சிங்கப் பெண் காவலர்கள்குற்றம் – வழக்கு – விசாரணை – 5.– பெ.மாடசாமிஓவியம் : தமிழ் .'மற்றவர்கள் உங்களை நேசிக்கின்ற விதத்தில் நடந்து கொள்வதுதான் நீங்கள் செய்யக்கூடிய மகத்தான காரியமாகும்' (நாஜி படையினரிடமிருந்து தப்பிப் பிழைத்த எ.டி.ஜேக்கூ)..பாண்டிபஜார் காவல் நிலைய உதவி ஆய்வாளர் ஜெயசித்ரா விடுப்பு முடித்து, காலை பத்து மணிக்கு நிலையத்திற்கு வரவும், பாண்டிபஜாரில் உள்ள ஒரு நட்சத்திர ஓட்டலின் மேனேஜர் புகாருடன் வந்து நின்றார். ஓட்டலில் தங்கியிருந்த தைவான் நாட்டைச் சேர்ந்த ஒருவர் காலையில் எழுந்திருக்காததால் மாற்று சாவி போட்டு திறந்து பார்த்தபோது, மயக்க நிலையில் இருந்ததாகவும் கழுத்தில் நகக்குறி உள்ளதாகவும், அவரை ஆயிரம் விளக்கில் உள்ள தனியார் மருத்துவமனைக்குக் கொண்டு போனபோது இறந்துவிட்டார் என்றும் புகார்..வெளிநாட்டவர் என்பதால் புகார் சம்பந்தமாக உயர் அதிகாரிகளுக்குத் தகவல் சொல்லிவிட்டு, unnatural death (174 Cr.P.C) பிரிவில் வழக்கைப் பதிவு செய்தார்..தனியார் மருத்துவமனை சென்று பிரேதத்தைப் பார்த்ததில் கழுத்தில் மட்டுமல்ல; உடம்பில் வெளிப்படையான காயம் எதுவுமே இல்லை. இறந்த நபரை பார்க்காமலேயே யாரோ சொன்ன தகவலில் காயம் உள்ளதாக மருத்துவர் பதிவு செய்த பொறுப்பற்ற தன்மை வெளிப்பட்டது. ஆரம்பமே வில்லங்கமாக ஆரம்பித்தது. பிரேதத்தை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார்..இறந்தவர் தங்கியிருந்த ஓட்டல் அறையைப் பார்த்தபோது, பொருட்கள் எதுவும் கலைக்கப்படவில்லை. தைவான் மொழியில் லேபில் ஒட்டிய பாட்டில் ஒன்றிருக்க, 'விஷமாக இருக்கலாமா' என்ற கேள்விக்கு, அது ஜலதோஷத்திற்கான மருந்து என்று தெரிந்தது. அந்நிய நபர்கள் யாரும் வரவில்லை என்பதை CCTV காமிரா காட்டியது..விசாரணையில் இறந்துபோனவரின் பெயர் காம் கீயூ. திருமணம் ஆகாதவர். அவரும் அவருடைய நண்பரும் அவர்களுக்கு உதவ புதுடில்லியிலிருந்து வந்தவருடன் ஸ்ரீபெரும்புதூர் அருகில் தொழிற்சாலை அமைப்பது சம்பந்தமாக சில வேலைகளை முடித்து விட்டு முந்தைய நாள் இரவு 11 மணிக்கு மேல் அவரவர் அறைக்கு தூங்கச் சென்றுள்ளார்கள்.காலையில் பத்து மணி விமானத்திற்கு 8.30 மணி வரை காம் கீயூவின் அறைக் கதவு திறக்காததாலும் கைப்பேசியில் அழைத்தும் பதில் இல்லாததாலும் மாற்று சாவியால் கதவைத் திறந்து பார்க்க, மயக்க நிலையிலிருந்தவரை மருத்துவமனை கொண்டு போயிருக்கிறார்கள் என்று தெரிந்தது..வெளிநாட்டைச் சேர்ந்தவர் என்பதால், பிரேத பரிசோதனைக்கான மருத்துவர் குழு மற்றும் வீடியோ பதிவாளர் தயாரான நிலையில், உறவினர்கள் தைவானிலிருந்து வருவதால் வந்த பின்பே பிரேத பரிசோதனை செய்யுமாறு தூதரகத்தின் வாயிலாக கேட்டுக்கொள்ள, பிரேத பரிசோதனை நிறுத்தப்பட்டது..தைவானிலிருந்து வந்த உறவினர் பிரேத பரிசோதனையின்றி பிரேதத்தைக் கொடுக்குமாறு கேட்க, அதற்கு வாய்ப்பில்லை என்பதால் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது..ஒரு வெளிநாட்டவர் நட்சத்திர ஓட்டலில் இறந்துள்ளார் என்பதால் பிரேத பரிசோதனை அறைக்கு முன்பாக உதவி ஆய்வாளர் ஜெயசித்ராவை பேட்டி எடுக்க பத்திரிகை மற்றும் ஊடகங்கள் காத்திருக்கவே, அவர்கள் கண்ணில் படாமல் பிரேத அறையிலிருந்து பிரேதங்களைத் தாண்டி குதித்து ஒரு வழியாக பரிசோதனை அறைக்குள் போய்ச் சேர்ந்தார் ஜெயசித்ரா..பரிசோதனையின்போது உச்சந்தலை மண்டை ஓட்டில் சிவப்பு நிறத்தில் ஒரு காயம் இருக்கவே, இரண்டாவது வில்லங்கம் ஆரம்பித்தது. காயம் பற்றிய விவரத்தை கண்டுபிடிக்க தலையை மட்டும் தனியாக பாமலின் ஆயிலில் பாதுகாப்பாக வைக்கப்பட்டது. உள் அவயங்கள் ரசாயன பரிசோதனைக்கு அனுப்பப்பட்டது..தலை இல்லாதது தெரியாத அளவில் பிரேதம் பேக்கிங் செய்யப்பட்டபோது, பிரேதத்தை அவருடைய தந்தையோ உறவினரோ தொட்டுத் தூக்கும் வழக்கமில்லை என்றும் உடன் வந்த நண்பர் தான் முஸ்லிம் என்பதால் அவரும் தொட இயலாது என்று சொல்லிவிட்டனர். உறவுகள் விலகி நின்றனர். அவர்களின் வழக்கப்படி பிரேதத்தைப் புதைத்து ஆண்டுதோறும் அவ்விடத்தில் நினைவு தினம் கொண்டாடுவார்கள் என்றும் பிரேத பரிசோதனைக்குப் பிறகு கொண்டு செல்ல இயலாது என்றும் கூறிவிட்டனர். மூன்றாவது வில்லங்கம் வந்தது..இந்த நிலையில் இறந்தவரின் உறவினர் என்று சொன்னால் உதவி ஆய்வாளர் ஜெயசித்ரா மட்டுமே. பிரேதத்தை எரித்து அஸ்தியை எடுத்துச் செல்ல சம்மதித்தனர்..செய்தி மற்றும் ஊடகத்தினரின் பேட்டியிலிருந்து தப்பித்து பிரேதத்துடன் பெசன்ட் நகர் சுடுகாட்டிற்குப் புறப்பட்டார். பெசன்ட் நகர் சுடுகாட்டில் ஒரு பிரேதம் எரிந்து வெப்பம் தணிந்து சாம்பலை அப்புறப்படுத்துவதற்கு நான்கு மணி நேரமாகும் என்பதால் கடைசி வரை வந்தவர்கள் காத்திருக்க முடியாது. சீக்கிரமாக எரிப்பதற்கு போலீசில் சில நேரங்களில் சிபாரிசு வருவதுண்டு. உதவி ஆய்வாளர் ஒரு மணிக்கு பிரேதத்துடன் வந்து விடுவதாகச் சொல்லியிருந்த நிலையில் மாலை நான்கு மணியாகிவிட்டது. அதற்குள்ளாக எம்.எல்.ஏ. ஒருவரின் தாயார் பிரேதம் வருவதாகத் தகவல்..மின்சாரத் தடையைக் காரணமாகச் சொல்லி, அவர்களைத் தாமதிக்குமாறு அறிவுறுத்தி சுடுகாட்டிற்கு பிரேதத்துடன் சென்றடைந்தார்.ஆம்புலன்சிலிருந்து இறக்கப்பட்ட பிரேதத்தை நூறு மீட்டர் தூரத்திலுள்ள தகன மேடைக்குக் கொண்டு செல்ல உதவி ஆய்வாளரும் ஒரு காவலரும்தான். வேடிக்கை பார்க்கவே உறவினர்கள். இந்த நிலையில் பிரேதத்திற்கு கோட், சூட் மற்றும் சூ ஆகியவை அணிவது அவர்கள் வழக்கமென்று உறவினரின் கோரிக்கையையும் எஸ்.ஐ. நிறைவேற்றி வைக்க, ஒரு குடையுடன் வந்து நின்றார் மற்றொருவர். 'மழையே இல்லை… குடை பிடிச்சிக்கிட்டு நிற்கறீயே?' என்று கேட்டால், இறந்தவருக்குக் குடை பிடிப்பது அவர்களின் வழக்கமாம்..'அற்பனுக்கு பவுசு வந்தால் அர்த்த ராத்திரி குடை பிடிப்பான்' என்பார்கள். உதவி ஆய்வாளருக்கு சிரிப்பதா, கோபப்படுவதா என்று தெரியவில்லை. ஆய்வாளர் அந்தப் பகுதியில் ஏற்கெனவே வேலை செய்தவர் என்பதால், சுடுகாட்டு பக்கமாக விளையாடிக் கொண்டிருந்த இளைஞர்களைக் கூப்பிட, 'என்னக்கா… பிரேதத்தை தூக்கச் சொல்றீங்க?' என்று கேட்க, அவர்களை ஒருவழியாக சம்மதிக்க வைத்து தானும் ஒரு கைப்பிடிக்க, தகன மேடை சென்றடைந்தது பிரேதம். அங்கு ஒருவரின் சாம்பல் ஆறிக் கொண்டிருக்க, ஒன்று காத்துக்கொண்டிருக்க, மற்றொன்று வந்து கொண்டிருந்தது.ஒருவழியாக காம் கீயூவின் பிரேதம் தகன மேடைக்கு உள்ளே சென்றடைந்தது..அஸ்தி வந்து சேர, அந்தப் பெட்டியை ஜெயசித்ரா முயற்சியில் பேக்கிங் செய்த பின்பு எஞ்சிய அஸ்தியை அங்கேயே விட்டுச் செல்வது கண்ணியமான காரியம் இல்லை என்பதால், தானே ஒரு ஆட்டோவில் கொண்டு சென்று கடலில் கரைத்து விட்டு பிரேதத்தின் உறவினர்களுடன் நட்சத்திர ஓட்டலுக்குப் போக, அஸ்தியிருந்த பெட்டிக்கு உறவினர் ஒருவர் குடை பிடித்தபடி நுழைய, லாபியிருந்தவர்கள் ஆச்சரியம் கலந்த அதிர்ச்சியுடன் பார்க்க, 'மேடம்… மேடம் குடையை மடக்கச் சொல்லுங்க…' என்று மேனேஜர் ஓடிவர, ஜெயசித்ரா போலீஸ் என்பதை குரலில் காட்ட, மேனேஜர் அடங்கி ஒடுங்கிப் போய்விட்டார். இறந்தவரின் உடைமைகளை சரிபார்த்து உறவினரிடம் ஒப்படைக்க, அஸ்தி பயணத்தில் பறக்க ஆரம்பித்தது..உச்சி மண்டையில் காயம் என்னவாக இருக்கும் என்ற சிந்தனையோடு நான்கு நாள் களைப்பில் நிலையம் திரும்பினார் ஜெயசித்ரா. மண்டை ஓட்டிலிருந்தது காயமில்லை என்ற நல்ல செய்தியை மறுநாள் டாக்டர் தெரிவித்தார். அடுத்து, ஒவ்வொரு உள் அவயவங்களுக்கான இறுதி அறிக்கை ஒவ்வொன்றாக வர, கடைசியாக 43வது நாள் இறந்தவரின் ஈரல் கெட்டுப் போயிருந்ததாக அறிக்கை வந்தது..இறந்தவர் பெருங்குடிகாரர்தான் என்பதை உறவினர்கள் உறுதிப்படுத்த, இறப்பதற்கு சில மணி நேரத்திற்கு முன்புவரை ஓட்டல் பாரில் குடித்துக் கொண்டிருந்தார் என்பது மேலும் உறுதிப்படுத்த இறப்பு, 'இயற்கை மரணம்' என வழக்கை முடித்தார் ஜெயசித்ரா..ஜாதி, மதம், இனம், நாடு, மொழி, ஆண், பெண் என்று எல்லாமும் கடந்து, பெற்ற தந்தை, உறவினர், நண்பர் அனைவருமே, 'தொட்டால் தீட்டு' என்று ஒதுங்கிவிட, அத்தனையையும் தாண்டி நின்றது, காக்கி சட்டையின் உள்ளே இருந்த மனிதாபிமானமே. காக்கிக்கும் காவல் துறைக்கும் சொந்தக்காரியான ஜெயசித்ரா அவர்களை வாழ்த்திப் பாராட்டுவது நம் ஒவ்வொருவரின் கடமையல்லவா?!(அடுத்தது…).(உண்மைச் சம்பவத்தின் அடிப்படையில் கற்பனைப் பெயர்களுடன் எழுதப்பட்டது.)
சிங்கப் பெண் காவலர்கள்குற்றம் – வழக்கு – விசாரணை – 5.– பெ.மாடசாமிஓவியம் : தமிழ் .'மற்றவர்கள் உங்களை நேசிக்கின்ற விதத்தில் நடந்து கொள்வதுதான் நீங்கள் செய்யக்கூடிய மகத்தான காரியமாகும்' (நாஜி படையினரிடமிருந்து தப்பிப் பிழைத்த எ.டி.ஜேக்கூ)..பாண்டிபஜார் காவல் நிலைய உதவி ஆய்வாளர் ஜெயசித்ரா விடுப்பு முடித்து, காலை பத்து மணிக்கு நிலையத்திற்கு வரவும், பாண்டிபஜாரில் உள்ள ஒரு நட்சத்திர ஓட்டலின் மேனேஜர் புகாருடன் வந்து நின்றார். ஓட்டலில் தங்கியிருந்த தைவான் நாட்டைச் சேர்ந்த ஒருவர் காலையில் எழுந்திருக்காததால் மாற்று சாவி போட்டு திறந்து பார்த்தபோது, மயக்க நிலையில் இருந்ததாகவும் கழுத்தில் நகக்குறி உள்ளதாகவும், அவரை ஆயிரம் விளக்கில் உள்ள தனியார் மருத்துவமனைக்குக் கொண்டு போனபோது இறந்துவிட்டார் என்றும் புகார்..வெளிநாட்டவர் என்பதால் புகார் சம்பந்தமாக உயர் அதிகாரிகளுக்குத் தகவல் சொல்லிவிட்டு, unnatural death (174 Cr.P.C) பிரிவில் வழக்கைப் பதிவு செய்தார்..தனியார் மருத்துவமனை சென்று பிரேதத்தைப் பார்த்ததில் கழுத்தில் மட்டுமல்ல; உடம்பில் வெளிப்படையான காயம் எதுவுமே இல்லை. இறந்த நபரை பார்க்காமலேயே யாரோ சொன்ன தகவலில் காயம் உள்ளதாக மருத்துவர் பதிவு செய்த பொறுப்பற்ற தன்மை வெளிப்பட்டது. ஆரம்பமே வில்லங்கமாக ஆரம்பித்தது. பிரேதத்தை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார்..இறந்தவர் தங்கியிருந்த ஓட்டல் அறையைப் பார்த்தபோது, பொருட்கள் எதுவும் கலைக்கப்படவில்லை. தைவான் மொழியில் லேபில் ஒட்டிய பாட்டில் ஒன்றிருக்க, 'விஷமாக இருக்கலாமா' என்ற கேள்விக்கு, அது ஜலதோஷத்திற்கான மருந்து என்று தெரிந்தது. அந்நிய நபர்கள் யாரும் வரவில்லை என்பதை CCTV காமிரா காட்டியது..விசாரணையில் இறந்துபோனவரின் பெயர் காம் கீயூ. திருமணம் ஆகாதவர். அவரும் அவருடைய நண்பரும் அவர்களுக்கு உதவ புதுடில்லியிலிருந்து வந்தவருடன் ஸ்ரீபெரும்புதூர் அருகில் தொழிற்சாலை அமைப்பது சம்பந்தமாக சில வேலைகளை முடித்து விட்டு முந்தைய நாள் இரவு 11 மணிக்கு மேல் அவரவர் அறைக்கு தூங்கச் சென்றுள்ளார்கள்.காலையில் பத்து மணி விமானத்திற்கு 8.30 மணி வரை காம் கீயூவின் அறைக் கதவு திறக்காததாலும் கைப்பேசியில் அழைத்தும் பதில் இல்லாததாலும் மாற்று சாவியால் கதவைத் திறந்து பார்க்க, மயக்க நிலையிலிருந்தவரை மருத்துவமனை கொண்டு போயிருக்கிறார்கள் என்று தெரிந்தது..வெளிநாட்டைச் சேர்ந்தவர் என்பதால், பிரேத பரிசோதனைக்கான மருத்துவர் குழு மற்றும் வீடியோ பதிவாளர் தயாரான நிலையில், உறவினர்கள் தைவானிலிருந்து வருவதால் வந்த பின்பே பிரேத பரிசோதனை செய்யுமாறு தூதரகத்தின் வாயிலாக கேட்டுக்கொள்ள, பிரேத பரிசோதனை நிறுத்தப்பட்டது..தைவானிலிருந்து வந்த உறவினர் பிரேத பரிசோதனையின்றி பிரேதத்தைக் கொடுக்குமாறு கேட்க, அதற்கு வாய்ப்பில்லை என்பதால் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது..ஒரு வெளிநாட்டவர் நட்சத்திர ஓட்டலில் இறந்துள்ளார் என்பதால் பிரேத பரிசோதனை அறைக்கு முன்பாக உதவி ஆய்வாளர் ஜெயசித்ராவை பேட்டி எடுக்க பத்திரிகை மற்றும் ஊடகங்கள் காத்திருக்கவே, அவர்கள் கண்ணில் படாமல் பிரேத அறையிலிருந்து பிரேதங்களைத் தாண்டி குதித்து ஒரு வழியாக பரிசோதனை அறைக்குள் போய்ச் சேர்ந்தார் ஜெயசித்ரா..பரிசோதனையின்போது உச்சந்தலை மண்டை ஓட்டில் சிவப்பு நிறத்தில் ஒரு காயம் இருக்கவே, இரண்டாவது வில்லங்கம் ஆரம்பித்தது. காயம் பற்றிய விவரத்தை கண்டுபிடிக்க தலையை மட்டும் தனியாக பாமலின் ஆயிலில் பாதுகாப்பாக வைக்கப்பட்டது. உள் அவயங்கள் ரசாயன பரிசோதனைக்கு அனுப்பப்பட்டது..தலை இல்லாதது தெரியாத அளவில் பிரேதம் பேக்கிங் செய்யப்பட்டபோது, பிரேதத்தை அவருடைய தந்தையோ உறவினரோ தொட்டுத் தூக்கும் வழக்கமில்லை என்றும் உடன் வந்த நண்பர் தான் முஸ்லிம் என்பதால் அவரும் தொட இயலாது என்று சொல்லிவிட்டனர். உறவுகள் விலகி நின்றனர். அவர்களின் வழக்கப்படி பிரேதத்தைப் புதைத்து ஆண்டுதோறும் அவ்விடத்தில் நினைவு தினம் கொண்டாடுவார்கள் என்றும் பிரேத பரிசோதனைக்குப் பிறகு கொண்டு செல்ல இயலாது என்றும் கூறிவிட்டனர். மூன்றாவது வில்லங்கம் வந்தது..இந்த நிலையில் இறந்தவரின் உறவினர் என்று சொன்னால் உதவி ஆய்வாளர் ஜெயசித்ரா மட்டுமே. பிரேதத்தை எரித்து அஸ்தியை எடுத்துச் செல்ல சம்மதித்தனர்..செய்தி மற்றும் ஊடகத்தினரின் பேட்டியிலிருந்து தப்பித்து பிரேதத்துடன் பெசன்ட் நகர் சுடுகாட்டிற்குப் புறப்பட்டார். பெசன்ட் நகர் சுடுகாட்டில் ஒரு பிரேதம் எரிந்து வெப்பம் தணிந்து சாம்பலை அப்புறப்படுத்துவதற்கு நான்கு மணி நேரமாகும் என்பதால் கடைசி வரை வந்தவர்கள் காத்திருக்க முடியாது. சீக்கிரமாக எரிப்பதற்கு போலீசில் சில நேரங்களில் சிபாரிசு வருவதுண்டு. உதவி ஆய்வாளர் ஒரு மணிக்கு பிரேதத்துடன் வந்து விடுவதாகச் சொல்லியிருந்த நிலையில் மாலை நான்கு மணியாகிவிட்டது. அதற்குள்ளாக எம்.எல்.ஏ. ஒருவரின் தாயார் பிரேதம் வருவதாகத் தகவல்..மின்சாரத் தடையைக் காரணமாகச் சொல்லி, அவர்களைத் தாமதிக்குமாறு அறிவுறுத்தி சுடுகாட்டிற்கு பிரேதத்துடன் சென்றடைந்தார்.ஆம்புலன்சிலிருந்து இறக்கப்பட்ட பிரேதத்தை நூறு மீட்டர் தூரத்திலுள்ள தகன மேடைக்குக் கொண்டு செல்ல உதவி ஆய்வாளரும் ஒரு காவலரும்தான். வேடிக்கை பார்க்கவே உறவினர்கள். இந்த நிலையில் பிரேதத்திற்கு கோட், சூட் மற்றும் சூ ஆகியவை அணிவது அவர்கள் வழக்கமென்று உறவினரின் கோரிக்கையையும் எஸ்.ஐ. நிறைவேற்றி வைக்க, ஒரு குடையுடன் வந்து நின்றார் மற்றொருவர். 'மழையே இல்லை… குடை பிடிச்சிக்கிட்டு நிற்கறீயே?' என்று கேட்டால், இறந்தவருக்குக் குடை பிடிப்பது அவர்களின் வழக்கமாம்..'அற்பனுக்கு பவுசு வந்தால் அர்த்த ராத்திரி குடை பிடிப்பான்' என்பார்கள். உதவி ஆய்வாளருக்கு சிரிப்பதா, கோபப்படுவதா என்று தெரியவில்லை. ஆய்வாளர் அந்தப் பகுதியில் ஏற்கெனவே வேலை செய்தவர் என்பதால், சுடுகாட்டு பக்கமாக விளையாடிக் கொண்டிருந்த இளைஞர்களைக் கூப்பிட, 'என்னக்கா… பிரேதத்தை தூக்கச் சொல்றீங்க?' என்று கேட்க, அவர்களை ஒருவழியாக சம்மதிக்க வைத்து தானும் ஒரு கைப்பிடிக்க, தகன மேடை சென்றடைந்தது பிரேதம். அங்கு ஒருவரின் சாம்பல் ஆறிக் கொண்டிருக்க, ஒன்று காத்துக்கொண்டிருக்க, மற்றொன்று வந்து கொண்டிருந்தது.ஒருவழியாக காம் கீயூவின் பிரேதம் தகன மேடைக்கு உள்ளே சென்றடைந்தது..அஸ்தி வந்து சேர, அந்தப் பெட்டியை ஜெயசித்ரா முயற்சியில் பேக்கிங் செய்த பின்பு எஞ்சிய அஸ்தியை அங்கேயே விட்டுச் செல்வது கண்ணியமான காரியம் இல்லை என்பதால், தானே ஒரு ஆட்டோவில் கொண்டு சென்று கடலில் கரைத்து விட்டு பிரேதத்தின் உறவினர்களுடன் நட்சத்திர ஓட்டலுக்குப் போக, அஸ்தியிருந்த பெட்டிக்கு உறவினர் ஒருவர் குடை பிடித்தபடி நுழைய, லாபியிருந்தவர்கள் ஆச்சரியம் கலந்த அதிர்ச்சியுடன் பார்க்க, 'மேடம்… மேடம் குடையை மடக்கச் சொல்லுங்க…' என்று மேனேஜர் ஓடிவர, ஜெயசித்ரா போலீஸ் என்பதை குரலில் காட்ட, மேனேஜர் அடங்கி ஒடுங்கிப் போய்விட்டார். இறந்தவரின் உடைமைகளை சரிபார்த்து உறவினரிடம் ஒப்படைக்க, அஸ்தி பயணத்தில் பறக்க ஆரம்பித்தது..உச்சி மண்டையில் காயம் என்னவாக இருக்கும் என்ற சிந்தனையோடு நான்கு நாள் களைப்பில் நிலையம் திரும்பினார் ஜெயசித்ரா. மண்டை ஓட்டிலிருந்தது காயமில்லை என்ற நல்ல செய்தியை மறுநாள் டாக்டர் தெரிவித்தார். அடுத்து, ஒவ்வொரு உள் அவயவங்களுக்கான இறுதி அறிக்கை ஒவ்வொன்றாக வர, கடைசியாக 43வது நாள் இறந்தவரின் ஈரல் கெட்டுப் போயிருந்ததாக அறிக்கை வந்தது..இறந்தவர் பெருங்குடிகாரர்தான் என்பதை உறவினர்கள் உறுதிப்படுத்த, இறப்பதற்கு சில மணி நேரத்திற்கு முன்புவரை ஓட்டல் பாரில் குடித்துக் கொண்டிருந்தார் என்பது மேலும் உறுதிப்படுத்த இறப்பு, 'இயற்கை மரணம்' என வழக்கை முடித்தார் ஜெயசித்ரா..ஜாதி, மதம், இனம், நாடு, மொழி, ஆண், பெண் என்று எல்லாமும் கடந்து, பெற்ற தந்தை, உறவினர், நண்பர் அனைவருமே, 'தொட்டால் தீட்டு' என்று ஒதுங்கிவிட, அத்தனையையும் தாண்டி நின்றது, காக்கி சட்டையின் உள்ளே இருந்த மனிதாபிமானமே. காக்கிக்கும் காவல் துறைக்கும் சொந்தக்காரியான ஜெயசித்ரா அவர்களை வாழ்த்திப் பாராட்டுவது நம் ஒவ்வொருவரின் கடமையல்லவா?!(அடுத்தது…).(உண்மைச் சம்பவத்தின் அடிப்படையில் கற்பனைப் பெயர்களுடன் எழுதப்பட்டது.)