தொகுப்பு : பத்மினி பட்டாபிராமன்.முதல் பெண் துணைவேந்தர்.ஜவஹர்லால் நேரு பல்கலைக் கழகம் டெல்லியில் அமைந்திருக்கும் பெரிய பப்ளிக் மத்திய ஆராய்ச்சி பல்கலைக் கழகம் (Public central Major Research University). 1969 ல் ஆரம்பிக்கப் பட்டது. இங்கே கலை மற்றும் அறிவியல் சம்பந்தப்பட்ட துறைகளில் உயர் கல்வி கற்பிக்கப் படுகிறது..இதன் முதல் பெண் துணைவேந்தராக ஷாந்திஸ்ரீ துலிபுடி பண்டிட் (Santishree Dhulipudi Pandit) தற்போது நியமிக்கப் பட்டிருக்கிறார். மத்திய அரசின் கல்வி அமைச்சகம் இந்தப் பதவியை அவருக்கு வழங்கியிருக்கிறது..அவர் தற்சமயம், மகாராஷ்டிராவில் உள்ள, 'சாவித்ரி பாய் ஃபுலே' பல்கலைக் கழகத்தில் அரசியல் அறிவியல் துறை (Political Science) பேராசிரியராக இருக்கிறார். 59 வயதான ஷாந்திஸ்ரீ, 1988 ல் முதலில் கோவா பல்கலைக் கழகத்தில் பேராசிரியராக பணி புரிய ஆரம்பித்தார். பின்னர் 1993ல் புனே பல்கலைக் கழகத்தில் பேராசிரியராக சேர்ந்தார்..பல்கலைக்கழக மானியக் குழு, (University Grants Commission -UGC), மற்றும் சமூக அறிவியல் ஆராய்ச்சிக் குழு (Indian Council of Social Science Research -ICSSR) போன்றவற்றில் உறுப்பினர். இதுவரை 29 பேருக்கு டாக்டரேட் பெறுவதில் வழிகாட்டும் பேராசிரியராக இருந்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது..ரோஜாவின் கோரிக்கை.ஆந்திராவின் நகரி தொகுதி எம்.எல்.ஏ நடிகை ரோஜா. இவர் தமிழ், தெலுங்கு திரைப்படங்களில் மிகவும் பிரபலமான நடிகை. அண்மையில் சென்னை வந்திருந்த இவர், முதல்வர் திரு. ஸ்டாலின் அவர்களை சந்தித்தார்..அப்போது, ஆந்திர எல்லையில் உள்ள சித்துார் மாவட்டத்தில் செயல்படும் தமிழ் வழி பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்காக, ஒன்று முதல் பத்தாம் வகுப்பு வரையிலும், தமிழ் பாட புத்தகங்களை இலவசமாக வழங்க வலியுறுத்தினார். இவரது கோரிக்கையை ஏற்று, மாணவர்களுக்கு, 10 ஆயிரம் தமிழ் பாட புத்தகங்களை, ஆந்திர பள்ளிகளுக்கு இலவசமாக வழங்க, தமிழ்நாடு பாடநுால் கழகம் உத்தரவிட்டுள்ளது..அறுவை சிகிச்சையின் போது பாடியவர்.கர்னாடக சங்கீத ஆசிரியையான சீதாலட்சுமி என்பவருக்கு, மார்பக புற்றுனோய் காரணமாக அறுவை சிகிச்சை செய்ய வேண்டியிருந்தது. முழுவதும் அளிக்கப்படும் மயக்க மருந்தை ஏற்றுக் கொள்ளும் உடல் நிலை அவருக்கு இல்லாததால் லோகல் அனஸ்தீஷியா எனப்படும், குறிப்பிட்ட இடம் மட்டும் மரத்துப் போகும் மயக்க மருந்து அளித்தனர்..பெரும் பதற்றத்தில் இருந்தார் சீதாலட்சுமி. அவரது பதற்றத்தைத் தணிக்க ஏதாவது பாடும்படி மருத்துவர்கள் சொல்ல, அவரும் தனக்கு மிகவும் பிடித்த "கற்பூர பொம்மை ஒன்று" பாடலை பாடியிருக்கிறார். அப்பாடல், இளையராஜா இசையில், வசந்த் இயக்கிய கேளடி கண்மணி திரைப்படத்தில் இடம் பெற்ற பாடல். சுவாசப் பயிற்சிக்காக அந்தப் பாடலை அடிக்கடி பாடுவதாகவும் சொன்னார்..இளையராஜாவின் தீவிர ரசிகையான இவர் பல முறை மேடைகளில் அவருடய பாடல்களைப் பாடியவர். வெற்றிகரமாக அறுவை சிகிச்சை முடிந்ததும், மருத்துவர்கள் இளையராஜாவிடம் சீதாலட்சுமி பற்றிக் கூற, அப்போலோ மருத்துவமனைக்கு வந்து சீதாலட்சுமியை சந்தித்திருக்கிறார் இளையராஜா.
தொகுப்பு : பத்மினி பட்டாபிராமன்.முதல் பெண் துணைவேந்தர்.ஜவஹர்லால் நேரு பல்கலைக் கழகம் டெல்லியில் அமைந்திருக்கும் பெரிய பப்ளிக் மத்திய ஆராய்ச்சி பல்கலைக் கழகம் (Public central Major Research University). 1969 ல் ஆரம்பிக்கப் பட்டது. இங்கே கலை மற்றும் அறிவியல் சம்பந்தப்பட்ட துறைகளில் உயர் கல்வி கற்பிக்கப் படுகிறது..இதன் முதல் பெண் துணைவேந்தராக ஷாந்திஸ்ரீ துலிபுடி பண்டிட் (Santishree Dhulipudi Pandit) தற்போது நியமிக்கப் பட்டிருக்கிறார். மத்திய அரசின் கல்வி அமைச்சகம் இந்தப் பதவியை அவருக்கு வழங்கியிருக்கிறது..அவர் தற்சமயம், மகாராஷ்டிராவில் உள்ள, 'சாவித்ரி பாய் ஃபுலே' பல்கலைக் கழகத்தில் அரசியல் அறிவியல் துறை (Political Science) பேராசிரியராக இருக்கிறார். 59 வயதான ஷாந்திஸ்ரீ, 1988 ல் முதலில் கோவா பல்கலைக் கழகத்தில் பேராசிரியராக பணி புரிய ஆரம்பித்தார். பின்னர் 1993ல் புனே பல்கலைக் கழகத்தில் பேராசிரியராக சேர்ந்தார்..பல்கலைக்கழக மானியக் குழு, (University Grants Commission -UGC), மற்றும் சமூக அறிவியல் ஆராய்ச்சிக் குழு (Indian Council of Social Science Research -ICSSR) போன்றவற்றில் உறுப்பினர். இதுவரை 29 பேருக்கு டாக்டரேட் பெறுவதில் வழிகாட்டும் பேராசிரியராக இருந்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது..ரோஜாவின் கோரிக்கை.ஆந்திராவின் நகரி தொகுதி எம்.எல்.ஏ நடிகை ரோஜா. இவர் தமிழ், தெலுங்கு திரைப்படங்களில் மிகவும் பிரபலமான நடிகை. அண்மையில் சென்னை வந்திருந்த இவர், முதல்வர் திரு. ஸ்டாலின் அவர்களை சந்தித்தார்..அப்போது, ஆந்திர எல்லையில் உள்ள சித்துார் மாவட்டத்தில் செயல்படும் தமிழ் வழி பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்காக, ஒன்று முதல் பத்தாம் வகுப்பு வரையிலும், தமிழ் பாட புத்தகங்களை இலவசமாக வழங்க வலியுறுத்தினார். இவரது கோரிக்கையை ஏற்று, மாணவர்களுக்கு, 10 ஆயிரம் தமிழ் பாட புத்தகங்களை, ஆந்திர பள்ளிகளுக்கு இலவசமாக வழங்க, தமிழ்நாடு பாடநுால் கழகம் உத்தரவிட்டுள்ளது..அறுவை சிகிச்சையின் போது பாடியவர்.கர்னாடக சங்கீத ஆசிரியையான சீதாலட்சுமி என்பவருக்கு, மார்பக புற்றுனோய் காரணமாக அறுவை சிகிச்சை செய்ய வேண்டியிருந்தது. முழுவதும் அளிக்கப்படும் மயக்க மருந்தை ஏற்றுக் கொள்ளும் உடல் நிலை அவருக்கு இல்லாததால் லோகல் அனஸ்தீஷியா எனப்படும், குறிப்பிட்ட இடம் மட்டும் மரத்துப் போகும் மயக்க மருந்து அளித்தனர்..பெரும் பதற்றத்தில் இருந்தார் சீதாலட்சுமி. அவரது பதற்றத்தைத் தணிக்க ஏதாவது பாடும்படி மருத்துவர்கள் சொல்ல, அவரும் தனக்கு மிகவும் பிடித்த "கற்பூர பொம்மை ஒன்று" பாடலை பாடியிருக்கிறார். அப்பாடல், இளையராஜா இசையில், வசந்த் இயக்கிய கேளடி கண்மணி திரைப்படத்தில் இடம் பெற்ற பாடல். சுவாசப் பயிற்சிக்காக அந்தப் பாடலை அடிக்கடி பாடுவதாகவும் சொன்னார்..இளையராஜாவின் தீவிர ரசிகையான இவர் பல முறை மேடைகளில் அவருடய பாடல்களைப் பாடியவர். வெற்றிகரமாக அறுவை சிகிச்சை முடிந்ததும், மருத்துவர்கள் இளையராஜாவிடம் சீதாலட்சுமி பற்றிக் கூற, அப்போலோ மருத்துவமனைக்கு வந்து சீதாலட்சுமியை சந்தித்திருக்கிறார் இளையராஜா.