கர்நாடக மாநிலம் ஹளேபீடு, பேலூரு கோயில் சிற்பங்களை நேரில் பார்த்து ரசித்ததுண்டா?– எஸ். கெஜலட்சுமி ராஜேந்திரன், லால்குடி..எனக்கு லைட்டா டவுட் ஆகுது கெஜலட்சுமி மேடம். நீங்க வெத்தலையில 'மை' போட்டுப் பார்க்கிற வித்தை தெரிஞ்சவங்களோ?ஏன்னா… ரீஸன்டாதான் அந்தக் கோயில்களுக்குப் போய் 'கல்லிலே கலை வண்ணம் கண்டான்'னு கொண்டாடிட்டு வந்தேன்!ஏதோ ஒரு கல்லும் உளியும் கிடைச்சா, கற்பனையா ஏதாவது சிலை செய்யறது வழக்கமான ஒண்ணுதான்! அதுக்காக அங்குலம் அங்குலமா, என்னவோ கே.டி.எம் தங்க ஆபரணம் செய்யற மாதிரிநகாசு வேலையில்ல செய்திருக்காங்க?! வேற லெவல்!சிவன் நர்த்தனம் செய்கிறார்; அப்ப அவரோட மார்பில் உள்ள ருத்ராட்சம், புலித்தோல் கச்சை இரண்டும் லேசா பறக்கும் இல்லையா? அந்த எஃபெக்ட்டைக்கூட கல்லில் கொண்டு வர முடியுமா?அதுவும் 3Dயில்!நுரைக் கற்கள் எனப்படும் சாஃப்ட் ஸ்டோனில் செய்வதால் இது சாத்தியம்தானாம்!எல்லா தூண்களும் ஷோரூம் டெலிவரி மாதிரி அப்படியொரு பளபளப்பு. இன்னிக்குதான் பாலிஷ் போட்ட மாதிரி ஒரு வழவழப்பு! ஆனா அதுக்கு வயசு என்னவோ பல நூறு ஆண்டுகள்! அதுவும் எப்படி? விதவிதமா திருப்பலாம்! இன்டர்லாக், பின் அண்ட் சாக்கெட் முறையில்…சிற்பக் கலையில் இன்ஜினியரிங் மட்டுமல்ல… காமக்கலையும் சில இடங்களில் விளக்கப்பட்டிருக்கு. காதலும் ஒரு கலைதானே… (ஹி…ஹி!) ஆனால் இந்த மாதிரியான சிற்பங்கள் வெறும் 3% மட்டுமே!இங்குள்ள பெண் சிலைகளைப் பார்த்தாலே போதும், ஹொய்சாளா காலத்து நாகரிகம் எவ்வளவு மேன்மையாக இருந்தது என அறியலாம். ஓர் அழகி மாராப்பை சரி செய்கிறாள். இன்னொருத்தி கைக் கண்ணாடியில் தன் உருவம் பார்த்து ரசிக்கிறாள். என்ன ஒரு தத்ரூப பாவங்கள்!ரசனை கொட்ட அலாவுதீன் கில்ஜியும், துக்ளக்கும் ஏகத்துக்கும் இடிச்சுச் சாய்ச்சப் பின்னும் இவ்வளவு அழகு மிச்சமிருக்கே! எல்லாம்சென்னகேசவன் அருள்! ஹொய்சாளேஸ்வரன் திருவிளையாடல்!.புத்தகக் கண்காட்சியில் பிக்பாக்கெட் அடித்து, வசமாக மாட்டிக் கொண்டாராமே மேற்கு வங்க நடிகை ஒருவர்?– சிவஸ்ரீபாலா, ஹைதராபாத்.அவங்க பேரு என்ன தெரியுமோ? ரூபா துட்டா! பேருலேயே ரூபாவையும், துட்டையும் வெச்சுக்கிட்டு ஏம்மா… இப்படி? வொய் ம்மா வொய்?.ரூ 200 கோடி கடன் வாங்குகிறதே தமிழ்நாடு மின் வாரியம்?– ஸ்ரீலதா சுப்பையா, புதுக்கோட்டை.தமிழ்நாட்டுல, இன்னிய தேதிக்கு சக்கைப் போடு போடற ஒரே ஒரு துறை 'டாஸ்மாக்' மட்டும்தான் போல!.அணில் ஓடியும் கடன் ஆகுதாமா? மொதல்ல இந்த இலவசங்களை ஒழியுங்க! யார் ஆட்சிக்கு வந்தாலும், அதெப்படி ஒரே கதை – திரைக்கதை – வசனம் – டைரக்ஷன்? ஆட்சி மாறினாலும் காட்சி மாறலையே ஸ்ரீலதா!.ஓ.கே! மின் கட்டண உயர்வுக்கு நாங்க ரெடி! "மெழுகுவத்தி எரிகின்றது; எதிர்காலம் தெரிகின்றது.".உலகின் மிக விலை உயர்ந்த திரவம் தாய்ப்பாலா? ரத்தமா?– எஸ். ரேவதி, உதகை.மேடம்… மேடம்… ப்ளீஸ்… இன்னும் ஒண்ணு நம்ப லிஸ்ட்டுல இருக்கு. வித் யுவர் பர்மிஷன் அதையும் சேர்த்துக்கிறேனே! உலகின் மிக விலையுயர்ந்த திரவம் – கண்ணீர்! ஏனென்றால் அது 1% நீரும், 99% உணர்ச்சிகளும் கொண்டது. அதிலும் பசியில் தவிக்கும் ஏழைக் குழந்தையின் கண்ணீர் மிகவும் வலி உடையது. எனவே… யாரையும் காயப்படுத்தும் முன் ஒரு முறைக்கு இருமுறை யோசிச்சு செய்யுங்க!
கர்நாடக மாநிலம் ஹளேபீடு, பேலூரு கோயில் சிற்பங்களை நேரில் பார்த்து ரசித்ததுண்டா?– எஸ். கெஜலட்சுமி ராஜேந்திரன், லால்குடி..எனக்கு லைட்டா டவுட் ஆகுது கெஜலட்சுமி மேடம். நீங்க வெத்தலையில 'மை' போட்டுப் பார்க்கிற வித்தை தெரிஞ்சவங்களோ?ஏன்னா… ரீஸன்டாதான் அந்தக் கோயில்களுக்குப் போய் 'கல்லிலே கலை வண்ணம் கண்டான்'னு கொண்டாடிட்டு வந்தேன்!ஏதோ ஒரு கல்லும் உளியும் கிடைச்சா, கற்பனையா ஏதாவது சிலை செய்யறது வழக்கமான ஒண்ணுதான்! அதுக்காக அங்குலம் அங்குலமா, என்னவோ கே.டி.எம் தங்க ஆபரணம் செய்யற மாதிரிநகாசு வேலையில்ல செய்திருக்காங்க?! வேற லெவல்!சிவன் நர்த்தனம் செய்கிறார்; அப்ப அவரோட மார்பில் உள்ள ருத்ராட்சம், புலித்தோல் கச்சை இரண்டும் லேசா பறக்கும் இல்லையா? அந்த எஃபெக்ட்டைக்கூட கல்லில் கொண்டு வர முடியுமா?அதுவும் 3Dயில்!நுரைக் கற்கள் எனப்படும் சாஃப்ட் ஸ்டோனில் செய்வதால் இது சாத்தியம்தானாம்!எல்லா தூண்களும் ஷோரூம் டெலிவரி மாதிரி அப்படியொரு பளபளப்பு. இன்னிக்குதான் பாலிஷ் போட்ட மாதிரி ஒரு வழவழப்பு! ஆனா அதுக்கு வயசு என்னவோ பல நூறு ஆண்டுகள்! அதுவும் எப்படி? விதவிதமா திருப்பலாம்! இன்டர்லாக், பின் அண்ட் சாக்கெட் முறையில்…சிற்பக் கலையில் இன்ஜினியரிங் மட்டுமல்ல… காமக்கலையும் சில இடங்களில் விளக்கப்பட்டிருக்கு. காதலும் ஒரு கலைதானே… (ஹி…ஹி!) ஆனால் இந்த மாதிரியான சிற்பங்கள் வெறும் 3% மட்டுமே!இங்குள்ள பெண் சிலைகளைப் பார்த்தாலே போதும், ஹொய்சாளா காலத்து நாகரிகம் எவ்வளவு மேன்மையாக இருந்தது என அறியலாம். ஓர் அழகி மாராப்பை சரி செய்கிறாள். இன்னொருத்தி கைக் கண்ணாடியில் தன் உருவம் பார்த்து ரசிக்கிறாள். என்ன ஒரு தத்ரூப பாவங்கள்!ரசனை கொட்ட அலாவுதீன் கில்ஜியும், துக்ளக்கும் ஏகத்துக்கும் இடிச்சுச் சாய்ச்சப் பின்னும் இவ்வளவு அழகு மிச்சமிருக்கே! எல்லாம்சென்னகேசவன் அருள்! ஹொய்சாளேஸ்வரன் திருவிளையாடல்!.புத்தகக் கண்காட்சியில் பிக்பாக்கெட் அடித்து, வசமாக மாட்டிக் கொண்டாராமே மேற்கு வங்க நடிகை ஒருவர்?– சிவஸ்ரீபாலா, ஹைதராபாத்.அவங்க பேரு என்ன தெரியுமோ? ரூபா துட்டா! பேருலேயே ரூபாவையும், துட்டையும் வெச்சுக்கிட்டு ஏம்மா… இப்படி? வொய் ம்மா வொய்?.ரூ 200 கோடி கடன் வாங்குகிறதே தமிழ்நாடு மின் வாரியம்?– ஸ்ரீலதா சுப்பையா, புதுக்கோட்டை.தமிழ்நாட்டுல, இன்னிய தேதிக்கு சக்கைப் போடு போடற ஒரே ஒரு துறை 'டாஸ்மாக்' மட்டும்தான் போல!.அணில் ஓடியும் கடன் ஆகுதாமா? மொதல்ல இந்த இலவசங்களை ஒழியுங்க! யார் ஆட்சிக்கு வந்தாலும், அதெப்படி ஒரே கதை – திரைக்கதை – வசனம் – டைரக்ஷன்? ஆட்சி மாறினாலும் காட்சி மாறலையே ஸ்ரீலதா!.ஓ.கே! மின் கட்டண உயர்வுக்கு நாங்க ரெடி! "மெழுகுவத்தி எரிகின்றது; எதிர்காலம் தெரிகின்றது.".உலகின் மிக விலை உயர்ந்த திரவம் தாய்ப்பாலா? ரத்தமா?– எஸ். ரேவதி, உதகை.மேடம்… மேடம்… ப்ளீஸ்… இன்னும் ஒண்ணு நம்ப லிஸ்ட்டுல இருக்கு. வித் யுவர் பர்மிஷன் அதையும் சேர்த்துக்கிறேனே! உலகின் மிக விலையுயர்ந்த திரவம் – கண்ணீர்! ஏனென்றால் அது 1% நீரும், 99% உணர்ச்சிகளும் கொண்டது. அதிலும் பசியில் தவிக்கும் ஏழைக் குழந்தையின் கண்ணீர் மிகவும் வலி உடையது. எனவே… யாரையும் காயப்படுத்தும் முன் ஒரு முறைக்கு இருமுறை யோசிச்சு செய்யுங்க!