'ஒளவையார்' என்றதும் உங்களது நினைவுக்கு வரும் பாடல்?– வாசுதேவன், பெங்களூரு.'இட்டமுடன் என் தலையில் இன்னபடிஎன்றெழுதிவிட்ட சிவனுஞ் செத்து விட்டானோமுட்ட முட்டப்பஞ்சமே யானாலும் பாரமவனுக்கென்னாய்நெஞ்சமே அஞ்சாதே நீ!''நெஞ்சமே, பெரும் பஞ்சமே ஆனாலும் அஞ்சாதே!இதுதான் உனக்கு என்று தலையில் எழுதியசிவன் சாகவில்லை. ஒமைக்ரானிடமிருந்துஅவன் காப்பான்!'– ஔவை(ஒரு வார்த்தை எக்ஸ்ட்ராஃபிட்டிங்காக தானே வந்து விழுந்துவிட்டது. ஔவை, ப்ளீஸ் அட்ஜெஸ்ட்!).………………………………………………….விஜய் டீ.வி நடத்தும் பிக்பாஸ் ஷோவில் பங்கு பெற அழைத்தால் போவீங்களா?– வி.கணேஷ், மதுரை.'ஹலோ மேடம்… நாங்க விஜய் டீ.வில இருந்து கால் பண்றோம்…''ஓ.கே?''நீங்க எங்களோட, 'பிக்பாஸ்' ஷோவுல கலந்துக்கணும்னு ஆசைப்படறோம் மேடம்!''ஆனா… அங்க நூறு நாள் இருக்கணுமாமே! ஸாரி நான் ரொம்ப பிஸி!''நோ மேடம்! நீங்க அப்படிச் சொல்லக் கூடாது. நீங்க எவ்ளோ பேமன்ட் கேட்டாலும் தர ரெடியா இருக்கோம்!''டாஸ்க் எல்லாம் வேற தருவீங்க… சோகக்கதை சொல்லி அழணுமே; அப்படி ஒண்ணும் பெருசா என்கிட்ட ஃபிளாஷ்பேக் இல்லியேப்பா!''நோ மேம்! நீங்க ப்ரியங்கா மாதிரி சாப்பிட்டு, ராஜூ மாதிரி மொக்கை போட்டுக்கிட்டே வின்னரா கூட ஆயிடலாம்!''நான் அவ்ளோ பெரிய செலிப்ரிட்டியே கிடையாதேப்பா! எனக்கு வீயூவர்ஸ் வோட்டிங்கும் வராதே!''அடக்கமா பேசறீங்க மேடம். பிக்பாஸ்கிட்ட சொல்லி ஃபிக்ஸிங் பண்ணிக்கலாம். டோன்ட் வொர்ரி.''எதுக்கும் கமல் சார் கிட்ட ஒரு வார்த்தை?!''கூப்பிடச் சொன்னதே அவர்தான் மேடம்!''ஈஸ் இட்? இவ்ளோ தூரம் வற்புறுத்திக் கூப்பிடறீங்க… ஒ.கே. நான் வர்றேன்!''ரொம்ப தாங்ஸ் மேடம்… ஃபேமிலி வருவாங்க இல்ல மேடம். அப்ப வர்றதுக்கு… அப்படியே விராட் கோலி சாரும் வர்ற மாதிரி பார்த்துக்கங்க மேடம்!''விராட் கோலியா? அவர் எதுக்கு?''அவர்தானே உங்க ஹஸ்பென்ட் மேடம்?''யோவ்… அது அனுஷ்கா…யா! நான் அனுஷா! 'என்னது? 'ஹலோ… ஹலோ பிக்பாஸ் தம்பி! ஐயாம் ரெடி… கேட்குதா? ஹலோ… ஹலோ…'.………………………………………………….இக்கால இளைஞர்களுக்கு எழுதும் பழக்கத்தை ஏற்படுத்த என்ன செய்யணும் மேடம்?– எஸ்.கெஜலட்சுமி ராஜேந்திரன், லால்குடி.நிறைய வாசிக்கத் தூண்டணும்… அது ஒண்ணுதான் சூப்பர் வழி! படிக்கப் படிக்க எழுதுற பழக்கமும் தானா வந்துடும். புத்தகங்கள் வெறும் காகிதமும் மையும் அல்ல; அதற்குள் எழுதியவரின் ஆன்மா இருக்கிறது. ஒரு கொடியின் வேருக்கும் பூவுக்கும் உள்ள தொடர்பு போன்றது, எழுத்தாளருக்கும் வாசகனுக்கும் உள்ள தொடர்பு..இளைஞர்களின் போக்கு அறிந்து சுவாரசியமானப் புத்தகங்களை சிபாரிசு செய்தால், அதுவே அவனை எழுதவும் தூண்டிவிடும். வாசிப்பு ஒருவிதமான போதை! அதன் ருசி அறிந்தவன் வாசிப்பையும் நிறுத்த மாட்டான்; தொடர்ந்து எழுதவும் செய்வான். ஏன்னா, நம் வாழ்க்கையின் ஆகச் சிறந்த எளிய கொண்டாட்டமே, வாசிப்பதும் எழுதுவதும்தான்!.………………………………………………….'புஷ்பா' படத்தில் சமந்தா ஆடும் ஆட்டம் எப்படி?– கே.எம்.மாலினி, கோவை.'ஊ சொல்றியா மாமா?' பாட்டு கேட்டீங்களா? பாடல் வரிகள் கொஞ்சம் ஓவர் இல்லை?– சிவசங்கரன், மயிலாப்பூர்..இல்லை! அது ஒரு சிச்சுவேஷன் சாங்… பாடல் வரிகள் சராசரி ஆணின் சபல புத்தியைக் கேலி செய்கிறது. அதில், தன்னை வெறும் உடம்பாய் மட்டுமே பார்க்கிறார்களே என்று புலம்பும் ஒரு பெண்ணின் உள்மன வலியையும் சேர்த்தே உணர்கிறேன் நான்!(உள்ளதைச் சொன்னால் உறுத்துதோ சார்?)'ஆத்திரம் என்பது பெண்களுக்கெல்லாம் அடுப்படி வரைதானே? ஒருஆதிக்க நாயகன் சாதிக்க வந்தால் அடங்குதல் முறைதானே?'என்ற பாடல் முதல்,'அடிடா அவளை…' பாடல் வரை எப்படியெல்லாமோ எங்களைச் சீண்டியபோது, சிச்சுவேஷன் சாங் என்று ஒப்புக்கொண்டோமா… இல்லையா?அதிலும் கடைசி வரி… தைரியமான போடு!தெ, க, ஹி, மலை… என வேறு எந்த மொழியிலும் இவ்வளவு ஸ்ட்ராங்காக இல்லை… தாங்ஸ் மிஸ்டர் விவேகா!மாலினியின் கேள்விக்கு பதில் :பாட்டு, நடனம் எல்லாமே கொல மாஸ்! கொஞ்ச நாளைக்கு, 'ஊ'தான் ஊர் முழுக்க!
'ஒளவையார்' என்றதும் உங்களது நினைவுக்கு வரும் பாடல்?– வாசுதேவன், பெங்களூரு.'இட்டமுடன் என் தலையில் இன்னபடிஎன்றெழுதிவிட்ட சிவனுஞ் செத்து விட்டானோமுட்ட முட்டப்பஞ்சமே யானாலும் பாரமவனுக்கென்னாய்நெஞ்சமே அஞ்சாதே நீ!''நெஞ்சமே, பெரும் பஞ்சமே ஆனாலும் அஞ்சாதே!இதுதான் உனக்கு என்று தலையில் எழுதியசிவன் சாகவில்லை. ஒமைக்ரானிடமிருந்துஅவன் காப்பான்!'– ஔவை(ஒரு வார்த்தை எக்ஸ்ட்ராஃபிட்டிங்காக தானே வந்து விழுந்துவிட்டது. ஔவை, ப்ளீஸ் அட்ஜெஸ்ட்!).………………………………………………….விஜய் டீ.வி நடத்தும் பிக்பாஸ் ஷோவில் பங்கு பெற அழைத்தால் போவீங்களா?– வி.கணேஷ், மதுரை.'ஹலோ மேடம்… நாங்க விஜய் டீ.வில இருந்து கால் பண்றோம்…''ஓ.கே?''நீங்க எங்களோட, 'பிக்பாஸ்' ஷோவுல கலந்துக்கணும்னு ஆசைப்படறோம் மேடம்!''ஆனா… அங்க நூறு நாள் இருக்கணுமாமே! ஸாரி நான் ரொம்ப பிஸி!''நோ மேடம்! நீங்க அப்படிச் சொல்லக் கூடாது. நீங்க எவ்ளோ பேமன்ட் கேட்டாலும் தர ரெடியா இருக்கோம்!''டாஸ்க் எல்லாம் வேற தருவீங்க… சோகக்கதை சொல்லி அழணுமே; அப்படி ஒண்ணும் பெருசா என்கிட்ட ஃபிளாஷ்பேக் இல்லியேப்பா!''நோ மேம்! நீங்க ப்ரியங்கா மாதிரி சாப்பிட்டு, ராஜூ மாதிரி மொக்கை போட்டுக்கிட்டே வின்னரா கூட ஆயிடலாம்!''நான் அவ்ளோ பெரிய செலிப்ரிட்டியே கிடையாதேப்பா! எனக்கு வீயூவர்ஸ் வோட்டிங்கும் வராதே!''அடக்கமா பேசறீங்க மேடம். பிக்பாஸ்கிட்ட சொல்லி ஃபிக்ஸிங் பண்ணிக்கலாம். டோன்ட் வொர்ரி.''எதுக்கும் கமல் சார் கிட்ட ஒரு வார்த்தை?!''கூப்பிடச் சொன்னதே அவர்தான் மேடம்!''ஈஸ் இட்? இவ்ளோ தூரம் வற்புறுத்திக் கூப்பிடறீங்க… ஒ.கே. நான் வர்றேன்!''ரொம்ப தாங்ஸ் மேடம்… ஃபேமிலி வருவாங்க இல்ல மேடம். அப்ப வர்றதுக்கு… அப்படியே விராட் கோலி சாரும் வர்ற மாதிரி பார்த்துக்கங்க மேடம்!''விராட் கோலியா? அவர் எதுக்கு?''அவர்தானே உங்க ஹஸ்பென்ட் மேடம்?''யோவ்… அது அனுஷ்கா…யா! நான் அனுஷா! 'என்னது? 'ஹலோ… ஹலோ பிக்பாஸ் தம்பி! ஐயாம் ரெடி… கேட்குதா? ஹலோ… ஹலோ…'.………………………………………………….இக்கால இளைஞர்களுக்கு எழுதும் பழக்கத்தை ஏற்படுத்த என்ன செய்யணும் மேடம்?– எஸ்.கெஜலட்சுமி ராஜேந்திரன், லால்குடி.நிறைய வாசிக்கத் தூண்டணும்… அது ஒண்ணுதான் சூப்பர் வழி! படிக்கப் படிக்க எழுதுற பழக்கமும் தானா வந்துடும். புத்தகங்கள் வெறும் காகிதமும் மையும் அல்ல; அதற்குள் எழுதியவரின் ஆன்மா இருக்கிறது. ஒரு கொடியின் வேருக்கும் பூவுக்கும் உள்ள தொடர்பு போன்றது, எழுத்தாளருக்கும் வாசகனுக்கும் உள்ள தொடர்பு..இளைஞர்களின் போக்கு அறிந்து சுவாரசியமானப் புத்தகங்களை சிபாரிசு செய்தால், அதுவே அவனை எழுதவும் தூண்டிவிடும். வாசிப்பு ஒருவிதமான போதை! அதன் ருசி அறிந்தவன் வாசிப்பையும் நிறுத்த மாட்டான்; தொடர்ந்து எழுதவும் செய்வான். ஏன்னா, நம் வாழ்க்கையின் ஆகச் சிறந்த எளிய கொண்டாட்டமே, வாசிப்பதும் எழுதுவதும்தான்!.………………………………………………….'புஷ்பா' படத்தில் சமந்தா ஆடும் ஆட்டம் எப்படி?– கே.எம்.மாலினி, கோவை.'ஊ சொல்றியா மாமா?' பாட்டு கேட்டீங்களா? பாடல் வரிகள் கொஞ்சம் ஓவர் இல்லை?– சிவசங்கரன், மயிலாப்பூர்..இல்லை! அது ஒரு சிச்சுவேஷன் சாங்… பாடல் வரிகள் சராசரி ஆணின் சபல புத்தியைக் கேலி செய்கிறது. அதில், தன்னை வெறும் உடம்பாய் மட்டுமே பார்க்கிறார்களே என்று புலம்பும் ஒரு பெண்ணின் உள்மன வலியையும் சேர்த்தே உணர்கிறேன் நான்!(உள்ளதைச் சொன்னால் உறுத்துதோ சார்?)'ஆத்திரம் என்பது பெண்களுக்கெல்லாம் அடுப்படி வரைதானே? ஒருஆதிக்க நாயகன் சாதிக்க வந்தால் அடங்குதல் முறைதானே?'என்ற பாடல் முதல்,'அடிடா அவளை…' பாடல் வரை எப்படியெல்லாமோ எங்களைச் சீண்டியபோது, சிச்சுவேஷன் சாங் என்று ஒப்புக்கொண்டோமா… இல்லையா?அதிலும் கடைசி வரி… தைரியமான போடு!தெ, க, ஹி, மலை… என வேறு எந்த மொழியிலும் இவ்வளவு ஸ்ட்ராங்காக இல்லை… தாங்ஸ் மிஸ்டர் விவேகா!மாலினியின் கேள்விக்கு பதில் :பாட்டு, நடனம் எல்லாமே கொல மாஸ்! கொஞ்ச நாளைக்கு, 'ஊ'தான் ஊர் முழுக்க!