கதை: தனுஜா ஜெயராமன்.ஓவியம்: தமிழ்.அந்த அரசாங்க ஆஸ்பெத்திரியின் வராண்டாவில் முழங்கால்களைக் கட்டியபடி அமர்ந்திருந்தார் முனியப்பன்."பெரியவரே! உங்கப் பொண்ணு எங்க? டாக்டர் வந்துட்டாங்க. கூப்புடுறாங்க…" என அவசரமாகக் கேட்டாள் நர்ஸ்."பாத்ரூம் போயிருக்கா… த்தோ வந்துருவா? கூப்டவா" எனத் தள்ளாட்டமாக எழுந்திரிக்க முயன்றவரைக் கையமர்த்தி…"இல்லை வேணாம். உங்க மக வந்ததும் உள்ளே வரச்சொல்றாங்க பெரிய டாக்டர்?" எனச் சொல்லிவிட்டு போனாள் நர்ஸ்"சரி" என்று தலையசைத்தபடி… திரும்பியவர் தூரத்தில் வந்துக்கொண்டிருந்த மகள் ஜெயாவைப் பார்த்தவரின் கண்களில் நீர் கோர்த்தது.வயிற்றைச் சாய்த்தபடி மெதுவாக சுவற்றைப் பிடித்து நடந்து வந்தவளைப் பார்க்கப் பரிதாபமாக இருந்தது. நிறைமாத கர்ப்பிணி வயது பதினாறுதான் இருக்கும். நடந்தாலே மூச்சு வாங்கியது. கையை ஊன்றியபடி அருகிலிருந்த சேரில் அமர்ந்தாள்."தாயீ… உன்னை டாக்டர் உள்ளே கூப்டாங்களாம்…" என்றவுடன்சிரமப்பட்டு எழுந்து மெதுவாக உள்ளே சென்றவளைக் கவனித்த நர்ஸ், "டாக்டர்! அந்தப் பொண்ணு வருது.""வாம்மா! ஏதாவது வலி இருக்குதா?" என்றார் டாக்டர்."இல்லீங்க…" எனத் தலையசைத்தாள்."வயத்துல கொழந்தையோட அசைவு தெரியுதா?""தெரியுதுங்க… ஆனா வலி ஏதும் வரலைங்க டாக்டர்" என்றாள் ஜெயா."டேபிள் மேலே ஏறிப் படும்மா…""காலையிலேயே எனிமா கொடுத்தாச்சு டாக்டர்" என இடைமறித்தாள் நர்ஸ்."இங்க பாரும்மா… ஏற்கனவே ட்யூ டேட் தள்ளிப் போயாச்சு. நீ வேற சின்னப் பொண்ணு. இன்னைக்குச் சாயந்தரம் வரை பார்க்கலாம். வலி ஏதும் வரலைன்னா கொழந்தையை ஆப்ரேஷன் பண்ணித்தான் எடுக்கணும். வேற வழியில்லை… புரியுதா?" என வயிற்றில் கைவைத்து அழுத்தியபடி சொல்லிக்கொண்டிருந்தார் டாக்டர். நர்ஸ் லலிதாவிடம் "அவங்க அப்பாவைக் கூப்பிடுங்க" என்றார்..டாக்டரம்மா! உள்ளே நுழைந்த முனியப்பனிடம்…"பெரியவரே! உங்கப் பொண்ணுக்குக் கர்ப்பப்பை சுத்தமாத் திறக்கலை. அதனால் வலியும் வரலை. அனேகமாக ஆப்ரேஷன் பண்ணித்தான் எடுக்கணும். எதுக்கும் சாயங்காலம் வரை முயற்சி பண்ணிப் பாப்போம்…சரியா?""ஐயோ! டாக்டரம்மா! வயத்துல கத்தியெல்லாம் வைக்க வேணாங்கம்மா. கொழந்த புள்ளைங்க அது. சுகப்ரசவத்துக்கு ஏதாச்சும் வழி பண்ணுங்கம்மா… உங்களுக்குப் புண்ணியமா போகும்" எனக் கைகூப்பினார்.."அதேதான் நாங்களும் சொல்றோம். கொழந்தப் புள்ளைதான் அது. பதினெட்டு வயசுக்கு மேலேதான் கல்யாணம் பண்ணனும். நீங்க குழந்தையைப் புடிச்சி கல்யாணம் கட்டி வைச்சிருக்கீங்க. கர்ப்பபையே இத்துணுண்டுதான் இருக்கு. அது திறக்கவேயில்லை. ஒரு கொழந்தையைத் தாங்குற வயசில்ல அந்தப் பொண்ணுக்கு. உங்களுக்குச் சொன்னா புரியுதுதான்னு தெரியலை. வேறவழியில்லை… சாயங்காலம் வரை பாப்போம். அதுக்கப்புறம் ஆப்ரேஷன்தான்.""தாயில்லா புள்ளைங்க அது. எனக்கு ஏதாச்சும்னா பாத்துக்க ஆள்இல்லைன்னுதான்ங்க சின்ன வயசுலையே கட்டிக் குடுத்துட்டேன்ங்க. தப்புத்தானுங்க. எம்புள்ளையை நீங்கதான் காக்கோணும்…" என வாயில் துண்டைப் பொத்தி அழுதார்."சொன்னாப் புரிஞ்சிக்குங்க. இப்பவே வயத்துல குழந்தைக்கு மூச்சி விடுறதுல பிரச்னை இருக்கு. இப்படியே போனா தாய், குழந்தைன்னு ரெண்டு பேருக்குமே நல்லதில்லை… புரியதுங்களா? சரி, இவளோட புருஷன் எங்க?""அவன் வரலைங்க. குடிகாரப் பயலுங்க. எங்கக் குடிச்சிட்டு விழுந்து கிடக்குறானோ? தெர்லைங்க.""இது வேறவா? சரி அவசரம்னா பேப்பரில் கையெழுத்து போடணும். நீங்க எங்கேயும் போய்டாதீங்க. சரியா! என்றபடி நர்ஸைக் கூப்பிட்டு… நான் மத்தப் பேஷண்டுகளைப் பாத்துட்டு வரேன். இவளுக்கு வலி ஏதாவது வந்தா கூப்பிடு" எனக் கிளம்பினார் டாக்டர்.டாக்டர் போனதும்… "நீ வெளியே சேர்ல உட்கார்ந்து இரும்மா" எதுவும் சாப்பிட வேணாம். ஏதாவது மாற்றம் தெரிஞ்சா உள்ளே வந்து சொல்லு… இல்லன்னா நானே கூப்பிடுறேன்" என்றார் நரஸ்.சரி என தலையாட்டியபடி மெதுவாக எழுந்து புடைவையைச் சரிசெய்துகொண்டு வெளியே வந்தாள்..சேரில் கைத்தாங்கலாக வந்து அமர்ந்தவள், கண்கலங்கியவாறு கீழே உட்கார்ந்த தந்தையைப் பார்த்தாள். அவளுக்கும் மனகலக்கமாக இருந்தது. எதுவும் பேசாமல் அமைதியாக இருந்தாள். பசி களைப்பு வேறு மயக்கமாக இருந்தது. நேற்று இரவு சாப்பிட்டது. காலையிலிருந்து எதுவும் சாப்பிடக் கூடாது என நர்ஸ் நேற்றே சொல்லிவிட்டார்கள். எனிமா கொடுத்து வயிற்றையும் சுத்தமாக்கியாகிவிட்டது. மனசை போலவே வயிறும் கலக்கமாக இருந்தது. பலவீனமாக உணர்ந்தாள்.."ப்பா… பயமாக இருக்கு என்றாள் வயிற்றை தடவியபடி. அவ்வப்போது அசைவிருக்கிறதா? என வேறு கவனிக்கச் சொல்லியிருந்தார்கள். நானும் புள்ளையும் நல்லபடியா பொழச்சிக் கிடந்தா அந்த மருவத்தூர் ஆத்தாளுக்குப் பொங்க வைச்சி மாவிளக்கு போடுறதா வேண்டிருக்கேன்" என்றவளை,கலக்கமாகப் பார்த்து, "உனக்கும், புள்ளைக்கும் ஒண்ணியும் ஆகாது தாயீ. நல்லபடியா பெத்து வருவ கண்ணு. நம்ம கொலசாமியும் உன் ஆத்தாளும் அந்த மகமாயியும் நமக்கு காவல் இருப்பா தாயீ" எனக் கண்கலங்கினார்.."ப்பா! அந்தாளு எங்க? போன் பண்ணீயா? வரேன்னுச்சா. இந்த நேரத்திலகூட இருக்கக்கூடாதா? என்ன மனுஷனோ?" என புலம்பியவளிடம்.."போன் பண்ணேன் தாயீ… வரேன்னான்" எனத் தெரிந்தே பொய் சொன்னார்."எங்கக் குடிச்சிப்புட்டு விழுந்துக் கெடக்குதோ? எல்லாம் எந்தலையெழுத்து எங்க ஆத்தா இருந்தா இப்படி ஒரு நிலை எனக்கு வந்திருக்குமா?" எனக் கண்கலங்கினாள்."பெட்டு ஏதும் தரமாட்டாங்களா?" எனக் கவலையுடன் கேட்டார் முனியப்பன்."புள்ள பெத்தவங்களுக்கே பெட் இல்லை. இதுல நமக்கெங்கக் கிடைக்கப் போவது?" எனச் சலிப்பாக சொல்லியவள்… கைகளை ஊன்றியபடி சேரில் அமர்ந்தாள். இரு நாட்களாக வராண்டாவிலே வாசம். கிராமத்திலிருந்து கண்ணாத்தாள் கிழவி யாரிடமாவது சோத்து மூட்டையை கொடுத்தனுப்பும். அதை அவ்வப்போது பிரித்து தின்றபடி அப்பனும், மகளும் இரு நாட்களைக் கடத்தி வந்தனர். இன்னைக்கு புள்ளை பொறந்திட்டா நாளைக்கு பெட் கிடைச்சிடும் என நினைத்தவள்.."ப்பா… நாளைக்கு என்கூட இங்கன தங்க கந்தசாமி பொண்டாட்டி வரேன்னுச்சா. அது பொம்பளைங்க வார்டு. நீயெல்லாம் தங்க முடியாது. வீட்டுக்குப் போய்டு" என்றாள் கரிசனமாக.."வரேன்னுச்சு அந்த புண்யவதி. ஒரு இரண்டு நாள் இருக்கறேன்னுச்சு. புள்ளையையும் உன்னையும் பாத்துக்க. நான் இங்கன வராண்டாவுலயே கெடக்கேன். எனக்கென்ன… உனக்கெதுவும் அவசரத் தேவைன்னா கடை கண்ணிக்கிப் போவ ஒதவுமில்ல கண்ணு.""அதுவுஞ்செரிந்தான் ப்பா. எவ்வளவு நேரந்தான் இப்படியே உட்காருறது. நான் காலாற நடந்துட்டு, அப்படியே ஆஸ்பெத்திரி கேட்கிட்ட இருக்குற புள்ளயார் கோயிலுக்குப் போய்ட்டு வரேன். டாக்டர் ரவுண்ட்ஸ்க்குப் போனா வர நேரமாகும். நர்ஸ் கேட்டா கீழப் போயிருக்கேன்னு சொல்லுப்பா" என மெதுவாக எழுந்து வயிற்றைச் சாய்த்தபடி நடந்து படியிறங்கினாள்..ஐயர் இவரைப் பார்த்ததும் புன்னைகைத்தார். இருநாள் நட்பு புன்னகை அது. ஆரத்தி சுற்றி ஜெயாவிடம் காட்டியவர், "நல்லாயிரும்மா… அம்பாள் உன் கூடவே இருப்பா" என குங்குமப் ப்ரசாதத்தை உள்ளங்கையில் வழங்கினார். "டாக்டர் என்ன சொன்னாங்க?" என்றவரிடம்…குங்குமத்தை நெற்றியிலும் நடுவகிட்டிலும் இட்டபடி "ராத்திரிக்குள்ள பொறந்துடும்னாங்க" எனச் சொல்லிவிட்டு, புன்னகையுடன் கேட்டில் வந்து நின்று வேடிக்கை பார்த்தாள்..வெளியே புத்தகங்களை மார்பில் அணைத்தபடி பள்ளிச் சீருடையில் பட்டாம் பூச்சிகளாகச் சிறகடித்து கூட்டமாய் 'கொல்லென்ற சிரிப்புடன்' கூடு திரும்பும் தன் சகவயது மாணவிகளை ஏக்கத்துடன் பார்த்தாள். தன்னிச்சையாக கைகள் வயிற்றைத் தடவியது. கண்களின் ஓரம் ஈரம் கசிந்தது. தன் சிறகுகள் மட்டும் ஏன் வளரும் முன்னே வெட்டியெறியப்பட்டது. பள்ளியில் பயிலவேண்டியவளை ஏன் பள்ளியறைக்கு அனுப்பியது விதி. புத்தகங்களைச் சுமக்க வேண்டிய கைகளில் இனி குழந்தையைச் சுமக்க வேண்டிய கையறுநிலை. இவர்களைப்போல் இருந்திருந்தால் பதினொன்றாம் வகுப்பில் அடியெடுத்து வைத்திருக்கலாம். இப்போது அறுவைச் சிகிச்சை அறையில் அடியெடுத்து வைக்க செய்தது விதியா? மதியா? என நீண்டப் பெருமூச்சுடன் நின்றிருந்தாள்..எவ்வளவு நேரம் நின்றிருந்தாளோ தெரியவில்லை. யாரோ யாரையோ அழைக்கும் சத்தத்தில் திடுக்கிட்டு விழித்தவள் கண்களைத் துடைத்தபடி திரும்பி நடந்தாள்..மேலே வந்து அமர்ந்தவளை, "நர்ஸ் கூப்பிட்டாங்க…" என முனியப்பன் சொல்ல… எழுந்து லேபர் வார்டிக்குள் நுழைந்த ஜெயாவைப் பரிசோதித்த டாக்டர் முகம் சுருங்கியபடி மறுபடியும் பெரிய டாக்டரை அழைத்து காட்டியவர்… அவரும் உடனே பண்ணிடலாம். தியேட்டருக்குச் சொல்லிடுங்க… என்ற அறிவுரைப்படி, நர்ஸிடம்"இவங்க அப்பாவைக் கூப்பிடுங்க" என்றார்.."பெரியவரே… உடனே ஆப்ரேஷன் பண்ணியாகணும். கொழந்தைக்கு வயத்துல ப்ரீத்திங் ப்ராப்ளம் இருக்கு. நேரமில்ல கையெழுத்து போடுங்க" என்றவரை கண்கலங்க பார்த்தபடி கைநடுக்கத்துடன் கைநாட்டு வைத்தார்.அதற்குள் ஜெயாவை பச்சை உடைக்கு மாற்றி அணிந்திருந்த புடைவையைப் பெரியவரிடம் கொடுத்தார் நர்ஸ். கூட "லேடிஸ் யாரும் வரலையா?" என்றவருக்கு "இல்லை" என தலையசைத்தார்.அவசரமாக ஆப்ரேஷன் தியேட்டருக்குள் அனுமதிக்கப்படுகிறாள். வெளியே பதறிய நெஞ்சத்துடன் கலங்கிய விழிகளுடன் முனியப்பன் தன் இஷ்டத் தெய்வங்களை எல்லாம் வேண்டிக்கொள்கிறார்..அங்கே அனஸ்தீயா கொடுக்கப்பட்டு ஜெயா கொஞ்சகொஞ்சமாகத் தன் சுயநினைவை இழந்துக்கொண்டிருந்தாள். அரைகுறை ஆழ்நினைவில் பள்ளிச் சிருடையுடன் புத்தகத்தைச் சுமந்துக்கொண்டு எங்கேயோ பட்டாம்பூச்சியாகக் காற்றில் மிதந்தபடி செல்கையில்… வெளியே குழந்தையின் குவா… குவா… சத்தமும், அதைத் தொடர்ந்த டாக்டர், நர்ஸ்களின் பதற்றக் குரலையும் முனியப்பனின் அழுகையையும் தொலைவில் எங்கோ கேட்க, எவ்விதப் பிரஞ்சையற்று புதிய உலகிற்குள் நுழைகிறாள்.
கதை: தனுஜா ஜெயராமன்.ஓவியம்: தமிழ்.அந்த அரசாங்க ஆஸ்பெத்திரியின் வராண்டாவில் முழங்கால்களைக் கட்டியபடி அமர்ந்திருந்தார் முனியப்பன்."பெரியவரே! உங்கப் பொண்ணு எங்க? டாக்டர் வந்துட்டாங்க. கூப்புடுறாங்க…" என அவசரமாகக் கேட்டாள் நர்ஸ்."பாத்ரூம் போயிருக்கா… த்தோ வந்துருவா? கூப்டவா" எனத் தள்ளாட்டமாக எழுந்திரிக்க முயன்றவரைக் கையமர்த்தி…"இல்லை வேணாம். உங்க மக வந்ததும் உள்ளே வரச்சொல்றாங்க பெரிய டாக்டர்?" எனச் சொல்லிவிட்டு போனாள் நர்ஸ்"சரி" என்று தலையசைத்தபடி… திரும்பியவர் தூரத்தில் வந்துக்கொண்டிருந்த மகள் ஜெயாவைப் பார்த்தவரின் கண்களில் நீர் கோர்த்தது.வயிற்றைச் சாய்த்தபடி மெதுவாக சுவற்றைப் பிடித்து நடந்து வந்தவளைப் பார்க்கப் பரிதாபமாக இருந்தது. நிறைமாத கர்ப்பிணி வயது பதினாறுதான் இருக்கும். நடந்தாலே மூச்சு வாங்கியது. கையை ஊன்றியபடி அருகிலிருந்த சேரில் அமர்ந்தாள்."தாயீ… உன்னை டாக்டர் உள்ளே கூப்டாங்களாம்…" என்றவுடன்சிரமப்பட்டு எழுந்து மெதுவாக உள்ளே சென்றவளைக் கவனித்த நர்ஸ், "டாக்டர்! அந்தப் பொண்ணு வருது.""வாம்மா! ஏதாவது வலி இருக்குதா?" என்றார் டாக்டர்."இல்லீங்க…" எனத் தலையசைத்தாள்."வயத்துல கொழந்தையோட அசைவு தெரியுதா?""தெரியுதுங்க… ஆனா வலி ஏதும் வரலைங்க டாக்டர்" என்றாள் ஜெயா."டேபிள் மேலே ஏறிப் படும்மா…""காலையிலேயே எனிமா கொடுத்தாச்சு டாக்டர்" என இடைமறித்தாள் நர்ஸ்."இங்க பாரும்மா… ஏற்கனவே ட்யூ டேட் தள்ளிப் போயாச்சு. நீ வேற சின்னப் பொண்ணு. இன்னைக்குச் சாயந்தரம் வரை பார்க்கலாம். வலி ஏதும் வரலைன்னா கொழந்தையை ஆப்ரேஷன் பண்ணித்தான் எடுக்கணும். வேற வழியில்லை… புரியுதா?" என வயிற்றில் கைவைத்து அழுத்தியபடி சொல்லிக்கொண்டிருந்தார் டாக்டர். நர்ஸ் லலிதாவிடம் "அவங்க அப்பாவைக் கூப்பிடுங்க" என்றார்..டாக்டரம்மா! உள்ளே நுழைந்த முனியப்பனிடம்…"பெரியவரே! உங்கப் பொண்ணுக்குக் கர்ப்பப்பை சுத்தமாத் திறக்கலை. அதனால் வலியும் வரலை. அனேகமாக ஆப்ரேஷன் பண்ணித்தான் எடுக்கணும். எதுக்கும் சாயங்காலம் வரை முயற்சி பண்ணிப் பாப்போம்…சரியா?""ஐயோ! டாக்டரம்மா! வயத்துல கத்தியெல்லாம் வைக்க வேணாங்கம்மா. கொழந்த புள்ளைங்க அது. சுகப்ரசவத்துக்கு ஏதாச்சும் வழி பண்ணுங்கம்மா… உங்களுக்குப் புண்ணியமா போகும்" எனக் கைகூப்பினார்.."அதேதான் நாங்களும் சொல்றோம். கொழந்தப் புள்ளைதான் அது. பதினெட்டு வயசுக்கு மேலேதான் கல்யாணம் பண்ணனும். நீங்க குழந்தையைப் புடிச்சி கல்யாணம் கட்டி வைச்சிருக்கீங்க. கர்ப்பபையே இத்துணுண்டுதான் இருக்கு. அது திறக்கவேயில்லை. ஒரு கொழந்தையைத் தாங்குற வயசில்ல அந்தப் பொண்ணுக்கு. உங்களுக்குச் சொன்னா புரியுதுதான்னு தெரியலை. வேறவழியில்லை… சாயங்காலம் வரை பாப்போம். அதுக்கப்புறம் ஆப்ரேஷன்தான்.""தாயில்லா புள்ளைங்க அது. எனக்கு ஏதாச்சும்னா பாத்துக்க ஆள்இல்லைன்னுதான்ங்க சின்ன வயசுலையே கட்டிக் குடுத்துட்டேன்ங்க. தப்புத்தானுங்க. எம்புள்ளையை நீங்கதான் காக்கோணும்…" என வாயில் துண்டைப் பொத்தி அழுதார்."சொன்னாப் புரிஞ்சிக்குங்க. இப்பவே வயத்துல குழந்தைக்கு மூச்சி விடுறதுல பிரச்னை இருக்கு. இப்படியே போனா தாய், குழந்தைன்னு ரெண்டு பேருக்குமே நல்லதில்லை… புரியதுங்களா? சரி, இவளோட புருஷன் எங்க?""அவன் வரலைங்க. குடிகாரப் பயலுங்க. எங்கக் குடிச்சிட்டு விழுந்து கிடக்குறானோ? தெர்லைங்க.""இது வேறவா? சரி அவசரம்னா பேப்பரில் கையெழுத்து போடணும். நீங்க எங்கேயும் போய்டாதீங்க. சரியா! என்றபடி நர்ஸைக் கூப்பிட்டு… நான் மத்தப் பேஷண்டுகளைப் பாத்துட்டு வரேன். இவளுக்கு வலி ஏதாவது வந்தா கூப்பிடு" எனக் கிளம்பினார் டாக்டர்.டாக்டர் போனதும்… "நீ வெளியே சேர்ல உட்கார்ந்து இரும்மா" எதுவும் சாப்பிட வேணாம். ஏதாவது மாற்றம் தெரிஞ்சா உள்ளே வந்து சொல்லு… இல்லன்னா நானே கூப்பிடுறேன்" என்றார் நரஸ்.சரி என தலையாட்டியபடி மெதுவாக எழுந்து புடைவையைச் சரிசெய்துகொண்டு வெளியே வந்தாள்..சேரில் கைத்தாங்கலாக வந்து அமர்ந்தவள், கண்கலங்கியவாறு கீழே உட்கார்ந்த தந்தையைப் பார்த்தாள். அவளுக்கும் மனகலக்கமாக இருந்தது. எதுவும் பேசாமல் அமைதியாக இருந்தாள். பசி களைப்பு வேறு மயக்கமாக இருந்தது. நேற்று இரவு சாப்பிட்டது. காலையிலிருந்து எதுவும் சாப்பிடக் கூடாது என நர்ஸ் நேற்றே சொல்லிவிட்டார்கள். எனிமா கொடுத்து வயிற்றையும் சுத்தமாக்கியாகிவிட்டது. மனசை போலவே வயிறும் கலக்கமாக இருந்தது. பலவீனமாக உணர்ந்தாள்.."ப்பா… பயமாக இருக்கு என்றாள் வயிற்றை தடவியபடி. அவ்வப்போது அசைவிருக்கிறதா? என வேறு கவனிக்கச் சொல்லியிருந்தார்கள். நானும் புள்ளையும் நல்லபடியா பொழச்சிக் கிடந்தா அந்த மருவத்தூர் ஆத்தாளுக்குப் பொங்க வைச்சி மாவிளக்கு போடுறதா வேண்டிருக்கேன்" என்றவளை,கலக்கமாகப் பார்த்து, "உனக்கும், புள்ளைக்கும் ஒண்ணியும் ஆகாது தாயீ. நல்லபடியா பெத்து வருவ கண்ணு. நம்ம கொலசாமியும் உன் ஆத்தாளும் அந்த மகமாயியும் நமக்கு காவல் இருப்பா தாயீ" எனக் கண்கலங்கினார்.."ப்பா! அந்தாளு எங்க? போன் பண்ணீயா? வரேன்னுச்சா. இந்த நேரத்திலகூட இருக்கக்கூடாதா? என்ன மனுஷனோ?" என புலம்பியவளிடம்.."போன் பண்ணேன் தாயீ… வரேன்னான்" எனத் தெரிந்தே பொய் சொன்னார்."எங்கக் குடிச்சிப்புட்டு விழுந்துக் கெடக்குதோ? எல்லாம் எந்தலையெழுத்து எங்க ஆத்தா இருந்தா இப்படி ஒரு நிலை எனக்கு வந்திருக்குமா?" எனக் கண்கலங்கினாள்."பெட்டு ஏதும் தரமாட்டாங்களா?" எனக் கவலையுடன் கேட்டார் முனியப்பன்."புள்ள பெத்தவங்களுக்கே பெட் இல்லை. இதுல நமக்கெங்கக் கிடைக்கப் போவது?" எனச் சலிப்பாக சொல்லியவள்… கைகளை ஊன்றியபடி சேரில் அமர்ந்தாள். இரு நாட்களாக வராண்டாவிலே வாசம். கிராமத்திலிருந்து கண்ணாத்தாள் கிழவி யாரிடமாவது சோத்து மூட்டையை கொடுத்தனுப்பும். அதை அவ்வப்போது பிரித்து தின்றபடி அப்பனும், மகளும் இரு நாட்களைக் கடத்தி வந்தனர். இன்னைக்கு புள்ளை பொறந்திட்டா நாளைக்கு பெட் கிடைச்சிடும் என நினைத்தவள்.."ப்பா… நாளைக்கு என்கூட இங்கன தங்க கந்தசாமி பொண்டாட்டி வரேன்னுச்சா. அது பொம்பளைங்க வார்டு. நீயெல்லாம் தங்க முடியாது. வீட்டுக்குப் போய்டு" என்றாள் கரிசனமாக.."வரேன்னுச்சு அந்த புண்யவதி. ஒரு இரண்டு நாள் இருக்கறேன்னுச்சு. புள்ளையையும் உன்னையும் பாத்துக்க. நான் இங்கன வராண்டாவுலயே கெடக்கேன். எனக்கென்ன… உனக்கெதுவும் அவசரத் தேவைன்னா கடை கண்ணிக்கிப் போவ ஒதவுமில்ல கண்ணு.""அதுவுஞ்செரிந்தான் ப்பா. எவ்வளவு நேரந்தான் இப்படியே உட்காருறது. நான் காலாற நடந்துட்டு, அப்படியே ஆஸ்பெத்திரி கேட்கிட்ட இருக்குற புள்ளயார் கோயிலுக்குப் போய்ட்டு வரேன். டாக்டர் ரவுண்ட்ஸ்க்குப் போனா வர நேரமாகும். நர்ஸ் கேட்டா கீழப் போயிருக்கேன்னு சொல்லுப்பா" என மெதுவாக எழுந்து வயிற்றைச் சாய்த்தபடி நடந்து படியிறங்கினாள்..ஐயர் இவரைப் பார்த்ததும் புன்னைகைத்தார். இருநாள் நட்பு புன்னகை அது. ஆரத்தி சுற்றி ஜெயாவிடம் காட்டியவர், "நல்லாயிரும்மா… அம்பாள் உன் கூடவே இருப்பா" என குங்குமப் ப்ரசாதத்தை உள்ளங்கையில் வழங்கினார். "டாக்டர் என்ன சொன்னாங்க?" என்றவரிடம்…குங்குமத்தை நெற்றியிலும் நடுவகிட்டிலும் இட்டபடி "ராத்திரிக்குள்ள பொறந்துடும்னாங்க" எனச் சொல்லிவிட்டு, புன்னகையுடன் கேட்டில் வந்து நின்று வேடிக்கை பார்த்தாள்..வெளியே புத்தகங்களை மார்பில் அணைத்தபடி பள்ளிச் சீருடையில் பட்டாம் பூச்சிகளாகச் சிறகடித்து கூட்டமாய் 'கொல்லென்ற சிரிப்புடன்' கூடு திரும்பும் தன் சகவயது மாணவிகளை ஏக்கத்துடன் பார்த்தாள். தன்னிச்சையாக கைகள் வயிற்றைத் தடவியது. கண்களின் ஓரம் ஈரம் கசிந்தது. தன் சிறகுகள் மட்டும் ஏன் வளரும் முன்னே வெட்டியெறியப்பட்டது. பள்ளியில் பயிலவேண்டியவளை ஏன் பள்ளியறைக்கு அனுப்பியது விதி. புத்தகங்களைச் சுமக்க வேண்டிய கைகளில் இனி குழந்தையைச் சுமக்க வேண்டிய கையறுநிலை. இவர்களைப்போல் இருந்திருந்தால் பதினொன்றாம் வகுப்பில் அடியெடுத்து வைத்திருக்கலாம். இப்போது அறுவைச் சிகிச்சை அறையில் அடியெடுத்து வைக்க செய்தது விதியா? மதியா? என நீண்டப் பெருமூச்சுடன் நின்றிருந்தாள்..எவ்வளவு நேரம் நின்றிருந்தாளோ தெரியவில்லை. யாரோ யாரையோ அழைக்கும் சத்தத்தில் திடுக்கிட்டு விழித்தவள் கண்களைத் துடைத்தபடி திரும்பி நடந்தாள்..மேலே வந்து அமர்ந்தவளை, "நர்ஸ் கூப்பிட்டாங்க…" என முனியப்பன் சொல்ல… எழுந்து லேபர் வார்டிக்குள் நுழைந்த ஜெயாவைப் பரிசோதித்த டாக்டர் முகம் சுருங்கியபடி மறுபடியும் பெரிய டாக்டரை அழைத்து காட்டியவர்… அவரும் உடனே பண்ணிடலாம். தியேட்டருக்குச் சொல்லிடுங்க… என்ற அறிவுரைப்படி, நர்ஸிடம்"இவங்க அப்பாவைக் கூப்பிடுங்க" என்றார்.."பெரியவரே… உடனே ஆப்ரேஷன் பண்ணியாகணும். கொழந்தைக்கு வயத்துல ப்ரீத்திங் ப்ராப்ளம் இருக்கு. நேரமில்ல கையெழுத்து போடுங்க" என்றவரை கண்கலங்க பார்த்தபடி கைநடுக்கத்துடன் கைநாட்டு வைத்தார்.அதற்குள் ஜெயாவை பச்சை உடைக்கு மாற்றி அணிந்திருந்த புடைவையைப் பெரியவரிடம் கொடுத்தார் நர்ஸ். கூட "லேடிஸ் யாரும் வரலையா?" என்றவருக்கு "இல்லை" என தலையசைத்தார்.அவசரமாக ஆப்ரேஷன் தியேட்டருக்குள் அனுமதிக்கப்படுகிறாள். வெளியே பதறிய நெஞ்சத்துடன் கலங்கிய விழிகளுடன் முனியப்பன் தன் இஷ்டத் தெய்வங்களை எல்லாம் வேண்டிக்கொள்கிறார்..அங்கே அனஸ்தீயா கொடுக்கப்பட்டு ஜெயா கொஞ்சகொஞ்சமாகத் தன் சுயநினைவை இழந்துக்கொண்டிருந்தாள். அரைகுறை ஆழ்நினைவில் பள்ளிச் சிருடையுடன் புத்தகத்தைச் சுமந்துக்கொண்டு எங்கேயோ பட்டாம்பூச்சியாகக் காற்றில் மிதந்தபடி செல்கையில்… வெளியே குழந்தையின் குவா… குவா… சத்தமும், அதைத் தொடர்ந்த டாக்டர், நர்ஸ்களின் பதற்றக் குரலையும் முனியப்பனின் அழுகையையும் தொலைவில் எங்கோ கேட்க, எவ்விதப் பிரஞ்சையற்று புதிய உலகிற்குள் நுழைகிறாள்.