பயணம்.– ஜெயகாந்தி மகாதேவன், சென்னை.அமெரிக்காவின் சியாட்டல் நகரில் இருந்து ஏழு நாள் பயணமாக 'நார்வேஜியன் பேர்ல்' (Norwegian Pearl) என்னும் சொகுசு கப்பலில, நானும் என் கணவரும் அலாஸ்கா சென்றோம். முதல்முறையாக கடலில் அவ்வளவு தூரம் சென்றது மிகவும் உற்சாகமான அனுபவமாய் இருந்தது..பிரயாணத்தன்று கப்பல் நிற்குமிடம் சென்று டிக்கெட், பாஸ்போர்ட் போன்றவற்றை அங்குள்ள அதிகாரிகளிடம் சரிபார்த்துக் கொண்டிருக்கையில், ஒருவர் எங்கள் பெட்டிகளை தள்ளிக்கொண்டு வேகமாக சென்றுக் கொண்டிருந்தார். எங்கே போயிடும்னு தைரியமா அடுத்த கட்டத்துக்கு முன்னேறினோம். அங்கு ஒருவர், எங்கள் பாஸ்போர்ட்களையும் வாங்கிக்கொண்டு உள்ளே சென்றார். அவர் திரும்ப வரல என்றதும் 'திக்' என்று பயம் வந்துடுச்சி. லபோ திபோன்னு நாலு பேர் கிட்ட கேட்டப்போ 'பாதுகாப்பு கருதி அனைவரின் பாஸ்போர்ட்களையும் வாங்கி பத்திரப்படுத்தி, பயணத்தின் கடைசி நாளன்று நம்மிடம் தருவார்கள்' என்று கூறியதை கேட்டபின்தான் நிம்மதியாச்சு..பிறகு எங்களுக்கான அறையின் சாவியை கொடுத்து நேரா உள்ள அனுப்பிட்டாங்க. கப்பலுக்குள் நுழைந்தோம். 'பூலோக சொர்கம்' போல தோன்றியது வரவேற்பு ஹால்..உலகப் புகழ்பெற்ற ஆடம்பர கப்பல் அது என்பதை நிரூபிக்கும் வகையில் திரும்பும் திசை எல்லாம் அத்தனை பிரமாண்டம். பல்வேறு நாடுகளில் இருந்து வந்த மனிதர்களை, சக பயணிகளாக ஒரே இடத்தில் சந்தித்தது புது அனுபவமாக இருந்தது..பதினான்கு தளம் கொண்ட அந்த பிரமாண்ட கப்பலின் ஐந்தாவது தளத்தில் எங்கள் அறை இருந்தது. உள்ளே சென்று பார்த்த போது எங்கள் சூட்கேஸ் அனைத்தும் பத்திரமாக அதற்கான இடத்தில் வைக்கப்பட்டிருந்ததை கண்டு நிம்மதியானோம்..கப்பலை பற்றி சொல்லணும்னா… பதினான்கு தளங்களுடன், வகுப்புவாரியாக ஆயிரத்துக்கும் மேற்பட்ட அறைகளை கொண்டிருந்தது..ஒவ்வொரு தளத்திலும் தனித்தனியா லைப்ரரி, விளையாடுமிடம், நீச்சல் குளம், கடைகள், கேளிக்கை விடுதிகள், குழந்தைகள் காப்பகம், தியேட்டர், ஸ்பா, சாப்பிடும் இடம் என அனைத்தும் நவீனமயமான அலங்காரத்துடனும், வசதிகளோடும் அமைந்திருந்தது..உணவுக்கூடத்தில் சிறு சிறு தீவுகள் உள்பட அனைத்து நாட்டு உணவு வகைகளும் இருந்தது. சூப், காபி, டீ, ஜூஸ், ஸ்வீட், கேக், ஐஸ்கிரீம், ஸ்னாக்ஸ், வெஜ் மற்றும் நான்வெஜ் டிபன், ரைஸ், நட்ஸ், பழங்கள் என அனைத்தும் வகை வகையா வைக்கப்பட்டிருந்தன. புவே (buffet) முறையில், பல்சுவை உணவுகளை சுவைத்துக்கொண்டே மலைகள் மற்றும் கடலின் அழகை நாள் முழுக்க ரசிக்கலாம் போலிருந்தது..அவ்வப்போது நீச்சல் குளம் அருகே சென்று அங்கு குதித்துக் களிக்கும் குழைந்தைகளை ரசித்தோம். பன்னாட்டு பயணிகளுடன் நட்புறவோடு, லேட் நைட் வரை கப்பலின் வால் பகுதி, நடு பகுதி என அனைத்து இடங்களிலும் போடப்பட்டிருந்த இருக்கைகளில் அமர்ந்து நேரம் போவதே தெரியாமல் பேசிச் சிரித்துக்கொண்டிருந்தோம்..அன்றாடம் நடைபெறும் கலைநிகழ்ச்சிகளை கண்டு மகிழ்வது, கப்பலின் உச்சிக்கு சென்று நின்றுகொண்டு வேகமா வீசும் கடற்காற்றை சுவாசிப்பது, கடைகளுக்குள் நுழைந்து நம் இதயத்துக்கு நெருக்கமானவர்களுக்கு நிதானமாக பார்த்துப் பார்த்து பரிசுப் பொருட்களை வாங்குவது, ஆர்ட் காலரியில் நடக்கும் ஏல விற்பனையில் பங்கேற்று சில அரிய பொருட்களை வாங்குவது என மிக நன்றாக நேரத்தை போக்கினோம். இரவில் அறைக்கு திரும்பினால், நீட்டா சுத்தம் செய்து புதிதான படுக்கை விரிப்பில், டவல் ஆர்ட்டில் செய்யப்பட்ட பொம்மை நம்மை வரவேற்கும்..விமான பயணத்தில் என்ஜின் ஓடும் சத்தம் கேட்டுக்கொண்டே இருக்கும். ஆனால், இந்த கப்பலில் அதன் அசைவே தெரியல. ஒரு பெரிய காஸ்மோபாலிட்டன் சிட்டிக்குள் இருக்கும் உணர்வே ஏற்பட்டது..வழியில் கப்பல், கெட்சிக்கன் (Ketchikan), ஜூனேயு (Juneau), ஷிக்வே (shikwe) முதலிய ஊர்களின் வழியே சென்றது. அந்தந்த ஊர்களின் துறைமுகத்தில் கப்பலை நிறுத்தி, பயணிகள் அனைவரையும் வெளியில் அனுப்பிவைத்தனர்..நான்கைந்து மணி நேரத்தில் அங்குள்ள சிறப்புகளை பஸ், ரயில் அல்லது ஹெலிகாப்டரிலும் சென்று பார்த்து ரசித்து விட்டு குறித்த நேரத்திற்கு கப்பலுக்குள் வந்துவிட வேண்டும். கப்பல் அலாஸ்காவை நெருங்கியபோது உயர உயரமான பனி மலைகளை பார்த்தது, பயணிகள் உற்சாக மிகுதியில் ஆரவாரம் செய்தனர்..பனி உருகி சிறு சிறு பனிக்கட்டிகளாய் கடலில் விழுந்து மிதந்து சென்றது கண்கொள்ளா காட்சியாய் இருந்தது. அத்தனை அழகையும் அவரவர் கேமராக்குள் படமாகவும், வீடியோவாகவும் சிறை பிடித்தனர் பயணிகள். பின், திரும்பும் வழியில் கனடாவுக்குள் சென்று விக்டோரியா சிட்டியை கண்டு மகிழ்ந்தோம்..மொத்த பயணத்தில் ஹைலைட்ன்னு சொல்லனும்னா இரண்டு விஷயம்..ஒன்று: உல்லாசப் பயணம் செல்லும் போதெல்லாம் விழுந்து எழுவது எனக்கு வாடிக்கை… ஆம்.. கப்பலிலும் ஒருநாள் விழுந்தேன். மதிய உணவு நேரம். கணவர் வழக்கம்போல ஜன்னலோர இருக்கையை பிடித்து அமர்ந்து கொண்டார். நான் போய் இரண்டு பிளேட்களில் உணவை எடுத்துக்கொண்டு திரும்பினேன். அப்போ ஏதோ காரணத்தால், ஷூ வழுக்கி தடாலெனா விழுந்தேன். தலை தரையில் இடிக்க கையில் இருந்ததெல்லாம் சுற்றிலும் சிதறியது. அருகிலிருந்த பத்துப்பேர் ஓடி வந்து தூக்கிவிட ஷாக்காகி எழுந்துநின்றேன்..பிறகு, ஒரு தம்பதி என்னை என் கணவரிடம் கூட்டிச் சென்று அமர வைத்தனர். சில அட்வைஸும் தந்தனர்.."கப்பலிலுள்ள டாக்டர் குழுவையெல்லாம் கூப்பிடாதீங்க. செலவு தாறுமாறா போய்டும். பிபி இருந்தா கூட ஒரு மாத்திரை எடுத்துக்குங்க" ன்னு கூறிசென்றார். கூடவே தன் சொந்த ஊர் திருச்சி என்றும் சொன்னார்கள். தோற்றத்தில் அவரைப் பார்க்கும் போது அரங்கனைப்போலவே இருந்தார். சிலிர்த்தது!!.இரண்டு: கப்பலினுள் சில அத்தியாவசிய வசதிகளை தனியாக பணம் கட்டிப் பெறவேண்டும். அதில் ஒன்று நெட். விசாரித்ததில் WiFi பெற ஒருநாள் தொகையே மிக அதிகமாக இருந்தது. என்ன செய்வது… குடும்பத்துடன் தொடர்பில் இருக்கணுமே..முதல்நாள் யோசித்துக் கொண்டே செல்கையில், அங்கு ஓரிடத்தில் எடைபார்க்கும் மெஷின் போல ஒன்று இருந்தது. அதன் மேலே லேப்டாப் போல ஒன்று, கேமராவுடன் இருந்தது. சில பேர் அதில் ஏறி இறங்குவதை பார்த்தேன். அருகில் சென்று உற்று கவனித்தேன். அதில் ஒரு பட்டனை அழுத்தினால் நம்மை போட்டோ எடுக்கவும் பின் ஒரு குறுஞ்செய்தியை டைப் செய்து போட்டோவுடன் நமக்கு வேண்டிய ஒரே ஒருவருக்கு இ-மெயில் மூலம் அனுப்பும் வசதியும் இருப்பதை கண்டுபிடித்தேன். முற்றிலும் இலவச சேவை. இது போதாதா! ரொம்ப குஷியாயிட்டேன். அன்று முதல் தினமும் எங்கள் மகனுக்கு போட்டோவும் செய்தியும் பறந்தது..ஏழு நாட்கள் போனதே தெரியல. சுருக்க சொல்லணும்னா, ஏற்கனவே குறிப்பிட்டத்து போல, "மனிதர்கள் உருவாக்கிய 'பூலோக சொர்க்கம்' அது. சொர்க்கத்தை அனுபவித்துவிட்டு, பிரிய மனமில்லாமல் பாஸ்போர்ட்டை திரும்ப பெற்றுக்கொண்டு வீடு வந்து சேர்ந்தோம்.
பயணம்.– ஜெயகாந்தி மகாதேவன், சென்னை.அமெரிக்காவின் சியாட்டல் நகரில் இருந்து ஏழு நாள் பயணமாக 'நார்வேஜியன் பேர்ல்' (Norwegian Pearl) என்னும் சொகுசு கப்பலில, நானும் என் கணவரும் அலாஸ்கா சென்றோம். முதல்முறையாக கடலில் அவ்வளவு தூரம் சென்றது மிகவும் உற்சாகமான அனுபவமாய் இருந்தது..பிரயாணத்தன்று கப்பல் நிற்குமிடம் சென்று டிக்கெட், பாஸ்போர்ட் போன்றவற்றை அங்குள்ள அதிகாரிகளிடம் சரிபார்த்துக் கொண்டிருக்கையில், ஒருவர் எங்கள் பெட்டிகளை தள்ளிக்கொண்டு வேகமாக சென்றுக் கொண்டிருந்தார். எங்கே போயிடும்னு தைரியமா அடுத்த கட்டத்துக்கு முன்னேறினோம். அங்கு ஒருவர், எங்கள் பாஸ்போர்ட்களையும் வாங்கிக்கொண்டு உள்ளே சென்றார். அவர் திரும்ப வரல என்றதும் 'திக்' என்று பயம் வந்துடுச்சி. லபோ திபோன்னு நாலு பேர் கிட்ட கேட்டப்போ 'பாதுகாப்பு கருதி அனைவரின் பாஸ்போர்ட்களையும் வாங்கி பத்திரப்படுத்தி, பயணத்தின் கடைசி நாளன்று நம்மிடம் தருவார்கள்' என்று கூறியதை கேட்டபின்தான் நிம்மதியாச்சு..பிறகு எங்களுக்கான அறையின் சாவியை கொடுத்து நேரா உள்ள அனுப்பிட்டாங்க. கப்பலுக்குள் நுழைந்தோம். 'பூலோக சொர்கம்' போல தோன்றியது வரவேற்பு ஹால்..உலகப் புகழ்பெற்ற ஆடம்பர கப்பல் அது என்பதை நிரூபிக்கும் வகையில் திரும்பும் திசை எல்லாம் அத்தனை பிரமாண்டம். பல்வேறு நாடுகளில் இருந்து வந்த மனிதர்களை, சக பயணிகளாக ஒரே இடத்தில் சந்தித்தது புது அனுபவமாக இருந்தது..பதினான்கு தளம் கொண்ட அந்த பிரமாண்ட கப்பலின் ஐந்தாவது தளத்தில் எங்கள் அறை இருந்தது. உள்ளே சென்று பார்த்த போது எங்கள் சூட்கேஸ் அனைத்தும் பத்திரமாக அதற்கான இடத்தில் வைக்கப்பட்டிருந்ததை கண்டு நிம்மதியானோம்..கப்பலை பற்றி சொல்லணும்னா… பதினான்கு தளங்களுடன், வகுப்புவாரியாக ஆயிரத்துக்கும் மேற்பட்ட அறைகளை கொண்டிருந்தது..ஒவ்வொரு தளத்திலும் தனித்தனியா லைப்ரரி, விளையாடுமிடம், நீச்சல் குளம், கடைகள், கேளிக்கை விடுதிகள், குழந்தைகள் காப்பகம், தியேட்டர், ஸ்பா, சாப்பிடும் இடம் என அனைத்தும் நவீனமயமான அலங்காரத்துடனும், வசதிகளோடும் அமைந்திருந்தது..உணவுக்கூடத்தில் சிறு சிறு தீவுகள் உள்பட அனைத்து நாட்டு உணவு வகைகளும் இருந்தது. சூப், காபி, டீ, ஜூஸ், ஸ்வீட், கேக், ஐஸ்கிரீம், ஸ்னாக்ஸ், வெஜ் மற்றும் நான்வெஜ் டிபன், ரைஸ், நட்ஸ், பழங்கள் என அனைத்தும் வகை வகையா வைக்கப்பட்டிருந்தன. புவே (buffet) முறையில், பல்சுவை உணவுகளை சுவைத்துக்கொண்டே மலைகள் மற்றும் கடலின் அழகை நாள் முழுக்க ரசிக்கலாம் போலிருந்தது..அவ்வப்போது நீச்சல் குளம் அருகே சென்று அங்கு குதித்துக் களிக்கும் குழைந்தைகளை ரசித்தோம். பன்னாட்டு பயணிகளுடன் நட்புறவோடு, லேட் நைட் வரை கப்பலின் வால் பகுதி, நடு பகுதி என அனைத்து இடங்களிலும் போடப்பட்டிருந்த இருக்கைகளில் அமர்ந்து நேரம் போவதே தெரியாமல் பேசிச் சிரித்துக்கொண்டிருந்தோம்..அன்றாடம் நடைபெறும் கலைநிகழ்ச்சிகளை கண்டு மகிழ்வது, கப்பலின் உச்சிக்கு சென்று நின்றுகொண்டு வேகமா வீசும் கடற்காற்றை சுவாசிப்பது, கடைகளுக்குள் நுழைந்து நம் இதயத்துக்கு நெருக்கமானவர்களுக்கு நிதானமாக பார்த்துப் பார்த்து பரிசுப் பொருட்களை வாங்குவது, ஆர்ட் காலரியில் நடக்கும் ஏல விற்பனையில் பங்கேற்று சில அரிய பொருட்களை வாங்குவது என மிக நன்றாக நேரத்தை போக்கினோம். இரவில் அறைக்கு திரும்பினால், நீட்டா சுத்தம் செய்து புதிதான படுக்கை விரிப்பில், டவல் ஆர்ட்டில் செய்யப்பட்ட பொம்மை நம்மை வரவேற்கும்..விமான பயணத்தில் என்ஜின் ஓடும் சத்தம் கேட்டுக்கொண்டே இருக்கும். ஆனால், இந்த கப்பலில் அதன் அசைவே தெரியல. ஒரு பெரிய காஸ்மோபாலிட்டன் சிட்டிக்குள் இருக்கும் உணர்வே ஏற்பட்டது..வழியில் கப்பல், கெட்சிக்கன் (Ketchikan), ஜூனேயு (Juneau), ஷிக்வே (shikwe) முதலிய ஊர்களின் வழியே சென்றது. அந்தந்த ஊர்களின் துறைமுகத்தில் கப்பலை நிறுத்தி, பயணிகள் அனைவரையும் வெளியில் அனுப்பிவைத்தனர்..நான்கைந்து மணி நேரத்தில் அங்குள்ள சிறப்புகளை பஸ், ரயில் அல்லது ஹெலிகாப்டரிலும் சென்று பார்த்து ரசித்து விட்டு குறித்த நேரத்திற்கு கப்பலுக்குள் வந்துவிட வேண்டும். கப்பல் அலாஸ்காவை நெருங்கியபோது உயர உயரமான பனி மலைகளை பார்த்தது, பயணிகள் உற்சாக மிகுதியில் ஆரவாரம் செய்தனர்..பனி உருகி சிறு சிறு பனிக்கட்டிகளாய் கடலில் விழுந்து மிதந்து சென்றது கண்கொள்ளா காட்சியாய் இருந்தது. அத்தனை அழகையும் அவரவர் கேமராக்குள் படமாகவும், வீடியோவாகவும் சிறை பிடித்தனர் பயணிகள். பின், திரும்பும் வழியில் கனடாவுக்குள் சென்று விக்டோரியா சிட்டியை கண்டு மகிழ்ந்தோம்..மொத்த பயணத்தில் ஹைலைட்ன்னு சொல்லனும்னா இரண்டு விஷயம்..ஒன்று: உல்லாசப் பயணம் செல்லும் போதெல்லாம் விழுந்து எழுவது எனக்கு வாடிக்கை… ஆம்.. கப்பலிலும் ஒருநாள் விழுந்தேன். மதிய உணவு நேரம். கணவர் வழக்கம்போல ஜன்னலோர இருக்கையை பிடித்து அமர்ந்து கொண்டார். நான் போய் இரண்டு பிளேட்களில் உணவை எடுத்துக்கொண்டு திரும்பினேன். அப்போ ஏதோ காரணத்தால், ஷூ வழுக்கி தடாலெனா விழுந்தேன். தலை தரையில் இடிக்க கையில் இருந்ததெல்லாம் சுற்றிலும் சிதறியது. அருகிலிருந்த பத்துப்பேர் ஓடி வந்து தூக்கிவிட ஷாக்காகி எழுந்துநின்றேன்..பிறகு, ஒரு தம்பதி என்னை என் கணவரிடம் கூட்டிச் சென்று அமர வைத்தனர். சில அட்வைஸும் தந்தனர்.."கப்பலிலுள்ள டாக்டர் குழுவையெல்லாம் கூப்பிடாதீங்க. செலவு தாறுமாறா போய்டும். பிபி இருந்தா கூட ஒரு மாத்திரை எடுத்துக்குங்க" ன்னு கூறிசென்றார். கூடவே தன் சொந்த ஊர் திருச்சி என்றும் சொன்னார்கள். தோற்றத்தில் அவரைப் பார்க்கும் போது அரங்கனைப்போலவே இருந்தார். சிலிர்த்தது!!.இரண்டு: கப்பலினுள் சில அத்தியாவசிய வசதிகளை தனியாக பணம் கட்டிப் பெறவேண்டும். அதில் ஒன்று நெட். விசாரித்ததில் WiFi பெற ஒருநாள் தொகையே மிக அதிகமாக இருந்தது. என்ன செய்வது… குடும்பத்துடன் தொடர்பில் இருக்கணுமே..முதல்நாள் யோசித்துக் கொண்டே செல்கையில், அங்கு ஓரிடத்தில் எடைபார்க்கும் மெஷின் போல ஒன்று இருந்தது. அதன் மேலே லேப்டாப் போல ஒன்று, கேமராவுடன் இருந்தது. சில பேர் அதில் ஏறி இறங்குவதை பார்த்தேன். அருகில் சென்று உற்று கவனித்தேன். அதில் ஒரு பட்டனை அழுத்தினால் நம்மை போட்டோ எடுக்கவும் பின் ஒரு குறுஞ்செய்தியை டைப் செய்து போட்டோவுடன் நமக்கு வேண்டிய ஒரே ஒருவருக்கு இ-மெயில் மூலம் அனுப்பும் வசதியும் இருப்பதை கண்டுபிடித்தேன். முற்றிலும் இலவச சேவை. இது போதாதா! ரொம்ப குஷியாயிட்டேன். அன்று முதல் தினமும் எங்கள் மகனுக்கு போட்டோவும் செய்தியும் பறந்தது..ஏழு நாட்கள் போனதே தெரியல. சுருக்க சொல்லணும்னா, ஏற்கனவே குறிப்பிட்டத்து போல, "மனிதர்கள் உருவாக்கிய 'பூலோக சொர்க்கம்' அது. சொர்க்கத்தை அனுபவித்துவிட்டு, பிரிய மனமில்லாமல் பாஸ்போர்ட்டை திரும்ப பெற்றுக்கொண்டு வீடு வந்து சேர்ந்தோம்.