– ஜி.எஸ்.எஸ்..எழுபத்தொன்பது நாடுகளில் உள்ள டீன் ஏஜ் இளைஞர்களிடம் எடுத்த சமீபத்திய கணக்கெடுப்பில் கணிதத் திறமையைப் பொறுத்தவரை அமெரிக்கா 37வது இடத்தில் இருக்கிறது என்று கண்டுபிடிக்கப்பட்டது. நோபல் பரிசு பெறுபவர்கள் பெரும்பாலானவர்கள் அமெரிக்கர்கள்தான். இருந்தாலும், சமீபத்தில் மாணவர்களின் கணித அறிவு என்கிற கோணத்தில் அமெரிக்கா தொடர்ந்து பின்னோக்கிச் சென்று கொண்டிருக்கிறது. முக்கியமாக, கணிதத்தில் என்று மட்டுமின்றி; அறிவியல், வேகமாக வாசித்தல் போன்றவற்றிலும் சராசரி அமெரிக்க மாணவன், பிற கணிசமான நாட்டு மாணவர்களை விட பின்தங்கி இருக்கிறான்..இதுகுறித்து, அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் தனது வருத்தத்தைத் தெரிவித்து இருக்கிறார். 'இந்த நிலை மாறாவிட்டால் அடுத்த நூற்றாண்டில் அமெரிக்கா பிற நாடுகளுடன் அறிவியலில் போட்டி போட முடியாது' என்று கூறியிருக்கிறார்..ஒரு நாட்டின் முதலீடு என்பது பணத்தால் மட்டும் கணக்கிடப்படுவது அல்ல. அதன் மனித வளத்தினாலும்தான். அந்த விதத்தில் ஒரு நாட்டின் பள்ளிக்கூடங்களும் அந்த நாட்டின் பொருளாதாரத்தை தீர்மானிக்கிறது எனலாம். இந்தக் கோணத்திலும் அமெரிக்க ஜனாதிபதியின் பதற்றத்தைப் புரிந்துகொள்ள முடிகிறது..ஐரோப்பிய நாடுகளில் எஸ்டோனியா நாட்டைச் சேர்ந்த மாணவர்கள் கணிதத்தில் சிறந்து விளங்கினார்கள் என்கிறது சமீபத்திய ஒரு ஆய்வு. இதற்கு முக்கியக் காரணங்களாக மிக இளம் வயதிலேயே அவர்களுக்கு அளிக்கப்பட்ட கல்வி, ஒரு வகுப்பில் குறைவான மாணவர்கள், தேர்வுக்குக் குறைவான முக்கியத்துவம் கொடுத்ததால் பயிற்றுவிப்பதற்குக் கிடைத்த அதிக நேரம் ஆகியவை கூறப்பட்டன.அமெரிக்காவில் கணிதக் கல்விக்கு ஏன் பின்னடைவு என்ற கேள்விக்குப் பல காரணங்கள் கூறப்படுகின்றன..அமெரிக்காவில் பல்கலைக்கழகங்களின் கல்வி மேன்மையாகவே இருந்து வந்திருக்கிறது. ஐரோப்பாவின் தலைசிறந்த கல்விக்கூடங்களுக்குச் சமமாக அவை கருதப்பட்டு வந்தன. சமீபத்தில்தான் இந்தச் சறுக்கல். ராணுவத்திற்கும் வெளியுறவு நடவடிக்கைகளுக்கும் மிக அதிகமாக அமெரிக்க அரசு செலவு செய்வதால் கல்விக் கட்டமைப்புக்கான ஒதுக்கீடு குறைந்து வருகிறது என்கிறார்கள்.பெரும்பாலான அமெரிக்கப் பள்ளிகளில் ஒன்பதாம் வகுப்பில் அல்ஜிப்ராவின் அடிப்படையையும், பத்தாம் வகுப்பில் ஜியோமெட்ரியையும், பதினோராம் வகுப்பில் அல்ஜிப்ராவின் அடுத்தக் கட்டத்தையும் கற்றுக்கொடுக்கிறார்கள். பல நாடுகளில் அல்ஜீப்ராவையும் ஜியோமெட்ரியையும் ஒரே நேரத்தில் கற்றுக் கொடுப்பதால் (கூடவே புள்ளியியல், தகவல் அறிவியல், ப்ரோபபிலிடி போன்றவற்றையும் கற்றுக் கொடுப்பதால்) மாணவர்களால் கடினமான கணித சவால்களையும் இணைத்துப் புரிந்துகொள்ள முடிகிறது.அமெரிக்கப் பள்ளிகளில் ஃபார்முலாக்களுக்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுக்கப்படுகின்றன. எல்லாவிதமான கோட்பாடுகளையும் நினைத்துத் தனித்துவமாக சிந்திப்பதை அவர்கள் ஊக்குவிப்பதில்லை.ஜார்ஜியா மாநிலத்தில் இதுகுறித்த ஒரு ஆய்வு நடத்தப்பட்டது. அப்போது கணிதத்தின் ஒரு பிரிவில்தான் தாங்கள் கவனம் செலுத்துவதை விரும்புவதாக பெரும்பாலான ஆசிரியர்கள் குறிப்பிட்டார்கள். அதாவது, ஒட்டுமொத்தமான கணிதச் சிக்கல்களை ஆர்வத்துடன் விடுவிக்க அவர்கள் தயாரில்லை.இப்போதுள்ள தரவுகளில் மிகப் பெரும்பான்மையானவை கடந்த இரண்டு வருடங்களில் உருவாக்கப்பட்டவை. அந்த அளவுக்கு மாற்றங்கள் நடைபெறும்போது மாணவர்கள் இந்தப் புதிய சூழலில் தங்களைப் பொருத்திக்கொள்ள ஆசிரியர்கள் முனைப்போடு முயற்சிக்க வேண்டும். ஆனால், அமெரிக்கப் பள்ளிக்கூடங்களில் அப்படி நடைபெறுவதில்லை.எந்தெந்த நாடுகளில் மேல்படிப்பு படிக்காவிட்டால் வருங்கால பொருளாதார வாய்ப்பு மிகவும் குறைந்து விடுமோ, எந்தெந்த நாடுகளில் கல்வி என்பதற்கு பெற்றோரும் சமூகமும் மிக அதிக அழுத்தம் கொடுத்து விடுகிறதோ, அந்த நாடுகளில் கல்வித்தரம் (குறைந்தது பள்ளிக்கூட அளவில்) சிறந்ததாக இருக்கிறது. அமெரிக்காவின் பல மாநிலங்களில் இந்தப் பின்னணி இல்லாதது கல்வித் தரம் குறையக் காரணம்.அமெரிக்கக் கல்வியாளர்கள் இவற்றொடு வேறு ஒரு காரணத்தையும் குறிப்பிடுகிறார்கள். ஹாங்காங், ஜப்பான், பின்லாந்து போன்ற நாடுகளில் தேசிய அளவில் ஒரே கல்வித் திட்டம் இருக்கிறது. ஆஸ்திரேலியாவிலும் இதை அறிமுகப்படுத்தப் போகிறார்கள். நெதர்லாந்து, நியூசிலாந்து போன்றவற்றில் தேசிய அளவுத் தரவுகள் தீர்மானிக்கப்படுகின்றன. இவற்றின் காரணமாக பலவித பாடங்களில் ஆழமாகத் தேர்ச்சி பெறும் வகையில் பாடத்திட்டங்கள் உருவாக்கப்படுகின்றன. 'நம் மாநில அல்லது மாவட்ட மக்கள் அதிக மதிப்பெண் பெற வேண்டும்' என்பதற்காக எளிமையான பாடத்திட்டம் போதுமானது என்கிற நிலை அங்கு இல்லை. (அமெரிக்காவில் பல மாநிலங்கள் உள்ளன என்பதும் கல்வித்திட்டங்கள் அவற்றில் மாறுபடுகின்றன என்பதும் குறிப்பிடத்தக்கது.)இந்த நேரத்தில் சிக்கலான மாதாந்திர கணக்கையெல்லாம் அனாயாசமாகப் போடும் நம் இல்லத்தரசிகளின் நினைவு எழுவதைத் தவிர்க்க முடியவில்லை.
– ஜி.எஸ்.எஸ்..எழுபத்தொன்பது நாடுகளில் உள்ள டீன் ஏஜ் இளைஞர்களிடம் எடுத்த சமீபத்திய கணக்கெடுப்பில் கணிதத் திறமையைப் பொறுத்தவரை அமெரிக்கா 37வது இடத்தில் இருக்கிறது என்று கண்டுபிடிக்கப்பட்டது. நோபல் பரிசு பெறுபவர்கள் பெரும்பாலானவர்கள் அமெரிக்கர்கள்தான். இருந்தாலும், சமீபத்தில் மாணவர்களின் கணித அறிவு என்கிற கோணத்தில் அமெரிக்கா தொடர்ந்து பின்னோக்கிச் சென்று கொண்டிருக்கிறது. முக்கியமாக, கணிதத்தில் என்று மட்டுமின்றி; அறிவியல், வேகமாக வாசித்தல் போன்றவற்றிலும் சராசரி அமெரிக்க மாணவன், பிற கணிசமான நாட்டு மாணவர்களை விட பின்தங்கி இருக்கிறான்..இதுகுறித்து, அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் தனது வருத்தத்தைத் தெரிவித்து இருக்கிறார். 'இந்த நிலை மாறாவிட்டால் அடுத்த நூற்றாண்டில் அமெரிக்கா பிற நாடுகளுடன் அறிவியலில் போட்டி போட முடியாது' என்று கூறியிருக்கிறார்..ஒரு நாட்டின் முதலீடு என்பது பணத்தால் மட்டும் கணக்கிடப்படுவது அல்ல. அதன் மனித வளத்தினாலும்தான். அந்த விதத்தில் ஒரு நாட்டின் பள்ளிக்கூடங்களும் அந்த நாட்டின் பொருளாதாரத்தை தீர்மானிக்கிறது எனலாம். இந்தக் கோணத்திலும் அமெரிக்க ஜனாதிபதியின் பதற்றத்தைப் புரிந்துகொள்ள முடிகிறது..ஐரோப்பிய நாடுகளில் எஸ்டோனியா நாட்டைச் சேர்ந்த மாணவர்கள் கணிதத்தில் சிறந்து விளங்கினார்கள் என்கிறது சமீபத்திய ஒரு ஆய்வு. இதற்கு முக்கியக் காரணங்களாக மிக இளம் வயதிலேயே அவர்களுக்கு அளிக்கப்பட்ட கல்வி, ஒரு வகுப்பில் குறைவான மாணவர்கள், தேர்வுக்குக் குறைவான முக்கியத்துவம் கொடுத்ததால் பயிற்றுவிப்பதற்குக் கிடைத்த அதிக நேரம் ஆகியவை கூறப்பட்டன.அமெரிக்காவில் கணிதக் கல்விக்கு ஏன் பின்னடைவு என்ற கேள்விக்குப் பல காரணங்கள் கூறப்படுகின்றன..அமெரிக்காவில் பல்கலைக்கழகங்களின் கல்வி மேன்மையாகவே இருந்து வந்திருக்கிறது. ஐரோப்பாவின் தலைசிறந்த கல்விக்கூடங்களுக்குச் சமமாக அவை கருதப்பட்டு வந்தன. சமீபத்தில்தான் இந்தச் சறுக்கல். ராணுவத்திற்கும் வெளியுறவு நடவடிக்கைகளுக்கும் மிக அதிகமாக அமெரிக்க அரசு செலவு செய்வதால் கல்விக் கட்டமைப்புக்கான ஒதுக்கீடு குறைந்து வருகிறது என்கிறார்கள்.பெரும்பாலான அமெரிக்கப் பள்ளிகளில் ஒன்பதாம் வகுப்பில் அல்ஜிப்ராவின் அடிப்படையையும், பத்தாம் வகுப்பில் ஜியோமெட்ரியையும், பதினோராம் வகுப்பில் அல்ஜிப்ராவின் அடுத்தக் கட்டத்தையும் கற்றுக்கொடுக்கிறார்கள். பல நாடுகளில் அல்ஜீப்ராவையும் ஜியோமெட்ரியையும் ஒரே நேரத்தில் கற்றுக் கொடுப்பதால் (கூடவே புள்ளியியல், தகவல் அறிவியல், ப்ரோபபிலிடி போன்றவற்றையும் கற்றுக் கொடுப்பதால்) மாணவர்களால் கடினமான கணித சவால்களையும் இணைத்துப் புரிந்துகொள்ள முடிகிறது.அமெரிக்கப் பள்ளிகளில் ஃபார்முலாக்களுக்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுக்கப்படுகின்றன. எல்லாவிதமான கோட்பாடுகளையும் நினைத்துத் தனித்துவமாக சிந்திப்பதை அவர்கள் ஊக்குவிப்பதில்லை.ஜார்ஜியா மாநிலத்தில் இதுகுறித்த ஒரு ஆய்வு நடத்தப்பட்டது. அப்போது கணிதத்தின் ஒரு பிரிவில்தான் தாங்கள் கவனம் செலுத்துவதை விரும்புவதாக பெரும்பாலான ஆசிரியர்கள் குறிப்பிட்டார்கள். அதாவது, ஒட்டுமொத்தமான கணிதச் சிக்கல்களை ஆர்வத்துடன் விடுவிக்க அவர்கள் தயாரில்லை.இப்போதுள்ள தரவுகளில் மிகப் பெரும்பான்மையானவை கடந்த இரண்டு வருடங்களில் உருவாக்கப்பட்டவை. அந்த அளவுக்கு மாற்றங்கள் நடைபெறும்போது மாணவர்கள் இந்தப் புதிய சூழலில் தங்களைப் பொருத்திக்கொள்ள ஆசிரியர்கள் முனைப்போடு முயற்சிக்க வேண்டும். ஆனால், அமெரிக்கப் பள்ளிக்கூடங்களில் அப்படி நடைபெறுவதில்லை.எந்தெந்த நாடுகளில் மேல்படிப்பு படிக்காவிட்டால் வருங்கால பொருளாதார வாய்ப்பு மிகவும் குறைந்து விடுமோ, எந்தெந்த நாடுகளில் கல்வி என்பதற்கு பெற்றோரும் சமூகமும் மிக அதிக அழுத்தம் கொடுத்து விடுகிறதோ, அந்த நாடுகளில் கல்வித்தரம் (குறைந்தது பள்ளிக்கூட அளவில்) சிறந்ததாக இருக்கிறது. அமெரிக்காவின் பல மாநிலங்களில் இந்தப் பின்னணி இல்லாதது கல்வித் தரம் குறையக் காரணம்.அமெரிக்கக் கல்வியாளர்கள் இவற்றொடு வேறு ஒரு காரணத்தையும் குறிப்பிடுகிறார்கள். ஹாங்காங், ஜப்பான், பின்லாந்து போன்ற நாடுகளில் தேசிய அளவில் ஒரே கல்வித் திட்டம் இருக்கிறது. ஆஸ்திரேலியாவிலும் இதை அறிமுகப்படுத்தப் போகிறார்கள். நெதர்லாந்து, நியூசிலாந்து போன்றவற்றில் தேசிய அளவுத் தரவுகள் தீர்மானிக்கப்படுகின்றன. இவற்றின் காரணமாக பலவித பாடங்களில் ஆழமாகத் தேர்ச்சி பெறும் வகையில் பாடத்திட்டங்கள் உருவாக்கப்படுகின்றன. 'நம் மாநில அல்லது மாவட்ட மக்கள் அதிக மதிப்பெண் பெற வேண்டும்' என்பதற்காக எளிமையான பாடத்திட்டம் போதுமானது என்கிற நிலை அங்கு இல்லை. (அமெரிக்காவில் பல மாநிலங்கள் உள்ளன என்பதும் கல்வித்திட்டங்கள் அவற்றில் மாறுபடுகின்றன என்பதும் குறிப்பிடத்தக்கது.)இந்த நேரத்தில் சிக்கலான மாதாந்திர கணக்கையெல்லாம் அனாயாசமாகப் போடும் நம் இல்லத்தரசிகளின் நினைவு எழுவதைத் தவிர்க்க முடியவில்லை.