பகுதி -1.சாளக்ராமமாக அருளும் ஸ்ரீ பூவராகர்!.-சித்ரா மாதவன்.தமிழ்நாடு எனும் புண்ணிய பூமியில் எங்கு திரும்பினாலும் கோயில்களைக் காணலாம். மாபெரும் கற்கோயில்கள் முதல் சிறிய கோயில்கள் வரை ஒவ்வொரு நகரத்திலும், ஊரிலும், கிராமத்திலும் என மாநிலம் முழுவதும் ஆயிரக்கணக்கில் திருக்கோயில்கள் உள்ளன. அந்தக் கோயில்கள் பெரும்பாலும் பல நூறு ஆண்டுகள் பழைமையானவை. இருந்தும் நம்மில் பலருக்கு அவற்றின் பெருமை பற்றி பெரிதும் தெரிவதில்லை..பிரபல சரித்திர ஆய்வாளர் டாக்டர் சித்ரா மாதவனின் அனுமதியோடு, அவர் எழுதிய 'Vishnu Temples of South India' என்ற ஆங்கில புத்தகத்திலிருந்து சில கட்டுரைகளை, 'மங்கையர் மலர்' வாசகிகளுக்காக இந்தத் தொடரில் மொழிபெயர்த்துத் தருகிறோம். கோயில்களின் கட்டமைப்பு, தல வரலாறு, சிற்பக்கலை, கோயில் கல்வெட்டுகள் குறித்த ஆராய்ச்சி, திருவிழாக்கள் மற்றும் அந்த ஊரின் வாழ்வியலோடு திருக்கோயில்கள் எந்த அளவிற்கு இணைந்திருக்கிறது என்பதைக் கண்டறிந்து எழுதுவதில் இவர் ஓர் நிபுணர் என்றால் அது மிகையாகாது. அந்த வகையில், நாம் முதலில் தரிசிக்கவிருப்பது ஶ்ரீமுஷ்ணம் ஶ்ரீ பூவராக சுவாமி திருக்கோயில்..மகாவிஷ்ணுவின் மூன்றாவது அவதாரமான ஶ்ரீவராக மூர்த்திக்கு, கடலூர் மாவட்டம் ஶ்ரீமுஷ்ணத்தில் ஓர் அழகான க்ஷேத்திரம் உள்ளது. சிதம்பரத் திலிருந்து சுமார் 30 கிமீ தொலைவில் அமைந்த இவ்வாலயத்தில் மூலவர் வராக மூர்த்தி சுயம்புவாகத் தோன்றி அருள்பாலிக்கிறார். இந்தியாவில் மொத்தம் எட்டு வைணவத் திருத்தலங்களில் மூலவர் சுயம்புவாக எழுந்தருளியுள்ளார். அவற்றுள் மூன்று தமிழ்நாட்டில் உள்ளது. நான்காவது, நம் மாநிலத்திற்கு மிக அருகே உள்ள திருமலை திருப்பதி என்றால் அது எத்தனை பெருமைக்குரிய விஷயம்..தல புராணம்: வராக அவதாரத்தின் கதை நாம் அறிந்ததே. இரண்யாக்ஷன் எனும் கொடும் அரக்கன் பூமியை பாயாகச் சுருட்டி சமுத்திரத்தின் அடியில் ஒளித்து வைத்தான். அப்போது மகாவிஷ்ணு வராக மூர்த்தியாக அவதரித்து, நமது பூமிப் பந்தை மீட்டெடுத்து வந்தார். அப்போது அவர் ஶ்ரீமுஷ்ணத்தில் சிறிது இளைப்பாற, அவரது உடலிலிருந்து சிதறிய துளிகளானது சேர்ந்து இவ்வாலயத்தின் புண்ய தீர்த்தமான, 'நித்ய புஷ்கரணி' உருவானது என்பது நம்பிக்கை. 'பேனுகொண்டா' என்ற மன்னன் ஒருசமயம் சரும வியாதியால் மிகுந்த அவதியுற, அவரது கனவில் வராக சுவாமி வந்து அவரது உபாதையை சரி செய்த காரணத்தால், அந்த மன்னன் இந்தக் கோயிலை நிறுவினார் என்றும் ஒரு வரலாறு கூறப்படுகிறது..கட்டட அமைப்பு: சதுர வடிவில் அமைந்திருக்கும் இந்தக் கோயிலின் கருவறை மேற்கு நோக்கிக் காட்சி தருகிறது. உள்ளே, இடுப்பில் இரு கைகள் வைத்தவாறு, தென் திசை நோக்கி கம்பீரமாக அருள்பாலிக்கிறார் வராகப் பெருமான். சுமார் இரண்டடி உயரம் இருக்கும் இந்த விக்ரகம் விசேஷமான சாளக்ராமக் கல்லால் உருவானது. பெருமாளின் ஆயுதங்களான சங்கும், சக்கரமும் அவரது வயிற்றுப் பகுதியில் சொருகியது போல் அமைந்துள்ளது. இரண்யாக்ஷனை கொன்ற களிப்பில் சுவாமி இப்படி அரிதானக் கோலத்தில் காட்சியளிப்பதாகக் கூறப்படுகிறது..இந்தக் கோயிலின் உத்ஸவ மூர்த்தி, கருவறையின் முன்பு இருக்கும் அர்த்த மண்டபத்தில் நான்கு புஜங்களோடு நின்ற திருக்கோலத்தில் ஶ்ரீதேவி, பூதேவி சமேதராய், 'யக்னவராகன்' என்ற திருநாமத்துடன் திகழ்கிறார். இத்திருக்கோயில் விமானம், 'பாவன விமானம்' என்ற பெயர் கொண்டு விளங்குகிறது. கோயில் விமானம் தங்கத் தகடுகள் கொண்டு வேயப்பட்டுள்ளது..கருவறையின் முன் அமைந்திருக்கும் பதினாறு கால் மண்டபத்தில், தினமும் காலை மூலவருக்கு அபிஷேகம் நடைபெறும் வேளையில், 'புருஷ சூக்த' பாராயணம் செய்யப்படுகிறது. இந்த மண்டபம் நாயக்கர் காலத்தில், பதினேழாம் நூற்றாண்டில் அமைக்கப்பட்டதாகும். விஜயநகர காலத்து நுட்பம் மிகுந்த அழகிய சிற்பங்களை இங்குக் காணலாம். இம்மண்டபத்தை வடிவமைத்த அச்யுதப்ப நாயக்கர் மற்றும் அவர் குடும்பத்தினரின் ஆளுயரச் சிலைகளையும் இங்கே காணலாம்..ராஜகோபுரத்திற்கும், புருஷ சூக்த மண்டபத்திற்கும் நடுவில் ஓர் மராட்டியர் கால நூறு கால் மண்டபம் உள்ளது. இந்த இரு மண்டபங்களுக்கும் நடுவில் கருடருக்கும், நம்மாழ்வாருக்கும் தனிச் சன்னிதிகள் அமைந்துள்ளன. கோயிலின் இரண்டாவது பிராகாரத்தில் மற்ற சன்னிதிகள் அமைந்துள்ளன. இங்கே அம்புஜவல்லி தாயாரும், ஆண்டாளும் கிழக்கு நோக்கிய காட்சி தருகின்றனர். இந்த பிராகாரத்தில் இருக்கும் உடையார்பாளையம் மண்டபம், இதனைக் கட்டிய உடையார்பாளையம் ஜமீன்தார்கள் பெயரிலேயே விளங்குவது குறிப்பிடத்தக்கது. இந்த மண்டபம் ஓர் கண்ணாடியறை. பிரம்மோத்ஸவத்தின்போது இங்கே உத்ஸவ மூர்த்திகள் அலங்கரிக்கப்பட்டு பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றனர். ஶ்ரீ வேணுகோபாலர்,ஶ்ரீ விஷ்வக்ஸேனர், ஶ்ரீ ராமானுஜர், வேதாந்த தேசிகர், திருமங்கை ஆழ்வார், மணவாள மாமுனிகள் மற்றும் திருக்கச்சி நம்பி ஆகியோருக்கும் கோயிலில் சன்னிதிகள் அமைந்துள்ளன. இக்கோயிலில், 'குழந்தை அம்மன்' எனும் ஓர் சன்னிதி உள்ளது. இங்கே அம்புஜவல்லித் தாயாரின் தோழிகள் நமக்குக் காட்சி தருகின்றனர்..கோபுரங்கள்: இத்திருக்கோயிலின் ராஜகோபுரம் ஏழு நிலைகளோடு மேற்கு நோக்கி பிரம்மாண்டமாக அமைந்துள்ளது. கோயிலின் வடக்கு கோபுரம் ஐந்து நிலைகளைக் கொண்டுள்ளது. வைகுண்ட ஏகாதசி அன்று மட்டுமே இக்கோபுர வாசல் திறக்கப்படுவது விசேஷம்..கருட ஸ்தம்பம்: கோயிலின் வாயிலில் எண்பது அடி உயர ஒரே கல்லால் அமைந்த தூண் ஒன்று காணப்படுகிறது. இதன் உச்சியில் கருடர், கோயிலை நோக்கி கைகூப்பிய வண்ணம் காட்சி தருகிறார். இந்தத் தூண் மிகவும் தனித்துவம் வாய்ந்ததாகத் திகழ்கிறது..ஶ்ரீ ராமர் சன்னிதி: விமானத்திற்கு வடதிசையில் கோயிலின் நந்தவனம் அமைந்துள்ளது. இங்கே ஶ்ரீ ராமர், சீதா தேவியுடனும், மூன்று சகோதரர்களுடனும், பக்த ஆஞ்சனேயர் சமேதராக பட்டாபிஷேகக் கோலத்தில் காட்சியளிக்கிறார்..கல்வெட்டுகள்: மிகவும் பழைமையான இந்தத் திருக்கோயில் மேம்பாட்டிற்காக, கி.பி.1068ம் ஆண்டைச் சேர்ந்த மன்னன் வீரராஜேந்திர சோழன் பல நிவந்தங்கள் அளித்ததாக அருகில் உள்ள ஒரு சிவன் கோயில் கல்வெட்டு கூறுகிறது. அக்காலத்தில் இந்த மூர்த்தியின் திருநாமம் ஶ்ரீ வராக ஆழ்வார். கி.பி.1100ம் ஆண்டைச் சேர்ந்த சோழ மன்னன் முதலாம் குலோத்துங்க சோழனும் இந்தக் கோயிலின் பராமரிப்புக்காக ஒரு கிராமத்தையே அளித்துள்ளதாக அதே சிவன் கோயில் கல்வெட்டு கூறுகிறது..இந்தக் கோயிலின் கல்வெட்டுகள் பெரும்பாலும் விஜயநகர மன்னர்கள் மற்றும் அதற்குப் பிறகு தமிழகத்தை ஆட்சி செய்த விஜயநகர மன்னர்களின் நிலப்பிரபுக்களாகிய நாயக்கர் காலத்தைச் சேர்ந்தவை. இந்தக் கல்வெட்டுகள் அனைத்துமே பதினைந்தாம் நூற்றாண்டிற்குப் பிற்பட்டவை. விஜயநகர மன்னன் இரண்டாம் விருபாக்ஷன் கி.பி.1471ம் ஆண்டு இந்தக் கோயிலுக்கு ஒரு கிராமத்தையே கொடையாக வழங்கினான் என்றும், அப்போது இந்த ஆலயத்தின் பெயர் ஆதிவராக நாயனார் கோயில் என்று தெலுகு மொழியில் இங்கே ஒரு கல்வெட்டு உள்ளது. அதே போல், முதலாம் ஶ்ரீரங்கன் (கி.பி.1572 -1585) மற்றும் இரண்டாம் வெங்கடம் (கி.பி.1586 – 1614) காலத்தைச் சேர்ந்த தெலுகு மொழி கல்வெட்டுகளும் இங்கு உள்ளன..திருவிழாக்கள்: வருடத்தில் இரண்டு பிரம்மோத்ஸவங்கள் இந்தக் கோயிலில் மிகவும் விமரிசையாகக் கொண்டாடப்படுகிறது. முதலாவது பிரம்மோத்ஸவம், மாசி மாதம் பரணி நட்சத்திரத்தில் துவங்கி ஏழு நாட்கள் இங்கே ஶ்ரீமுஷ்ணத்திலும், எட்டாம் நாள் உத்ஸவர் பெருமத்தூர் கிராமத்திற்கு எடுத்துச்செல்லப்படுகிறார். ஒன்பதாம் நாள் பெருமாள் கடற்கரையோரம் உள்ள தைக்கல் கிராமத்திற்கு அழைத்துச் செல்லப்படுகிறார். இதனைத் தொடர்ந்து, வாழ்க்கை, லால்புரம், சிதம்பரம், புவனகிரி, ஆலம்பாடி, ராமாபுரம் போன்ற ஊர்களுக்கு உத்ஸவ மூர்த்தி எடுத்துச் செல்லப்பட்டு, மீண்டும் ஶ்ரீமுஷ்ணத்திற்குத் திரும்புகிறார்..தைக்கல் கிராமம் ஒரு காலத்தில் இஸ்லாமிய மன்னன் ஒருவனின் தலைநகராக இருந்ததாகவும், அந்த அரசன் ஶ்ரீமுஷ்ணம் கோயிலுக்காக நிறைய நிவந்தங்கள் அளித்து, கில்லை எனும் ஊரில் ஒரு மண்டபத்தை அமைத்திருக்கிறார். அதன் காரணமாகவே பத்தாம் நாள் உத்ஸவத்தன்று, தைக்கல் கடற்கரையில் தீர்த்தவாரி முடித்துக்கொண்டு, அருகில் உள்ள அந்த இஸ்லாமிய மன்னரின் தர்காவில் நின்று, வராக மூர்த்தியின் பூமாலை ஒன்று அந்த சமாதியின் மீது சாத்தப்படுகிறது..இரண்டாவதாக, சித்திரை மாதம் நடைபெறும் பிரம்மோத்ஸவம் ஶ்ரீமுஷ்ணத்திலேயே நடைபெறும். இதனைத் தவிர்த்து, வைணவக் கோயில்களில் அனுசரிக்கப்படும், அனைத்து திருவிழாக்களும் இங்கே விமரிசையாகக் கொண்டாடப்படுகிறது.
பகுதி -1.சாளக்ராமமாக அருளும் ஸ்ரீ பூவராகர்!.-சித்ரா மாதவன்.தமிழ்நாடு எனும் புண்ணிய பூமியில் எங்கு திரும்பினாலும் கோயில்களைக் காணலாம். மாபெரும் கற்கோயில்கள் முதல் சிறிய கோயில்கள் வரை ஒவ்வொரு நகரத்திலும், ஊரிலும், கிராமத்திலும் என மாநிலம் முழுவதும் ஆயிரக்கணக்கில் திருக்கோயில்கள் உள்ளன. அந்தக் கோயில்கள் பெரும்பாலும் பல நூறு ஆண்டுகள் பழைமையானவை. இருந்தும் நம்மில் பலருக்கு அவற்றின் பெருமை பற்றி பெரிதும் தெரிவதில்லை..பிரபல சரித்திர ஆய்வாளர் டாக்டர் சித்ரா மாதவனின் அனுமதியோடு, அவர் எழுதிய 'Vishnu Temples of South India' என்ற ஆங்கில புத்தகத்திலிருந்து சில கட்டுரைகளை, 'மங்கையர் மலர்' வாசகிகளுக்காக இந்தத் தொடரில் மொழிபெயர்த்துத் தருகிறோம். கோயில்களின் கட்டமைப்பு, தல வரலாறு, சிற்பக்கலை, கோயில் கல்வெட்டுகள் குறித்த ஆராய்ச்சி, திருவிழாக்கள் மற்றும் அந்த ஊரின் வாழ்வியலோடு திருக்கோயில்கள் எந்த அளவிற்கு இணைந்திருக்கிறது என்பதைக் கண்டறிந்து எழுதுவதில் இவர் ஓர் நிபுணர் என்றால் அது மிகையாகாது. அந்த வகையில், நாம் முதலில் தரிசிக்கவிருப்பது ஶ்ரீமுஷ்ணம் ஶ்ரீ பூவராக சுவாமி திருக்கோயில்..மகாவிஷ்ணுவின் மூன்றாவது அவதாரமான ஶ்ரீவராக மூர்த்திக்கு, கடலூர் மாவட்டம் ஶ்ரீமுஷ்ணத்தில் ஓர் அழகான க்ஷேத்திரம் உள்ளது. சிதம்பரத் திலிருந்து சுமார் 30 கிமீ தொலைவில் அமைந்த இவ்வாலயத்தில் மூலவர் வராக மூர்த்தி சுயம்புவாகத் தோன்றி அருள்பாலிக்கிறார். இந்தியாவில் மொத்தம் எட்டு வைணவத் திருத்தலங்களில் மூலவர் சுயம்புவாக எழுந்தருளியுள்ளார். அவற்றுள் மூன்று தமிழ்நாட்டில் உள்ளது. நான்காவது, நம் மாநிலத்திற்கு மிக அருகே உள்ள திருமலை திருப்பதி என்றால் அது எத்தனை பெருமைக்குரிய விஷயம்..தல புராணம்: வராக அவதாரத்தின் கதை நாம் அறிந்ததே. இரண்யாக்ஷன் எனும் கொடும் அரக்கன் பூமியை பாயாகச் சுருட்டி சமுத்திரத்தின் அடியில் ஒளித்து வைத்தான். அப்போது மகாவிஷ்ணு வராக மூர்த்தியாக அவதரித்து, நமது பூமிப் பந்தை மீட்டெடுத்து வந்தார். அப்போது அவர் ஶ்ரீமுஷ்ணத்தில் சிறிது இளைப்பாற, அவரது உடலிலிருந்து சிதறிய துளிகளானது சேர்ந்து இவ்வாலயத்தின் புண்ய தீர்த்தமான, 'நித்ய புஷ்கரணி' உருவானது என்பது நம்பிக்கை. 'பேனுகொண்டா' என்ற மன்னன் ஒருசமயம் சரும வியாதியால் மிகுந்த அவதியுற, அவரது கனவில் வராக சுவாமி வந்து அவரது உபாதையை சரி செய்த காரணத்தால், அந்த மன்னன் இந்தக் கோயிலை நிறுவினார் என்றும் ஒரு வரலாறு கூறப்படுகிறது..கட்டட அமைப்பு: சதுர வடிவில் அமைந்திருக்கும் இந்தக் கோயிலின் கருவறை மேற்கு நோக்கிக் காட்சி தருகிறது. உள்ளே, இடுப்பில் இரு கைகள் வைத்தவாறு, தென் திசை நோக்கி கம்பீரமாக அருள்பாலிக்கிறார் வராகப் பெருமான். சுமார் இரண்டடி உயரம் இருக்கும் இந்த விக்ரகம் விசேஷமான சாளக்ராமக் கல்லால் உருவானது. பெருமாளின் ஆயுதங்களான சங்கும், சக்கரமும் அவரது வயிற்றுப் பகுதியில் சொருகியது போல் அமைந்துள்ளது. இரண்யாக்ஷனை கொன்ற களிப்பில் சுவாமி இப்படி அரிதானக் கோலத்தில் காட்சியளிப்பதாகக் கூறப்படுகிறது..இந்தக் கோயிலின் உத்ஸவ மூர்த்தி, கருவறையின் முன்பு இருக்கும் அர்த்த மண்டபத்தில் நான்கு புஜங்களோடு நின்ற திருக்கோலத்தில் ஶ்ரீதேவி, பூதேவி சமேதராய், 'யக்னவராகன்' என்ற திருநாமத்துடன் திகழ்கிறார். இத்திருக்கோயில் விமானம், 'பாவன விமானம்' என்ற பெயர் கொண்டு விளங்குகிறது. கோயில் விமானம் தங்கத் தகடுகள் கொண்டு வேயப்பட்டுள்ளது..கருவறையின் முன் அமைந்திருக்கும் பதினாறு கால் மண்டபத்தில், தினமும் காலை மூலவருக்கு அபிஷேகம் நடைபெறும் வேளையில், 'புருஷ சூக்த' பாராயணம் செய்யப்படுகிறது. இந்த மண்டபம் நாயக்கர் காலத்தில், பதினேழாம் நூற்றாண்டில் அமைக்கப்பட்டதாகும். விஜயநகர காலத்து நுட்பம் மிகுந்த அழகிய சிற்பங்களை இங்குக் காணலாம். இம்மண்டபத்தை வடிவமைத்த அச்யுதப்ப நாயக்கர் மற்றும் அவர் குடும்பத்தினரின் ஆளுயரச் சிலைகளையும் இங்கே காணலாம்..ராஜகோபுரத்திற்கும், புருஷ சூக்த மண்டபத்திற்கும் நடுவில் ஓர் மராட்டியர் கால நூறு கால் மண்டபம் உள்ளது. இந்த இரு மண்டபங்களுக்கும் நடுவில் கருடருக்கும், நம்மாழ்வாருக்கும் தனிச் சன்னிதிகள் அமைந்துள்ளன. கோயிலின் இரண்டாவது பிராகாரத்தில் மற்ற சன்னிதிகள் அமைந்துள்ளன. இங்கே அம்புஜவல்லி தாயாரும், ஆண்டாளும் கிழக்கு நோக்கிய காட்சி தருகின்றனர். இந்த பிராகாரத்தில் இருக்கும் உடையார்பாளையம் மண்டபம், இதனைக் கட்டிய உடையார்பாளையம் ஜமீன்தார்கள் பெயரிலேயே விளங்குவது குறிப்பிடத்தக்கது. இந்த மண்டபம் ஓர் கண்ணாடியறை. பிரம்மோத்ஸவத்தின்போது இங்கே உத்ஸவ மூர்த்திகள் அலங்கரிக்கப்பட்டு பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றனர். ஶ்ரீ வேணுகோபாலர்,ஶ்ரீ விஷ்வக்ஸேனர், ஶ்ரீ ராமானுஜர், வேதாந்த தேசிகர், திருமங்கை ஆழ்வார், மணவாள மாமுனிகள் மற்றும் திருக்கச்சி நம்பி ஆகியோருக்கும் கோயிலில் சன்னிதிகள் அமைந்துள்ளன. இக்கோயிலில், 'குழந்தை அம்மன்' எனும் ஓர் சன்னிதி உள்ளது. இங்கே அம்புஜவல்லித் தாயாரின் தோழிகள் நமக்குக் காட்சி தருகின்றனர்..கோபுரங்கள்: இத்திருக்கோயிலின் ராஜகோபுரம் ஏழு நிலைகளோடு மேற்கு நோக்கி பிரம்மாண்டமாக அமைந்துள்ளது. கோயிலின் வடக்கு கோபுரம் ஐந்து நிலைகளைக் கொண்டுள்ளது. வைகுண்ட ஏகாதசி அன்று மட்டுமே இக்கோபுர வாசல் திறக்கப்படுவது விசேஷம்..கருட ஸ்தம்பம்: கோயிலின் வாயிலில் எண்பது அடி உயர ஒரே கல்லால் அமைந்த தூண் ஒன்று காணப்படுகிறது. இதன் உச்சியில் கருடர், கோயிலை நோக்கி கைகூப்பிய வண்ணம் காட்சி தருகிறார். இந்தத் தூண் மிகவும் தனித்துவம் வாய்ந்ததாகத் திகழ்கிறது..ஶ்ரீ ராமர் சன்னிதி: விமானத்திற்கு வடதிசையில் கோயிலின் நந்தவனம் அமைந்துள்ளது. இங்கே ஶ்ரீ ராமர், சீதா தேவியுடனும், மூன்று சகோதரர்களுடனும், பக்த ஆஞ்சனேயர் சமேதராக பட்டாபிஷேகக் கோலத்தில் காட்சியளிக்கிறார்..கல்வெட்டுகள்: மிகவும் பழைமையான இந்தத் திருக்கோயில் மேம்பாட்டிற்காக, கி.பி.1068ம் ஆண்டைச் சேர்ந்த மன்னன் வீரராஜேந்திர சோழன் பல நிவந்தங்கள் அளித்ததாக அருகில் உள்ள ஒரு சிவன் கோயில் கல்வெட்டு கூறுகிறது. அக்காலத்தில் இந்த மூர்த்தியின் திருநாமம் ஶ்ரீ வராக ஆழ்வார். கி.பி.1100ம் ஆண்டைச் சேர்ந்த சோழ மன்னன் முதலாம் குலோத்துங்க சோழனும் இந்தக் கோயிலின் பராமரிப்புக்காக ஒரு கிராமத்தையே அளித்துள்ளதாக அதே சிவன் கோயில் கல்வெட்டு கூறுகிறது..இந்தக் கோயிலின் கல்வெட்டுகள் பெரும்பாலும் விஜயநகர மன்னர்கள் மற்றும் அதற்குப் பிறகு தமிழகத்தை ஆட்சி செய்த விஜயநகர மன்னர்களின் நிலப்பிரபுக்களாகிய நாயக்கர் காலத்தைச் சேர்ந்தவை. இந்தக் கல்வெட்டுகள் அனைத்துமே பதினைந்தாம் நூற்றாண்டிற்குப் பிற்பட்டவை. விஜயநகர மன்னன் இரண்டாம் விருபாக்ஷன் கி.பி.1471ம் ஆண்டு இந்தக் கோயிலுக்கு ஒரு கிராமத்தையே கொடையாக வழங்கினான் என்றும், அப்போது இந்த ஆலயத்தின் பெயர் ஆதிவராக நாயனார் கோயில் என்று தெலுகு மொழியில் இங்கே ஒரு கல்வெட்டு உள்ளது. அதே போல், முதலாம் ஶ்ரீரங்கன் (கி.பி.1572 -1585) மற்றும் இரண்டாம் வெங்கடம் (கி.பி.1586 – 1614) காலத்தைச் சேர்ந்த தெலுகு மொழி கல்வெட்டுகளும் இங்கு உள்ளன..திருவிழாக்கள்: வருடத்தில் இரண்டு பிரம்மோத்ஸவங்கள் இந்தக் கோயிலில் மிகவும் விமரிசையாகக் கொண்டாடப்படுகிறது. முதலாவது பிரம்மோத்ஸவம், மாசி மாதம் பரணி நட்சத்திரத்தில் துவங்கி ஏழு நாட்கள் இங்கே ஶ்ரீமுஷ்ணத்திலும், எட்டாம் நாள் உத்ஸவர் பெருமத்தூர் கிராமத்திற்கு எடுத்துச்செல்லப்படுகிறார். ஒன்பதாம் நாள் பெருமாள் கடற்கரையோரம் உள்ள தைக்கல் கிராமத்திற்கு அழைத்துச் செல்லப்படுகிறார். இதனைத் தொடர்ந்து, வாழ்க்கை, லால்புரம், சிதம்பரம், புவனகிரி, ஆலம்பாடி, ராமாபுரம் போன்ற ஊர்களுக்கு உத்ஸவ மூர்த்தி எடுத்துச் செல்லப்பட்டு, மீண்டும் ஶ்ரீமுஷ்ணத்திற்குத் திரும்புகிறார்..தைக்கல் கிராமம் ஒரு காலத்தில் இஸ்லாமிய மன்னன் ஒருவனின் தலைநகராக இருந்ததாகவும், அந்த அரசன் ஶ்ரீமுஷ்ணம் கோயிலுக்காக நிறைய நிவந்தங்கள் அளித்து, கில்லை எனும் ஊரில் ஒரு மண்டபத்தை அமைத்திருக்கிறார். அதன் காரணமாகவே பத்தாம் நாள் உத்ஸவத்தன்று, தைக்கல் கடற்கரையில் தீர்த்தவாரி முடித்துக்கொண்டு, அருகில் உள்ள அந்த இஸ்லாமிய மன்னரின் தர்காவில் நின்று, வராக மூர்த்தியின் பூமாலை ஒன்று அந்த சமாதியின் மீது சாத்தப்படுகிறது..இரண்டாவதாக, சித்திரை மாதம் நடைபெறும் பிரம்மோத்ஸவம் ஶ்ரீமுஷ்ணத்திலேயே நடைபெறும். இதனைத் தவிர்த்து, வைணவக் கோயில்களில் அனுசரிக்கப்படும், அனைத்து திருவிழாக்களும் இங்கே விமரிசையாகக் கொண்டாடப்படுகிறது.