பாளையங்கோட்டை 'காந்தி' மார்க்கெட்'காந்தி' டிபன் கடை..-சவாலே சமாளி.எனது தோழியின் குடும்பம் அவள், அவளது கணவன், இரண்டு பெண் குழந்தைகள் மற்றும் ஒரு ஆண் என ஐந்து பேர் கொண்டது. அவளது வாழ்க்கை மிகவும் சவால்கள் நிறைந்ததாக இருந்தது. 1995ல் எங்கள் பகுதியில் இருந்த ஒரு சிறிய குச்சு வீட்டுக்கு வாடகைக்கு வந்தார்கள். ஆரம்பத்தில் வீட்டிலேயே டிபன் கடை ஒன்றை நடத்தினார்கள். சமைக்க, படிக்க, படுக்க, பிஸினஸ் (டிபன் கடை, சாப்பாடு ஆர்டர் எடுத்து செய்வது, மாவு விற்பது) எல்லாமே அந்த சிறிய குச்சு வீட்டுக்குள்தான். இரவானால் அந்த வீடு ரயில்வே கேரேஜ் மாதிரிதான். ஒவ்வொருத்தரும் கைக்குள்ளும் காலுக்குள்ளும் படுத்திருப்பார்கள்..எனது தோழி ஆரம்பக் காலத்தில் மிகவும் கஷ்டப்பட்டிருக்கிறாள். மீனம்குளம் கிராமத்தில் சுள்ளி பொறுக்கி தலையில் சுமந்து வந்து விற்பது, பூ கட்டுவது என எனது தோழி பல கஷ்டங்களை அனுபவித்திருக்கிறாள். அவள் கணவரோ, கிடைத்த வேலைகளைச் செய்து மனைவிக்கு உதவியிருக்கிறார். இந்த நிலையில் மூன்று குழந்தைகளாகி விட்டதால், அவர்களைக் காப்பாற்றவும் படிக்க வைக்கவும் அவர்களது வருமானம் போதுமானதாக இல்லை. இதில் குழந்தைகளை கான்வெண்டில் படிக்கவைக்க வேறு ஆசை. அதைக் கண்ட அக்கம் பக்கத்தினர், 'வாரியக் கொண்டைக்கு பட்டுக்குஞ்சம் கேட்குதோ?, முடவன் கொம்புத்தேனுக்கு ஆசைப்பட்ட கதைதான்! விலைவாசியெல்லாம் ஜாஸ்தி… உன்னால காலந்தள்ள முடியாது, 'போன மச்சான் திரும்பி வந்தான் பூ மனத்தோடன்னு வரப்போற பாரு'ன்னு கேலியும் கிண்டலுமாக எள்ளி நகையாடுவார்களாம்..எதையும் காதில் வாங்காது இறைவன் மேல் பாரத்தைப் போட்டு, 'பத்து விரலே மூலதனம்' என்பதை மனதில் கொண்டு, தனது உழைப்பின் மீது நம்பிக்கை வைத்து, திருநெல்வேலிக்கு வீட்டை மாற்றிக் கொண்டு வந்துவிட்டாள். பழகியவர்கள் சில ஆலோசனைகள் சொன்னார்கள். எதையும் அவள் காதில் வாங்கவில்லை..'தெரியாத தொழிலை செய்து கெட்டவனும் இருக்கான்', 'தெரிஞ்ச தொழிலை செய்யாமல் கெட்டவனும் இருக்கான்' என்பதை மனதில்கொண்டு தனக்குத் தெரிந்தத் தொழிலான டிபன் கடை, தோசை மாவு கடை வியாபாரத்தை ஆரம்பித்தாள்..ஆரம்பத்தில் வீட்டிலேயே செய்து வந்த வியாபாரம் சூடு பிடிக்க, அதை அப்படியே முன்னெடுத்துச் செல்லும் முகமாக, கணவனும் மனைவியும் சேர்ந்து அந்த வியாபாரத்தை பாளையங்கோட்டை,'காந்தி' மார்க்கெட்டில் ஒரு கடையை வாடகைக்கு எடுத்து மாற்றினார்கள். இதில் எனது ஒரு விசேஷம் என்னவென்றால், 'காந்தி' மார்க்கெட்டில் கடை வாடகைக்கு எடுத்த எனது தோழியின் பெயரும் காந்தி என்பதுதான். நாங்கள் கூட, 'காந்தி மார்க்கெட்டையே நீ விலைக்கு வாங்கி உன் பெயருக்கு மாற்றிக் கொண்டாயா என்ன?' என்று கிண்டலாகப் பேசுவோம். ஆரம்பத்தில் மார்க்கெட் வியாபாரிகளைக் கொண்டே அவளது வியாபாரம் நடந்தது. பிறகு கொஞ்சம் கொஞ்சமாக கணவனும் மனைவியும் தங்களது வியாபாரத்தை பிரபலப்படுத்த, நிறைய ஆர்டர்கள் வர ஆரம்பித்தன. டிபன் கடை வியாபாரத்தைத் தவிர, பொங்கல் மாதிரி விழா காலங்களில் கரும்பு, காய்கறி, பனையோலை விற்பது என்று அவர்களது வியாபாரம் ஜரூராய் நடந்தது. எனது தோழியின் வாழ்க்கையும் கொஞ்சம் கொஞ்சமாக செழிக்க ஆரம்பித்தது..அந்த வருமானத்தைக் கொண்டுதான் எனது தோழி தனது மூத்த பெண்ணை பி.காம்., இளைய பெண்ணை எம்.காம்., மகனை சி.ஏ. என மேற்படிப்பு களைப் படிக்க வைத்தாள். இவை தவிர, கல்யாணம் காட்சி என குடும்ப செலவுகளும் இதில்தான். எனது தோழியின் இளைய மகள் TNPSC தேர்வு எழுதி அறநிலையத் துறையில் வேலை செய்கிறாள்..இருபத்தேழு வருடங்கள் க(ரை)டந்து விட்டன. அன்று ஆரம்பத்தில் குச்சு வீடு ஒன்றில் தனது வாழ்க்கையைத் தொடங்கிய எனது தோழி, இன்று திருநெல்வேலி நகரத்தில் பத்து செண்ட் நிலத்தில் இரண்டு வீடுகளுக்குச் சொந்தக்காரி. அன்று வாடகை கொடுத்து குடியிருந்த அவள் இன்று வீடுகளுக்கு வாடகை பெறும் நிலைக்கு உயர்ந்து விட்டாள். 'உழைப்பே உயர்வு தரும்' என்பதற்கு எனது தோழியின் கடின உழைப்பே ஓர் எடுத்துக்காட்டு..பழைய புகைப்படம்: 'என்னங்க… நீங்க தேடுற ஆள் நான்தான்" என்பது போல இடுப்பில் கைவைத்து கம்பீரமாக நிற்கிறாரே அவர்தான், எனது தோழி 'காந்தி.' பெண்ணிற்கு திலகமிடுவது நான்.-ஜானகி பரந்தாமன், கோயம்புத்தூர்..*****************************.வாடிக்கையாளர் குடும்ப நண்பரானார்!.பிரபல தொலைபேசி நிறுவனத்தில் நான் அதிகாரியாகப் பணியாற்றிய போது பலவிதமான வாடிக்கையாளர்களைச் சமாளிக்க வேண்டிய நிலை. விதவிதமான பிரச்னைகளுடன் வரும் வாடிக்கையாளர்களில் பலர் பெரும்பாலும் கோபமான மனநிலையில்தான் எங்களை அணுகுவார்கள். மோசமாகத் திட்டுபவர்களும் உண்டு. அவர்களைச் சமாளிப்பது பெரிய சவாலாகவே இருக்கும். நிதானமாக, பொறுமையுடன் அவர்களுக்குப் புரியும்படி விளக்கி, துல்லியமான விவரங்களைத் தரும்போது சமாதானமாகி விடுவார்கள். சிலர் நமக்கு நல்ல நண்பர்கள்கூட ஆகி விடுவார்கள்..ஒரு முறை கஸ்டமர் ஒருவர் தொலைபேசி மொத்தக் கட்டணத் தொகை மிக அதிகமாக இருப்பதாகக் கூறி, கோபத்துடன் என்னை அணுகினார். Billஐ சரி பார்த்தபோது வெளிநாட்டு தொலைபேசி அழைப்புகளுக்கான கட்டணங்கள் நிறைய இருந்தன. அதை ஒப்புக்கொள்ளாமல் மறுத்தவர், மேலிடத்தில் புகார் தரப்போவதாக எச்சரித்து விட்டுப் போனார். பெரிய Bill தொகையாக இருந்ததால் வசூலிப்பது கடினம் என கேஸ் file செய்வதற்கான ஏற்பாடு களைச் செய்யலானேன். இரண்டொரு நாட்களில் அந்த வாடிக்கையாளரின் மனைவியும், மகளும் என்னிடம் வந்தார்கள். என்னிடம் இருந்த calls விவரங்களைக் காண்பித்து பொறுமையுடன் விளக்கினேன். அவர் மகள் வெளிநாட்டுக் கால்களை, தான் செய்ததாக ஒப்புக்கொள்ள, அவள் தாயார் முழுத் தொகையையும் கட்டிவிட்டார். அவ்வளவு பெரிய தொகையை உடனே கட்டிவிடுவார் என நான் எதிர்பார்க்கவில்லை..அந்த வாடிக்கையாளர் இன்று என் குடும்ப நண்பராகி விட்டார். நம் பொறுமையான அணுகுமுறை மூலம் சில வாடிக்கையாளர்களும் நல்ல நண்பர்களாகி விடுகிறார்கள்.-வி.ரத்தினா, ஹைதராபாத்.
பாளையங்கோட்டை 'காந்தி' மார்க்கெட்'காந்தி' டிபன் கடை..-சவாலே சமாளி.எனது தோழியின் குடும்பம் அவள், அவளது கணவன், இரண்டு பெண் குழந்தைகள் மற்றும் ஒரு ஆண் என ஐந்து பேர் கொண்டது. அவளது வாழ்க்கை மிகவும் சவால்கள் நிறைந்ததாக இருந்தது. 1995ல் எங்கள் பகுதியில் இருந்த ஒரு சிறிய குச்சு வீட்டுக்கு வாடகைக்கு வந்தார்கள். ஆரம்பத்தில் வீட்டிலேயே டிபன் கடை ஒன்றை நடத்தினார்கள். சமைக்க, படிக்க, படுக்க, பிஸினஸ் (டிபன் கடை, சாப்பாடு ஆர்டர் எடுத்து செய்வது, மாவு விற்பது) எல்லாமே அந்த சிறிய குச்சு வீட்டுக்குள்தான். இரவானால் அந்த வீடு ரயில்வே கேரேஜ் மாதிரிதான். ஒவ்வொருத்தரும் கைக்குள்ளும் காலுக்குள்ளும் படுத்திருப்பார்கள்..எனது தோழி ஆரம்பக் காலத்தில் மிகவும் கஷ்டப்பட்டிருக்கிறாள். மீனம்குளம் கிராமத்தில் சுள்ளி பொறுக்கி தலையில் சுமந்து வந்து விற்பது, பூ கட்டுவது என எனது தோழி பல கஷ்டங்களை அனுபவித்திருக்கிறாள். அவள் கணவரோ, கிடைத்த வேலைகளைச் செய்து மனைவிக்கு உதவியிருக்கிறார். இந்த நிலையில் மூன்று குழந்தைகளாகி விட்டதால், அவர்களைக் காப்பாற்றவும் படிக்க வைக்கவும் அவர்களது வருமானம் போதுமானதாக இல்லை. இதில் குழந்தைகளை கான்வெண்டில் படிக்கவைக்க வேறு ஆசை. அதைக் கண்ட அக்கம் பக்கத்தினர், 'வாரியக் கொண்டைக்கு பட்டுக்குஞ்சம் கேட்குதோ?, முடவன் கொம்புத்தேனுக்கு ஆசைப்பட்ட கதைதான்! விலைவாசியெல்லாம் ஜாஸ்தி… உன்னால காலந்தள்ள முடியாது, 'போன மச்சான் திரும்பி வந்தான் பூ மனத்தோடன்னு வரப்போற பாரு'ன்னு கேலியும் கிண்டலுமாக எள்ளி நகையாடுவார்களாம்..எதையும் காதில் வாங்காது இறைவன் மேல் பாரத்தைப் போட்டு, 'பத்து விரலே மூலதனம்' என்பதை மனதில் கொண்டு, தனது உழைப்பின் மீது நம்பிக்கை வைத்து, திருநெல்வேலிக்கு வீட்டை மாற்றிக் கொண்டு வந்துவிட்டாள். பழகியவர்கள் சில ஆலோசனைகள் சொன்னார்கள். எதையும் அவள் காதில் வாங்கவில்லை..'தெரியாத தொழிலை செய்து கெட்டவனும் இருக்கான்', 'தெரிஞ்ச தொழிலை செய்யாமல் கெட்டவனும் இருக்கான்' என்பதை மனதில்கொண்டு தனக்குத் தெரிந்தத் தொழிலான டிபன் கடை, தோசை மாவு கடை வியாபாரத்தை ஆரம்பித்தாள்..ஆரம்பத்தில் வீட்டிலேயே செய்து வந்த வியாபாரம் சூடு பிடிக்க, அதை அப்படியே முன்னெடுத்துச் செல்லும் முகமாக, கணவனும் மனைவியும் சேர்ந்து அந்த வியாபாரத்தை பாளையங்கோட்டை,'காந்தி' மார்க்கெட்டில் ஒரு கடையை வாடகைக்கு எடுத்து மாற்றினார்கள். இதில் எனது ஒரு விசேஷம் என்னவென்றால், 'காந்தி' மார்க்கெட்டில் கடை வாடகைக்கு எடுத்த எனது தோழியின் பெயரும் காந்தி என்பதுதான். நாங்கள் கூட, 'காந்தி மார்க்கெட்டையே நீ விலைக்கு வாங்கி உன் பெயருக்கு மாற்றிக் கொண்டாயா என்ன?' என்று கிண்டலாகப் பேசுவோம். ஆரம்பத்தில் மார்க்கெட் வியாபாரிகளைக் கொண்டே அவளது வியாபாரம் நடந்தது. பிறகு கொஞ்சம் கொஞ்சமாக கணவனும் மனைவியும் தங்களது வியாபாரத்தை பிரபலப்படுத்த, நிறைய ஆர்டர்கள் வர ஆரம்பித்தன. டிபன் கடை வியாபாரத்தைத் தவிர, பொங்கல் மாதிரி விழா காலங்களில் கரும்பு, காய்கறி, பனையோலை விற்பது என்று அவர்களது வியாபாரம் ஜரூராய் நடந்தது. எனது தோழியின் வாழ்க்கையும் கொஞ்சம் கொஞ்சமாக செழிக்க ஆரம்பித்தது..அந்த வருமானத்தைக் கொண்டுதான் எனது தோழி தனது மூத்த பெண்ணை பி.காம்., இளைய பெண்ணை எம்.காம்., மகனை சி.ஏ. என மேற்படிப்பு களைப் படிக்க வைத்தாள். இவை தவிர, கல்யாணம் காட்சி என குடும்ப செலவுகளும் இதில்தான். எனது தோழியின் இளைய மகள் TNPSC தேர்வு எழுதி அறநிலையத் துறையில் வேலை செய்கிறாள்..இருபத்தேழு வருடங்கள் க(ரை)டந்து விட்டன. அன்று ஆரம்பத்தில் குச்சு வீடு ஒன்றில் தனது வாழ்க்கையைத் தொடங்கிய எனது தோழி, இன்று திருநெல்வேலி நகரத்தில் பத்து செண்ட் நிலத்தில் இரண்டு வீடுகளுக்குச் சொந்தக்காரி. அன்று வாடகை கொடுத்து குடியிருந்த அவள் இன்று வீடுகளுக்கு வாடகை பெறும் நிலைக்கு உயர்ந்து விட்டாள். 'உழைப்பே உயர்வு தரும்' என்பதற்கு எனது தோழியின் கடின உழைப்பே ஓர் எடுத்துக்காட்டு..பழைய புகைப்படம்: 'என்னங்க… நீங்க தேடுற ஆள் நான்தான்" என்பது போல இடுப்பில் கைவைத்து கம்பீரமாக நிற்கிறாரே அவர்தான், எனது தோழி 'காந்தி.' பெண்ணிற்கு திலகமிடுவது நான்.-ஜானகி பரந்தாமன், கோயம்புத்தூர்..*****************************.வாடிக்கையாளர் குடும்ப நண்பரானார்!.பிரபல தொலைபேசி நிறுவனத்தில் நான் அதிகாரியாகப் பணியாற்றிய போது பலவிதமான வாடிக்கையாளர்களைச் சமாளிக்க வேண்டிய நிலை. விதவிதமான பிரச்னைகளுடன் வரும் வாடிக்கையாளர்களில் பலர் பெரும்பாலும் கோபமான மனநிலையில்தான் எங்களை அணுகுவார்கள். மோசமாகத் திட்டுபவர்களும் உண்டு. அவர்களைச் சமாளிப்பது பெரிய சவாலாகவே இருக்கும். நிதானமாக, பொறுமையுடன் அவர்களுக்குப் புரியும்படி விளக்கி, துல்லியமான விவரங்களைத் தரும்போது சமாதானமாகி விடுவார்கள். சிலர் நமக்கு நல்ல நண்பர்கள்கூட ஆகி விடுவார்கள்..ஒரு முறை கஸ்டமர் ஒருவர் தொலைபேசி மொத்தக் கட்டணத் தொகை மிக அதிகமாக இருப்பதாகக் கூறி, கோபத்துடன் என்னை அணுகினார். Billஐ சரி பார்த்தபோது வெளிநாட்டு தொலைபேசி அழைப்புகளுக்கான கட்டணங்கள் நிறைய இருந்தன. அதை ஒப்புக்கொள்ளாமல் மறுத்தவர், மேலிடத்தில் புகார் தரப்போவதாக எச்சரித்து விட்டுப் போனார். பெரிய Bill தொகையாக இருந்ததால் வசூலிப்பது கடினம் என கேஸ் file செய்வதற்கான ஏற்பாடு களைச் செய்யலானேன். இரண்டொரு நாட்களில் அந்த வாடிக்கையாளரின் மனைவியும், மகளும் என்னிடம் வந்தார்கள். என்னிடம் இருந்த calls விவரங்களைக் காண்பித்து பொறுமையுடன் விளக்கினேன். அவர் மகள் வெளிநாட்டுக் கால்களை, தான் செய்ததாக ஒப்புக்கொள்ள, அவள் தாயார் முழுத் தொகையையும் கட்டிவிட்டார். அவ்வளவு பெரிய தொகையை உடனே கட்டிவிடுவார் என நான் எதிர்பார்க்கவில்லை..அந்த வாடிக்கையாளர் இன்று என் குடும்ப நண்பராகி விட்டார். நம் பொறுமையான அணுகுமுறை மூலம் சில வாடிக்கையாளர்களும் நல்ல நண்பர்களாகி விடுகிறார்கள்.-வி.ரத்தினா, ஹைதராபாத்.