– ராகவ் குமார்.ராட்ஷசன் படத்தில் அறிமுகம் ஆகி தனுஷின் 'அசுரன்' படத்தில் அனைவரையும் திரும்பிப் பார்க்க வைத்த அம்மு அபிராமி 'பேட்டரி' படத்தில் ஹீரோயினாக நடித்து வருகிறார். அம்முவை சந்தித்துப் பேசினோம்:.எப்படி இருக்கீங்க அம்மு? பார்த்து ரொம்ப நாளாச்சு…!.நான் நல்லா இருக்கேன். பார்த்து ரொம்ப நாளாச்சுன்னு கேட்கறது மட்டும் சரியில்லை. இந்தக் கோவிட் காலத்துல சூட்டிங் நடக்கல. அதனால வெளியில் அதிகமாக வரல. அவ்வளவுதான் (கோபம் எதற்கு தாயீ?) .ஒகே மேடம் கூல். இப்ப நீங்க நடிக்கும் பேட்டரி… கதையும் உங்க கேரக்டரும் என்ன?கதையும் கேரக்டரையும் இப்ப சொல்லமுடியாது. ஆனால், டைரக்டர் மணிபாரதி என்னை பக்கத்து வீட்டுப் பொண்ணு மாதிரி காட்டி இருக்கார். .அதென்னங்க எல்லோரும் சொல்லி வெச்ச மாதிரி பக்கத்து வீட்டுப் பொண்ணு மாதிரின்னு சொல்றீங்க. இதன் ரகசியம்தான் என்ன?நீங்க வேணும்ன்னா எதிர் வீட்டுப் பொண்ணு, நம்ம வீட்டுப் பொண்ணுன்னுகூட வச்சுக்கோங்க. நோ ப்ராப்ளம். பக்கத்து வீட்டுப் பொண்ணுன்னா நாம அன்றாடம் வாழ்க்கையில் பொது இடங்களில், நமது குடும்ப உறவுகளில் பார்க்கக்கூடிய, பார்க்க முடிக்கிற பொண்ணுன்னு அர்த்தம். நீங்க என்னை இந்தப் படத்தில் பார்க்கும்போது அன்றாட வாழ்க்கையில் தினசரி பார்க்கும் பெண்ணின் சாயல் இருக்கும். (நம்ம மைன்ட் வாய்ஸ் – மக்கு மக்கு, இதுகூடவா தெரியல?) .பேட்டரி சூட்டிங் ஸ்பாட்டில் மறக்க முடியாத விஷயங்கள்?இந்தப் படம் பண்ணினதே ஒரு மறக்க முடியாத அனுபவமாக இருந்தது. படப்பிடிப்பின் சில பகுதிகள் குலு மணாலியில் படமாக்கப்பட்டுள்ளன. அந்தக் குளிரும், அந்த அனுபவமும் எத்தனை ஊர் போனாலும் மறக்க முடியாது. (ஜில்…) .சூட்டிங் ஸ்பாட் ஒரு பிக்னிக் ஸ்பாட்டா மாறிடுச்சா?குடும்பத்தோடு, நண்பர்களோடு டூர் போனால் ரசிக்கலாம். ஆனால், சினிமா ஷூட்டிங்கிற்குச் சென்றால் என்னதான் லொகேஷன் அழகாக இருந்தாலும், நாம வேலை செய்ய வந்திருக்கோம். டைரக்டர் நினைச்சபடி சீன் வரணுமே என்கிற பயம்தான் அதிகமாக இருக்கும். ஸோ, சூட்டிங் ஏரியாவில் என்ஜாய்மென்ட் எண்ணம் குறைவாகத்தான் இருக்கும். (ஐயோ பாவம்!) .சினிமாவுக்கு வந்தது தற்செயலா? திட்டமிடலா?இரண்டும்தான். சிறு வயதில் இருந்தே கேமிராவுக்கு முன் நிற்க ரொம்பப் பிடிக்கும். மூன்றாவது படிக்கும்போதே மக்கள் தொலைக்காட்சியில் நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்கி இருக்கிறேன். பதினோறாம் வகுப்பு படிக்கும்போது ராட்ஷசன் படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. அதன் பிறகு கல்லூரியில் சேரகூட நேரம் இல்லாமல் நடித்துக்கொண்டிருக்கிறேன். (பிஸியோ பிஸி!) .சினிமா தாண்டி உங்களுக்குப் பிடித்த விஷயம் எது?படம் பார்ப்பது, பாட்டு பாடுவது, ஓவியம் தீட்டுவது ரொம்பப் பிடிக்கும். சமீபத்தில் பார்த்து ரொம்பப் பிடித்த படம் விக்ரம், பிடித்தப் பாடல் பத்தலை, பத்தலை. எனக்குப் பிடித்த சிவ பெருமானின் ஓவியத்தை வரைவேன். வரைந்து எனக்குப் பிடித்தமானவர்களுக்குப் பரிசாக அளிப்பேன். (பலே!).நடிகைகளில் உங்கள் ரோல் மாடல் யார்?ரேவதி மேடம், நதியா மேடம். (பர்ஃபெக்ட் சாய்ஸ்; குட் லக்!) .ஜோடி சேர விரும்பும் நடிகர்…?சூப்பர் ஸ்டார் ரஜினி சார்தான். ரஜினி சார் உடன் ஒரு காட்சியிலாவது நடிக்க வேண்டும் என்பது என் கனவு. (கனவு நனவாக வாழ்த்துகள்!)
– ராகவ் குமார்.ராட்ஷசன் படத்தில் அறிமுகம் ஆகி தனுஷின் 'அசுரன்' படத்தில் அனைவரையும் திரும்பிப் பார்க்க வைத்த அம்மு அபிராமி 'பேட்டரி' படத்தில் ஹீரோயினாக நடித்து வருகிறார். அம்முவை சந்தித்துப் பேசினோம்:.எப்படி இருக்கீங்க அம்மு? பார்த்து ரொம்ப நாளாச்சு…!.நான் நல்லா இருக்கேன். பார்த்து ரொம்ப நாளாச்சுன்னு கேட்கறது மட்டும் சரியில்லை. இந்தக் கோவிட் காலத்துல சூட்டிங் நடக்கல. அதனால வெளியில் அதிகமாக வரல. அவ்வளவுதான் (கோபம் எதற்கு தாயீ?) .ஒகே மேடம் கூல். இப்ப நீங்க நடிக்கும் பேட்டரி… கதையும் உங்க கேரக்டரும் என்ன?கதையும் கேரக்டரையும் இப்ப சொல்லமுடியாது. ஆனால், டைரக்டர் மணிபாரதி என்னை பக்கத்து வீட்டுப் பொண்ணு மாதிரி காட்டி இருக்கார். .அதென்னங்க எல்லோரும் சொல்லி வெச்ச மாதிரி பக்கத்து வீட்டுப் பொண்ணு மாதிரின்னு சொல்றீங்க. இதன் ரகசியம்தான் என்ன?நீங்க வேணும்ன்னா எதிர் வீட்டுப் பொண்ணு, நம்ம வீட்டுப் பொண்ணுன்னுகூட வச்சுக்கோங்க. நோ ப்ராப்ளம். பக்கத்து வீட்டுப் பொண்ணுன்னா நாம அன்றாடம் வாழ்க்கையில் பொது இடங்களில், நமது குடும்ப உறவுகளில் பார்க்கக்கூடிய, பார்க்க முடிக்கிற பொண்ணுன்னு அர்த்தம். நீங்க என்னை இந்தப் படத்தில் பார்க்கும்போது அன்றாட வாழ்க்கையில் தினசரி பார்க்கும் பெண்ணின் சாயல் இருக்கும். (நம்ம மைன்ட் வாய்ஸ் – மக்கு மக்கு, இதுகூடவா தெரியல?) .பேட்டரி சூட்டிங் ஸ்பாட்டில் மறக்க முடியாத விஷயங்கள்?இந்தப் படம் பண்ணினதே ஒரு மறக்க முடியாத அனுபவமாக இருந்தது. படப்பிடிப்பின் சில பகுதிகள் குலு மணாலியில் படமாக்கப்பட்டுள்ளன. அந்தக் குளிரும், அந்த அனுபவமும் எத்தனை ஊர் போனாலும் மறக்க முடியாது. (ஜில்…) .சூட்டிங் ஸ்பாட் ஒரு பிக்னிக் ஸ்பாட்டா மாறிடுச்சா?குடும்பத்தோடு, நண்பர்களோடு டூர் போனால் ரசிக்கலாம். ஆனால், சினிமா ஷூட்டிங்கிற்குச் சென்றால் என்னதான் லொகேஷன் அழகாக இருந்தாலும், நாம வேலை செய்ய வந்திருக்கோம். டைரக்டர் நினைச்சபடி சீன் வரணுமே என்கிற பயம்தான் அதிகமாக இருக்கும். ஸோ, சூட்டிங் ஏரியாவில் என்ஜாய்மென்ட் எண்ணம் குறைவாகத்தான் இருக்கும். (ஐயோ பாவம்!) .சினிமாவுக்கு வந்தது தற்செயலா? திட்டமிடலா?இரண்டும்தான். சிறு வயதில் இருந்தே கேமிராவுக்கு முன் நிற்க ரொம்பப் பிடிக்கும். மூன்றாவது படிக்கும்போதே மக்கள் தொலைக்காட்சியில் நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்கி இருக்கிறேன். பதினோறாம் வகுப்பு படிக்கும்போது ராட்ஷசன் படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. அதன் பிறகு கல்லூரியில் சேரகூட நேரம் இல்லாமல் நடித்துக்கொண்டிருக்கிறேன். (பிஸியோ பிஸி!) .சினிமா தாண்டி உங்களுக்குப் பிடித்த விஷயம் எது?படம் பார்ப்பது, பாட்டு பாடுவது, ஓவியம் தீட்டுவது ரொம்பப் பிடிக்கும். சமீபத்தில் பார்த்து ரொம்பப் பிடித்த படம் விக்ரம், பிடித்தப் பாடல் பத்தலை, பத்தலை. எனக்குப் பிடித்த சிவ பெருமானின் ஓவியத்தை வரைவேன். வரைந்து எனக்குப் பிடித்தமானவர்களுக்குப் பரிசாக அளிப்பேன். (பலே!).நடிகைகளில் உங்கள் ரோல் மாடல் யார்?ரேவதி மேடம், நதியா மேடம். (பர்ஃபெக்ட் சாய்ஸ்; குட் லக்!) .ஜோடி சேர விரும்பும் நடிகர்…?சூப்பர் ஸ்டார் ரஜினி சார்தான். ரஜினி சார் உடன் ஒரு காட்சியிலாவது நடிக்க வேண்டும் என்பது என் கனவு. (கனவு நனவாக வாழ்த்துகள்!)