-சேலம் சுபா.ஓவியம்: பிரபுராம்."அசந்தால் போச்சு, சம்மர் கூல் ஆஃபர், வாங்க! வாங்க! வசந்தாவுக்கு வாங்க! குறைந்த விலையில் நிறைய புடவைகளை அள்ளிக்கிட்டு போங்க. சம்மர் விரட்டுங்க, சந்தோசமா வசந்தாஸ் காட்டன் புடவை கட்டுங்க, வசந்தமா கொண்டாடுங்க கோடையை!" முப்பது செகண்டில் முடிக்க வேண்டிய விளம்பரம் என்பதால் வேக வேகமாக அலறினாள் முன்னாள் நடிகையாக இருந்து இந்நாள் மாடலாகிப் போன ஆன்ட்டி..ஆன்ட்டியின் அலறலில் திடுக்கிட்டுப் போன மாதவன் கையிலிருந்த விசிறியைக் கீழே போட்டு விட்டு , நாலு கால் பாய்ச்சலில் ஓடிப்போய் டிவியை நிறுத்தினான். நல்லவேளை சுசீலா கண்ணுல படல..போன வருஷம் நடந்த சம்மர் கூத்தை நினைத்துப் பார்த்தான். சுருள் சுருளாக காட்சிகள் விரிய, நடந்து முடிந்ததாக இருந்தாலும் இப்போதும் மனசு பக்கு பக்குன்னு அடிப்பதை உணர்ந்தான். என்ன கொடுமை சார் இது?."அடியே வசந்தாஸ்ல காட்டன் சேல் துவங்கிட்டாங்களாம் .நேத்தே விளம்பரம் வந்தாச்சு. நீ உடனே புறப்பட்டு வந்துடு, உடனே போனாத்தான் நல்லதா எடுக்க முடியும்," அவளோட தங்கச்சிக்கு போன் பறந்தது..என்னங்க நீங்களும் ஆபீஸ்க்கு பர்மிசன் போட்டுட்டு வந்துடுங்க…பனியன் ஜட்டின்னு எல்லாமே அங்க இருக்கு. அப்படியே பசங்களுக்கும் எடுத்துட்டு வந்துடலாம்..போச்சு, மாசக்கடைசில என்ன சோதனை இது ? வருஷா வருஷம் இதே ராமாயணம்தான். மனசுக்குள் அழுத படி "சரிடி செல்லம்." என்று சொல்லிவிட்டு ஆபிஸ் சென்றவன், விழுந்தடித்துக் கொண்டு சரியாக நாலு மணிக்கெல்லாம் வீட்டில் வந்து நின்றான். கொஞ்சம் லேட்டானாலும் சுசிலாவின் வார்த்தைக் கணைகள் தனக்கு 'லேட்' போடுமளவுக்குத் தாக்கும் என்பதால் எப்போதும் அவள் சொன்ன டைம்க்கு வந்து விடுவது மாதவனின் பழக்கம்..உள்ளே ஒரே சத்தம். அடக் கடவுளே இவங்க புடவைக் கடைக்கு போறதுக்கு வாண்டுகளையும் கூட்டிக்கிட்டு வந்துட்டாளே! மாதவனுக்கு அடி வயிற்றையே கலக்கியது.."ஹை பெரியப்பா வந்தாச்சு," பெரியவன் ஓடி வந்து கையிலிருந்த பையைப் பிடுங்கினான். சின்னவன் ஓடி வந்து முதுகில் ஏறினான் .என் பொண்ணு தேமேன்னு நின்னு வேடிக்கை பார்த்தா, "அவ அப்படியே அவங்கப்பன உரிச்சு வெச்ருக்கா மந்தியா," சுசிலாவின் குரல் அசரீரியாய் கேட்டது..மெதுவாக தஞ்சாவூர் தேர் ஆடி அசைந்து வருவது போல அக்காவும் தங்கையும் பேசியபடியே, "வாங்க வாங்க அப்படியே ஓலாவ புக் பண்ணுங்க. பசங்களையும் கூட்டிட்டுப் போகணும், பாவம் அதுங்க," அவங்க எங்க பாவம், இன்னும் கொஞ்ச நேரத்துல நான்தான் பாவம். மனதுக்குள் அழுதபடியே ஓலாவுக்கு புக் செய்தான். "உஸ்… சாயந்திரம் ஆச்சு இப்பக் கூட என்னா வெயிலு," ராணிக்கு சேவகி விசிறுவது போல் தனக்குத் தானே புடவைத் தலைப்பால் விசிறிக் கொண்ட மனைவி மாதவன் கண்களுக்கு குண்டான அல்லி ராணியாகவே தெரிந்தாள்..அப்பவே அப்பத்தா சொல்லுச்சு. "எம் பேரன் அப்பாவிப் புள்ளை இந்தப் பொண்ணப் பார்த்தாலே தெரியுது இவனை மிரட்டியே வேல வாங்கற அல்லி ராணின்னு." வேண்டாம்னு சொல்லு மாதவான்னு எப்படி கெஞ்சுனது … நம்ம வயசு கேக்கலையே. அவ கண்ணு சிமிட்டுன அழகுல மயங்கி, கட்டுனா இவளத்தான் கட்டுவேன்னு அடம் பிடிச்சேன். நாலு மாசம் கழிஞ்சதும்தான் தெரியுது, சிமிட்டுன கண்ணுல சூர்பனகையும் இருக்கான்னு. அப்பத்தா சொன்னது அப்படியே பலிச்சது..இதோ வசந்தாஸ் கடைக்குள்ள நுழைஞ்சாச்சு. வாங்க சார்! வாங்க அம்மா! கூடுதலான மரியாதையைப் பெற்ற மகிழ்ச்சியில், வாயெல்லாம் பல்லாக பின்னால் வந்த கணவனை மறந்து அந்த கடை சிப்பந்தியின் பின்னால் போனார்கள் சுசீலாவும் அவள் தங்கையும்..கடையின் ஒரு பக்கமாக, இல்லையில்லை ஒரு பாகமாக இருந்த சிற்றுண்டி உணவகத்தில், மாதவனைப் போன்றே அப்பாவிக் கணவர்கள் தத்தம் பிள்ளைகளுடன் கரன்சி நோட்டுக்களை நீட்டி ஐஸ் கிரீம்களையும் , சாட் ஐட்டங்களையும் வாங்கிய வண்ணமும், பிள்ளைகளின் வாயில் ஒழுகும் நீரைத் துடைத்து விட்டும் நின்றது காணவே ரம்யமாக இருந்தது .அந்த ரம்யமான இடத்தில் மாதவனும் ஐக்கியமானான். இந்த கடைக்காரங்க தான் எவ்வளவு புத்திசாலிகள் ?.உள்ளே போகும் பெண்கள் அவ்வளவு சீக்கிரம் வர மாட்டார்கள் என்று தெரிந்தே மெயின் கடையை விட, இந்த மாதிரி சைடு கடை பிசினசுல தூள் கிளப்பறாங்க. ஒரு பஜ்ஜி முப்பது ரூபாய், ஒரு சோளக்கருது எழுபது ரூபாய் என குதிரை விலை, யானை விலைதான்..மாதவனின் பர்ஸ் இளைத்துக் கொண்டே வந்தது. நேரத்தைப் போல. "இனியும் பொறுக்க முடியாது பொங்கி எழு மாதவா," என உள்ளே ஒரு போர்க் குரல் எழும்ப சுசீலாவுக்கு போன் செய்தான்."இப்பத்தான் ஒரு புடவையை செலக்ட் செய்திருக்கோம். இன்னும் செய்யணும். வீட்டுக்குப் போய் அந்த வெக்கையில் வேகறதுக்கு பேசாம இங்க ஏ சி யில குழந்தைகளோட இருங்க," பொங்கிய மாதவன் நீர் தெளிக்கப்பட்டு அடங்கினான்..இதோ ஒரு வழியாய் அக்காவும் தங்கையும் வந்து சேர்ந்தார்கள். இரண்டு கைகளிலும் வழிய வழிய புடவைகளுடன். அதற்குள் வாண்டுகளும் சொக்கிப்போய் அமுக்கமாக இருக்க, "ஏங்க இந்த நேரத்துல வீட்டுல ஒண்ணும் இல்ல, அப்படியே ஹோட்டல்ல சாப்பிட்டு போய்டலாம்."அடுத்த ஷாக்குக்கு ரெடியானான் மாதவன்..ஹோட்டல் போய் பிரைடுரைஸ், சோலா பூரி, கைமா புரோட்டானு வயிறு நிறைய சாப்பிட்டுவிட்டு, அங்கேயே ஏப்பமும் விட்ட சிஸ்டர்ஸப் பார்த்து, "அடீங்களா!" என கூவத் தோணிய நாக்கை கஷ்டப்பட்டு அடக்கிக் கொண்டான் மாதவன்..ஒரு வழியாக இரவு பதினொரு மணிக்கு வீட்டுக்கு வந்து இருவரும் புடவைக் கடல் நடுவே ஒவ்வொன்றையும் பிரித்துப் பார்க்க, அதில் இரண்டில் ஒன்று வீதம் டேமேஜ் இருக்க, ஏங்க நாளைக்கும் நாலு மணிக்கு ஆபிஸ்ல இருந்து வந்துடுங்க. உடனே போய் மாத்துனா தான் உண்டு. இல்லைனா மாத்த மாட்டான் கடங்காரன் ஐயோ கடைக்காரன்..அடுத்த நாளுமிதே காட்சிகள். எக்ஸ்ட்ரா, கடைக்காரனிடம் அக்காவும் தங்கையும் பிலு பிலு வென்று சண்டைக்குப் போன அட்டகாச காட்சிகள் கண்ணுக்கு விருந்தாக..அப்படி எடுத்த காட்டன் புடவைகளை கட்றதுக்கு ஆடுவா பாரு ஆட்டம். அரை மணி நேரம் உஸ் உஸ்னு கட்டியும் ஒழுங்கா வராம குண்டுப் பூசணிக்கா மாதிரி சுசீலா வந்து நிக்கறப்ப, மாதவனுக்கு வரும் அப்படியொரு சிரிப்பு. "எப்படிங்க இருக்கு காட்டன் புடவை ? " "அடடா அப்படியே தேவதை தான் போ," முழுப் பூசணிக்காயை சோற்றுக்குள் மறைத்த பொய்யை சொல்லி விட்டு, அவள் போனதும் அடக்கியிருந்த சிரிப்பை சிரிப்பான் பாருங்க….இப்படியெல்லாம் எடுத்த சம்மர் கூல் ஆபர் புடவைகள் ஒரே மாதத்தில் வீட்டுக் கிச்சனுக்கு கரித்துணியானது தனிக்கதை..புடவை மட்டுமா? சூடு தணிய எந்நேரமும் ஆபர்ல வாங்கி இன்னும் EMI கட்டுற ஏசி, பசிக்கு பழமுதிர்சோலையில யானை விலை விக்கிற முலாம்பழம், நுங்கு, தர்பூசணி வகையறாக்கள், உடலுக்கு ஆபர்ல ஒண்ணுக்கு ரெண்டா கிடைச்ச ஷவர் டூ ஷவர் பவுடர், குளிக்க எலுமிச்சை கலந்த சோப். குடிக்க மில்க் ஷேக், புதினா ஜூஸ் இத்யாதிகள். அடடா! இயற்கையா வர வெயிலை ரசிக்காம, செயற்கையா இவ பண்ணற பந்தா இருக்கே, மொதல்ல இந்த சம்மர் ஆபர் எல்லாத்தையும் தடை செய்யணும்.."என்னங்க என்னா பகல்லேயே கனவு? வாங்க சம்மர் வந்தாச்சுல்ல. தங்கச்சிக்கு சொல்லிட்டு போய் நாலு காட்டன் புடவையை எடுத்துக்கிட்டு வந்துடுவோம். அப்புறமா போனாக் கிடைக்காது . " சுசீலாவின் குரலில் திடுக்கிட்டு விழித்தான்..டிவி விளம்பரம் அலறிக்கொண்டு இருந்தது. பொண்ணு கையில ரிமோட். "அசந்தால் போச்சு சம்மர் கூல் ஆஃபர் வாங்க வாங்க வசந்தாவுக்கு வாங்க!" மாதவனுக்கு வயிற்றில் பட்டாம்பூச்சிகள் பறந்தன. தன்னைப் போன்ற மாத சம்பளக்காரர்களுக்கு சம்மர் கூல் தராது. கூழு தான் தரும் கையில காசின்றி.
-சேலம் சுபா.ஓவியம்: பிரபுராம்."அசந்தால் போச்சு, சம்மர் கூல் ஆஃபர், வாங்க! வாங்க! வசந்தாவுக்கு வாங்க! குறைந்த விலையில் நிறைய புடவைகளை அள்ளிக்கிட்டு போங்க. சம்மர் விரட்டுங்க, சந்தோசமா வசந்தாஸ் காட்டன் புடவை கட்டுங்க, வசந்தமா கொண்டாடுங்க கோடையை!" முப்பது செகண்டில் முடிக்க வேண்டிய விளம்பரம் என்பதால் வேக வேகமாக அலறினாள் முன்னாள் நடிகையாக இருந்து இந்நாள் மாடலாகிப் போன ஆன்ட்டி..ஆன்ட்டியின் அலறலில் திடுக்கிட்டுப் போன மாதவன் கையிலிருந்த விசிறியைக் கீழே போட்டு விட்டு , நாலு கால் பாய்ச்சலில் ஓடிப்போய் டிவியை நிறுத்தினான். நல்லவேளை சுசீலா கண்ணுல படல..போன வருஷம் நடந்த சம்மர் கூத்தை நினைத்துப் பார்த்தான். சுருள் சுருளாக காட்சிகள் விரிய, நடந்து முடிந்ததாக இருந்தாலும் இப்போதும் மனசு பக்கு பக்குன்னு அடிப்பதை உணர்ந்தான். என்ன கொடுமை சார் இது?."அடியே வசந்தாஸ்ல காட்டன் சேல் துவங்கிட்டாங்களாம் .நேத்தே விளம்பரம் வந்தாச்சு. நீ உடனே புறப்பட்டு வந்துடு, உடனே போனாத்தான் நல்லதா எடுக்க முடியும்," அவளோட தங்கச்சிக்கு போன் பறந்தது..என்னங்க நீங்களும் ஆபீஸ்க்கு பர்மிசன் போட்டுட்டு வந்துடுங்க…பனியன் ஜட்டின்னு எல்லாமே அங்க இருக்கு. அப்படியே பசங்களுக்கும் எடுத்துட்டு வந்துடலாம்..போச்சு, மாசக்கடைசில என்ன சோதனை இது ? வருஷா வருஷம் இதே ராமாயணம்தான். மனசுக்குள் அழுத படி "சரிடி செல்லம்." என்று சொல்லிவிட்டு ஆபிஸ் சென்றவன், விழுந்தடித்துக் கொண்டு சரியாக நாலு மணிக்கெல்லாம் வீட்டில் வந்து நின்றான். கொஞ்சம் லேட்டானாலும் சுசிலாவின் வார்த்தைக் கணைகள் தனக்கு 'லேட்' போடுமளவுக்குத் தாக்கும் என்பதால் எப்போதும் அவள் சொன்ன டைம்க்கு வந்து விடுவது மாதவனின் பழக்கம்..உள்ளே ஒரே சத்தம். அடக் கடவுளே இவங்க புடவைக் கடைக்கு போறதுக்கு வாண்டுகளையும் கூட்டிக்கிட்டு வந்துட்டாளே! மாதவனுக்கு அடி வயிற்றையே கலக்கியது.."ஹை பெரியப்பா வந்தாச்சு," பெரியவன் ஓடி வந்து கையிலிருந்த பையைப் பிடுங்கினான். சின்னவன் ஓடி வந்து முதுகில் ஏறினான் .என் பொண்ணு தேமேன்னு நின்னு வேடிக்கை பார்த்தா, "அவ அப்படியே அவங்கப்பன உரிச்சு வெச்ருக்கா மந்தியா," சுசிலாவின் குரல் அசரீரியாய் கேட்டது..மெதுவாக தஞ்சாவூர் தேர் ஆடி அசைந்து வருவது போல அக்காவும் தங்கையும் பேசியபடியே, "வாங்க வாங்க அப்படியே ஓலாவ புக் பண்ணுங்க. பசங்களையும் கூட்டிட்டுப் போகணும், பாவம் அதுங்க," அவங்க எங்க பாவம், இன்னும் கொஞ்ச நேரத்துல நான்தான் பாவம். மனதுக்குள் அழுதபடியே ஓலாவுக்கு புக் செய்தான். "உஸ்… சாயந்திரம் ஆச்சு இப்பக் கூட என்னா வெயிலு," ராணிக்கு சேவகி விசிறுவது போல் தனக்குத் தானே புடவைத் தலைப்பால் விசிறிக் கொண்ட மனைவி மாதவன் கண்களுக்கு குண்டான அல்லி ராணியாகவே தெரிந்தாள்..அப்பவே அப்பத்தா சொல்லுச்சு. "எம் பேரன் அப்பாவிப் புள்ளை இந்தப் பொண்ணப் பார்த்தாலே தெரியுது இவனை மிரட்டியே வேல வாங்கற அல்லி ராணின்னு." வேண்டாம்னு சொல்லு மாதவான்னு எப்படி கெஞ்சுனது … நம்ம வயசு கேக்கலையே. அவ கண்ணு சிமிட்டுன அழகுல மயங்கி, கட்டுனா இவளத்தான் கட்டுவேன்னு அடம் பிடிச்சேன். நாலு மாசம் கழிஞ்சதும்தான் தெரியுது, சிமிட்டுன கண்ணுல சூர்பனகையும் இருக்கான்னு. அப்பத்தா சொன்னது அப்படியே பலிச்சது..இதோ வசந்தாஸ் கடைக்குள்ள நுழைஞ்சாச்சு. வாங்க சார்! வாங்க அம்மா! கூடுதலான மரியாதையைப் பெற்ற மகிழ்ச்சியில், வாயெல்லாம் பல்லாக பின்னால் வந்த கணவனை மறந்து அந்த கடை சிப்பந்தியின் பின்னால் போனார்கள் சுசீலாவும் அவள் தங்கையும்..கடையின் ஒரு பக்கமாக, இல்லையில்லை ஒரு பாகமாக இருந்த சிற்றுண்டி உணவகத்தில், மாதவனைப் போன்றே அப்பாவிக் கணவர்கள் தத்தம் பிள்ளைகளுடன் கரன்சி நோட்டுக்களை நீட்டி ஐஸ் கிரீம்களையும் , சாட் ஐட்டங்களையும் வாங்கிய வண்ணமும், பிள்ளைகளின் வாயில் ஒழுகும் நீரைத் துடைத்து விட்டும் நின்றது காணவே ரம்யமாக இருந்தது .அந்த ரம்யமான இடத்தில் மாதவனும் ஐக்கியமானான். இந்த கடைக்காரங்க தான் எவ்வளவு புத்திசாலிகள் ?.உள்ளே போகும் பெண்கள் அவ்வளவு சீக்கிரம் வர மாட்டார்கள் என்று தெரிந்தே மெயின் கடையை விட, இந்த மாதிரி சைடு கடை பிசினசுல தூள் கிளப்பறாங்க. ஒரு பஜ்ஜி முப்பது ரூபாய், ஒரு சோளக்கருது எழுபது ரூபாய் என குதிரை விலை, யானை விலைதான்..மாதவனின் பர்ஸ் இளைத்துக் கொண்டே வந்தது. நேரத்தைப் போல. "இனியும் பொறுக்க முடியாது பொங்கி எழு மாதவா," என உள்ளே ஒரு போர்க் குரல் எழும்ப சுசீலாவுக்கு போன் செய்தான்."இப்பத்தான் ஒரு புடவையை செலக்ட் செய்திருக்கோம். இன்னும் செய்யணும். வீட்டுக்குப் போய் அந்த வெக்கையில் வேகறதுக்கு பேசாம இங்க ஏ சி யில குழந்தைகளோட இருங்க," பொங்கிய மாதவன் நீர் தெளிக்கப்பட்டு அடங்கினான்..இதோ ஒரு வழியாய் அக்காவும் தங்கையும் வந்து சேர்ந்தார்கள். இரண்டு கைகளிலும் வழிய வழிய புடவைகளுடன். அதற்குள் வாண்டுகளும் சொக்கிப்போய் அமுக்கமாக இருக்க, "ஏங்க இந்த நேரத்துல வீட்டுல ஒண்ணும் இல்ல, அப்படியே ஹோட்டல்ல சாப்பிட்டு போய்டலாம்."அடுத்த ஷாக்குக்கு ரெடியானான் மாதவன்..ஹோட்டல் போய் பிரைடுரைஸ், சோலா பூரி, கைமா புரோட்டானு வயிறு நிறைய சாப்பிட்டுவிட்டு, அங்கேயே ஏப்பமும் விட்ட சிஸ்டர்ஸப் பார்த்து, "அடீங்களா!" என கூவத் தோணிய நாக்கை கஷ்டப்பட்டு அடக்கிக் கொண்டான் மாதவன்..ஒரு வழியாக இரவு பதினொரு மணிக்கு வீட்டுக்கு வந்து இருவரும் புடவைக் கடல் நடுவே ஒவ்வொன்றையும் பிரித்துப் பார்க்க, அதில் இரண்டில் ஒன்று வீதம் டேமேஜ் இருக்க, ஏங்க நாளைக்கும் நாலு மணிக்கு ஆபிஸ்ல இருந்து வந்துடுங்க. உடனே போய் மாத்துனா தான் உண்டு. இல்லைனா மாத்த மாட்டான் கடங்காரன் ஐயோ கடைக்காரன்..அடுத்த நாளுமிதே காட்சிகள். எக்ஸ்ட்ரா, கடைக்காரனிடம் அக்காவும் தங்கையும் பிலு பிலு வென்று சண்டைக்குப் போன அட்டகாச காட்சிகள் கண்ணுக்கு விருந்தாக..அப்படி எடுத்த காட்டன் புடவைகளை கட்றதுக்கு ஆடுவா பாரு ஆட்டம். அரை மணி நேரம் உஸ் உஸ்னு கட்டியும் ஒழுங்கா வராம குண்டுப் பூசணிக்கா மாதிரி சுசீலா வந்து நிக்கறப்ப, மாதவனுக்கு வரும் அப்படியொரு சிரிப்பு. "எப்படிங்க இருக்கு காட்டன் புடவை ? " "அடடா அப்படியே தேவதை தான் போ," முழுப் பூசணிக்காயை சோற்றுக்குள் மறைத்த பொய்யை சொல்லி விட்டு, அவள் போனதும் அடக்கியிருந்த சிரிப்பை சிரிப்பான் பாருங்க….இப்படியெல்லாம் எடுத்த சம்மர் கூல் ஆபர் புடவைகள் ஒரே மாதத்தில் வீட்டுக் கிச்சனுக்கு கரித்துணியானது தனிக்கதை..புடவை மட்டுமா? சூடு தணிய எந்நேரமும் ஆபர்ல வாங்கி இன்னும் EMI கட்டுற ஏசி, பசிக்கு பழமுதிர்சோலையில யானை விலை விக்கிற முலாம்பழம், நுங்கு, தர்பூசணி வகையறாக்கள், உடலுக்கு ஆபர்ல ஒண்ணுக்கு ரெண்டா கிடைச்ச ஷவர் டூ ஷவர் பவுடர், குளிக்க எலுமிச்சை கலந்த சோப். குடிக்க மில்க் ஷேக், புதினா ஜூஸ் இத்யாதிகள். அடடா! இயற்கையா வர வெயிலை ரசிக்காம, செயற்கையா இவ பண்ணற பந்தா இருக்கே, மொதல்ல இந்த சம்மர் ஆபர் எல்லாத்தையும் தடை செய்யணும்.."என்னங்க என்னா பகல்லேயே கனவு? வாங்க சம்மர் வந்தாச்சுல்ல. தங்கச்சிக்கு சொல்லிட்டு போய் நாலு காட்டன் புடவையை எடுத்துக்கிட்டு வந்துடுவோம். அப்புறமா போனாக் கிடைக்காது . " சுசீலாவின் குரலில் திடுக்கிட்டு விழித்தான்..டிவி விளம்பரம் அலறிக்கொண்டு இருந்தது. பொண்ணு கையில ரிமோட். "அசந்தால் போச்சு சம்மர் கூல் ஆஃபர் வாங்க வாங்க வசந்தாவுக்கு வாங்க!" மாதவனுக்கு வயிற்றில் பட்டாம்பூச்சிகள் பறந்தன. தன்னைப் போன்ற மாத சம்பளக்காரர்களுக்கு சம்மர் கூல் தராது. கூழு தான் தரும் கையில காசின்றி.