-ஜி.எஸ்.எஸ்..2006 இல் நடைபெற்ற சம்பவம் இது. 56 வயது 'ஃப்ராங்க்ளின் பால் க்ரோ' தன்னுடன் அறையில் தங்கியிருந்தவரை கொல்லுலை சம்மட்டியால் பலமுறை அடித்துக் கொன்றார்..அமெரிக்காவில் உள்ள ஃபுளோரிடாவில் நடைபெற்றது அந்த வழக்கு. அங்குள்ள ஒரு சிறு நகரம் 'மாஸ் ஃப்ளப்'. அங்கிருந்த ஒரு வீட்டில்தான் கொலை செய்தவர், கொலை செய்யயப்பட்டவர் ஆகிய இருவரும் தங்கி இருந்தனர். அது சக்கரங்கள் பொருத்தப்பட்ட வீடு. அதாவது ஓர் இடத்திலிருந்து இன்னோர் இடத்திற்கு இந்த வீட்டை மாற்ற முடியும். அதில்தான் இருவரும் வாடகைக்குத் தங்கியிருந்தனர்..க்ரோவுடன் அறையில் தங்கியிருந்தவர் பெயர் 'கென்னெத் மாத்யூ'. ஐம்பத்தெட்டு வயதுக்காரர். கென்னெத் வியட்நாம் போரில் பங்கு கொண்டவர். மீன் பிடித்தலில் அவருக்கு அவ்வளவு விருப்பம். வேகமாக மோட்டார் பைக் ஓட்டுவதிலும் வல்லவர்..ஃப்ராங்க்ளின் க்ரோவை இவர் முதலில் சந்தித்தது ஒரு மதுவகத்தில். மேலும் சில முறை அங்கே சந்தித்ததில் நண்பர்கள் ஆனார்கள். தனியாகத் தங்கி கொண்டிருந்தார் க்ரோ. அவரைத் தன்னுடன் தங்குவதற்கு அழைத்தார் கென்னெத். அவரவர் ஊர்களில் இருவருக்குமே குடும்பங்கள் இருந்தன. ஒரு முறை க்ரோவின் குடும்பத்தினரை அழைத்து விருந்தும் வைத்தார் கென்னெத்..எல்லாம் நன்றாகத்தான் போய்க்கொண்டிருந்தது. இருவரும் ஒரே வீட்டைப் பகிர்ந்து கொள்ள தொடங்கி சுமார் ஒரு வருடம் ஆகி இருந்தது. அப்போது ஒருநாள் இருவருக்கும் இடையே ஒரு விஷயம் தொடர்பாக சண்டை ஏற்பட்டது. சட்டென்று கென்னெத் தனது துப்பாக்கியை கையில் எடுத்தார். உடனே க்ரோ அவரை மீண்டும் மீண்டும் பலமாக அருகிலிருந்த கட்டையை எடுத்துத் தாக்கத் தொடங்கினார்..கென்னெத்தின் மண்டை ஓடு உடைந்தது. விரல்கள் உடைந்தன. இறந்தார். அவர் முகம் எந்த அளவுக்கு சிதிலமடைந்து இருந்தது என்றால் அவரை அவருக்கு நெருங்கியவர்களாலேயே உடனடியாக அடையாளம் காண முடியவில்லை. கைரேகைப் பதிவுகளைக் கொண்டுதான் இறந்தது அவர்தான் என்பதை உறுதி செய்துகொள்ள முடிந்தது..நட்போடு இருந்த இருவர் எதனால் திடீரென்று வன்முறை வழிகளை நாட வேண்டும்? காரணம் மிக அற்பமானது. கழிவறையில் டாய்லெட் பேப்பர் தீர்ந்து விட்டிருந்தது. சரியான சமயத்தில் யார் அதை வாங்கி வைத்திருக்க வேண்டும் என்பது தொடர்பாகத்தான் சண்டை தொடங்கியது. இதுதான் படுகொலையில் முடிந்தது!.தொடக்கத்தில் தன் குற்றத்தை ஏற்றுக் கொள்ள க்ரோ மறுத்தார். பின்னர் போலீஸ் தொடர்ந்து செய்த விசாரணையில் உண்மையை ஒத்துக் கொண்டார். மரியான் கவுண்டி சிறையில் அடைக்கப்பட்டார் க்ரோ. அவருக்கு இருபத்திரெண்டரை வருடங்கள் தண்டனை வழங்கப்பட்டன. கடந்த காலத்தில் சிறு சிறு திருட்டுகளுக்காக ஏற்கனவே சின்னச் சின்ன சிறை தண்டனைகளை அனுபவித்து வந்தவர் க்ரோ என்பது தெரிய வந்தது..இறந்தவரின் குடும்பத்தைச் சேர்ந்த 12 பேர் தீர்ப்பு வழங்கும்போது நீதிமன்றத்தில் இருந்தார்கள். தீர்ப்பு வழங்கப்பட்ட பிறகு கைவிலங்குடன் காவலர்கள் அழைத்துச் சென்ற க்ரோவை மிக வெறுப்புடன் பார்த்தார்கள்..நாங்கள் எதிர்பார்த்த நீதி இது அல்ல. க்ரோவுக்கு மரண தண்டனை வழங்கப்பட்டிருக்க வேண்டும். என்றாலும் ஆயுள் தண்டனையாவது கிடைத்ததே என்பதில் ஒரு சிறு ஆறுதல்,' என்று கூறினார் இறந்தவரின் சகோதரியான மிட்ஜ் பெனிங்டன்..'இனி என்னால் மீன்பிடிக்கச் செல்ல முடியாது. உறவினர்களையும் நண்பர்களையும் பார்க்க முடியாது. மோட்டார் பைக் ஓட்ட முடியாது. இதற்கெல்லாம் நான் தயாராக வேண்டும்,' என்று இவர் சிறைக்குச் செல்லும்போது கூற, அவருக்காக அனுதாபப்பட யாரும் தயாராக இல்லை.
-ஜி.எஸ்.எஸ்..2006 இல் நடைபெற்ற சம்பவம் இது. 56 வயது 'ஃப்ராங்க்ளின் பால் க்ரோ' தன்னுடன் அறையில் தங்கியிருந்தவரை கொல்லுலை சம்மட்டியால் பலமுறை அடித்துக் கொன்றார்..அமெரிக்காவில் உள்ள ஃபுளோரிடாவில் நடைபெற்றது அந்த வழக்கு. அங்குள்ள ஒரு சிறு நகரம் 'மாஸ் ஃப்ளப்'. அங்கிருந்த ஒரு வீட்டில்தான் கொலை செய்தவர், கொலை செய்யயப்பட்டவர் ஆகிய இருவரும் தங்கி இருந்தனர். அது சக்கரங்கள் பொருத்தப்பட்ட வீடு. அதாவது ஓர் இடத்திலிருந்து இன்னோர் இடத்திற்கு இந்த வீட்டை மாற்ற முடியும். அதில்தான் இருவரும் வாடகைக்குத் தங்கியிருந்தனர்..க்ரோவுடன் அறையில் தங்கியிருந்தவர் பெயர் 'கென்னெத் மாத்யூ'. ஐம்பத்தெட்டு வயதுக்காரர். கென்னெத் வியட்நாம் போரில் பங்கு கொண்டவர். மீன் பிடித்தலில் அவருக்கு அவ்வளவு விருப்பம். வேகமாக மோட்டார் பைக் ஓட்டுவதிலும் வல்லவர்..ஃப்ராங்க்ளின் க்ரோவை இவர் முதலில் சந்தித்தது ஒரு மதுவகத்தில். மேலும் சில முறை அங்கே சந்தித்ததில் நண்பர்கள் ஆனார்கள். தனியாகத் தங்கி கொண்டிருந்தார் க்ரோ. அவரைத் தன்னுடன் தங்குவதற்கு அழைத்தார் கென்னெத். அவரவர் ஊர்களில் இருவருக்குமே குடும்பங்கள் இருந்தன. ஒரு முறை க்ரோவின் குடும்பத்தினரை அழைத்து விருந்தும் வைத்தார் கென்னெத்..எல்லாம் நன்றாகத்தான் போய்க்கொண்டிருந்தது. இருவரும் ஒரே வீட்டைப் பகிர்ந்து கொள்ள தொடங்கி சுமார் ஒரு வருடம் ஆகி இருந்தது. அப்போது ஒருநாள் இருவருக்கும் இடையே ஒரு விஷயம் தொடர்பாக சண்டை ஏற்பட்டது. சட்டென்று கென்னெத் தனது துப்பாக்கியை கையில் எடுத்தார். உடனே க்ரோ அவரை மீண்டும் மீண்டும் பலமாக அருகிலிருந்த கட்டையை எடுத்துத் தாக்கத் தொடங்கினார்..கென்னெத்தின் மண்டை ஓடு உடைந்தது. விரல்கள் உடைந்தன. இறந்தார். அவர் முகம் எந்த அளவுக்கு சிதிலமடைந்து இருந்தது என்றால் அவரை அவருக்கு நெருங்கியவர்களாலேயே உடனடியாக அடையாளம் காண முடியவில்லை. கைரேகைப் பதிவுகளைக் கொண்டுதான் இறந்தது அவர்தான் என்பதை உறுதி செய்துகொள்ள முடிந்தது..நட்போடு இருந்த இருவர் எதனால் திடீரென்று வன்முறை வழிகளை நாட வேண்டும்? காரணம் மிக அற்பமானது. கழிவறையில் டாய்லெட் பேப்பர் தீர்ந்து விட்டிருந்தது. சரியான சமயத்தில் யார் அதை வாங்கி வைத்திருக்க வேண்டும் என்பது தொடர்பாகத்தான் சண்டை தொடங்கியது. இதுதான் படுகொலையில் முடிந்தது!.தொடக்கத்தில் தன் குற்றத்தை ஏற்றுக் கொள்ள க்ரோ மறுத்தார். பின்னர் போலீஸ் தொடர்ந்து செய்த விசாரணையில் உண்மையை ஒத்துக் கொண்டார். மரியான் கவுண்டி சிறையில் அடைக்கப்பட்டார் க்ரோ. அவருக்கு இருபத்திரெண்டரை வருடங்கள் தண்டனை வழங்கப்பட்டன. கடந்த காலத்தில் சிறு சிறு திருட்டுகளுக்காக ஏற்கனவே சின்னச் சின்ன சிறை தண்டனைகளை அனுபவித்து வந்தவர் க்ரோ என்பது தெரிய வந்தது..இறந்தவரின் குடும்பத்தைச் சேர்ந்த 12 பேர் தீர்ப்பு வழங்கும்போது நீதிமன்றத்தில் இருந்தார்கள். தீர்ப்பு வழங்கப்பட்ட பிறகு கைவிலங்குடன் காவலர்கள் அழைத்துச் சென்ற க்ரோவை மிக வெறுப்புடன் பார்த்தார்கள்..நாங்கள் எதிர்பார்த்த நீதி இது அல்ல. க்ரோவுக்கு மரண தண்டனை வழங்கப்பட்டிருக்க வேண்டும். என்றாலும் ஆயுள் தண்டனையாவது கிடைத்ததே என்பதில் ஒரு சிறு ஆறுதல்,' என்று கூறினார் இறந்தவரின் சகோதரியான மிட்ஜ் பெனிங்டன்..'இனி என்னால் மீன்பிடிக்கச் செல்ல முடியாது. உறவினர்களையும் நண்பர்களையும் பார்க்க முடியாது. மோட்டார் பைக் ஓட்ட முடியாது. இதற்கெல்லாம் நான் தயாராக வேண்டும்,' என்று இவர் சிறைக்குச் செல்லும்போது கூற, அவருக்காக அனுதாபப்பட யாரும் தயாராக இல்லை.