– ரங்கஸ்ரீ.களஞ்சியம்!.மங்கையர் மலரின் 42 வருட பயணத்தில், எண்ணற்ற கதைகள், கட்டுரைகள் வந்திருந்தாலும், அவற்றுள் சில எப்போது படித்தாலும், காலத்தால் அழியாத அழகிய வரிகளாக அமைகிறது. அந்த வகையில் ஜனவரி – 1995, இதழில் வெளியான ஓர் கிளாசிக் கட்டுரை இதோ உங்களுக்காக….செய்தி மலர்.நடந்து முடிந்த தேர்தலில் சில குறைபாடுகள் – உடனடியாக நிவர்த்திக்கப்பட வேண்டியவை – பல காணப்பட்டன. முதலில் ஆளுங்கட்சிக்கு இருக்கக்கூடிய பணபலம், அதிகார பலம், டீ.வி., ரேடியோ பிரசார வசதிகள், ஒவ்வொரு பார்லிமெண்ட் தொகுதிக்கும் குறைந்தபட்சம் 25 லட்ச ரூபாய் செலவிடப்பட்டது என்று ஊகிக்கலாம். இவ்வளவு பணத்தைச் செலவழித்து ஐந்தாண்டுகளுக்கு பதவி ஏற்கும் ஆளும் கட்சி உறுப்பினர்கள் எப்படிப்பட்ட அரசாக இருக்கும்? போட்ட முதலீடுகளை லைசென்ஸ் கோட்டா பர்மிட் வியாபாரத்தில் எடுத்து லாபமும் காண வேண்டும்..இரண்டாவதாக எதிர்க்கட்சிகளின் மேற்குறித்த வகை பலவீனம் தவிர, ஒற்றுமையின்மை. இடது, வலது, நடு என்று கொள்கையளவில் மூன்றாகப் பிரிந்திருக்கும் கட்சிகள் எல்லாம் தேர்தல் என்று வந்தால் தலைவர்களின் சொந்த விருப்பு, வெறுப்பிற்கேற்ப கட்சி பிரிந்து தமக்குள்ளேயே போட்டி யிடுகின்றன. கொள்கையை மறந்துவிட்டுக் கூட்டு சேருகின்றன. கம்யூனிஸ்டுக் கட்சியும் வலதுசாரிக் கட்சிகளும் கூட்டு சேர்ந்து வெற்றி பெற்று ஆட்சிக்கு வந்தால் நல்வகையான கொள்கை பின்பற்றப்படும். இந்தியாவில் கட்சி அரசியலை ஒழுங்குபடுத்துவது அவசியம். தேசிய அளவில் மூன்று கட்சிகளை மட்டும் அனுமதி தந்தால் போதுமானது. கூட்டணிகளையும் சுயேட்சை வேட்பாளர்களையும் தேர்தலில் அனுமதிக்கக் கூடாது கட்சி மாறுவதையும் புதுப்புதுக் கட்சிகள் தோன்றுவதையும் அனுமதிக்கக் கூடாது..தேர்தலில் ஏராளமான கறுப்புப் பணம் புழுங்குவதும் வெளிப்படை பொருளாதாரத்தையே சீர்குலையச் செய்யும் கறுப்புப் பண ஆதிக்கத்தை ஆளும் கட்சியே ஏற்றுக்கொண்டு செயல்பட்டால் மற்றவர்களைப் பற்றிக் கேட்பானேன். தேர்தலின்போது கடத்தல்காரர்களும், கறுப்புச் சந்தை வியாபாரிகளும் செல்வாக்குப் பெற்று விடுகிறார்கள். பின் இவர்களைச் சட்டம் என்ன செய்யும்?.மூன்றாவது பெரிய குறை – சாதி, இனம், மதவாரியாக வோட்டுக்கள் சேகரிக்கும் முயற்சிகள் பெரும்பான்மை சாதியை வைத்துத்தான் வேட்பாளர்களையே நிறுத்துகிறார்கள்..இன்னொரு பெரிய குறை பெண்களுக்குத் தரப்படும் வாய்ப்புக் குறைவு. மொத்த வேட்பாளர்களில் பெண்களின் விகிதம் ஆறில் ஒரு பங்குகூட இல்லை. ஜனத்தொகையில் பாதிக்குப் பாதி பெண்கள். ஆண்களை விடப் பெண்கள் திறமையாக நிர்வாகம் செய்ய முடியும் என்பதற்கு மறைந்த பிரதமர் இந்திராகாந்தியே ஓர் எடுத்துக்காட்டு. ஒவ்வொரு கட்சியும் குறைந்தபட்சம் மூன்றில் ஒரு பங்கு இடங்களையாவது பெண்களுக்கு விட்டுக் கொடுக்க வேண்டும். அல்லது பெண்களுக்கென்று ரிசர்வ் தொகுதிகள் இருக்க வேண்டும். மந்திரி சபைகளிலும் இதே விகிதத்தில் பெண்களுக்கு இடம் தர வேண்டும். இனி வரும் தேர்தல்களிலாவது இந்தக் குறைகள் நீக்கப்படும் என்று எதிர்பார்ப்போம்..**************.முதலில் 300தான் என்றார்கள். பிறகு 350, 400, 450, 500, 550, 560, 564 என்று ஏலக்கடை விலையாய் ஏறிக்கொண்டு போனது. திடீரென்று பி.டி.ஐ. செய்திப்படி சாவு எண்ணிக்கை 1000-க்கு மேல் இருக்கும் என்று கணக்கிடப்படுகிறது! அடுத்த நாள் 2000க்கு மேல் என்றது ரேடியோ. அதன் பிறகு எண்ணுவதை விட்டுவிட்டார்கள். அதிகம் அவதிக்குள்ளானவர்கள் குழந்தைகளும், தாய்மார்களுமே..போபாலில் விஷவாயுச் சாவுகள் வரலாறு காணாத சோகம். முன்னெச்சரிக்கை இருந்தும், பொறுப்பில் இருந்தவர்கள் மெத்தனமாக இருந்துவிட்டார்கள். பூச்சிக் கொல்லி மருந்து தயாரிக்கும் இந்தத் தொழிற்சாலையை நகருக்குள்ளேயே அனுமதித்திருக்கக் கூடாது என்று இப்போது சொல்கிறார்கள். எம்.என்.புச் என்னும் அரசு அதிகாரி 1980லேயே விஷவாயு உற்பத்தி செய்யும் யூனியன் கார்பைடு கம்பெனிக்கு போபால் கார்ப்பரேஷன் சார்பில் ஒரு நோட்டிஸ் விட்டார். 'இடத்தைக் காலி பண்ணுங்கள்' என்று. விளைவு அவர்தான் மாற்றலில் போக வேண்டி வந்தது..சுமார் நூறு டன்கள் தேக்கி வைத்திருந்த மூன்று டாங்குகளிலிருந்து ஏதாவது ஒன்று கசிந்து நச்சு வாயு காற்றில் கலந்தால் நகர மக்கள் தீவிரமாகப் பாதிக்கப்படுவர் என்று கம்பெனிக்கும் அதிகாரிகளுக்கும் தெரிந்தே இருந்தது. ஆனால் அலட்சியமாக இருந்து விட்டார்கள். சர்வதேச கம்பெனிகள் எவ்வாறு அரசு அதிகாரிகளை கைக்குள் போட்டுக்கொண்டு சட்டங்களையும், விதிகளையும் மீறுகிறது என்பதற்குப் போபால் நிகழ்ச்சி ஒரு எடுத்துக்காட்டு. இன்னும் எத்தனை இடங்களில் இப்படிப்பட்ட அபாயங்கள் காத்திருக்கின்றனவோ காலதேவனுக்குத்தான் தெரியும்.
– ரங்கஸ்ரீ.களஞ்சியம்!.மங்கையர் மலரின் 42 வருட பயணத்தில், எண்ணற்ற கதைகள், கட்டுரைகள் வந்திருந்தாலும், அவற்றுள் சில எப்போது படித்தாலும், காலத்தால் அழியாத அழகிய வரிகளாக அமைகிறது. அந்த வகையில் ஜனவரி – 1995, இதழில் வெளியான ஓர் கிளாசிக் கட்டுரை இதோ உங்களுக்காக….செய்தி மலர்.நடந்து முடிந்த தேர்தலில் சில குறைபாடுகள் – உடனடியாக நிவர்த்திக்கப்பட வேண்டியவை – பல காணப்பட்டன. முதலில் ஆளுங்கட்சிக்கு இருக்கக்கூடிய பணபலம், அதிகார பலம், டீ.வி., ரேடியோ பிரசார வசதிகள், ஒவ்வொரு பார்லிமெண்ட் தொகுதிக்கும் குறைந்தபட்சம் 25 லட்ச ரூபாய் செலவிடப்பட்டது என்று ஊகிக்கலாம். இவ்வளவு பணத்தைச் செலவழித்து ஐந்தாண்டுகளுக்கு பதவி ஏற்கும் ஆளும் கட்சி உறுப்பினர்கள் எப்படிப்பட்ட அரசாக இருக்கும்? போட்ட முதலீடுகளை லைசென்ஸ் கோட்டா பர்மிட் வியாபாரத்தில் எடுத்து லாபமும் காண வேண்டும்..இரண்டாவதாக எதிர்க்கட்சிகளின் மேற்குறித்த வகை பலவீனம் தவிர, ஒற்றுமையின்மை. இடது, வலது, நடு என்று கொள்கையளவில் மூன்றாகப் பிரிந்திருக்கும் கட்சிகள் எல்லாம் தேர்தல் என்று வந்தால் தலைவர்களின் சொந்த விருப்பு, வெறுப்பிற்கேற்ப கட்சி பிரிந்து தமக்குள்ளேயே போட்டி யிடுகின்றன. கொள்கையை மறந்துவிட்டுக் கூட்டு சேருகின்றன. கம்யூனிஸ்டுக் கட்சியும் வலதுசாரிக் கட்சிகளும் கூட்டு சேர்ந்து வெற்றி பெற்று ஆட்சிக்கு வந்தால் நல்வகையான கொள்கை பின்பற்றப்படும். இந்தியாவில் கட்சி அரசியலை ஒழுங்குபடுத்துவது அவசியம். தேசிய அளவில் மூன்று கட்சிகளை மட்டும் அனுமதி தந்தால் போதுமானது. கூட்டணிகளையும் சுயேட்சை வேட்பாளர்களையும் தேர்தலில் அனுமதிக்கக் கூடாது கட்சி மாறுவதையும் புதுப்புதுக் கட்சிகள் தோன்றுவதையும் அனுமதிக்கக் கூடாது..தேர்தலில் ஏராளமான கறுப்புப் பணம் புழுங்குவதும் வெளிப்படை பொருளாதாரத்தையே சீர்குலையச் செய்யும் கறுப்புப் பண ஆதிக்கத்தை ஆளும் கட்சியே ஏற்றுக்கொண்டு செயல்பட்டால் மற்றவர்களைப் பற்றிக் கேட்பானேன். தேர்தலின்போது கடத்தல்காரர்களும், கறுப்புச் சந்தை வியாபாரிகளும் செல்வாக்குப் பெற்று விடுகிறார்கள். பின் இவர்களைச் சட்டம் என்ன செய்யும்?.மூன்றாவது பெரிய குறை – சாதி, இனம், மதவாரியாக வோட்டுக்கள் சேகரிக்கும் முயற்சிகள் பெரும்பான்மை சாதியை வைத்துத்தான் வேட்பாளர்களையே நிறுத்துகிறார்கள்..இன்னொரு பெரிய குறை பெண்களுக்குத் தரப்படும் வாய்ப்புக் குறைவு. மொத்த வேட்பாளர்களில் பெண்களின் விகிதம் ஆறில் ஒரு பங்குகூட இல்லை. ஜனத்தொகையில் பாதிக்குப் பாதி பெண்கள். ஆண்களை விடப் பெண்கள் திறமையாக நிர்வாகம் செய்ய முடியும் என்பதற்கு மறைந்த பிரதமர் இந்திராகாந்தியே ஓர் எடுத்துக்காட்டு. ஒவ்வொரு கட்சியும் குறைந்தபட்சம் மூன்றில் ஒரு பங்கு இடங்களையாவது பெண்களுக்கு விட்டுக் கொடுக்க வேண்டும். அல்லது பெண்களுக்கென்று ரிசர்வ் தொகுதிகள் இருக்க வேண்டும். மந்திரி சபைகளிலும் இதே விகிதத்தில் பெண்களுக்கு இடம் தர வேண்டும். இனி வரும் தேர்தல்களிலாவது இந்தக் குறைகள் நீக்கப்படும் என்று எதிர்பார்ப்போம்..**************.முதலில் 300தான் என்றார்கள். பிறகு 350, 400, 450, 500, 550, 560, 564 என்று ஏலக்கடை விலையாய் ஏறிக்கொண்டு போனது. திடீரென்று பி.டி.ஐ. செய்திப்படி சாவு எண்ணிக்கை 1000-க்கு மேல் இருக்கும் என்று கணக்கிடப்படுகிறது! அடுத்த நாள் 2000க்கு மேல் என்றது ரேடியோ. அதன் பிறகு எண்ணுவதை விட்டுவிட்டார்கள். அதிகம் அவதிக்குள்ளானவர்கள் குழந்தைகளும், தாய்மார்களுமே..போபாலில் விஷவாயுச் சாவுகள் வரலாறு காணாத சோகம். முன்னெச்சரிக்கை இருந்தும், பொறுப்பில் இருந்தவர்கள் மெத்தனமாக இருந்துவிட்டார்கள். பூச்சிக் கொல்லி மருந்து தயாரிக்கும் இந்தத் தொழிற்சாலையை நகருக்குள்ளேயே அனுமதித்திருக்கக் கூடாது என்று இப்போது சொல்கிறார்கள். எம்.என்.புச் என்னும் அரசு அதிகாரி 1980லேயே விஷவாயு உற்பத்தி செய்யும் யூனியன் கார்பைடு கம்பெனிக்கு போபால் கார்ப்பரேஷன் சார்பில் ஒரு நோட்டிஸ் விட்டார். 'இடத்தைக் காலி பண்ணுங்கள்' என்று. விளைவு அவர்தான் மாற்றலில் போக வேண்டி வந்தது..சுமார் நூறு டன்கள் தேக்கி வைத்திருந்த மூன்று டாங்குகளிலிருந்து ஏதாவது ஒன்று கசிந்து நச்சு வாயு காற்றில் கலந்தால் நகர மக்கள் தீவிரமாகப் பாதிக்கப்படுவர் என்று கம்பெனிக்கும் அதிகாரிகளுக்கும் தெரிந்தே இருந்தது. ஆனால் அலட்சியமாக இருந்து விட்டார்கள். சர்வதேச கம்பெனிகள் எவ்வாறு அரசு அதிகாரிகளை கைக்குள் போட்டுக்கொண்டு சட்டங்களையும், விதிகளையும் மீறுகிறது என்பதற்குப் போபால் நிகழ்ச்சி ஒரு எடுத்துக்காட்டு. இன்னும் எத்தனை இடங்களில் இப்படிப்பட்ட அபாயங்கள் காத்திருக்கின்றனவோ காலதேவனுக்குத்தான் தெரியும்.