-ஸ்ரீரங்கம் திருநாவுக்கரசு.முன்பெல்லாம் நகர்ப்புறங்களுக்கு வெளியே கிராமப்பகுதிகளில் எங்கேனும் அதுவும் சாலையோரமாக அமைந்திருக்கும் சுமைதாங்கி கல் மேடை. இப்போதிருக்கும் இன்றைய இளைய தலைமுறையினர் "சுமைதாங்கி கல்லா? சுமைதாங்கி கல் மேடையா? அப்பிடினா என்ன?" என்று கேட்பார்கள். கருவுற்ற பின்னர் வயிற்றில் குழந்தையுடன் இறந்துபோன ஒரு பெண்ணின் துயரம், சுமைதாங்கி கல் மேடை மீது துன்பச் சுமையாக அந்தக் குடும்பத்தினரால் இறக்கி வைக்கப்பட்டிருக்கும். ஆம். முன்பெல்லாம் கிராமங்களில் இந்த வழக்கம் இருந்து வந்துள்ளது. ஒரு வீட்டில் பெண் கருவுற்று குழந்தை பிறப்பதற்கு முன்பாக வயிற்றில் குழந்தையுடன் அந்தப் பெண் இறந்துவிட்டால், அதன் நினைவாக அந்த ஊருக்கு வெளியே ரோட்டோரமாக சுமைதாங்கி கல் மேடை அமைக்கும் வழக்கம் இருந்து வந்துள்ளது..அந்தச் சுமைதாங்கி கல் மேடை அந்தப் பெண்ணின் ஞாபகார்த்தக் கல் மேடையாக மட்டும் இருந்து விடுவதில்லை. அப்போதெல்லாம் இப்போது இருப்பதுபோல பஸ், லோடு ஆட்டோ, டூ வீலர் போன்ற வாகனங்கள் அதிக எண்ணிக்கையில் இல்லவே இல்லை. கிராமத்து மக்கள் தங்கள் விளைபொருட்களைத் தலைச் சுமையாகத்தான் அருகிருக்கும் நகரப் பகுதிகளுக்குக் கொண்டு சென்று விற்று வந்தாக வேண்டும். அவ்வாறு சுமைகளைத் தலையில் தூக்கிச் செல்பவர்கள், ரோட்டோரமாகத் தென்படுகின்ற சுமைதாங்கி கல் மேடையில் தலைச்சுமையினை இறக்கிவைத்து, கொஞ்ச நேரம் ஓய்வெடுத்துப் பின்னர் தங்களது சுமைகளை மீண்டும் தூக்கிச் செல்வார்கள்..காலப்போக்கில் இன்றைய நடைமுறையில் இதுபோல சுமைதாங்கி கல் மேடை அமைக்கும் பழக்கம் இல்லாமலே போய்விட்டது எனக் கூறலாம். ஆனாலும் முன்பொரு காலத்தில் கிராமங்களில் நட்டுவைத்த சுமைதாங்கி கல் மேடைகள் தற்போதும் அபூர்வமாக எங்காவது காணக் கிடைக்கலாம். தரையில் இருந்து நாலடி உயரத்துக்கு இரண்டு கல் தூண்கள். ஒன்னரை அடி அகலம் ஆறடி நீளம் கல் பலகை ஒன்று அந்த இரு தூண்கள் மீதாகக் கிடத்தி வைக்கப்பட்டிருக்கும். ஒரு சுமைதாங்கி கல் மேடையின் அமைப்பு இதுதான்..திருச்சி வழக்கறிஞர் சித்ரா விஜயகுமார் தனது மகளுடன், "நமது பழமையை நோக்கி" எனும் பயணத்தினை அவ்வப்போது மேற்கொள்வது வழக்கம். அவ்வாறு பயணித்த ஒரு நாளில்தான் சுமைதாங்கி கல் மேடை அவர்களது பார்வையில் பட்டுள்ளது. திருச்சி அருகே சோமரசம்பேட்டை கீழ வயலூர் சாலையோரமாக இப்போதும் சுமைதாங்கி கல் மேடை ஒன்று காட்சியளித்துக்கொண்டிருக்கிறது.."அதன் அருகே சென்று பார்த்தோம். அதில் ஏதோ கல்வெட்டு எழுத்துகள் பொறிக்கப்பட்டு இருந்தன. வாசித்துப் பார்த்தோம். அதன் வாசகம் இதுதான். 'சித்திரபானு வருஷம் மாசி மாதம் 24ஆம் தேதி கீழவயலூர் தங்கவேல் நாடார் பாரியாள் சாமி அம்மாள் வழி நடை உபயம்.' என்று கல்வெட்டு எழுத்துகளாகப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதனை நாங்கள் இப்படித்தான் புரிந்துகொண்டோம். அதாவது, கீழவயலூரில் வசித்து வந்துள்ளவர் தங்கவேல் நாடார். அவரது மனைவி சாமி அம்மாள் கர்ப்பமாக இருந்துள்ளார். பிரசவத்துக்கு முன்பாக வயிற்றில் குழந்தையுடன் சாமி அம்மாள் இறந்து விடுகிறார். அவரது நினைவாக அவரது பெயரையும் குறிப்பிட்டு எந்தத் தமிழ் வருடம், மாதம், தேதி எல்லாம் குறிப்பிட்டு கல்வெட்டு எழுத்துகளாகப் பதிவு செய்து சுமைதாங்கி கல் மேடை அமைத்துள்ளனர். அபூர்வமாக இருக்கவும் நாங்கள் அதனைப் போட்டோ எடுத்துக் கொண்டோம்" என்கிறார் திருச்சி வழக்கறிஞர் சித்ரா விஜயகுமார்..கல்வெட்டில் குறிப்பிட்டுள்ள சித்திரபானு வருடம் என்பது, 2௦௦2 – 2௦௦3ஆம் ஆண்டு ஆகவும், 1942 – 1943ஆம் ஆண்டு ஆகவும் இருந்துள்ளது. கிராமங்களில் கூட கடந்த முப்பது, நாற்பது ஆண்டுகளில் இந்தப் பழக்கம் இல்லை. மேலும் கல்வெட்டில் 'பாரியாள்' என்கிற சொல்லானது மனைவியைக் குறிப்பதாகும். பாரியாள் என்கிற வார்த்தையானது இப்போது நடைமுறையில் நம்மிடையே வழக்கத்திலும் இல்லை. ஆக அந்தப் பெண் சாமி அம்மாள் கர்ப்பிணிப் பெண்ணாக இறந்துபோனது, தமிழ் சித்திரபானு ஆண்டு 1942 – 1943 என்பதாக உறுதியாகிறது. அந்தச் சுமைதாங்கி கல் மேடை அமைக்கப்பட்டு எண்பது ஆண்டுகள் ஆகின்றன. அந்தச் சுமைதாங்கி கல் மேடை இப்போதும் அங்கே சாலையோரமாக இருக்கிறது..அரசு மகப்பேறு பெண் மருத்துவர் ஒருவரிடம் இது குறித்துப் பேசினோம். "பழங்காலத்தில் சுமைதாங்கி கல் மேடை எனப்படுவது, சில கிராமங்களின் நுழைவாயிலில் ரோட்டோரமாக அமைந்து நிமிர்ந்து நிற்கும் நினைவுச் சின்னம் ஆகும். அப்போதெல்லாம் தமிழ்நாட்டில் பரவலாக இந்தச் சுமைதாங்கி கல் மேடையினை அங்கங்கு காணலாம். காரணம், அறுபது, எழுபது ஆண்டுகளுக்கு முன்பெல்லாம் இப்போது இருக்கின்ற மகப்பேறு மருத்துவ வசதிகள் அப்போது இல்லவே இல்லை. ஒரு பெண் கர்ப்பமானால் அந்தக் கிராமத்திலேயே இருக்கின்ற மருத்துவச்சிகளிடம் மருத்துவம் பார்த்துக்கொள்வார்கள். பின்னர் வீட்டிலேயே பிரசவமும் பார்ப்பார்கள். நவீன மருத்துவ வசதிகள் ஏதுமற்ற அந்தக் காலத்தில் குழந்தை பிறக்கும் முன்பாகவும் அல்லது குழந்தை பிறக்கும்போதும் துரதிர்ஷ்ட வசமாக இறந்துபோகிற கர்ப்பிணிப் பெண்களின் எண்ணிக்கை சற்று கூடுதலாகவே இருந்து வந்துள்ளது. இறந்துபோன கர்ப்பிணிப் பெண்ணின் நினைவாக, அந்தக் குடும்பத்தினர் ரோட்டோரமாக சுமைதாங்கி கல் மேடை அமைக்கும் வழக்கம் கொண்டிருந்துள்ளனர். சுமைதாங்கி கல் மேடைகள் சிலவற்றில் இன்ன ஊர், இன்னாருக்கென பெயரும் பொறிக்கப்பட்டிருக்கும். சிலவற்றில் எதுவுமே பொறிக்கப்படாமலும் இருக்கும்..சமீபத்திய நாற்பது ஐம்பது ஆண்டுகளாக பேறு கால கர்ப்பிணிப் பெண்களின் இறப்பு சதவிகிதம் மிக மிக அதிகமாகவேக் குறைந்து வந்துள்ளது. காரணம், பேறு கால கர்ப்பிணிப் பெண்களுக்கான மருத்துவ விழிப்புணர்வு. அதி நவீன பிரசவ கால மருத்துவ வசதிகள். கிராமங்களில் கூட வீட்டிலேயே பிரசவம் பார்த்துக்கொள்கின்ற பழக்கம் இல்லை என்றே உறுதியாகக் கூறலாம். இருப்பினும் அறுபது, எழுபது ஆண்டுகளுக்கு முன்பாக ஏதோவொரு ஊரில் ரோட்டோரமாக நிறுவப்பட்டிருந்த சுமைதாங்கி கல் மேடை, இப்போதும் நம் பார்வைக்குப்படுவது அபூர்வமான ஒன்றாகும்" என்கிறார் அரசு மகப்பேறு பெண் மருத்துவர்.
-ஸ்ரீரங்கம் திருநாவுக்கரசு.முன்பெல்லாம் நகர்ப்புறங்களுக்கு வெளியே கிராமப்பகுதிகளில் எங்கேனும் அதுவும் சாலையோரமாக அமைந்திருக்கும் சுமைதாங்கி கல் மேடை. இப்போதிருக்கும் இன்றைய இளைய தலைமுறையினர் "சுமைதாங்கி கல்லா? சுமைதாங்கி கல் மேடையா? அப்பிடினா என்ன?" என்று கேட்பார்கள். கருவுற்ற பின்னர் வயிற்றில் குழந்தையுடன் இறந்துபோன ஒரு பெண்ணின் துயரம், சுமைதாங்கி கல் மேடை மீது துன்பச் சுமையாக அந்தக் குடும்பத்தினரால் இறக்கி வைக்கப்பட்டிருக்கும். ஆம். முன்பெல்லாம் கிராமங்களில் இந்த வழக்கம் இருந்து வந்துள்ளது. ஒரு வீட்டில் பெண் கருவுற்று குழந்தை பிறப்பதற்கு முன்பாக வயிற்றில் குழந்தையுடன் அந்தப் பெண் இறந்துவிட்டால், அதன் நினைவாக அந்த ஊருக்கு வெளியே ரோட்டோரமாக சுமைதாங்கி கல் மேடை அமைக்கும் வழக்கம் இருந்து வந்துள்ளது..அந்தச் சுமைதாங்கி கல் மேடை அந்தப் பெண்ணின் ஞாபகார்த்தக் கல் மேடையாக மட்டும் இருந்து விடுவதில்லை. அப்போதெல்லாம் இப்போது இருப்பதுபோல பஸ், லோடு ஆட்டோ, டூ வீலர் போன்ற வாகனங்கள் அதிக எண்ணிக்கையில் இல்லவே இல்லை. கிராமத்து மக்கள் தங்கள் விளைபொருட்களைத் தலைச் சுமையாகத்தான் அருகிருக்கும் நகரப் பகுதிகளுக்குக் கொண்டு சென்று விற்று வந்தாக வேண்டும். அவ்வாறு சுமைகளைத் தலையில் தூக்கிச் செல்பவர்கள், ரோட்டோரமாகத் தென்படுகின்ற சுமைதாங்கி கல் மேடையில் தலைச்சுமையினை இறக்கிவைத்து, கொஞ்ச நேரம் ஓய்வெடுத்துப் பின்னர் தங்களது சுமைகளை மீண்டும் தூக்கிச் செல்வார்கள்..காலப்போக்கில் இன்றைய நடைமுறையில் இதுபோல சுமைதாங்கி கல் மேடை அமைக்கும் பழக்கம் இல்லாமலே போய்விட்டது எனக் கூறலாம். ஆனாலும் முன்பொரு காலத்தில் கிராமங்களில் நட்டுவைத்த சுமைதாங்கி கல் மேடைகள் தற்போதும் அபூர்வமாக எங்காவது காணக் கிடைக்கலாம். தரையில் இருந்து நாலடி உயரத்துக்கு இரண்டு கல் தூண்கள். ஒன்னரை அடி அகலம் ஆறடி நீளம் கல் பலகை ஒன்று அந்த இரு தூண்கள் மீதாகக் கிடத்தி வைக்கப்பட்டிருக்கும். ஒரு சுமைதாங்கி கல் மேடையின் அமைப்பு இதுதான்..திருச்சி வழக்கறிஞர் சித்ரா விஜயகுமார் தனது மகளுடன், "நமது பழமையை நோக்கி" எனும் பயணத்தினை அவ்வப்போது மேற்கொள்வது வழக்கம். அவ்வாறு பயணித்த ஒரு நாளில்தான் சுமைதாங்கி கல் மேடை அவர்களது பார்வையில் பட்டுள்ளது. திருச்சி அருகே சோமரசம்பேட்டை கீழ வயலூர் சாலையோரமாக இப்போதும் சுமைதாங்கி கல் மேடை ஒன்று காட்சியளித்துக்கொண்டிருக்கிறது.."அதன் அருகே சென்று பார்த்தோம். அதில் ஏதோ கல்வெட்டு எழுத்துகள் பொறிக்கப்பட்டு இருந்தன. வாசித்துப் பார்த்தோம். அதன் வாசகம் இதுதான். 'சித்திரபானு வருஷம் மாசி மாதம் 24ஆம் தேதி கீழவயலூர் தங்கவேல் நாடார் பாரியாள் சாமி அம்மாள் வழி நடை உபயம்.' என்று கல்வெட்டு எழுத்துகளாகப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதனை நாங்கள் இப்படித்தான் புரிந்துகொண்டோம். அதாவது, கீழவயலூரில் வசித்து வந்துள்ளவர் தங்கவேல் நாடார். அவரது மனைவி சாமி அம்மாள் கர்ப்பமாக இருந்துள்ளார். பிரசவத்துக்கு முன்பாக வயிற்றில் குழந்தையுடன் சாமி அம்மாள் இறந்து விடுகிறார். அவரது நினைவாக அவரது பெயரையும் குறிப்பிட்டு எந்தத் தமிழ் வருடம், மாதம், தேதி எல்லாம் குறிப்பிட்டு கல்வெட்டு எழுத்துகளாகப் பதிவு செய்து சுமைதாங்கி கல் மேடை அமைத்துள்ளனர். அபூர்வமாக இருக்கவும் நாங்கள் அதனைப் போட்டோ எடுத்துக் கொண்டோம்" என்கிறார் திருச்சி வழக்கறிஞர் சித்ரா விஜயகுமார்..கல்வெட்டில் குறிப்பிட்டுள்ள சித்திரபானு வருடம் என்பது, 2௦௦2 – 2௦௦3ஆம் ஆண்டு ஆகவும், 1942 – 1943ஆம் ஆண்டு ஆகவும் இருந்துள்ளது. கிராமங்களில் கூட கடந்த முப்பது, நாற்பது ஆண்டுகளில் இந்தப் பழக்கம் இல்லை. மேலும் கல்வெட்டில் 'பாரியாள்' என்கிற சொல்லானது மனைவியைக் குறிப்பதாகும். பாரியாள் என்கிற வார்த்தையானது இப்போது நடைமுறையில் நம்மிடையே வழக்கத்திலும் இல்லை. ஆக அந்தப் பெண் சாமி அம்மாள் கர்ப்பிணிப் பெண்ணாக இறந்துபோனது, தமிழ் சித்திரபானு ஆண்டு 1942 – 1943 என்பதாக உறுதியாகிறது. அந்தச் சுமைதாங்கி கல் மேடை அமைக்கப்பட்டு எண்பது ஆண்டுகள் ஆகின்றன. அந்தச் சுமைதாங்கி கல் மேடை இப்போதும் அங்கே சாலையோரமாக இருக்கிறது..அரசு மகப்பேறு பெண் மருத்துவர் ஒருவரிடம் இது குறித்துப் பேசினோம். "பழங்காலத்தில் சுமைதாங்கி கல் மேடை எனப்படுவது, சில கிராமங்களின் நுழைவாயிலில் ரோட்டோரமாக அமைந்து நிமிர்ந்து நிற்கும் நினைவுச் சின்னம் ஆகும். அப்போதெல்லாம் தமிழ்நாட்டில் பரவலாக இந்தச் சுமைதாங்கி கல் மேடையினை அங்கங்கு காணலாம். காரணம், அறுபது, எழுபது ஆண்டுகளுக்கு முன்பெல்லாம் இப்போது இருக்கின்ற மகப்பேறு மருத்துவ வசதிகள் அப்போது இல்லவே இல்லை. ஒரு பெண் கர்ப்பமானால் அந்தக் கிராமத்திலேயே இருக்கின்ற மருத்துவச்சிகளிடம் மருத்துவம் பார்த்துக்கொள்வார்கள். பின்னர் வீட்டிலேயே பிரசவமும் பார்ப்பார்கள். நவீன மருத்துவ வசதிகள் ஏதுமற்ற அந்தக் காலத்தில் குழந்தை பிறக்கும் முன்பாகவும் அல்லது குழந்தை பிறக்கும்போதும் துரதிர்ஷ்ட வசமாக இறந்துபோகிற கர்ப்பிணிப் பெண்களின் எண்ணிக்கை சற்று கூடுதலாகவே இருந்து வந்துள்ளது. இறந்துபோன கர்ப்பிணிப் பெண்ணின் நினைவாக, அந்தக் குடும்பத்தினர் ரோட்டோரமாக சுமைதாங்கி கல் மேடை அமைக்கும் வழக்கம் கொண்டிருந்துள்ளனர். சுமைதாங்கி கல் மேடைகள் சிலவற்றில் இன்ன ஊர், இன்னாருக்கென பெயரும் பொறிக்கப்பட்டிருக்கும். சிலவற்றில் எதுவுமே பொறிக்கப்படாமலும் இருக்கும்..சமீபத்திய நாற்பது ஐம்பது ஆண்டுகளாக பேறு கால கர்ப்பிணிப் பெண்களின் இறப்பு சதவிகிதம் மிக மிக அதிகமாகவேக் குறைந்து வந்துள்ளது. காரணம், பேறு கால கர்ப்பிணிப் பெண்களுக்கான மருத்துவ விழிப்புணர்வு. அதி நவீன பிரசவ கால மருத்துவ வசதிகள். கிராமங்களில் கூட வீட்டிலேயே பிரசவம் பார்த்துக்கொள்கின்ற பழக்கம் இல்லை என்றே உறுதியாகக் கூறலாம். இருப்பினும் அறுபது, எழுபது ஆண்டுகளுக்கு முன்பாக ஏதோவொரு ஊரில் ரோட்டோரமாக நிறுவப்பட்டிருந்த சுமைதாங்கி கல் மேடை, இப்போதும் நம் பார்வைக்குப்படுவது அபூர்வமான ஒன்றாகும்" என்கிறார் அரசு மகப்பேறு பெண் மருத்துவர்.