதாக அரைத்து, பரிமாறு முன் வல்லாரை விழுது, பாதாம் விழுது கலந்து சூடாக்கி உப்பு, மிளகுத்தூள் சேர்த்து குடிக்கவும். ஞாபக சக்திக்கு ஏற்ற சூப் இது..தூதுவளை கஷாயம்:.தேவையானவை : சுக்கு – 1 துண்டு, மிளகு – 10, தனியா – 2 டேபிள் ஸ்பூன்..செய்முறை : மூன்றையும் கலந்து மிக்ஸியில் பொடிக்கவும். ஒரு பாத்திரத்தில் மூன்று தம்ளர் நீர் விட்டு கைப்பிடி தூதுவளை, சிறிது திப்பிலி அரைத்த பொடி போட்டு கொதிக்க விடவும். பாதியாக சுண்டும் அளவுக்குக் கொதிக்கவிட்டு, வடிகட்டி பனங்கற்கண்டு சேர்த்து குடிக்கவும். பனிக்காலத்தில் இருமல், ஜலதோஷத்திற்கு மிகச் சிறந்த நிவாரணி இது..குளிருக்கேற்ற குழம்பு!. இஞ்சி குழம்பு:.தேவையானவை : புளி – 2 எலுமிச்சை அளவு, இளசான இஞ்சி – 50 கிராம், காய்ந்த மிளகு – 5, வெந்தயம் – 1 டீஸ்பூன், தேங்காய்த் துருவல் – 1 டேபிள் ஸ்பூன், பெரிய வெங்காயம் – 1, பச்சை மிளகாய் – 1, கறிவேப்பிலை – சிறிது, வெல்லம் – கொஞ்சம், கடுகு, எண்ணெய், உப்பு, பெருங்காயம் – தேவைக்கேற்ப..செய்முறை : இஞ்சியை கழுவி தோல் சீவி, பொடியாக நறுக்கி வைக்கவும். கடாயில் எண்ணெய் விடாமல் தேங்காய் துருவல், மிளகு, வெந்தயத்தை வறுக்கவும். ஆறியதும் இதை மிக்ஸியில் அரைக்கவும். கடாயில் எண்ணெய் விட்டு, இஞ்சி, வெங்காயம், மிளகாயை நன்கு வதக்கவும். புளியைக் கரைத்து இதில் ஊற்றி கூடவே அரைத்த விழுது, உப்பு, பெருங்காயம், வெல்லம் சேர்த்து கொதிக்க விடவும். நன்றாகக் கொதித்ததும் இறக்கி கடுகு, கறிவேப்பிலை தாளித்துக் கொட்டவும். இது அஜீரணத்துக்கேற்ற குழம்பு இது..மிளகு–மோர்க் குழம்பு:.தேவையானவை : மிளகு – 10, கறிவேப்பிலை – 1 கைப்பிடி, கெட்டி மோர் – 1 கப், மிளகாய் வற்றல் – 5, சேப்பங்கிழங்கு – 5, நல்லெண்ணெய் – 5 ஸ்பூன், கடுகு, உப்பு – தேவையானது, உளுத்தம் பருப்பு, துவரம் பருப்பு, சீரகம் – தலா கால் ஸ்பூன்..செய்முறை : வாணலியில் சிறிது நல்லெண்ணெய் விட்டு மிளகு, மிளகாய் வற்றல், உளுத்தம் பருப்பு, துவரம் பருப்பு, சீரகத்தை வறுக்கவும். கறிவேப்பிலையை தனியாக வதக்கவும். பின்பு அனைத்தையும் கெட்டியாக மிக்ஸியில் நீர் விட்டு நைசாக அரைக்கவும். பிறகு அதை மோருடன் கலந்து, தேவையான உப்பு சேர்த்துக் கொதிக்கவிடவும். வேகவைத்த சேப்பங்கிழங்கை தோல் உரித்து, கடுகு தாளித்துப் போடவும்..வேப்பம் பூ குழம்பு:.தேவையானவை : வேப்பம் பூ – 1 கப், துவரம் பருப்பு – கால் கப், பாசிப் பருப்பு – கால் கப் (அரைக்க), மிளகாய் வற்றல் – 8, வெங்காயம், தக்காளி – தலா 2 (நறுக்கியது), புளி – சிறு எலுமிச்சை அளவு, கடலை பருப்பு – 1 ஸ்பூன், உளுத்தம் பருப்பு – 1 ஸ்பூன், கடுகு, மஞ்சள் பொடி – தாளிக்க, ஒன்றிலிருந்து இரண்டு கப் தேங்காய்ப் பால், உப்பு – தேவைக்கு..செய்முறை : பருப்புகளை தனியாக வேக வைக்கவும். வாணலியில் எண்ணெய் விட்டு வேப்பம் பூ, மிளகாய், கடலை பருப்பு, உளுத்தம் பருப்பு வறுக்கவும். ஆறியதும் இதைப் பொடிக்கவும். வாணலியில் எண்ணெய் விட்டு கடுகு, மஞ்சள் தாளித்து, வெங்காயம், தக்காளி போட்டு வதக்கி, புளி கரைசலில் உப்பு சேர்த்து ஊற்றி வேக வைத்த பருப்புகளைச் சேர்க்கவும். வறுத்து அரைத்த பொடியைக் குழம்பில் கொட்டி, தேங்காய்ப் பால் சேர்த்து கொதிக்க விடவும். வயிற்றுக்கு இதமான குழம்பு இது..சித்தரத்தைக் குழம்பு:.தேவையானவை : சித்தரத்தை, அதிமதுரம் – தலா 1 துண்டு, அரிசி திப்பிலி, சுக்கு – சிறிது, மிளகு, சீரகம் – தலா 2 டீஸ்பூன், நறுக்கிய சின்ன வெங்காயம் – 1 கப், பூண்டு – 6 பல், மிளகாய் வற்றல் – 4, புளி – சிறிது, எண்ணெய், உப்பு – தேவைக்கேற்ப..செய்முறை : ஒரு வாணலியில் மிளகாய், மிளகு, சீரகம், சித்தரத்தை, அதிமதுரம், அரிசி திப்பிலி, சுக்கு ஆகியவற்றை வறுத்துப் பொடிக்கவும்..வாணலியில் எண்ணெயைச் சூடாக்கி அரைத்த விழுது, பூண்டை வதக்கி நறுக்கிய வெங்காயம் சேர்த்து உப்பு போட்டு கொதிக்க வைத்து, வறுத்துப் பொடித்த பொடியைப் போட்டு மூன்று நிமிடங்கள் கொதிக்க விட்டு இறக்கவும். ஜலதோஷத்துக்கும், ஜுரத்துக்கும் நிவாரணம் தரும் குழம்பு இது.