கிராமத்துச் சூழலில், மிக எளிமையான மனிதர்களுடன் வாழ்ந்ததுண்டா… என்னைப் போல?.அவுட்டோர் ஷூட்டிங்குக்கு ஏற்ற லொகேஷன். நெல் வயல், மாந்தோப்பு, கரும்புத் தோட்டம், விவசாயக் கிணறு, வனத்தாயி கோயில், வைக்கோல் போர் (அது மேல் ஏறி சறுக்கி விளையாடி விட்டு வீட்டுக்கு வந்து "அரிக்குது! அரிக்குது"னு அம்மாவை முதுகு சொறிய வைத்த காட்சி நிழலாடியது!).எனக்கொரு வாய்ப்புக் கிடைச்சா, நிச்சயம் டைம் – மெஷின் ஏறி, என்னுடைய குழந்தைப் பருவத்துக்குப் போகவே விரும்புவேன். காரணம் குருவி ரொட்டியோ, நைலான் ரிப்பனோ அல்ல; பாரம்பரியமாக அந்தக் குடியானவர்கள் காத்து வந்த ஆரோக்கிய டிப்ஸ்..உணவே மருந்து, இயற்கையாகவே குணமாக்கும் அறிவு, மன அழுத்தம் கொள்ளாத வாழ்க்கை முறை… இவை அனைத்தையும் நானும் பின்பற்றி வாழ முயற்சிப்பேன்..காலை எழுந்ததும் வேம்போ, ஆலோ, அத்தியோ… கைக்குக் கிட்டும் மரக்குச்சியை உடைச்சு பல் விளக்குவார்கள். நம்மைப் போல இரண்டு நிமிஷம் அல்ல; கசப்பும் துவர்ப்புமாக ஒரு 15 நிமிஷமாவது வாயில் குதப்பி உமிழ்வார்கள்.நான்கூட கோபால் பல்பொடி வாங்க காசில்லாமல், இப்படிச் செய்கிறார்கள் என்று நினைத்தேன். ஆனால், அது பற்களையும் ஈறுகளையும் உறுதியாக்கும் இயற்கை வைத்தியம் என்று என் மரமண்டைக்கு உதிக்கும்போது வாயில் ஏகப்பட்ட ரூட்கேனால், இம்ப்ளான்ட்!குழந்தைகள், பெண்கள், மஞ்சள், வேப்பம் பொடி, ஜலிச்ச புற்றுமண் பூசி முகம் அலம்புவார்கள் (mud pack?!) அவர்கள் முகத்தில் ஒரு பரு இருக்கணுமே!'ப்ளாஸ்டிக் சேர்' என்று ஒன்று அப்போது இல்லவே இல்லை. தரையில் சம்மணம் போட்டுதான் உட்காரணும். சமைக்கும்போது குத்துக் காலிட்டிருப்பார்கள். அதனால் 'Knee Transplantation'ன்னா கிலோ என்ன விலை கதைதான்!அப்புறம்… உடம்பைக் குளிர்ச்சியா வெச்சிருந்தாதான் முடி கொட்டாதாம்! கடைந்த மோர், இளநீர், நுங்கு, கூழ், நீசத்தண்ணி என்கிற பழைய சோறு இதெல்லாம் அவர்கள் உணவில் இருந்தது. நாம்பதான் பானிபுரி, ஃப்ரைட் ரைஸ், நூடுல்ஸ் பிரியர்களாச்சே! அப்புறம் நோய்க்கு மல்ட்டி கலர் இன்விடேஷன் அச்சடிக்க வேண்டியதுதானே!வாரந்தோறும் எண்ணெய் தேய்ச்சுக் குளிப்பாங்க. 'அதற்கு நாலு காயணும்' என்று பெயர்! சூரியன் காயணும், வெந்நீர் காயணும், எண்ணெய் காயணும், அப்புறம் வயிறு காயணும். ஆனா, இப்ப கூந்தலைச் சூடாக்கி 'அயர்ன்' செய்து, விதவிதமான ஷாம்பூக்களைப் பயன்படுத்தி, சர்வநாசம்!.ஒரு டாக்டரின் வெயிட்டிங் ரூமில் டோக்கன் போட்டுவிட்டு உட்கார்ந்திருந்த சமயத்தில்தான் இந்த மாதிரியான ஞானோதயமே வருது!.பேஸ்ட்டை ஒதுக்கிவிட்டு, ஆலம்-வேலம் நாடியிருக்கலாம். 32 பல்லும் இருந்திருக்கும்!"பொட்டப் புள்ளைக்கு குதியாட்டம் என்ன வேண்டி கிடக்கு?"ன்னு யார் காமென்ட் அடிச்சாலும், ஸ்கிப்பிங், சைக்ளிங் செய்து தேக பலம் பெற்றிருக்கலாம். நல்ல வடிவமும் கிடைச்சுருக்கும்.கைகுத்தல் அரிசி, சிறுதானியம், பச்சைக் காய்கறி, பழங்களின் அருமை தெரியாம இருந்துட்டியே அனுஷா இட்ஸ் டூ லேட் நெள!கல்லூரியில் பஜன்ஸ், ட்ரில் இரண்டுமே கம்பல்சரி! இப்போது அம்மாவைவிட பெரிசா ஊதிப் போயிருக்கும் இளம் பெண்களைப் பார்த்தால், "நன்றி சொல்ல உனக்கு வார்த்தை இல்லை எனக்கு, ஓ மை டியர் காலேஜ்!"செல்ஃபோன், லேப்டாப்பிலிருந்து வரும் ரேடியேஷன் அளவைக் கேட்டால் நமக்கு அதிர்ச்சியாயும், புற்றுநோய்க்கு கும்மாளமாவும் இருக்கு!.சரி, போனது போகட்டும்! இனியாவது, நம் குழந்தைகளுக்கு,பேரன்-பேத்திகளுக்கு இறைபக்தி, தேசநலன், ஆரோக்கிய வாழ்வின் அருமை எல்லாவற்றையும் சொல்லி வளர்ப்போம். இயற்கை தந்த பெருங்கொடை அழிந்து போகாமல், அடுத்த தலைமுறைக்கும் எடுத்துச் செல்ல உதவுவோம்!.மூத்தோர் சொல் மட்டுமல்ல….மூத்தோர் வாழ்வும் அமிர்தம்தான்!.இயன்றவரை கடைப்பிடித்து.இன்பமாய் வாழ்வோம் கண்மணிஸ்!
கிராமத்துச் சூழலில், மிக எளிமையான மனிதர்களுடன் வாழ்ந்ததுண்டா… என்னைப் போல?.அவுட்டோர் ஷூட்டிங்குக்கு ஏற்ற லொகேஷன். நெல் வயல், மாந்தோப்பு, கரும்புத் தோட்டம், விவசாயக் கிணறு, வனத்தாயி கோயில், வைக்கோல் போர் (அது மேல் ஏறி சறுக்கி விளையாடி விட்டு வீட்டுக்கு வந்து "அரிக்குது! அரிக்குது"னு அம்மாவை முதுகு சொறிய வைத்த காட்சி நிழலாடியது!).எனக்கொரு வாய்ப்புக் கிடைச்சா, நிச்சயம் டைம் – மெஷின் ஏறி, என்னுடைய குழந்தைப் பருவத்துக்குப் போகவே விரும்புவேன். காரணம் குருவி ரொட்டியோ, நைலான் ரிப்பனோ அல்ல; பாரம்பரியமாக அந்தக் குடியானவர்கள் காத்து வந்த ஆரோக்கிய டிப்ஸ்..உணவே மருந்து, இயற்கையாகவே குணமாக்கும் அறிவு, மன அழுத்தம் கொள்ளாத வாழ்க்கை முறை… இவை அனைத்தையும் நானும் பின்பற்றி வாழ முயற்சிப்பேன்..காலை எழுந்ததும் வேம்போ, ஆலோ, அத்தியோ… கைக்குக் கிட்டும் மரக்குச்சியை உடைச்சு பல் விளக்குவார்கள். நம்மைப் போல இரண்டு நிமிஷம் அல்ல; கசப்பும் துவர்ப்புமாக ஒரு 15 நிமிஷமாவது வாயில் குதப்பி உமிழ்வார்கள்.நான்கூட கோபால் பல்பொடி வாங்க காசில்லாமல், இப்படிச் செய்கிறார்கள் என்று நினைத்தேன். ஆனால், அது பற்களையும் ஈறுகளையும் உறுதியாக்கும் இயற்கை வைத்தியம் என்று என் மரமண்டைக்கு உதிக்கும்போது வாயில் ஏகப்பட்ட ரூட்கேனால், இம்ப்ளான்ட்!குழந்தைகள், பெண்கள், மஞ்சள், வேப்பம் பொடி, ஜலிச்ச புற்றுமண் பூசி முகம் அலம்புவார்கள் (mud pack?!) அவர்கள் முகத்தில் ஒரு பரு இருக்கணுமே!'ப்ளாஸ்டிக் சேர்' என்று ஒன்று அப்போது இல்லவே இல்லை. தரையில் சம்மணம் போட்டுதான் உட்காரணும். சமைக்கும்போது குத்துக் காலிட்டிருப்பார்கள். அதனால் 'Knee Transplantation'ன்னா கிலோ என்ன விலை கதைதான்!அப்புறம்… உடம்பைக் குளிர்ச்சியா வெச்சிருந்தாதான் முடி கொட்டாதாம்! கடைந்த மோர், இளநீர், நுங்கு, கூழ், நீசத்தண்ணி என்கிற பழைய சோறு இதெல்லாம் அவர்கள் உணவில் இருந்தது. நாம்பதான் பானிபுரி, ஃப்ரைட் ரைஸ், நூடுல்ஸ் பிரியர்களாச்சே! அப்புறம் நோய்க்கு மல்ட்டி கலர் இன்விடேஷன் அச்சடிக்க வேண்டியதுதானே!வாரந்தோறும் எண்ணெய் தேய்ச்சுக் குளிப்பாங்க. 'அதற்கு நாலு காயணும்' என்று பெயர்! சூரியன் காயணும், வெந்நீர் காயணும், எண்ணெய் காயணும், அப்புறம் வயிறு காயணும். ஆனா, இப்ப கூந்தலைச் சூடாக்கி 'அயர்ன்' செய்து, விதவிதமான ஷாம்பூக்களைப் பயன்படுத்தி, சர்வநாசம்!.ஒரு டாக்டரின் வெயிட்டிங் ரூமில் டோக்கன் போட்டுவிட்டு உட்கார்ந்திருந்த சமயத்தில்தான் இந்த மாதிரியான ஞானோதயமே வருது!.பேஸ்ட்டை ஒதுக்கிவிட்டு, ஆலம்-வேலம் நாடியிருக்கலாம். 32 பல்லும் இருந்திருக்கும்!"பொட்டப் புள்ளைக்கு குதியாட்டம் என்ன வேண்டி கிடக்கு?"ன்னு யார் காமென்ட் அடிச்சாலும், ஸ்கிப்பிங், சைக்ளிங் செய்து தேக பலம் பெற்றிருக்கலாம். நல்ல வடிவமும் கிடைச்சுருக்கும்.கைகுத்தல் அரிசி, சிறுதானியம், பச்சைக் காய்கறி, பழங்களின் அருமை தெரியாம இருந்துட்டியே அனுஷா இட்ஸ் டூ லேட் நெள!கல்லூரியில் பஜன்ஸ், ட்ரில் இரண்டுமே கம்பல்சரி! இப்போது அம்மாவைவிட பெரிசா ஊதிப் போயிருக்கும் இளம் பெண்களைப் பார்த்தால், "நன்றி சொல்ல உனக்கு வார்த்தை இல்லை எனக்கு, ஓ மை டியர் காலேஜ்!"செல்ஃபோன், லேப்டாப்பிலிருந்து வரும் ரேடியேஷன் அளவைக் கேட்டால் நமக்கு அதிர்ச்சியாயும், புற்றுநோய்க்கு கும்மாளமாவும் இருக்கு!.சரி, போனது போகட்டும்! இனியாவது, நம் குழந்தைகளுக்கு,பேரன்-பேத்திகளுக்கு இறைபக்தி, தேசநலன், ஆரோக்கிய வாழ்வின் அருமை எல்லாவற்றையும் சொல்லி வளர்ப்போம். இயற்கை தந்த பெருங்கொடை அழிந்து போகாமல், அடுத்த தலைமுறைக்கும் எடுத்துச் செல்ல உதவுவோம்!.மூத்தோர் சொல் மட்டுமல்ல….மூத்தோர் வாழ்வும் அமிர்தம்தான்!.இயன்றவரை கடைப்பிடித்து.இன்பமாய் வாழ்வோம் கண்மணிஸ்!