மங்கையர் மலரில் வாசகியரின் FB பதிவு!.என்னை மிகவும் கவர்ந்த விழா திருச்சி, புத்தூரில் நடைபெறும் குழுமாயி அம்மன் திருவிழா தான். நான் திருச்சியில் இருக்கும் போது மிகவும் ரசித்து அந்த விழாவில் பங்கு கொள்வேன். வயலூர் சாலையில் இருக்கும் ஆற்றுக்கு அந்தப் பக்கம் குழுமாயி அம்மன் கோவில் உள்ளது. அந்த அம்மன் கோவில் தான் குழுமாயி அம்மன் புகுந்த வீடு. மாசி மாதம் அந்த அம்மன் புத்தூரில் இருக்கும் தன் பிறந்த வீட்டிற்கு வருவார் என்பது ஐதீகம்..அக்ரஹாரத்தில் இருக்கும் தன் புகுந்த வீட்டுக்கு குழுமாயி அம்மன் வந்து மூன்று நாள் தங்கும் அந்த விழா கோலாகலமாக நடக்கும். அந்த திருவிழாவை ரசிப்பதற்கு ஆயிரம் கண்கள் வேண்டும். அவ்வளவு அருமையாக இருக்கும். முதல் நாள் மஞ்சள் நீராட்டு விழா, இரண்டாம் நாள் குட்டிக் குடிக்கும் விழா, மூன்றாம் நாள் சுத்த பூஜை என்று மூன்று நாட்கள் கோலாகலமாக இருந்து விட்டு அந்த அம்மன் திரும்பிச் செல்லும் போது சோகமாக இருப்பது போலவே தோன்றும். என்னை மிகவும் ரசிக்க வைத்த திருவிழா குழுமாயி அம்மன் திருவிழாதான்.-உஷா முத்துராமன், திருநகர்.கும்பகோணத்தில் 12 பெருமாள் ஒரே இடத்தில் கூடும் வைபவம் 'அட்சய திரிதியை திருவிழா'. கண்கொள்ளாக் காட்சி. தீர்த்தவாரி, அன்னதானம் மற்றும் நீர்மோர் பந்தல், பானகம் என்று ஒரே கோலாகலமாக இருக்கும்.வயிறு மற்றும் மனதும் ஒரே இடத்தில், ஒரே நேரத்தில் நிறையும். கடவுளின் அருளும் கண்டிப்பாகக் கிடைக்கும்.-வி.ஸ்ரீவித்யா பிரசாத், சென்னை.ஶ்ரீ விநாயகர் சதுர்த்தி விழா என் இதயம் கவர்ந்த விழா. நான் முதலில் பார்த்து என் மனமார மகிழ்ச்சி அடைந்த விழா. முழுமுதற் கடவுளுக்கு விழா ஆரம்பித்த பிறகு தான் மற்ற விழாக்கள் வரும். தன்னலமற்ற பக்தியின் மூலம் விநாயகரின் அன்பை எளிதில் அடையலாம். அந்த நாளில் கோயிலுக்கு சென்று பல பக்தி நிறைந்த மக்களோடு சேர்ந்து இறைவனை வணங்கி அவருடைய பிரசாதத்தை மக்களோடு மக்களாக சேர்ந்திருந்து உண்பதில் இருக்கும் மகிழ்ச்சி எதிலும் இல்லை.-கலைமதி சிவகுரு.மதுரை மீனாட்சி அம்மன் சித்திரை திருவிழா தான் எனக்கு மிகவும் பிடித்தது. திருவிழா சமயத்தில் எங்கே பார்த்தாலும் கும்பல் 'ஜேஜே' என்று இருக்கும் . திருவிழாவை வர்ணிக்க வார்த்தைகளை இல்லை என்று சொல்லலாம். திருக்கல்யாணத்தின் போது, அம்மாவை பார்க்கும்போது வெட்கப்பட்டுக் கொண்டே தலைகுனிந்து சிரிப்பது போலவே இருக்கும். இதையெல்லாம் பார்க்க கொடுத்து வைத்திருக்க வேண்டும் என்றே சொல்லலாம்..குழந்தைகளின் கோலாட்டம், மீனாட்சி அம்மனை போல வேடமணிந்து வலம் வருவது பார்க்க கண்கொள்ளா காட்சியாக இருக்கும். அழகர் வைகையாற்றில் இறங்குவதற்காக வரும்போது மதுரை மக்கள் அனைவரும் அழகரை வரவேற்க மகிழ்ச்சியோடு ஆனந்த வெள்ளத்தில் இருப்பார்கள். மதுரை மக்களுக்கு திருவிழா என்றால் சித்திரை திருவிழா தான்.-சாமுண்டீஸ்வரி பன்னீர்செல்வம்.சோளிங்கர் தேர் திருவிழா. அதிகாலையில் தேரில் எழுந்தருளி இருக்கும் பெருமாளை நாம் தேர் கிளம்புவதற்கு முன்பே, தேர் முட்டி பக்கத்தில் இருக்கும் படிகளில் ஏறி தேரினுள் நுழைந்து பெருமாளை சேவித்து பிரதஷணம் வரலாம். அந்த அதிகாலை நான் வானத்தில் மிதப்பது போல உணர்ந்தேன்.-ஆர். உமா.மதுரைல நடைபெரும் மீனாட்சி அம்மன் திருக்கல்யாணம். ஆற்றில் அழகர் இறங்கும் வைபோகம் 15 நாள் திருவிழா கோலாகலமாக நடக்கும். வைகை ஆற்றுக்கு தெற்கில் தங்கைக்கு பத்துநாள், வடக்கே அண்ணன் அழகருக்கு 5 நாள் என மதுரைல ஒவ்வொருவரும் தங்கள் வீட்டு விஷேசம் போல் கொண்டாடுவோம்.-சித்ரா குமார்.வேறென்ன பொங்கல்தான்! வீடே பளிச் ஆகும். மூன்று நாள் கொண்டாட்டம். சிறு வயதில் பொங்கலுக்கு வளையல் போட்டு சடை பின்னி செவந்திப்பூ வைத்து தைத்து புதுப்பாவாடை சட்டையுடன், பாவாடை அழுக்காகாமல் தூக்கிப்பிடித்து நடந்து கன்னிப்பொங்கலன்று குளக்கரையில் கும்மியடித்து பாடும் பாட்டும் ஆட்டமும் என்றும் நீங்காத நினைவுகள்.-அன்பு பாலா.எங்கள் திருவரங்கத்தில் வைகுண்ட ஏகாதசி அன்று ' அரையர் சேவையை' காண கோடி கண்கள் வேண்டும்.-உஷா சம்பத்.மயிலை கபாலீஸ்வரர் கோவில் பிரம்மோற்சவம் எனக்கு மிகவும் பிடிக்கும். பங்குனி பெருவிழாவான இந்த உற்சவத்தின் முக்கிய நாட்களான அதிகார நந்தி, தேர், ரிஷப வாகனம், பிக்ஷாடனர், அறுபத்து மூவர் ஆகிய நாட்களுக்கு கூடுதல் சிறப்பு..அறுபத்து மூன்று நாயன்மார்களும் சிறு பல்லக்கில் நான்கு மாட வீதிகளையும் பவனி வருவது பார்க்க அழகாக இருக்கும். பல்வேறு இடங்களிலிருந்து மக்கள் திரண்டு இதைப் பார்க்க வருவார்கள். பக்தர்களுக்காக ஆங்காங்கே நீர்மோர், பானகம், சாப்பாடு எல்லாம் இலவசமாக விநியோகிப்பார்கள். அதிகார நந்தி( 3ம் நாள்) மயிலை குளத்தில் ஞானப்பால் வழங்கும் காட்சி நடைபெறும். கபாலீஸ்வரர் அதிகார நந்தி வாகனத்தில் வீதி வருவார். அப்போது நந்திக்கும், ஸ்வாமிக்கும் வஸ்திரம், மாலை சாற்றி வேண்டிக் கொண்டால் குழந்தைகளின் படிப்பு, வேலை , திருமணம் முதலிய கோரிக்கைகள் நிறைவேறும்.ஒவ்வொரு வருடமும் தவறாமல் பார்த்து மகிழ்கிறேன்.-ராதிகா ரவீந்திரன்.கார்த்திகை திருவிழா. தாய் வீட்டிலிருந்து சீராக கொண்டு வந்த வெண்கல விளக்கை ஏற்றும் போதே குதூகலம் கொப்பளிக்கும். மண்விளக்கு, பித்தளை, எவர்சில்வர், வெள்ளி என பேதமின்றி எல்லா விளக்குகளையும் பூஜை அறையில் ஏற்றும்போது ஒளியில் சமத்துவம் பிரதிபலிக்கும். வாசல், காம்பவுண்ட் சுவர், பால்கனி, மொட்டை மாடி என ஊர் முழுவதும் ஜொலிக்கும் அழகை ரசிக்கும் போது மனசு நெறஞ்சு கெடக்க, சுப்பிரமணியர் கோவில் சொக்கப்பனை கொழுந்து விட்டு எரியும் தீ ஜ்வாலை மேலே தெரிய, கைகள் வானோக்கி குவியும் திருக்கார்த்திகை தான் எனக்குப் பிடிச்ச திருவிழா.-கோமதி சிவாயம்.நவராத்திரி திருவிழா தான் முக்கியமான திருவிழா. வருடா வருடம் புதிய பொம்மைகளின் வருகை. ஒன்பது நாட்களும் அம்பிகைக்கு அலங்காரம். விதவிதமான சுண்டல்களும், சிற்றுண்டிகளும். சிறுமிகளின் பட்டுப்பாவாடை அணிவகுப்பு. பக்தி ரசத்தில் தோய்ந்த பாடல்கள். சிறிய கொலுவோ பெரிய கொலுவோ அற்புதமாக நேர்த்தியுடன் அலங்கரிக்கப்படும்..நவராத்திரி ஒன்பது நாளும் மாலை 4 மணியில் இருந்தே எல்லோருக்கும் கொண்டாட்டம் தான். பரணிலிருந்து இறக்கப்படும் பாரம்பரிய கொலு பொம்மைகள் பெயிண்ட் அடிக்கப்பட்டு புத்தம் புதிதாய் காணப்படும். மேலும் இளைஞர்களும் இளைஞிகளும் 'தீம்' கொலு வைத்து கலக்குற காட்சி நவராத்திரியில் தானே.-சுதா திருநாராயணன்.பொங்கல் திருவிழாவைத்தான் நான் விரும்புவேன் , காரணம் தீயஎண்ணங்களையெல்லாம் தீயிட்டு கொளுத்தும் , பழையன கழிதலும் புதியன புகுதலுமாய் போகி, மறுநாள் பொங்கல் பண்டிகை நாம் விளைவித்த பொருட்களை சூாிய பகவானுக்கு படையலிட்டு பொங்கும் மங்கலம் எங்கும் தங்கட்டும் என்றவிதமாய் தாய் வீட்டு வாிசையோடு , அடுத்தநாள் நமக்காக உழைக்கும் கால்நடைகளுக்கு மாியாதை செலுத்தும் மாட்டுப்பொங்கல் விழா , அதற்கு மறுநாள் காிநாள், ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம் தான்..திருவிழாக்கள் அலுக்க சலுக்க பிறந்த வீட்டு சீா் வாிசைகளோடு, அதன் சுகமே சுகம். அதோடு பொங்கல் மறுநாள் கூடப்பிறந்த சகோதரன் சீரோடும் சிறப்போடும் வாழ கணு வைத்தல் இப்படி அதிக செலவில்லாமல் மகிழ்ச்சித்திருநாளாய். இப்படி ஆசை ஆசையாய் கொண்டாடப்படும் பாரம்பரிய பொங்கல் பண்டிகையே என் மனம் கவா்ந்த திருவிழா ஆகும்.-நா.புவனா நாகராஜன்
மங்கையர் மலரில் வாசகியரின் FB பதிவு!.என்னை மிகவும் கவர்ந்த விழா திருச்சி, புத்தூரில் நடைபெறும் குழுமாயி அம்மன் திருவிழா தான். நான் திருச்சியில் இருக்கும் போது மிகவும் ரசித்து அந்த விழாவில் பங்கு கொள்வேன். வயலூர் சாலையில் இருக்கும் ஆற்றுக்கு அந்தப் பக்கம் குழுமாயி அம்மன் கோவில் உள்ளது. அந்த அம்மன் கோவில் தான் குழுமாயி அம்மன் புகுந்த வீடு. மாசி மாதம் அந்த அம்மன் புத்தூரில் இருக்கும் தன் பிறந்த வீட்டிற்கு வருவார் என்பது ஐதீகம்..அக்ரஹாரத்தில் இருக்கும் தன் புகுந்த வீட்டுக்கு குழுமாயி அம்மன் வந்து மூன்று நாள் தங்கும் அந்த விழா கோலாகலமாக நடக்கும். அந்த திருவிழாவை ரசிப்பதற்கு ஆயிரம் கண்கள் வேண்டும். அவ்வளவு அருமையாக இருக்கும். முதல் நாள் மஞ்சள் நீராட்டு விழா, இரண்டாம் நாள் குட்டிக் குடிக்கும் விழா, மூன்றாம் நாள் சுத்த பூஜை என்று மூன்று நாட்கள் கோலாகலமாக இருந்து விட்டு அந்த அம்மன் திரும்பிச் செல்லும் போது சோகமாக இருப்பது போலவே தோன்றும். என்னை மிகவும் ரசிக்க வைத்த திருவிழா குழுமாயி அம்மன் திருவிழாதான்.-உஷா முத்துராமன், திருநகர்.கும்பகோணத்தில் 12 பெருமாள் ஒரே இடத்தில் கூடும் வைபவம் 'அட்சய திரிதியை திருவிழா'. கண்கொள்ளாக் காட்சி. தீர்த்தவாரி, அன்னதானம் மற்றும் நீர்மோர் பந்தல், பானகம் என்று ஒரே கோலாகலமாக இருக்கும்.வயிறு மற்றும் மனதும் ஒரே இடத்தில், ஒரே நேரத்தில் நிறையும். கடவுளின் அருளும் கண்டிப்பாகக் கிடைக்கும்.-வி.ஸ்ரீவித்யா பிரசாத், சென்னை.ஶ்ரீ விநாயகர் சதுர்த்தி விழா என் இதயம் கவர்ந்த விழா. நான் முதலில் பார்த்து என் மனமார மகிழ்ச்சி அடைந்த விழா. முழுமுதற் கடவுளுக்கு விழா ஆரம்பித்த பிறகு தான் மற்ற விழாக்கள் வரும். தன்னலமற்ற பக்தியின் மூலம் விநாயகரின் அன்பை எளிதில் அடையலாம். அந்த நாளில் கோயிலுக்கு சென்று பல பக்தி நிறைந்த மக்களோடு சேர்ந்து இறைவனை வணங்கி அவருடைய பிரசாதத்தை மக்களோடு மக்களாக சேர்ந்திருந்து உண்பதில் இருக்கும் மகிழ்ச்சி எதிலும் இல்லை.-கலைமதி சிவகுரு.மதுரை மீனாட்சி அம்மன் சித்திரை திருவிழா தான் எனக்கு மிகவும் பிடித்தது. திருவிழா சமயத்தில் எங்கே பார்த்தாலும் கும்பல் 'ஜேஜே' என்று இருக்கும் . திருவிழாவை வர்ணிக்க வார்த்தைகளை இல்லை என்று சொல்லலாம். திருக்கல்யாணத்தின் போது, அம்மாவை பார்க்கும்போது வெட்கப்பட்டுக் கொண்டே தலைகுனிந்து சிரிப்பது போலவே இருக்கும். இதையெல்லாம் பார்க்க கொடுத்து வைத்திருக்க வேண்டும் என்றே சொல்லலாம்..குழந்தைகளின் கோலாட்டம், மீனாட்சி அம்மனை போல வேடமணிந்து வலம் வருவது பார்க்க கண்கொள்ளா காட்சியாக இருக்கும். அழகர் வைகையாற்றில் இறங்குவதற்காக வரும்போது மதுரை மக்கள் அனைவரும் அழகரை வரவேற்க மகிழ்ச்சியோடு ஆனந்த வெள்ளத்தில் இருப்பார்கள். மதுரை மக்களுக்கு திருவிழா என்றால் சித்திரை திருவிழா தான்.-சாமுண்டீஸ்வரி பன்னீர்செல்வம்.சோளிங்கர் தேர் திருவிழா. அதிகாலையில் தேரில் எழுந்தருளி இருக்கும் பெருமாளை நாம் தேர் கிளம்புவதற்கு முன்பே, தேர் முட்டி பக்கத்தில் இருக்கும் படிகளில் ஏறி தேரினுள் நுழைந்து பெருமாளை சேவித்து பிரதஷணம் வரலாம். அந்த அதிகாலை நான் வானத்தில் மிதப்பது போல உணர்ந்தேன்.-ஆர். உமா.மதுரைல நடைபெரும் மீனாட்சி அம்மன் திருக்கல்யாணம். ஆற்றில் அழகர் இறங்கும் வைபோகம் 15 நாள் திருவிழா கோலாகலமாக நடக்கும். வைகை ஆற்றுக்கு தெற்கில் தங்கைக்கு பத்துநாள், வடக்கே அண்ணன் அழகருக்கு 5 நாள் என மதுரைல ஒவ்வொருவரும் தங்கள் வீட்டு விஷேசம் போல் கொண்டாடுவோம்.-சித்ரா குமார்.வேறென்ன பொங்கல்தான்! வீடே பளிச் ஆகும். மூன்று நாள் கொண்டாட்டம். சிறு வயதில் பொங்கலுக்கு வளையல் போட்டு சடை பின்னி செவந்திப்பூ வைத்து தைத்து புதுப்பாவாடை சட்டையுடன், பாவாடை அழுக்காகாமல் தூக்கிப்பிடித்து நடந்து கன்னிப்பொங்கலன்று குளக்கரையில் கும்மியடித்து பாடும் பாட்டும் ஆட்டமும் என்றும் நீங்காத நினைவுகள்.-அன்பு பாலா.எங்கள் திருவரங்கத்தில் வைகுண்ட ஏகாதசி அன்று ' அரையர் சேவையை' காண கோடி கண்கள் வேண்டும்.-உஷா சம்பத்.மயிலை கபாலீஸ்வரர் கோவில் பிரம்மோற்சவம் எனக்கு மிகவும் பிடிக்கும். பங்குனி பெருவிழாவான இந்த உற்சவத்தின் முக்கிய நாட்களான அதிகார நந்தி, தேர், ரிஷப வாகனம், பிக்ஷாடனர், அறுபத்து மூவர் ஆகிய நாட்களுக்கு கூடுதல் சிறப்பு..அறுபத்து மூன்று நாயன்மார்களும் சிறு பல்லக்கில் நான்கு மாட வீதிகளையும் பவனி வருவது பார்க்க அழகாக இருக்கும். பல்வேறு இடங்களிலிருந்து மக்கள் திரண்டு இதைப் பார்க்க வருவார்கள். பக்தர்களுக்காக ஆங்காங்கே நீர்மோர், பானகம், சாப்பாடு எல்லாம் இலவசமாக விநியோகிப்பார்கள். அதிகார நந்தி( 3ம் நாள்) மயிலை குளத்தில் ஞானப்பால் வழங்கும் காட்சி நடைபெறும். கபாலீஸ்வரர் அதிகார நந்தி வாகனத்தில் வீதி வருவார். அப்போது நந்திக்கும், ஸ்வாமிக்கும் வஸ்திரம், மாலை சாற்றி வேண்டிக் கொண்டால் குழந்தைகளின் படிப்பு, வேலை , திருமணம் முதலிய கோரிக்கைகள் நிறைவேறும்.ஒவ்வொரு வருடமும் தவறாமல் பார்த்து மகிழ்கிறேன்.-ராதிகா ரவீந்திரன்.கார்த்திகை திருவிழா. தாய் வீட்டிலிருந்து சீராக கொண்டு வந்த வெண்கல விளக்கை ஏற்றும் போதே குதூகலம் கொப்பளிக்கும். மண்விளக்கு, பித்தளை, எவர்சில்வர், வெள்ளி என பேதமின்றி எல்லா விளக்குகளையும் பூஜை அறையில் ஏற்றும்போது ஒளியில் சமத்துவம் பிரதிபலிக்கும். வாசல், காம்பவுண்ட் சுவர், பால்கனி, மொட்டை மாடி என ஊர் முழுவதும் ஜொலிக்கும் அழகை ரசிக்கும் போது மனசு நெறஞ்சு கெடக்க, சுப்பிரமணியர் கோவில் சொக்கப்பனை கொழுந்து விட்டு எரியும் தீ ஜ்வாலை மேலே தெரிய, கைகள் வானோக்கி குவியும் திருக்கார்த்திகை தான் எனக்குப் பிடிச்ச திருவிழா.-கோமதி சிவாயம்.நவராத்திரி திருவிழா தான் முக்கியமான திருவிழா. வருடா வருடம் புதிய பொம்மைகளின் வருகை. ஒன்பது நாட்களும் அம்பிகைக்கு அலங்காரம். விதவிதமான சுண்டல்களும், சிற்றுண்டிகளும். சிறுமிகளின் பட்டுப்பாவாடை அணிவகுப்பு. பக்தி ரசத்தில் தோய்ந்த பாடல்கள். சிறிய கொலுவோ பெரிய கொலுவோ அற்புதமாக நேர்த்தியுடன் அலங்கரிக்கப்படும்..நவராத்திரி ஒன்பது நாளும் மாலை 4 மணியில் இருந்தே எல்லோருக்கும் கொண்டாட்டம் தான். பரணிலிருந்து இறக்கப்படும் பாரம்பரிய கொலு பொம்மைகள் பெயிண்ட் அடிக்கப்பட்டு புத்தம் புதிதாய் காணப்படும். மேலும் இளைஞர்களும் இளைஞிகளும் 'தீம்' கொலு வைத்து கலக்குற காட்சி நவராத்திரியில் தானே.-சுதா திருநாராயணன்.பொங்கல் திருவிழாவைத்தான் நான் விரும்புவேன் , காரணம் தீயஎண்ணங்களையெல்லாம் தீயிட்டு கொளுத்தும் , பழையன கழிதலும் புதியன புகுதலுமாய் போகி, மறுநாள் பொங்கல் பண்டிகை நாம் விளைவித்த பொருட்களை சூாிய பகவானுக்கு படையலிட்டு பொங்கும் மங்கலம் எங்கும் தங்கட்டும் என்றவிதமாய் தாய் வீட்டு வாிசையோடு , அடுத்தநாள் நமக்காக உழைக்கும் கால்நடைகளுக்கு மாியாதை செலுத்தும் மாட்டுப்பொங்கல் விழா , அதற்கு மறுநாள் காிநாள், ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம் தான்..திருவிழாக்கள் அலுக்க சலுக்க பிறந்த வீட்டு சீா் வாிசைகளோடு, அதன் சுகமே சுகம். அதோடு பொங்கல் மறுநாள் கூடப்பிறந்த சகோதரன் சீரோடும் சிறப்போடும் வாழ கணு வைத்தல் இப்படி அதிக செலவில்லாமல் மகிழ்ச்சித்திருநாளாய். இப்படி ஆசை ஆசையாய் கொண்டாடப்படும் பாரம்பரிய பொங்கல் பண்டிகையே என் மனம் கவா்ந்த திருவிழா ஆகும்.-நா.புவனா நாகராஜன்