-வெங்கடராமன் ராமசுப்ரமணியன். முத்தான பத்து: நம் வாழ்க்கை கெத்து.வாழ்வின் மிக முக்கியமான திறமை என்பது மக்களுடனான உறவை எவ்வாறு நாம் கையாள்கிறோம் என்பதுதான். ஒரு நிறுவனத்தில் தொழில்நுட்ப அறிவு தெரிந்தவரை விட, தொழில்நுட்ப அறிவுடன், தலைமைப் பொறுப்புகளை ஏற்று, மக்களை உற்சாகப்படுத்தி, வழிநடத்துபவர் பெரிய பதவிகளைப் பெறுவார்..மனிதன் ஒரு சமுதாய விலங்கு. மனித உறவுகளை எப்படி பேண வேண்டும் என்பதை குறித்த புத்தகம் இல்லாமல் இருந்தது. 1912ம் ஆண்டு பேச்சுக்கலை குறித்த பயிற்சிகளை எடுத்துவந்த டேல் கார்னகி, இத்தகையதொரு புத்தகத்தின் அவசியத்தை உணர்ந்தார். இதனைக் குறித்து, பல வருடங்கள் ஆராய்ச்சி செய்து, பல்வேறு வெற்றியாளர்களின் சரித்திரங்கள் படித்து, பல்வேறு வெற்றியாளர்களை பேட்டி கண்டு, 1936ம் ஆண்டு 'நண்பர்களை எளிதாக பெறுவதும், மக்களிடம் செல்வாக்கு பெறுவதும் எப்படி' (How to win friends and influence people) என்ற புத்தகத்தை எழுதினார். அது கோடிக்கணக்கில் இன்று வரை விற்கப்பட்டு வருகிறது. உலகின் எல்லா காலங்களுக்குமான சிறந்த விற்பனை புத்தகம் (All time best seller) என்று அழைக்கப்படுகிறது..அந்த புத்தகத்தில் நான்கு பகுதிகள் உள்ளன. அவற்றிலிருந்து, மக்களுடான நமது உறவை ஆரோக்கியமாக, இணக்கமாக, நேர்மறையாக வைத்திருக்க கெத்தான பத்து விஷயங்களைப் பார்ப்போம்..புகார் செய்யாதீர்கள். கண்டனம் செய்யாதீர்கள். குற்றம் காணாதீர்கள்; எவருடைய செயலையும் நீங்கள் குற்றம் குறை கூறுவதை அவர்கள் விரும்புவதில்லை. அவர்களது கண்ணோட்டத்தின் படி, அவர்கள் கடந்து வந்த பாதையின் படி, அவர்கள் செய்தது சரி என்று அவர்கள் ஆணித்தரமாக கூறுவார்கள். நீங்கள் குற்றம், குறை கூறும் பட்சத்தில், அவர்கள் தங்களது செயல்களை நியாயப்படுத்த முயலுவார்கள். அவர்களது நடவடிக்கையினை, நீங்கள் குற்றம் கூறுவதன் மூலமாக, உங்களது நட்பானது விரிசல் அடைகிறது. மனோதத்துவ முறைப்படி, கெட்ட விஷயங்களுக்கு கிடைக்கும் தண்டனையை விடவும், நல்ல விஷயங்களுக்கு கிடைக்கும் பாராட்டின் மூலம், பாடம் நன்கு கற்கப்பட்டு, நல்ல விஷயங்கள் தொடர்ந்து செய்யப்படுகின்றன.நேரிடையாக, மனப்பூர்வமாக பாராட்டுங்கள்; ஒருவர் செய்யும் செயலில் உள்ள நல்லவற்றை மனப்பூர்வமாக, தாராளமாக பாராட்டுங்கள். பாராட்டு மக்களை ஊக்குவிக்கிறது. மனிதனின் குணாதிசயங்களில் ஆழமான ஒன்று, பாராட்டிற்காக ஏங்குவது. நல்ல விஷயங்களை இதயபூர்வமாக அங்கீகரியுங்கள். பாராட்டிற்கும் முகஸ்துதிக்கும் வித்திசாயம் உண்டு. பாராட்டு உண்மையானது, சுயநலமற்றது, இதயப்பூர்வமானது. முகஸ்துதி எளிதில் அடையாளம் காணப்பட்டு, வெறுக்கத்தக்கது.அடுத்த மனிதருக்கு ஒரு நல்ல விஷயத்தினை திணிக்காதீர்கள். அந்த நல்ல விஷயத்தின் மீதான விருப்பத்தை தூண்டுங்கள். மக்களுக்கு என்ன வேண்டுமோ, அதற்கான வழியினைக் காட்டுங்கள். உதாரணமாக, ஒருவர் தனது கடையின் வருமானத்தைப் பெருக்க ஆவலாக உள்ளார். அவர் கடை அசுத்தமாக உள்ளது. அவரது கடையை சுத்தமாக்க கட்டளையிடுவதை விட, சுத்தமாக வைத்திருப்பதால், அதிக வாடிக்கையாளர்கள் வருவார்கள், பணம் பெருகும் என்று வலியுறுத்தி, சுத்தமாக இருப்பதன் விருப்பத்தை கடைக்காரரிடம் தூண்டுங்கள்.அடுத்த மனிதர்களைப் பற்றி நிஜமாகவே அக்கறை கொள்ளுங்கள்; மனிதர்களின் நலம், சந்தோஷம், எதிர்காலம் போன்றவற்றில் அக்கறை கொண்டு, உதவுங்கள். மக்களின் பிறந்தநாளை நினைவு வைத்து, வாழ்த்து தெரிவியுங்கள். அவர்களுக்கு ஏற்ற காப்பீட்டுத் திட்டம் போன்றவற்றை கூறி, அவர்களுக்கு உதவுங்கள். அவர்களது வாழ்க்கையின் முன்னேற்றத்திற்கு உங்களது நேரம், பணம், அறிவு, உழைப்பு போன்றவற்றை சுயநலமின்றி கொடுத்து உதவுங்கள்..புன்னகை புரியுங்கள்; புன்னகையுடன் இனிய முகத்துடன் இருங்கள்.இன்முகத்துடன் இருப்பவர்களை மக்கள் விரும்புவார்கள். சிடுமூஞ்சிகளை மக்கள் விரும்புவதில்லை. உங்களது புன்னகை இதயபூர்வமாக இருக்க வேண்டும். உண்மையற்ற, பல்லிளிப்புக்கு மக்கள் ஏமாற மாட்டார்கள். அகத்தின் அழகு முகத்தில் தெரியும் என்பதைப் போல், நீங்கள் மகிழ்ச்சியாக உங்களது மனதை வைத்துக் கொண்டிருந்தால், அது முகத்திலும் பிரதிபலிக்கும்.ஒரு மனிதருக்கு, அவரது பெயர்தான், எந்த ஒரு மொழியிலும் இனிமையான ஓசை. எந்த ஒரு நபரின் பெயரையும் அறிந்து கொண்டு, பெயரிட்டு அழையுங்கள்.அன்போடு பெயரிட்டு அழைப்பவர்களை மக்கள் விரும்புவார்கள். சராசரியான ஒரு மனிதனுக்கு, உலகில் உள்ள ஒட்டுமொத்த பெயர்களை விடவும், தனது பெயரில் ஆர்வம் அதிகம். எனவே, மக்களை பெயரிட்டு அழைப்பதென்பதே, ஒரு மெலிதான பாராட்டுதான்.பொதுவாக மக்கள் உங்களது வாழ்க்கையை விடவும், தங்களைப் பற்றியும், தங்களது வாழ்க்கை பிரச்சனைகளைப் பற்றியும் பகிர விரும்புகின்றனர். எந்த ஒரு உரையாடலிலும், மற்றவர்கள் பேச விட்டுவிட்டு, அவர்கள் பேசுவதை செவிமடுத்துக் கேளுங்கள். அவர்களை பேச ஊக்குவியுங்கள்.அடுத்தவர்கள் மனதில் உள்ளதைக் கொட்டும்போது, யார் முழுவதுமாக கேட்டுக் கொள்கிறார்களோ, அவர்களை மக்கள் விரும்புவார்கள்.அடுத்தவரின் ஆசாபாசங்களுக்கு ஏற்ப உரையாடுங்கள்; மற்றவர்களுக்கு பிடித்த விஷயங்கள் எது என்று உணர்ந்து, அதற்கேற்ப உங்களது உரையாடலை வைத்துக் கொள்ளுங்கள். இவ்வாறு உரையாடும்போது, நீங்கள் நல்ல ஒரு உரையாடலராக கருதப்படுவீர்கள். மக்கள் உங்களுடன் உரையாட விரும்புவார்கள். ஒரு மனிதனின் மனதிற்கான ராஜபாட்டை, அந்த மனிதன் அதிகம் போற்றும் விஷயங்களைப் பற்றி உரையாடுவதே..மற்றவர்கள் தம்மை முக்கியமானவர்களாக உணரச் செய்யுங்கள்; அதற்கு உண்மையாக முயலுங்கள்; அடுத்தவர்கள் தம்மை முக்கியமானவர்கள் என்ற உணரும் வகையில், அவர்களுக்கு மதிப்பளித்து பழகுங்கள். அவர்களை பாராட்டுங்கள். அவர்களைப் பற்றிய நல்ல விஷயங்களை சொல்லி, அவர்களை உற்சாகப்படுத்துங்கள். இதில் கொஞ்சமும் சுயநலம் கூடாது. சில சமயங்களில் உற்சாகம் குன்றிய, எதிர்மறையான, மன உளைச்சலில், அலுப்பாக உணரும் நபர்களை நீங்கள் சந்திக்க நேரலாம். அவர்கள் முன்பின் தெரியாத நபராகக் கூட இருக்கலாம். ஏதாவது நல்ல விஷயங்களைக் கூறி, அவர்களை உற்சாகமூட்டுவதே, உங்களது வேலை.அடுத்தவரை பாராட்டிய பின்பு, அவர்களது தவறுகளை நாசூக்காக தெரிவிப்பதை, மக்கள் எளிதில் ஏற்றுக் கொள்வார்கள். இதனை சான்ட்விச் முறை என்று டேல் கார்னகி குறிப்பிடுகிறார். முதலில் பாராட்டிய பின்பு, பிழைகளை சுட்டிக் காட்டிய பின்பு, மறுபடி பாராட்டுக்களோடு முடிக்க வேண்டும். இவ்வாறு, பிழைகளை சுட்டிக் காட்டும் போது, கேட்பவர்களுக்கு ஏற்றுக் கொள்வது எளிதாக இருக்கும். குறைகளை கூறும் போது, ஆனால் என்ற வார்த்தைக்கு பதிலாக, மேலும் என்ற வார்த்தையை நேர்மறையாக பயன்படுத்துங்கள். உதாரணமாக, ஒரு பையன் கணக்கில் நல்ல மதிப்பெண்ணும், அறிவியிலில் குறைந்த மதிப்பெண்ணும் பெறுகிறான் என்று கொள்வோம். கணக்கில் நல்ல மதிப்பெண்கள் வாங்கியுள்ளாய். ஆனால், அறிவியிலில் நல்ல மதிப்பெண்கள் வாங்கவில்லை என்று சொன்னால், அது ஒரு எதிர்மறை உணர்வைக் கொடுக்கும். அதற்கு பதிலாக, கணக்கில் நல்ல மதிப்பெண்கள் வாங்கியுள்ளாய். அதே மாதிரி, அறிவியிலிலும் நல்ல மதிப்பெண்கள் வாங்க முயற்சி செய் என்று சொல்லும் போது, நேர்மறையான உணர்வு ஏற்படும்..உங்களது உறவுகள் மேம்பட வாழ்த்துகள்.
-வெங்கடராமன் ராமசுப்ரமணியன். முத்தான பத்து: நம் வாழ்க்கை கெத்து.வாழ்வின் மிக முக்கியமான திறமை என்பது மக்களுடனான உறவை எவ்வாறு நாம் கையாள்கிறோம் என்பதுதான். ஒரு நிறுவனத்தில் தொழில்நுட்ப அறிவு தெரிந்தவரை விட, தொழில்நுட்ப அறிவுடன், தலைமைப் பொறுப்புகளை ஏற்று, மக்களை உற்சாகப்படுத்தி, வழிநடத்துபவர் பெரிய பதவிகளைப் பெறுவார்..மனிதன் ஒரு சமுதாய விலங்கு. மனித உறவுகளை எப்படி பேண வேண்டும் என்பதை குறித்த புத்தகம் இல்லாமல் இருந்தது. 1912ம் ஆண்டு பேச்சுக்கலை குறித்த பயிற்சிகளை எடுத்துவந்த டேல் கார்னகி, இத்தகையதொரு புத்தகத்தின் அவசியத்தை உணர்ந்தார். இதனைக் குறித்து, பல வருடங்கள் ஆராய்ச்சி செய்து, பல்வேறு வெற்றியாளர்களின் சரித்திரங்கள் படித்து, பல்வேறு வெற்றியாளர்களை பேட்டி கண்டு, 1936ம் ஆண்டு 'நண்பர்களை எளிதாக பெறுவதும், மக்களிடம் செல்வாக்கு பெறுவதும் எப்படி' (How to win friends and influence people) என்ற புத்தகத்தை எழுதினார். அது கோடிக்கணக்கில் இன்று வரை விற்கப்பட்டு வருகிறது. உலகின் எல்லா காலங்களுக்குமான சிறந்த விற்பனை புத்தகம் (All time best seller) என்று அழைக்கப்படுகிறது..அந்த புத்தகத்தில் நான்கு பகுதிகள் உள்ளன. அவற்றிலிருந்து, மக்களுடான நமது உறவை ஆரோக்கியமாக, இணக்கமாக, நேர்மறையாக வைத்திருக்க கெத்தான பத்து விஷயங்களைப் பார்ப்போம்..புகார் செய்யாதீர்கள். கண்டனம் செய்யாதீர்கள். குற்றம் காணாதீர்கள்; எவருடைய செயலையும் நீங்கள் குற்றம் குறை கூறுவதை அவர்கள் விரும்புவதில்லை. அவர்களது கண்ணோட்டத்தின் படி, அவர்கள் கடந்து வந்த பாதையின் படி, அவர்கள் செய்தது சரி என்று அவர்கள் ஆணித்தரமாக கூறுவார்கள். நீங்கள் குற்றம், குறை கூறும் பட்சத்தில், அவர்கள் தங்களது செயல்களை நியாயப்படுத்த முயலுவார்கள். அவர்களது நடவடிக்கையினை, நீங்கள் குற்றம் கூறுவதன் மூலமாக, உங்களது நட்பானது விரிசல் அடைகிறது. மனோதத்துவ முறைப்படி, கெட்ட விஷயங்களுக்கு கிடைக்கும் தண்டனையை விடவும், நல்ல விஷயங்களுக்கு கிடைக்கும் பாராட்டின் மூலம், பாடம் நன்கு கற்கப்பட்டு, நல்ல விஷயங்கள் தொடர்ந்து செய்யப்படுகின்றன.நேரிடையாக, மனப்பூர்வமாக பாராட்டுங்கள்; ஒருவர் செய்யும் செயலில் உள்ள நல்லவற்றை மனப்பூர்வமாக, தாராளமாக பாராட்டுங்கள். பாராட்டு மக்களை ஊக்குவிக்கிறது. மனிதனின் குணாதிசயங்களில் ஆழமான ஒன்று, பாராட்டிற்காக ஏங்குவது. நல்ல விஷயங்களை இதயபூர்வமாக அங்கீகரியுங்கள். பாராட்டிற்கும் முகஸ்துதிக்கும் வித்திசாயம் உண்டு. பாராட்டு உண்மையானது, சுயநலமற்றது, இதயப்பூர்வமானது. முகஸ்துதி எளிதில் அடையாளம் காணப்பட்டு, வெறுக்கத்தக்கது.அடுத்த மனிதருக்கு ஒரு நல்ல விஷயத்தினை திணிக்காதீர்கள். அந்த நல்ல விஷயத்தின் மீதான விருப்பத்தை தூண்டுங்கள். மக்களுக்கு என்ன வேண்டுமோ, அதற்கான வழியினைக் காட்டுங்கள். உதாரணமாக, ஒருவர் தனது கடையின் வருமானத்தைப் பெருக்க ஆவலாக உள்ளார். அவர் கடை அசுத்தமாக உள்ளது. அவரது கடையை சுத்தமாக்க கட்டளையிடுவதை விட, சுத்தமாக வைத்திருப்பதால், அதிக வாடிக்கையாளர்கள் வருவார்கள், பணம் பெருகும் என்று வலியுறுத்தி, சுத்தமாக இருப்பதன் விருப்பத்தை கடைக்காரரிடம் தூண்டுங்கள்.அடுத்த மனிதர்களைப் பற்றி நிஜமாகவே அக்கறை கொள்ளுங்கள்; மனிதர்களின் நலம், சந்தோஷம், எதிர்காலம் போன்றவற்றில் அக்கறை கொண்டு, உதவுங்கள். மக்களின் பிறந்தநாளை நினைவு வைத்து, வாழ்த்து தெரிவியுங்கள். அவர்களுக்கு ஏற்ற காப்பீட்டுத் திட்டம் போன்றவற்றை கூறி, அவர்களுக்கு உதவுங்கள். அவர்களது வாழ்க்கையின் முன்னேற்றத்திற்கு உங்களது நேரம், பணம், அறிவு, உழைப்பு போன்றவற்றை சுயநலமின்றி கொடுத்து உதவுங்கள்..புன்னகை புரியுங்கள்; புன்னகையுடன் இனிய முகத்துடன் இருங்கள்.இன்முகத்துடன் இருப்பவர்களை மக்கள் விரும்புவார்கள். சிடுமூஞ்சிகளை மக்கள் விரும்புவதில்லை. உங்களது புன்னகை இதயபூர்வமாக இருக்க வேண்டும். உண்மையற்ற, பல்லிளிப்புக்கு மக்கள் ஏமாற மாட்டார்கள். அகத்தின் அழகு முகத்தில் தெரியும் என்பதைப் போல், நீங்கள் மகிழ்ச்சியாக உங்களது மனதை வைத்துக் கொண்டிருந்தால், அது முகத்திலும் பிரதிபலிக்கும்.ஒரு மனிதருக்கு, அவரது பெயர்தான், எந்த ஒரு மொழியிலும் இனிமையான ஓசை. எந்த ஒரு நபரின் பெயரையும் அறிந்து கொண்டு, பெயரிட்டு அழையுங்கள்.அன்போடு பெயரிட்டு அழைப்பவர்களை மக்கள் விரும்புவார்கள். சராசரியான ஒரு மனிதனுக்கு, உலகில் உள்ள ஒட்டுமொத்த பெயர்களை விடவும், தனது பெயரில் ஆர்வம் அதிகம். எனவே, மக்களை பெயரிட்டு அழைப்பதென்பதே, ஒரு மெலிதான பாராட்டுதான்.பொதுவாக மக்கள் உங்களது வாழ்க்கையை விடவும், தங்களைப் பற்றியும், தங்களது வாழ்க்கை பிரச்சனைகளைப் பற்றியும் பகிர விரும்புகின்றனர். எந்த ஒரு உரையாடலிலும், மற்றவர்கள் பேச விட்டுவிட்டு, அவர்கள் பேசுவதை செவிமடுத்துக் கேளுங்கள். அவர்களை பேச ஊக்குவியுங்கள்.அடுத்தவர்கள் மனதில் உள்ளதைக் கொட்டும்போது, யார் முழுவதுமாக கேட்டுக் கொள்கிறார்களோ, அவர்களை மக்கள் விரும்புவார்கள்.அடுத்தவரின் ஆசாபாசங்களுக்கு ஏற்ப உரையாடுங்கள்; மற்றவர்களுக்கு பிடித்த விஷயங்கள் எது என்று உணர்ந்து, அதற்கேற்ப உங்களது உரையாடலை வைத்துக் கொள்ளுங்கள். இவ்வாறு உரையாடும்போது, நீங்கள் நல்ல ஒரு உரையாடலராக கருதப்படுவீர்கள். மக்கள் உங்களுடன் உரையாட விரும்புவார்கள். ஒரு மனிதனின் மனதிற்கான ராஜபாட்டை, அந்த மனிதன் அதிகம் போற்றும் விஷயங்களைப் பற்றி உரையாடுவதே..மற்றவர்கள் தம்மை முக்கியமானவர்களாக உணரச் செய்யுங்கள்; அதற்கு உண்மையாக முயலுங்கள்; அடுத்தவர்கள் தம்மை முக்கியமானவர்கள் என்ற உணரும் வகையில், அவர்களுக்கு மதிப்பளித்து பழகுங்கள். அவர்களை பாராட்டுங்கள். அவர்களைப் பற்றிய நல்ல விஷயங்களை சொல்லி, அவர்களை உற்சாகப்படுத்துங்கள். இதில் கொஞ்சமும் சுயநலம் கூடாது. சில சமயங்களில் உற்சாகம் குன்றிய, எதிர்மறையான, மன உளைச்சலில், அலுப்பாக உணரும் நபர்களை நீங்கள் சந்திக்க நேரலாம். அவர்கள் முன்பின் தெரியாத நபராகக் கூட இருக்கலாம். ஏதாவது நல்ல விஷயங்களைக் கூறி, அவர்களை உற்சாகமூட்டுவதே, உங்களது வேலை.அடுத்தவரை பாராட்டிய பின்பு, அவர்களது தவறுகளை நாசூக்காக தெரிவிப்பதை, மக்கள் எளிதில் ஏற்றுக் கொள்வார்கள். இதனை சான்ட்விச் முறை என்று டேல் கார்னகி குறிப்பிடுகிறார். முதலில் பாராட்டிய பின்பு, பிழைகளை சுட்டிக் காட்டிய பின்பு, மறுபடி பாராட்டுக்களோடு முடிக்க வேண்டும். இவ்வாறு, பிழைகளை சுட்டிக் காட்டும் போது, கேட்பவர்களுக்கு ஏற்றுக் கொள்வது எளிதாக இருக்கும். குறைகளை கூறும் போது, ஆனால் என்ற வார்த்தைக்கு பதிலாக, மேலும் என்ற வார்த்தையை நேர்மறையாக பயன்படுத்துங்கள். உதாரணமாக, ஒரு பையன் கணக்கில் நல்ல மதிப்பெண்ணும், அறிவியிலில் குறைந்த மதிப்பெண்ணும் பெறுகிறான் என்று கொள்வோம். கணக்கில் நல்ல மதிப்பெண்கள் வாங்கியுள்ளாய். ஆனால், அறிவியிலில் நல்ல மதிப்பெண்கள் வாங்கவில்லை என்று சொன்னால், அது ஒரு எதிர்மறை உணர்வைக் கொடுக்கும். அதற்கு பதிலாக, கணக்கில் நல்ல மதிப்பெண்கள் வாங்கியுள்ளாய். அதே மாதிரி, அறிவியிலிலும் நல்ல மதிப்பெண்கள் வாங்க முயற்சி செய் என்று சொல்லும் போது, நேர்மறையான உணர்வு ஏற்படும்..உங்களது உறவுகள் மேம்பட வாழ்த்துகள்.