பகுதி – 2.ஶ்ரீபுரத்தில் அருளும் சிங்கமுகன்!.-சித்ரா மாதவன்.'தொண்டை மண்டலம்' என அழைக்கப்படும் காஞ்சிபுரம் அருகே பழைய சீவரம் எனும் இயற்கை எழில் கொஞ்சும் கிராமத்தில், ஒரு சிறிய குன்றின் மீது அமைந்துள்ளது ஸ்ரீ லக்ஷ்மி நரசிம்மர் திருக்கோயில். 'ஸ்ரீ' என அழைக்கப்படும் மகாலட்சுமி தாயாருடன் சேர்ந்து பெருமாள் அருள்பாலிக்கும் ஊர் என்பதால் இத்தலம், 'ஸ்ரீபுரம்' என அழைக்கப்பட்டு, காலப்போக்கில் சீவரம் என மருவியது. மிகவும் பழைமையான திருத்தலம் என்பதால் பக்தர்கள், இத்தலத்தை பழைய சீவரம் என அழைக்கின்றனர். செங்கல்பட்டு – காஞ்சிபுரம் நெடுஞ்சாலையில், சென்னையிலிருந்து சுமார் 70 கி.மீ. தொலைவில், பாலாற்றங்கரையில் குடிகொண்டு அருள்பாலிக்கும் இந்த லக்ஷ்மி நரசிம்மப் பெருமாள், தனது மடியின் இடப்பாகம் லக்ஷ்மி தேவியை அமர்த்தியபடி, வலது கரம் அபய ஹஸ்தத்துடன் விளங்க பக்தர்களுக்குக் காட்சி தருகிறார்..தல புராணம்: புராண காலத்தில், 'சத்யவ்ரத ஷேத்ரம்' என அழைக்கப்பட்ட இந்தத் திருக்கோயில், 'பத்மகிரி' எனும் ஓர் சிறிய குன்றின் மீது அக்காலத்தில் மிகவும் பிரசித்தி பெற்று விளங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது..ஒருசமயம், அத்ரி மகரிஷி இத்தலத்தில் மகாவிஷ்ணுவைக் குறித்து தவமியற்றி வந்தார். மகரிஷியின் தவத்தில் மகிழ்ந்த பெருமாள் அவருக்கு லக்ஷ்மி நரசிம்மராக, வதனத்தில் புன்னகை பொலியக் காட்சி தந்ததை, 'பத்மகிரி மகாத்மியம்' என்று, 'பிரம்மாண்ட புராணத்தில்' குறிப்பிடப்பட்டுள்ளது..கட்டட அமைப்பு: இந்தக் கோயிலின் பிரதான நுழைவாயில் மற்றும் ஐந்துநிலை ராஜகோபுரம் கிழக்கு நோக்கி அமைந்துள்ளது. ஆனால், கருவறையும் விமானமும் மேற்கு நோக்கி விளங்குவது குறிப்பிடத்தக்கது. கருவறையின் முன்பு கொடிமரம் எழிலுடன் காட்சி தருகிறது. ஶ்ரீ லக்ஷ்மி நரசிம்மப் பெருமாள் சுமார் ஆறடி உயரத்தில் ஸ்ரீ மகாலட்சுமி தாயாரை தமது மடியிலே அமர்த்திய திருக்கோலத்தில் அருள் பொங்கக் காட்சி தருகிறார். தனிக்கோயில் நாச்சியாராக அஹோபிலவல்லி தாயார் தனிச் சன்னிதியில் கிழக்கு நோக்கி அருள்பாலிக்கிறார்..கோயில் முற்றத்தில் ஆண்டாள், நம்மாழ்வார், பெரியாழ்வார், திருப்பாணாழ்வார் மற்றும் திருமங்கை ஆழ்வார்களுக்கு தனிச் சன்னிதிகள் உள்ளன. வைணவ ஆசாரியர்களான ராமானுஜர் மற்றும் வேதாந்த தேசிகருக்கும் தனிச் சன்னிதிகள் உண்டு. ராஜகோபுரத்தின் அருகே அமைந்த சிறிய மண்டபம் ஒன்றில் அனுமனுக்கு தனிச் சன்னிதி உள்ளது. இக்கோயிலின் அனைத்து பூஜைகளும் வைகானச ஆகம விதிப்படி நடைபெறுவது குறிப்பிடத்தக்கது. திருக்கோயிலுக்கும் குன்றின் அடிவாரத்துக்கும் இடையில் தல தீர்த்தமான அத்ரி புஷ்கரணி அமைந்துள்ளது. குன்றின் மீது அமைந்த இக்கோயிலுக்குச் செல்ல கற்படிகள் அமைக்கப்பட்டுள்ளன. சாலை வழி ஒன்றும் உள்ளது..திருவிழாக்கள்: இக்கோயிலில் வருடம் முழுக்க பல்வேறு திருவிழாக்கள் கொண்டாடப்பட்டாலும், நரசிம்ம ஜயந்தி, ஆடிப்பூரம், ஸ்ரீ ஜயந்தி மற்றும் பவித்ரோத்ஸவம், தீபாவளி, வைகுண்ட ஏகாதசி, பங்குனி உத்திரம் ஆகியவை வெகு விமரிசையாகக் கடைபிடிக்கப்படுகின்றன. இவை தவிர, தை மாத மாட்டுப் பொங்கல் திருநாள் மிகவும் விசேஷமாகக் அனுசரிக்கப்படுகிறது. இன்று, காஞ்சி வரதராஜ சுவாமி ஆலய உத்ஸவ மூர்த்தி, சுமார் பதினைந்து கி.மீ. தொலைவு பயணித்து, இத்தல நரசிம்ம மூர்த்தியை தரிசிக்கிறார். அதன் பிறகு இம்மலையின் உச்சியில் உள்ள வரதராஜ மண்டபத்தில் மதியம் முழுவதும் பக்தர்களுக்கு அருள்பாலித்து பிறகு, திருமஞ்சனமும் ஆராதனையும் காண்கிறார். அன்று மாலை ஸ்ரீ லக்ஷ்மி நரசிம்மர் மற்றும் வரதராஜ சுவாமி ஆகியோர் பாலாறு நதியைக் கடந்து திருமுக்கூடல் சென்று, அங்குள்ள ஸ்ரீ வெங்கடேச பெருமாளுடனும், அருகேயுள்ள கோயில்களிலிருந்து மேலும் இரண்டு பெருமாள்களுடனும் சேர்ந்து பக்தர்களுக்கு அருள்பாலிப்பது மிகவும் சிறப்பு. அதன் பிறகு, வரதராஜ சுவாமி மீண்டும் பழைய சீவரம் வந்து, காஞ்சிபுரத்திற்குத் திரும்புகிறார்..கல்வெட்டுகள்: கி.பி.1080 – 81ம் காலத்தைச் சேர்ந்த சோழப் பேரரசன் முதலாம் குலோத்துங்கனின் பழைமையான கல்வெட்டு ஒன்று இங்கு காணப்படுகிறது. இது தவிர, பன்னிரெண்டு மற்றும் பதிமூன்றாம் நூற்றாண்டைச் சேர்ந்த கல்வெட்டுகளும் இங்கு காணக் கிடைக்கின்றன..சோழர் காலத்தில் இந்த ஆலயம், 'ராஜேந்திர சோழ வின்னகர்' என்று அழைக்கப்பட்டுள்ளது. இக்கோயில் இறைவன், 'சிங்கப்பிரான் ஆழ்வார்', 'திருமாலிருஞ்சோலை ஆழ்வார்', 'நரசிம்ம நாயனார்' என பல்வேறு திருநாமங்களால் அழைக்கப்பட்டுள்ளார். அக்காலத்தில் இந்தத் திருத்தலம் ஷியபுரம் எனவும், நான்கு வேதங்களிலும் திறமை வாய்ந்த விற்பன்னர்கள் நிறைந்த பகுதியாக இருந்தமையால் திருபுவன வீரசதுர்வேதி மங்கலம் எனவும் பக்தர்களால் அழைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
பகுதி – 2.ஶ்ரீபுரத்தில் அருளும் சிங்கமுகன்!.-சித்ரா மாதவன்.'தொண்டை மண்டலம்' என அழைக்கப்படும் காஞ்சிபுரம் அருகே பழைய சீவரம் எனும் இயற்கை எழில் கொஞ்சும் கிராமத்தில், ஒரு சிறிய குன்றின் மீது அமைந்துள்ளது ஸ்ரீ லக்ஷ்மி நரசிம்மர் திருக்கோயில். 'ஸ்ரீ' என அழைக்கப்படும் மகாலட்சுமி தாயாருடன் சேர்ந்து பெருமாள் அருள்பாலிக்கும் ஊர் என்பதால் இத்தலம், 'ஸ்ரீபுரம்' என அழைக்கப்பட்டு, காலப்போக்கில் சீவரம் என மருவியது. மிகவும் பழைமையான திருத்தலம் என்பதால் பக்தர்கள், இத்தலத்தை பழைய சீவரம் என அழைக்கின்றனர். செங்கல்பட்டு – காஞ்சிபுரம் நெடுஞ்சாலையில், சென்னையிலிருந்து சுமார் 70 கி.மீ. தொலைவில், பாலாற்றங்கரையில் குடிகொண்டு அருள்பாலிக்கும் இந்த லக்ஷ்மி நரசிம்மப் பெருமாள், தனது மடியின் இடப்பாகம் லக்ஷ்மி தேவியை அமர்த்தியபடி, வலது கரம் அபய ஹஸ்தத்துடன் விளங்க பக்தர்களுக்குக் காட்சி தருகிறார்..தல புராணம்: புராண காலத்தில், 'சத்யவ்ரத ஷேத்ரம்' என அழைக்கப்பட்ட இந்தத் திருக்கோயில், 'பத்மகிரி' எனும் ஓர் சிறிய குன்றின் மீது அக்காலத்தில் மிகவும் பிரசித்தி பெற்று விளங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது..ஒருசமயம், அத்ரி மகரிஷி இத்தலத்தில் மகாவிஷ்ணுவைக் குறித்து தவமியற்றி வந்தார். மகரிஷியின் தவத்தில் மகிழ்ந்த பெருமாள் அவருக்கு லக்ஷ்மி நரசிம்மராக, வதனத்தில் புன்னகை பொலியக் காட்சி தந்ததை, 'பத்மகிரி மகாத்மியம்' என்று, 'பிரம்மாண்ட புராணத்தில்' குறிப்பிடப்பட்டுள்ளது..கட்டட அமைப்பு: இந்தக் கோயிலின் பிரதான நுழைவாயில் மற்றும் ஐந்துநிலை ராஜகோபுரம் கிழக்கு நோக்கி அமைந்துள்ளது. ஆனால், கருவறையும் விமானமும் மேற்கு நோக்கி விளங்குவது குறிப்பிடத்தக்கது. கருவறையின் முன்பு கொடிமரம் எழிலுடன் காட்சி தருகிறது. ஶ்ரீ லக்ஷ்மி நரசிம்மப் பெருமாள் சுமார் ஆறடி உயரத்தில் ஸ்ரீ மகாலட்சுமி தாயாரை தமது மடியிலே அமர்த்திய திருக்கோலத்தில் அருள் பொங்கக் காட்சி தருகிறார். தனிக்கோயில் நாச்சியாராக அஹோபிலவல்லி தாயார் தனிச் சன்னிதியில் கிழக்கு நோக்கி அருள்பாலிக்கிறார்..கோயில் முற்றத்தில் ஆண்டாள், நம்மாழ்வார், பெரியாழ்வார், திருப்பாணாழ்வார் மற்றும் திருமங்கை ஆழ்வார்களுக்கு தனிச் சன்னிதிகள் உள்ளன. வைணவ ஆசாரியர்களான ராமானுஜர் மற்றும் வேதாந்த தேசிகருக்கும் தனிச் சன்னிதிகள் உண்டு. ராஜகோபுரத்தின் அருகே அமைந்த சிறிய மண்டபம் ஒன்றில் அனுமனுக்கு தனிச் சன்னிதி உள்ளது. இக்கோயிலின் அனைத்து பூஜைகளும் வைகானச ஆகம விதிப்படி நடைபெறுவது குறிப்பிடத்தக்கது. திருக்கோயிலுக்கும் குன்றின் அடிவாரத்துக்கும் இடையில் தல தீர்த்தமான அத்ரி புஷ்கரணி அமைந்துள்ளது. குன்றின் மீது அமைந்த இக்கோயிலுக்குச் செல்ல கற்படிகள் அமைக்கப்பட்டுள்ளன. சாலை வழி ஒன்றும் உள்ளது..திருவிழாக்கள்: இக்கோயிலில் வருடம் முழுக்க பல்வேறு திருவிழாக்கள் கொண்டாடப்பட்டாலும், நரசிம்ம ஜயந்தி, ஆடிப்பூரம், ஸ்ரீ ஜயந்தி மற்றும் பவித்ரோத்ஸவம், தீபாவளி, வைகுண்ட ஏகாதசி, பங்குனி உத்திரம் ஆகியவை வெகு விமரிசையாகக் கடைபிடிக்கப்படுகின்றன. இவை தவிர, தை மாத மாட்டுப் பொங்கல் திருநாள் மிகவும் விசேஷமாகக் அனுசரிக்கப்படுகிறது. இன்று, காஞ்சி வரதராஜ சுவாமி ஆலய உத்ஸவ மூர்த்தி, சுமார் பதினைந்து கி.மீ. தொலைவு பயணித்து, இத்தல நரசிம்ம மூர்த்தியை தரிசிக்கிறார். அதன் பிறகு இம்மலையின் உச்சியில் உள்ள வரதராஜ மண்டபத்தில் மதியம் முழுவதும் பக்தர்களுக்கு அருள்பாலித்து பிறகு, திருமஞ்சனமும் ஆராதனையும் காண்கிறார். அன்று மாலை ஸ்ரீ லக்ஷ்மி நரசிம்மர் மற்றும் வரதராஜ சுவாமி ஆகியோர் பாலாறு நதியைக் கடந்து திருமுக்கூடல் சென்று, அங்குள்ள ஸ்ரீ வெங்கடேச பெருமாளுடனும், அருகேயுள்ள கோயில்களிலிருந்து மேலும் இரண்டு பெருமாள்களுடனும் சேர்ந்து பக்தர்களுக்கு அருள்பாலிப்பது மிகவும் சிறப்பு. அதன் பிறகு, வரதராஜ சுவாமி மீண்டும் பழைய சீவரம் வந்து, காஞ்சிபுரத்திற்குத் திரும்புகிறார்..கல்வெட்டுகள்: கி.பி.1080 – 81ம் காலத்தைச் சேர்ந்த சோழப் பேரரசன் முதலாம் குலோத்துங்கனின் பழைமையான கல்வெட்டு ஒன்று இங்கு காணப்படுகிறது. இது தவிர, பன்னிரெண்டு மற்றும் பதிமூன்றாம் நூற்றாண்டைச் சேர்ந்த கல்வெட்டுகளும் இங்கு காணக் கிடைக்கின்றன..சோழர் காலத்தில் இந்த ஆலயம், 'ராஜேந்திர சோழ வின்னகர்' என்று அழைக்கப்பட்டுள்ளது. இக்கோயில் இறைவன், 'சிங்கப்பிரான் ஆழ்வார்', 'திருமாலிருஞ்சோலை ஆழ்வார்', 'நரசிம்ம நாயனார்' என பல்வேறு திருநாமங்களால் அழைக்கப்பட்டுள்ளார். அக்காலத்தில் இந்தத் திருத்தலம் ஷியபுரம் எனவும், நான்கு வேதங்களிலும் திறமை வாய்ந்த விற்பன்னர்கள் நிறைந்த பகுதியாக இருந்தமையால் திருபுவன வீரசதுர்வேதி மங்கலம் எனவும் பக்தர்களால் அழைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.