-சுவாமிநாதன்.தற்போது வெளியாகியிருக்கும் பீஸ்ட் திரைப்படம் இஸ்லாமியர்களை புண்படுத்தும் விதமாக அமைந்துள்ளது என்பதால், இப்படத்தை தடை செய்ய வேண்டும் என தமிழ்நாடு முஸ்லீம் லீக் தமிழக அரசிடம் கோரிக்கை விடுத்துள்ளது. இது சம்பந்தமான ஒரு கருத்தரங்கை செய்தித் தொலைக்காட்சி ஒன்றில் பார்த்தேன். தமிழ் சினிமா சிறுபான்மையினரான இஸ்லாமியர்களை காயப்படுத்தும் விதத்தில் படங்கள் எடுத்து வருவதாக, ஒருவர் விவாதித்துக் கொண்டிருந்தார். இந்த கருத்திற்கு, எதிராகவும், ஆதரவாகவும், நடுநிலையாகவும் சிலர் பேசினர்..இந்த உரையாடலைப் பார்த்த போது ஒரு பெண்ணாக எனக்குத் தோன்றிய விஷயம் என்னவென்றால், மக்கள் தொகையில் சரிபாதியாக இருக்கும் எங்களை தமிழ் சினிமா ஏன் காலம் காலமாக இழிவு படுத்துகிறது? ஏன் எங்களுக்கு இந்த அவல நிலை? ஏன் இதை கதாநாயகிகள் சகித்துக்கொண்டிருக்கிறார்கள்?.சமீபத்தில் வெளிவந்த ஒரு தமிழ் படத்தில், கதாநாயகிக்கு தானியங்கி கார் சாவிக்கும், ஸ்கூட்டர் சாவிக்கும் வித்தியாசம் தெரியாதது போலவும், ஹீரோ வந்து உதவ, இருவருக்கும் காதல் ஏற்படுவது போல ஒரு காட்சியைப் பார்த்தேன். அதன் பின் நகைச்சுவை என்ற பெயரில் பெண்களை இழிவு படுத்தும் பல அபத்தமான காட்சிகள் அப்படத்தில் வந்தது. ஆனால், இதில் வருந்தத் தகும் விஷயம் என்னவென்றால்… இந்தக் காட்சிகள் பெண்களை இழிவு படுத்துகின்றன என்பது அறியாமலேயே பல பெண்கள் இதை ரசிப்பது தான்..உடனே லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா இல்லையா? வித்யா பாலன் இல்லையா? என்று நீங்கள் நினைக்கலாம். ஆனால், அவர்களும் அந்த நிலையை அடைய பல வருடங்கள் போராடியுள்ளனர். மேலும், கதாநாயாகிகளுக்கு நல்ல நடிக்க ஸ்கோப் உள்ள கதாப்பாத்திரம் என்று பேசப்பட்ட திரைப்படங்களைப் பார்த்தால் – IAS, IPS ஆபீசர்ஸ், வக்கீல், விபச்சாரி, அரசியல்வாதி, வில்லி (அ) பேய் போன்ற பாத்திரங்களில்தான் நடிதிருப்பார்கள். இல்லையேல், கதாநாயகி மாஸ் காட்சிகள், சண்டைப் போடும் காட்சிகள் என்று நம்பகத்தன்மை அற்ற படங்களில் நடித்திருப்பார்கள். ஏன் நல்ல கதையோடு, கதாநாயகிகளுக்கும் சம வாய்ப்பு கொடுக்கும் எதார்த்தமான படங்களை, கதைகளை எடுக்க முடியாதா?.ஒரு திரைப்படத்தில் "ஹீரோயின்னா, வெள்ளையா இருக்கணும், லூசு மாதிரி பேசணும், அதான் இப்போ ட்ரெண்ட்!" என்பது போல ஒரு டயலாக் கேட்டேன். அட! உண்மைதானே என்று தோன்றியது. எனது கணவரிடம் , " ஏன் இப்படி படங்கள் வருகிறது? இதை கேட்க யாருமில்லையா?" என்று வினவியபோது, அவர் " இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள் பெரும்பாலும் ஆண்கள், அவர்களிடம் உள்ள பெண்ணிற்கான புரிதல் வேறு. பெண்களைக் காப்பாற்றுவது மட்டுமே வீரம் என்று நினைப்பவர்கள் வேறு எப்படி படம் எடுப்பார்கள்? சினிமாத் துறையை சார்ந்த பெண்கள், மற்றும், உன்னைப்போல சாமானியப் பெண்கள் தான் இதை எதிர்த்துக் குரல் கொடுக்க வேண்டும்," என்றார்..உண்மைதான்! இது வெறும் சினிமா, பொழுதுபோக்கு என்று நாம் புறந்தள்ளி விடமுடியாது. ஒரு எழுத்தாளரின் பேனாவுக்கு எவ்வளவு வலிமை உள்ளதோ, அதை விட அதிக வலிமை சினிமாக்களுக்கும், ஊடகங் களுக்கும் உள்ளது. எங்கள் குழந்தைகள் இதனைப் பார்க்கிறார்கள். முட்டாள் கதாநாயகிகளும், அழகுப் பதுமைகளும் எவ்வாறு ஒரு நல்ல சமுதாயத்தை உருவாக்க முடியும்? அதே போல காதலிக்க விருப்பம் இல்லாத பெண்ணை, துரத்தி, துரத்தி, பலவந்தமாக காதலிக்கும் ஆண்களும், பிரச்சனை என்றால் முஷ்டியை மடக்கி வன்முறைக்கு தயாராகும் ஹீரோக்களும், வரும் சந்ததியினருக்கு என்ன கற்றுக் கொடுக்கிறார்கள்?.சினிமாக்களில் காதல் காட்சிகளை தத்ரூபமாக எடுக்க 'இன்டிமசி'(intimacy) இயக்குனர் என்று ஒரு பதவி புதிதாக சேர்கப்பட்டுள்ளது என்று படித்தேன். அதே போல 'பெண்ணியம் இயக்குனர்' என்று ஒரு பெண்ணை நியமனம் செய்து, ஒவ்வொரு திரைப்படத்தின் பெண் கதாப்பாத்தி ரத்தையும் கண்ணியமாக சித்தரிக்கும்படி ஒரு வேண்டுகோளை இந்த கட்டுரை மூலம் இந்தச் சமுதாயத்திற்கு வைக்கிறேன்..——-.அன்பு வாசகீஸ், இந்தக் கட்டுரை பற்றிய உங்கள் மேலான கருத்துகளை கமென்ட்ஸ்ஸாக கீழே பதிவு செய்யுங்கள். பெண்கள் நிலை சினிமாவில் மதிப்புக்குரியதாக மாற உங்களுக்கு தோன்றிய யுக்திகளையும் பகிர்ந்து கொள்ளுங்கள்.
-சுவாமிநாதன்.தற்போது வெளியாகியிருக்கும் பீஸ்ட் திரைப்படம் இஸ்லாமியர்களை புண்படுத்தும் விதமாக அமைந்துள்ளது என்பதால், இப்படத்தை தடை செய்ய வேண்டும் என தமிழ்நாடு முஸ்லீம் லீக் தமிழக அரசிடம் கோரிக்கை விடுத்துள்ளது. இது சம்பந்தமான ஒரு கருத்தரங்கை செய்தித் தொலைக்காட்சி ஒன்றில் பார்த்தேன். தமிழ் சினிமா சிறுபான்மையினரான இஸ்லாமியர்களை காயப்படுத்தும் விதத்தில் படங்கள் எடுத்து வருவதாக, ஒருவர் விவாதித்துக் கொண்டிருந்தார். இந்த கருத்திற்கு, எதிராகவும், ஆதரவாகவும், நடுநிலையாகவும் சிலர் பேசினர்..இந்த உரையாடலைப் பார்த்த போது ஒரு பெண்ணாக எனக்குத் தோன்றிய விஷயம் என்னவென்றால், மக்கள் தொகையில் சரிபாதியாக இருக்கும் எங்களை தமிழ் சினிமா ஏன் காலம் காலமாக இழிவு படுத்துகிறது? ஏன் எங்களுக்கு இந்த அவல நிலை? ஏன் இதை கதாநாயகிகள் சகித்துக்கொண்டிருக்கிறார்கள்?.சமீபத்தில் வெளிவந்த ஒரு தமிழ் படத்தில், கதாநாயகிக்கு தானியங்கி கார் சாவிக்கும், ஸ்கூட்டர் சாவிக்கும் வித்தியாசம் தெரியாதது போலவும், ஹீரோ வந்து உதவ, இருவருக்கும் காதல் ஏற்படுவது போல ஒரு காட்சியைப் பார்த்தேன். அதன் பின் நகைச்சுவை என்ற பெயரில் பெண்களை இழிவு படுத்தும் பல அபத்தமான காட்சிகள் அப்படத்தில் வந்தது. ஆனால், இதில் வருந்தத் தகும் விஷயம் என்னவென்றால்… இந்தக் காட்சிகள் பெண்களை இழிவு படுத்துகின்றன என்பது அறியாமலேயே பல பெண்கள் இதை ரசிப்பது தான்..உடனே லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா இல்லையா? வித்யா பாலன் இல்லையா? என்று நீங்கள் நினைக்கலாம். ஆனால், அவர்களும் அந்த நிலையை அடைய பல வருடங்கள் போராடியுள்ளனர். மேலும், கதாநாயாகிகளுக்கு நல்ல நடிக்க ஸ்கோப் உள்ள கதாப்பாத்திரம் என்று பேசப்பட்ட திரைப்படங்களைப் பார்த்தால் – IAS, IPS ஆபீசர்ஸ், வக்கீல், விபச்சாரி, அரசியல்வாதி, வில்லி (அ) பேய் போன்ற பாத்திரங்களில்தான் நடிதிருப்பார்கள். இல்லையேல், கதாநாயகி மாஸ் காட்சிகள், சண்டைப் போடும் காட்சிகள் என்று நம்பகத்தன்மை அற்ற படங்களில் நடித்திருப்பார்கள். ஏன் நல்ல கதையோடு, கதாநாயகிகளுக்கும் சம வாய்ப்பு கொடுக்கும் எதார்த்தமான படங்களை, கதைகளை எடுக்க முடியாதா?.ஒரு திரைப்படத்தில் "ஹீரோயின்னா, வெள்ளையா இருக்கணும், லூசு மாதிரி பேசணும், அதான் இப்போ ட்ரெண்ட்!" என்பது போல ஒரு டயலாக் கேட்டேன். அட! உண்மைதானே என்று தோன்றியது. எனது கணவரிடம் , " ஏன் இப்படி படங்கள் வருகிறது? இதை கேட்க யாருமில்லையா?" என்று வினவியபோது, அவர் " இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள் பெரும்பாலும் ஆண்கள், அவர்களிடம் உள்ள பெண்ணிற்கான புரிதல் வேறு. பெண்களைக் காப்பாற்றுவது மட்டுமே வீரம் என்று நினைப்பவர்கள் வேறு எப்படி படம் எடுப்பார்கள்? சினிமாத் துறையை சார்ந்த பெண்கள், மற்றும், உன்னைப்போல சாமானியப் பெண்கள் தான் இதை எதிர்த்துக் குரல் கொடுக்க வேண்டும்," என்றார்..உண்மைதான்! இது வெறும் சினிமா, பொழுதுபோக்கு என்று நாம் புறந்தள்ளி விடமுடியாது. ஒரு எழுத்தாளரின் பேனாவுக்கு எவ்வளவு வலிமை உள்ளதோ, அதை விட அதிக வலிமை சினிமாக்களுக்கும், ஊடகங் களுக்கும் உள்ளது. எங்கள் குழந்தைகள் இதனைப் பார்க்கிறார்கள். முட்டாள் கதாநாயகிகளும், அழகுப் பதுமைகளும் எவ்வாறு ஒரு நல்ல சமுதாயத்தை உருவாக்க முடியும்? அதே போல காதலிக்க விருப்பம் இல்லாத பெண்ணை, துரத்தி, துரத்தி, பலவந்தமாக காதலிக்கும் ஆண்களும், பிரச்சனை என்றால் முஷ்டியை மடக்கி வன்முறைக்கு தயாராகும் ஹீரோக்களும், வரும் சந்ததியினருக்கு என்ன கற்றுக் கொடுக்கிறார்கள்?.சினிமாக்களில் காதல் காட்சிகளை தத்ரூபமாக எடுக்க 'இன்டிமசி'(intimacy) இயக்குனர் என்று ஒரு பதவி புதிதாக சேர்கப்பட்டுள்ளது என்று படித்தேன். அதே போல 'பெண்ணியம் இயக்குனர்' என்று ஒரு பெண்ணை நியமனம் செய்து, ஒவ்வொரு திரைப்படத்தின் பெண் கதாப்பாத்தி ரத்தையும் கண்ணியமாக சித்தரிக்கும்படி ஒரு வேண்டுகோளை இந்த கட்டுரை மூலம் இந்தச் சமுதாயத்திற்கு வைக்கிறேன்..——-.அன்பு வாசகீஸ், இந்தக் கட்டுரை பற்றிய உங்கள் மேலான கருத்துகளை கமென்ட்ஸ்ஸாக கீழே பதிவு செய்யுங்கள். பெண்கள் நிலை சினிமாவில் மதிப்புக்குரியதாக மாற உங்களுக்கு தோன்றிய யுக்திகளையும் பகிர்ந்து கொள்ளுங்கள்.