– ராஜி ரகுநாதன், ஹைதராபாத் .மகிழ்ச்சியையும் சந்தோஷத்தையும் வாழ்த்துகளையும் தன் பெயரிலேயே வைத்துள்ள அம்பிகை சந்தோஷி மாதா. பக்தர்களின் இஷ்ட தெய்வமாக விளங்கி கோரிய வரங்களை தந்தருளுபவளாக பூஜைகளை ஏற்கும் மங்கள மூர்த்தியே சந்தோஷிமாதா. பெற்ற தாயைப்போல் பக்தர்களுக்கு கருணையை அள்ளிக் கொடுத்து இகபர சுகங்களோடு ஆன்மீக ஆனந்த அனுபூதியளிக்கும் தேவதை சந்தோஷிமாதா..வடிவ வர்ணனை:.பீடத்தில் பத்மாசனத்தில் அமர்ந்துள்ள அம்பிகையின் வடிவம் காண்பவருக்கு யோக முத்திரையை நினைவுக்குக் கொண்டு வருகிறது. கல்விக்கரசியான சரஸ்வதி தேவியின் வடிவைப்போல புன்னகையோடு தங்க கிரீடம் அணிந்து சந்தோஷிமாதா தரிசனம் அளிக்கிறாள். இந்த அம்மனுக்கு நான்கு கரங்கள். அவற்றுள் கத்தி, திரிசூலம், பாயாசப் பாத்திரம், அபய ஹஸ்தம் கொண்டு விளங்குகிறாள். கரங்களில் தங்க ஆபரணங்களும் கழுத்தில் ரத்னம் மாணிக்க ஹாரங்களும் இடுப்பில் ஒட்டியாணம் தரித்து சர்வாலங்கார பூஷிதையாக காட்சியளிக்கிறாள் அன்னை சந்தோஷிமாதா. புன்னகை பூத்த முக பிம்பத்தோடு பக்தர்களின் கல்ப விருட்சமாக காட்சி தருகிறாள். அந்தப் பார்வையின் கருணையை எப்படி வர்ணிப்பது!.யார் இந்த சந்தோஷி மாதா?.சந்தோஷிமாதா விநாயகரின் புதல்வியாக அவதரித்ததாகப் புராணம் கூறுகிறது. இந்த அம்மனைப் பற்றிய விவரங்கள் சிறிது காலம் முன்பு வரை மராத்வாடா பகுதியில் பிரசித்தமாக விளங்கியது. மிகச் சிலருக்கே இந்த விரதம் குறித்து தெரிந்து வந்தது. காலக்கிரமத்தில் வட இந்தியா வுக்கும் தென்னிந்தியாவுக்கும் கூட சந்தோஷிமா வழிபாடு பரவியது. தற்போது சந்தோஷிமா அம்மனின் பூஜை வழிமுறைகள், விரதம், நோன்பு, உத்தியாபனம் (விரதத்தை நிறைவுசெய்யும் முறை) முதலானவை பல மொழிகளில் புத்தக வடிவில் கிடைக்கிறது..நடுத்தர மக்களின் குலதெய்வமாக விளங்கும் சந்தோஷிமாதா:.சந்தோஷிமாதா விரதம் பக்தர்களிடம் பரவி வந்த நேரத்தில் 1975 ல் 'ஜெய் சந்தோஷி மா' என்ற ஹிந்தி மொழித் திரைப்படம் வெளிவந்தது. பெரிய நட்சத்திர நடிகர்களோ அதிக பொருட்செலவோ இன்றி எடுக்கப்பட்டாலும் இந்தத் திரைப்படம் பக்தர்களை மிகப் பெருமளவில் கவர்ந்தது. நடுத்தர மக்களுக்கு திரைப்படங்களே பொழுதுபோக்கு அம்சமாக விளங்கிய காலம் அது. ஜெய் சந்தோஷி மா திரைப்படத்தை மக்கள் எத்தனை விரும்பிப் பார்த்தார்கள் என்றால், அந்தச் சினிமா நடக்கும் திரையரங்கங்களைப் புனிதத்தலமாக எண்ணினார்கள். இந்தச் சினிமா மூலம் சந்தோஷி மாதாவின் பிறப்பு, விரதம், உத்தியாபனம் முதலியவை மக்களிடம் மிகப் பரவலாக பிரசாரம் ஆனது. அதனால் பல அம்மன் கோயில்களில் சந்தோஷிமாதாவின் விக்ரகத்தைப் பிரதிஷ்டை செய்தார்கள். புதிதாக சந்தோஷிமா ஆலயங்கள் உருவாகின. பல குடும்பங்களுக்கு சந்தோஷிமாதா குலதெய்வமாக மாறினாள்..சந்தோஷிமாதா அம்மனின் பிறப்பு:.சந்தோஷிமாதா கதையில் அன்னையின் ஜனனம் பற்றி கூறப்படுகிறது. ஸ்ராவண மாதம் எனப்படும் ஆடி-ஆவணி மாதத்தில் பௌர்ணமி அன்று சகோதர சகோதரிகள் இடையே இருக்கும் அன்பு ரக்ஷாபந்தன் மூலம் வெளிப்படுகிறது. இந்தத் தினத்தில் அணிவிக்கும் ராக்கியும் அதன் உட்பொருளுமே சந்தோஷிமாதா பிறப்புக்கான அடிப்படையாக நிற்கிறது..விக்னேஸ்வரன் சித்தி, புத்தி என்ற மனைவியரோடும் க்ஷேமம், லாபம் என்ற புதல்வர்களோடும் கைலாயத்தில் விளங்கினார். விநாயகனை வழிபட்டால் கிடைக்கும் பலன்களையே மனைவியாகவும் புதல்வர்களாகவும் வர்ணிப்பது வழக்கம். ஒருநாள் ஸ்ராவண பௌர்ணமியன்று நாரத முனிவர் கைலாயத்திற்குச் சென்று பூலோகத்தில் ரக்ஷாபந்தன திருவிழா கோலாகலமாக நடப்பது பற்றி மகிழ்வோடு தெரிவித்தார். ரக்ஷாபந்தனம் சகோதர சகோதரிகளிடையே விளங்கும் அன்பிற்கான அடையாளம். க்ஷேமம், லாபம் இருவரும் கூட தம் சகோதரியிடம் ரக்ஷாபந்தனம் கட்டிக் கொள்ள விரும்பினர். இருவரும் தந்தையான விநாயகரிடம் வந்து தமக்கும் ஒரு சகோதரி வேண்டும் என்று பிரார்த்தித்தார்கள். அவர்களுடைய சங்கல்பத்தை நிறைவேற்றுவதற்காக சிந்தனையில் ஆழ்ந்த விக்னேஸ்வரனின் கண்களிலிருந்து ஆனந்த ரேகைகளோடு ஒளி பொருந்திய ஜோதி ஒன்று வெளிப்பட்டது. உடனே அந்த ஜோதி சிறுமியாக வடிவம் எடுத்தது. சந்தோஷத்தோடு கூடிய சிந்தனை மூலம் தோன்றிய அந்த அழகான சிறுமியை சகோதரியாக ஏற்று க்ஷேமம் லாபம் இருவரும் அந்தப் புன்னகை பூக்கும் பாலசுந்தரியிடம் ரக்ஷா பந்தனம் கட்டிக்கொண்டு மகிழ்ந்தார்கள். அந்த சுபச் சந்தர்ப்பத்தில் ஆகாயத்தில் இருக்கும் சகல தேவ கணங்களும் அங்கு தோன்றி 'ஜெய் சந்தோஷிமாதா!' என்று வாழ்த்தி "அனைவருக்கும் எப்போதும் சந்தோசத்தைத் தந்து உலகங்களை உய்விக்க வேண்டும்!" என்று பிரார்த்தித்தார்கள். கணேசரின் சந்தோஷத்தின் அடையாளமாக பிறந்ததால் நாரத மகரிஷி அந்தத் தேவதைக்கு சந்தோஷிமாதா என்று நாமகரணம் செய்தார். பூலோக வாசிகளுக்காக அவதரித்த தாயாக வர்ணித்தார்..விரதம் நியமம்:.இது வெள்ளிக் கிழமை தோறும் செய்யும் விரதம். திருமணம், வேலை, கணவன் மனைவியிடையே அன்பு, அமைதியான இல்வாழ்க்கை, பிள்ளைபேறு போன்ற பல விருப்பங்களுக்காக பக்தர்கள் இந்த விரதத்தைக் கடைபிடிக்கின்றனர். பொதுவாக ஸ்ராவண மாதம் பௌர்ணமியன்று தொடங்கி பதினாறு வாரங்களுக்கு விரதம் இருப்பதாக வேண்டிக்கொண்டு ஒவ்வொரு வெள்ளிக் கிழமையும் ஒரு போது மட்டும் உண்டு விரதம் இருப்பார்கள். சந்தோஷிமாதாவின் படத்தை பூஜை அறையில் வைத்து தினமும்கூட வழிபடலாம். ஏதாவது வேலை அல்லது சுப காரியம் நடப்பதற்காக மனதில் சங்கல்பம் செய்துகொண்டு சம்பூரணமாக பூர்த்தியாகும் வரை சந்தோஷிமாதா பூஜா, விரதம், உத்தியாபனம் செய்துகொண்டே வருவார்கள் பக்தர்கள். சில வாரங்கள் செய்வதாக எண்ணி அந்த நினைத்த வாரங்கள் ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் பூஜை செய்து விரத கதையைப் படித்து பிரசாத நெய்வேத்தியம் செய்ய வேண்டும். மிகவும் முக்கியமான விஷயம் என்னவென்றால் விரதம் இருக்கும் வெள்ளிக்கிழமையன்று புளிப்பு சாப்பிடக்கூடாது என்பதில் உறுதியாக இருக்க வேண்டும். இந்த நாளில் குடும்ப அங்கத்தினர்கள் அனைவரும்கூட இந்த புளிப்பை மறுக்கும் விரதத்தைக் கடைபிடித்தால் விரதம் செய்து வருபவர்களுக்கு எப்படிப்பட்ட தொந்தரவும் இல்லாமல் விரதம் நிறைவடையும்..பூஜை விதானம்:.விஸ்தாரமாகச் செய்யும் பூஜையில் ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் சந்தோஷிமாதாவின் படத்தை ஒரு பலகையில் வைத்து விளக்கேற்றி அனைத்து பூஜைகளையும் போலவே விநாயகர் பிரார்த்தனை சங்கல்பம் கணபதி பூஜை செய்யவேண்டும். கலசத்தில் நீர் நிரப்பி அதில் மஞ்சள், ரூபாய் நாணயம், சிறிது அட்சதை சேர்த்து அதன் மேல் மாவிலைக் கொத்தும் மஞ்சள் பூசிய தேங்காயும் வைத்து ரவிக்கை துணியும் வளையலும் அலங்கரித்து அதில் சந்தோஷிமாதாவை ஆவாகனம் செய்து அர்ச்சனை தொடங்கவேண்டும். இவ்விதமாக செய்யும் பூஜைகளில் ஸ்ரீசூக்தத்தை கூட சேர்த்து செய்தால் அந்த முறை மிகவும் பலனளிக்கக் கூடியதாக இருக்கும். ஸ்ரீசந்தோஷிமாதாவை இவ்வாறு தியானம் செய்தபின் சந்தோஷிமாதா அம்மனுக்கு அஷ்டோத்திர சதநாமாவளி அர்ச்சனை நைவேத்யம் தாம்பூலம் சமர்ப்பித்து, மந்திர புஷ்பம் படிப்பார்கள். பூஜை முடிவடைந்தபின் அம்மனை பிரார்த்தனை செய்து எப்படிப்பட்ட தடங்கலும் இல்லாமல் விரத கதையைப் படிக்க வேண்டும். அதன்பின் மங்கள ஆரத்தி அளிக்க வேண்டும். இந்த விரதம் பூர்த்தி செய்த உடனே பிரசாதம் கட்டாயம் எடுத்துக்கொள்ள வேண்டும். அதன்பின் பிரசாதத்தை வினியோகிக்க வேண்டும். கலசத்தில் இருக்கும் நீரை தீர்த்தமாக அருந்தி, மீதி உள்ள ஜலத்தை துளசிச் செடியில் விட வேண்டும். பதினாறு வாரங்களும் ஒவ்வொரு வெள்ளிக் கிழமையும் பூஜை செய்த பின் கடைசி வாரம் எட்டு சிறுவர்களுக்கு புளிப்பு சேர்க்காமல் பிரசாதங்கள் அளிக்க வேண்டும். ஒரு சுமங்கலிக்குப் போஜனம் அளித்து மஞ்சள் குங்குமம் தாம்பூலம் வஸ்திரங்கள் யதாசக்தி சமர்ப்பிக்கவேண்டும். இவை செய்ய இயலாதவர்கள் இறுதி வெள்ளிக் கிழமையன்று அருகில் இருக்கும் சந்தோஷிமாதா கோயிலுக்குச் சென்று அர்ச்சனை செய்து வழிபட வேண்டும்..பிரசாதங்கள்:.ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் மிகவும் எளிமையான கொண்டைக் கடலையும் (உப்புக் கடலை) வெல்லமும் பிரசாதமாக நிவேதனம் செய்தாலே போதும். தேவி மகிழ்வோடு ஏற்பாள். இறுதி நாளான உத்தியாபனம் அன்று இந்த அம்மனுக்கு இஷ்டமான பிரசாதங்கள் கோதுமை, ரவா, சர்க்கரை சேர்த்து நெய்யில் செய்த கேசரி, பசும்பாலில் செய்த பாயாசம், நெய்யில் செய்த பூரிகள் போன்றவை. இவை மராட்டி சம்பிரதாயத்திற்கு மிகவும் அருகாமையில் இருப்பதால் கோதுமை சேர்த்த பதார்த்தங்களை அதிகமாக பிரசாதங்களில் உபயோகிப்பது நடக்கிறது..சந்தோஷிமாதா விரும்பிய கோரிக்கைகளை உடனே தீர்க்கும் கல்பவல்லி என்பது பக்தர்களின் அனுபவம். இந்த விரதம், நோன்பு, உத்தியாபனம் செய்பவர்கள் அனைவருக்கும் நினைத்ததை நினைத்தபடியே அருளக்கூடிய தேவி இவள். பூவுலக வாசிகளுக்குச் சந்தோஷத்தை அளிப்பதற்காக அவதரித்த தாய். சந்தோஷிமாதா அம்மனுக்குப் பக்தி சிரத்தையோடு கூடிய வந்தனம்!
– ராஜி ரகுநாதன், ஹைதராபாத் .மகிழ்ச்சியையும் சந்தோஷத்தையும் வாழ்த்துகளையும் தன் பெயரிலேயே வைத்துள்ள அம்பிகை சந்தோஷி மாதா. பக்தர்களின் இஷ்ட தெய்வமாக விளங்கி கோரிய வரங்களை தந்தருளுபவளாக பூஜைகளை ஏற்கும் மங்கள மூர்த்தியே சந்தோஷிமாதா. பெற்ற தாயைப்போல் பக்தர்களுக்கு கருணையை அள்ளிக் கொடுத்து இகபர சுகங்களோடு ஆன்மீக ஆனந்த அனுபூதியளிக்கும் தேவதை சந்தோஷிமாதா..வடிவ வர்ணனை:.பீடத்தில் பத்மாசனத்தில் அமர்ந்துள்ள அம்பிகையின் வடிவம் காண்பவருக்கு யோக முத்திரையை நினைவுக்குக் கொண்டு வருகிறது. கல்விக்கரசியான சரஸ்வதி தேவியின் வடிவைப்போல புன்னகையோடு தங்க கிரீடம் அணிந்து சந்தோஷிமாதா தரிசனம் அளிக்கிறாள். இந்த அம்மனுக்கு நான்கு கரங்கள். அவற்றுள் கத்தி, திரிசூலம், பாயாசப் பாத்திரம், அபய ஹஸ்தம் கொண்டு விளங்குகிறாள். கரங்களில் தங்க ஆபரணங்களும் கழுத்தில் ரத்னம் மாணிக்க ஹாரங்களும் இடுப்பில் ஒட்டியாணம் தரித்து சர்வாலங்கார பூஷிதையாக காட்சியளிக்கிறாள் அன்னை சந்தோஷிமாதா. புன்னகை பூத்த முக பிம்பத்தோடு பக்தர்களின் கல்ப விருட்சமாக காட்சி தருகிறாள். அந்தப் பார்வையின் கருணையை எப்படி வர்ணிப்பது!.யார் இந்த சந்தோஷி மாதா?.சந்தோஷிமாதா விநாயகரின் புதல்வியாக அவதரித்ததாகப் புராணம் கூறுகிறது. இந்த அம்மனைப் பற்றிய விவரங்கள் சிறிது காலம் முன்பு வரை மராத்வாடா பகுதியில் பிரசித்தமாக விளங்கியது. மிகச் சிலருக்கே இந்த விரதம் குறித்து தெரிந்து வந்தது. காலக்கிரமத்தில் வட இந்தியா வுக்கும் தென்னிந்தியாவுக்கும் கூட சந்தோஷிமா வழிபாடு பரவியது. தற்போது சந்தோஷிமா அம்மனின் பூஜை வழிமுறைகள், விரதம், நோன்பு, உத்தியாபனம் (விரதத்தை நிறைவுசெய்யும் முறை) முதலானவை பல மொழிகளில் புத்தக வடிவில் கிடைக்கிறது..நடுத்தர மக்களின் குலதெய்வமாக விளங்கும் சந்தோஷிமாதா:.சந்தோஷிமாதா விரதம் பக்தர்களிடம் பரவி வந்த நேரத்தில் 1975 ல் 'ஜெய் சந்தோஷி மா' என்ற ஹிந்தி மொழித் திரைப்படம் வெளிவந்தது. பெரிய நட்சத்திர நடிகர்களோ அதிக பொருட்செலவோ இன்றி எடுக்கப்பட்டாலும் இந்தத் திரைப்படம் பக்தர்களை மிகப் பெருமளவில் கவர்ந்தது. நடுத்தர மக்களுக்கு திரைப்படங்களே பொழுதுபோக்கு அம்சமாக விளங்கிய காலம் அது. ஜெய் சந்தோஷி மா திரைப்படத்தை மக்கள் எத்தனை விரும்பிப் பார்த்தார்கள் என்றால், அந்தச் சினிமா நடக்கும் திரையரங்கங்களைப் புனிதத்தலமாக எண்ணினார்கள். இந்தச் சினிமா மூலம் சந்தோஷி மாதாவின் பிறப்பு, விரதம், உத்தியாபனம் முதலியவை மக்களிடம் மிகப் பரவலாக பிரசாரம் ஆனது. அதனால் பல அம்மன் கோயில்களில் சந்தோஷிமாதாவின் விக்ரகத்தைப் பிரதிஷ்டை செய்தார்கள். புதிதாக சந்தோஷிமா ஆலயங்கள் உருவாகின. பல குடும்பங்களுக்கு சந்தோஷிமாதா குலதெய்வமாக மாறினாள்..சந்தோஷிமாதா அம்மனின் பிறப்பு:.சந்தோஷிமாதா கதையில் அன்னையின் ஜனனம் பற்றி கூறப்படுகிறது. ஸ்ராவண மாதம் எனப்படும் ஆடி-ஆவணி மாதத்தில் பௌர்ணமி அன்று சகோதர சகோதரிகள் இடையே இருக்கும் அன்பு ரக்ஷாபந்தன் மூலம் வெளிப்படுகிறது. இந்தத் தினத்தில் அணிவிக்கும் ராக்கியும் அதன் உட்பொருளுமே சந்தோஷிமாதா பிறப்புக்கான அடிப்படையாக நிற்கிறது..விக்னேஸ்வரன் சித்தி, புத்தி என்ற மனைவியரோடும் க்ஷேமம், லாபம் என்ற புதல்வர்களோடும் கைலாயத்தில் விளங்கினார். விநாயகனை வழிபட்டால் கிடைக்கும் பலன்களையே மனைவியாகவும் புதல்வர்களாகவும் வர்ணிப்பது வழக்கம். ஒருநாள் ஸ்ராவண பௌர்ணமியன்று நாரத முனிவர் கைலாயத்திற்குச் சென்று பூலோகத்தில் ரக்ஷாபந்தன திருவிழா கோலாகலமாக நடப்பது பற்றி மகிழ்வோடு தெரிவித்தார். ரக்ஷாபந்தனம் சகோதர சகோதரிகளிடையே விளங்கும் அன்பிற்கான அடையாளம். க்ஷேமம், லாபம் இருவரும் கூட தம் சகோதரியிடம் ரக்ஷாபந்தனம் கட்டிக் கொள்ள விரும்பினர். இருவரும் தந்தையான விநாயகரிடம் வந்து தமக்கும் ஒரு சகோதரி வேண்டும் என்று பிரார்த்தித்தார்கள். அவர்களுடைய சங்கல்பத்தை நிறைவேற்றுவதற்காக சிந்தனையில் ஆழ்ந்த விக்னேஸ்வரனின் கண்களிலிருந்து ஆனந்த ரேகைகளோடு ஒளி பொருந்திய ஜோதி ஒன்று வெளிப்பட்டது. உடனே அந்த ஜோதி சிறுமியாக வடிவம் எடுத்தது. சந்தோஷத்தோடு கூடிய சிந்தனை மூலம் தோன்றிய அந்த அழகான சிறுமியை சகோதரியாக ஏற்று க்ஷேமம் லாபம் இருவரும் அந்தப் புன்னகை பூக்கும் பாலசுந்தரியிடம் ரக்ஷா பந்தனம் கட்டிக்கொண்டு மகிழ்ந்தார்கள். அந்த சுபச் சந்தர்ப்பத்தில் ஆகாயத்தில் இருக்கும் சகல தேவ கணங்களும் அங்கு தோன்றி 'ஜெய் சந்தோஷிமாதா!' என்று வாழ்த்தி "அனைவருக்கும் எப்போதும் சந்தோசத்தைத் தந்து உலகங்களை உய்விக்க வேண்டும்!" என்று பிரார்த்தித்தார்கள். கணேசரின் சந்தோஷத்தின் அடையாளமாக பிறந்ததால் நாரத மகரிஷி அந்தத் தேவதைக்கு சந்தோஷிமாதா என்று நாமகரணம் செய்தார். பூலோக வாசிகளுக்காக அவதரித்த தாயாக வர்ணித்தார்..விரதம் நியமம்:.இது வெள்ளிக் கிழமை தோறும் செய்யும் விரதம். திருமணம், வேலை, கணவன் மனைவியிடையே அன்பு, அமைதியான இல்வாழ்க்கை, பிள்ளைபேறு போன்ற பல விருப்பங்களுக்காக பக்தர்கள் இந்த விரதத்தைக் கடைபிடிக்கின்றனர். பொதுவாக ஸ்ராவண மாதம் பௌர்ணமியன்று தொடங்கி பதினாறு வாரங்களுக்கு விரதம் இருப்பதாக வேண்டிக்கொண்டு ஒவ்வொரு வெள்ளிக் கிழமையும் ஒரு போது மட்டும் உண்டு விரதம் இருப்பார்கள். சந்தோஷிமாதாவின் படத்தை பூஜை அறையில் வைத்து தினமும்கூட வழிபடலாம். ஏதாவது வேலை அல்லது சுப காரியம் நடப்பதற்காக மனதில் சங்கல்பம் செய்துகொண்டு சம்பூரணமாக பூர்த்தியாகும் வரை சந்தோஷிமாதா பூஜா, விரதம், உத்தியாபனம் செய்துகொண்டே வருவார்கள் பக்தர்கள். சில வாரங்கள் செய்வதாக எண்ணி அந்த நினைத்த வாரங்கள் ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் பூஜை செய்து விரத கதையைப் படித்து பிரசாத நெய்வேத்தியம் செய்ய வேண்டும். மிகவும் முக்கியமான விஷயம் என்னவென்றால் விரதம் இருக்கும் வெள்ளிக்கிழமையன்று புளிப்பு சாப்பிடக்கூடாது என்பதில் உறுதியாக இருக்க வேண்டும். இந்த நாளில் குடும்ப அங்கத்தினர்கள் அனைவரும்கூட இந்த புளிப்பை மறுக்கும் விரதத்தைக் கடைபிடித்தால் விரதம் செய்து வருபவர்களுக்கு எப்படிப்பட்ட தொந்தரவும் இல்லாமல் விரதம் நிறைவடையும்..பூஜை விதானம்:.விஸ்தாரமாகச் செய்யும் பூஜையில் ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் சந்தோஷிமாதாவின் படத்தை ஒரு பலகையில் வைத்து விளக்கேற்றி அனைத்து பூஜைகளையும் போலவே விநாயகர் பிரார்த்தனை சங்கல்பம் கணபதி பூஜை செய்யவேண்டும். கலசத்தில் நீர் நிரப்பி அதில் மஞ்சள், ரூபாய் நாணயம், சிறிது அட்சதை சேர்த்து அதன் மேல் மாவிலைக் கொத்தும் மஞ்சள் பூசிய தேங்காயும் வைத்து ரவிக்கை துணியும் வளையலும் அலங்கரித்து அதில் சந்தோஷிமாதாவை ஆவாகனம் செய்து அர்ச்சனை தொடங்கவேண்டும். இவ்விதமாக செய்யும் பூஜைகளில் ஸ்ரீசூக்தத்தை கூட சேர்த்து செய்தால் அந்த முறை மிகவும் பலனளிக்கக் கூடியதாக இருக்கும். ஸ்ரீசந்தோஷிமாதாவை இவ்வாறு தியானம் செய்தபின் சந்தோஷிமாதா அம்மனுக்கு அஷ்டோத்திர சதநாமாவளி அர்ச்சனை நைவேத்யம் தாம்பூலம் சமர்ப்பித்து, மந்திர புஷ்பம் படிப்பார்கள். பூஜை முடிவடைந்தபின் அம்மனை பிரார்த்தனை செய்து எப்படிப்பட்ட தடங்கலும் இல்லாமல் விரத கதையைப் படிக்க வேண்டும். அதன்பின் மங்கள ஆரத்தி அளிக்க வேண்டும். இந்த விரதம் பூர்த்தி செய்த உடனே பிரசாதம் கட்டாயம் எடுத்துக்கொள்ள வேண்டும். அதன்பின் பிரசாதத்தை வினியோகிக்க வேண்டும். கலசத்தில் இருக்கும் நீரை தீர்த்தமாக அருந்தி, மீதி உள்ள ஜலத்தை துளசிச் செடியில் விட வேண்டும். பதினாறு வாரங்களும் ஒவ்வொரு வெள்ளிக் கிழமையும் பூஜை செய்த பின் கடைசி வாரம் எட்டு சிறுவர்களுக்கு புளிப்பு சேர்க்காமல் பிரசாதங்கள் அளிக்க வேண்டும். ஒரு சுமங்கலிக்குப் போஜனம் அளித்து மஞ்சள் குங்குமம் தாம்பூலம் வஸ்திரங்கள் யதாசக்தி சமர்ப்பிக்கவேண்டும். இவை செய்ய இயலாதவர்கள் இறுதி வெள்ளிக் கிழமையன்று அருகில் இருக்கும் சந்தோஷிமாதா கோயிலுக்குச் சென்று அர்ச்சனை செய்து வழிபட வேண்டும்..பிரசாதங்கள்:.ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் மிகவும் எளிமையான கொண்டைக் கடலையும் (உப்புக் கடலை) வெல்லமும் பிரசாதமாக நிவேதனம் செய்தாலே போதும். தேவி மகிழ்வோடு ஏற்பாள். இறுதி நாளான உத்தியாபனம் அன்று இந்த அம்மனுக்கு இஷ்டமான பிரசாதங்கள் கோதுமை, ரவா, சர்க்கரை சேர்த்து நெய்யில் செய்த கேசரி, பசும்பாலில் செய்த பாயாசம், நெய்யில் செய்த பூரிகள் போன்றவை. இவை மராட்டி சம்பிரதாயத்திற்கு மிகவும் அருகாமையில் இருப்பதால் கோதுமை சேர்த்த பதார்த்தங்களை அதிகமாக பிரசாதங்களில் உபயோகிப்பது நடக்கிறது..சந்தோஷிமாதா விரும்பிய கோரிக்கைகளை உடனே தீர்க்கும் கல்பவல்லி என்பது பக்தர்களின் அனுபவம். இந்த விரதம், நோன்பு, உத்தியாபனம் செய்பவர்கள் அனைவருக்கும் நினைத்ததை நினைத்தபடியே அருளக்கூடிய தேவி இவள். பூவுலக வாசிகளுக்குச் சந்தோஷத்தை அளிப்பதற்காக அவதரித்த தாய். சந்தோஷிமாதா அம்மனுக்குப் பக்தி சிரத்தையோடு கூடிய வந்தனம்!