– ஜி.எஸ்.எஸ்..'அலெக்ஸாண்ட்ரா டோபியாஸ' என்ற பெண் அந்தக் கொலையை செய்வதற்கு முன் தினம் இணையத்தில் ஒரு ஆளுமைத் தேர்வில் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு பதில்களை அளித்தார். அவரது பதில்கள் மதிப்பீடு செய்யப்பட்டு அவரைப் பற்றி எதிர்மறையாக சில வாக்கியங்கள் கூறப்பட்டு இருந்தன. அந்தக் கணிப்பீடை அலெக்ஸாண்ட்ராவே தன் முகநூல் பக்கத்தில் வெளியிட்டிருந்தார்..'உங்கள் மனநிலையை நீங்கள் மிகவும் மாற்றிக் கொள்ள வேண்டும். உங்களை, நீங்கள் உட்பட, யாராலும் கையாளுவது மிக கஷ்டம்!' என்பதுதான் அது.இருபத்திரண்டு வயதான அலெக்ஸாண்ட்ரா பட்டப்படிப்பை முடித்து இருந்தவர். மேற்படிப்பு படிக்க வேண்டும் என்றுகூட நினைத்திருந்தார். இந்த நிலையில் திருமணம் செய்து கொண்டார். ஒரு குழந்தையும் பிறந்தது. அதற்கு மூன்று மாதங்கள் ஆகியிருந்தது..ஜனவரி 2010 அன்று ஒரு நாள் அலெக்ஸாண்ட்ரா தன் முகநூலில் 'ஃபார்ம்வில்' என்ற ஒரு விளையாட்டை மும்முரமாக விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது அவரது குழந்தை அழத் தொடங்கியது. பாதி விளையாட்டில் தன் கவனத்தை அந்தக் குழந்தை திசை திருப்பியதற்காக அந்தக் குழந்தையைப் போட்டு வேகமாக உலுக்கினாள். அதிர்ச்சியில் அந்த குழந்தை அழுகையை நிறுத்தியது..தன் கோபத்தைக் குறைத்துக் கொள்வதற்காக அலெக்ஸாண்ட்ரா ஒரு சிகரெட் புகைத்தாள். அந்த நிலையில் குழந்தை மீண்டும் மெதுவாக அழத் தொடங்கியது. அலெக்ஸாண்ட்ரா வெறி பிடித்தவள் போல தன் குழந்தையை வெகு வேகமாக தொடர்ந்து குலுக்கினாள். ஒரு கட்டத்தில் குழந்தை தன் மூச்சை நிறுத்திக் கொண்டது..உடனே அலெக்ஸாண்ட்ரா ஆம்புலன்சுக்கு தொடர்பு கொண்டாள். '14 வாரங்கள் நிறைந்த என் குழந்தை திடீரென்று மூச்சு பேச்சில்லாமல் கிடக்கிறான். உடனே வாருங்கள்' என்றாள்..மருத்துவர்கள் சோதித்தபோது குழந்தை இறந்திருந்தது. காவல்துறைக்கு தகவல் அனுப்ப அவர்கள் அலெக்ஸாண்ட்ராவை விசாரணைக்கு உட்படுத்தினார்கள்.'குழந்தை சோபாவின் மீது படுத்துக் கொண்டிருந்தது. அப்போது வீட்டுக்கு உள்ளே நுழைந்த ஒரு நாய் அவனைக் கீழே தள்ளி விட்டு ஓடிவிட்டது. கீழே விழுந்தபோது அவன் தலையில் அடிபட்டது. அவன் மூச்சு நின்று விட்டது' என்று அடுக்கினாள். அவள் கூறுவது அனைத்தும் பொய் என்பதை மருத்துவ சோதனைகள் நிரூபித்தன. காவல்துறையினர் தொடர்ந்து கேள்விகள் கேட்க, தான் வெறியுடன் குலுக்கியதால்தான் குழந்தை இறந்தான் என்பதை ஒத்துக் கொண்டாள்..அலெக்சாண்ட்ராவின் நண்பர்களும் சில உறவினர்களும் அவள் இப்படிச் செய்தது தங்களுக்கு பேரதிர்ச்சியாக இருந்தது என்றார்கள் (யாருக்குதான் இருக்காது?). என்றாலும் அதற்கு இரு வருடங்களுக்கு முன் அவள் அம்மா திடீரென்று இறந்ததை சுட்டிக்காட்டினார்கள். தவிர மனவியல் மருத்துவரிடம் அலெக்ஸாண்ட்ரா தொடர்ந்து சிகிச்சை எடுத்துக் கொண்டு வந்திருந்தார் என்பதையும் அவரிடம் தான் சிறுமியாக இருந்தபோது ஒருவனால் கற்பழிக்கப்பட்டதைக் கூறினார் என்பதையும் குறிப்பிட்டார்கள்..குழந்தையைக் கொன்றதற்கு சில வாரங்களுக்கு முன்புதான் அலெக்ஸாண்ட்ராவுக்கும் அவள் கணவனுக்கும் மிகவும் கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டு அது அடிதடியில் முடிந்தது என்பதும் தெரியவந்தது..அலெக்சாண்ட்ராவுக்கு ஐம்பது வருட சிறை தண்டனை விதித்தது நீதிமன்றம்.'யாரால் எந்த விதத்திலும் தன்னைப் பாதுகாத்துக் கொள்ள முடியாதோ அப்படிப்பட்ட ஒரு குழந்தையின் உயிர் அவன் அம்மாவின் கைகளாலேயே பறிக்கப்பட்டிருக்கிறது. இதற்கான காரணம் மிகவும் அற்பமானது. முகநூலில் தான் விளையாடிக்கொண்டிருந்த விளையாட்டை குழந்தையின் அழுகை தடைசெய்தது என்பதற்காக ஒரு கொலை நடந்து இருக்கிறது' என்று நீதிபதி அதிர்ச்சி விலகாமல் தன் தீர்ப்பில் குறிப்பிட்டார்..அலெக்ஸாண்ட்ராவின் கணவர் எட்மன்ட்சன் என்பவர் மிகவும் மனமுடைந்து போய் இருந்தார். தடயவியல் நிபுணர்கள் தனது மகன் தனது இறுதிநேரத்தில் சொல்ல முடியாத வலியை அனுபவித்து இருக்கிறார் என்று கூறியதைக் கேட்ட போது அவர் கதறி அழுதார்..'நான் செய்ததற்காக என்னை வெறுக்கிறேன்' என்று மட்டும் கூறினாள் அலெக்ஸாண்ட்ரா. 'கல்லூரியில் சேர்வதாக இருந்தபோது தான் கருத்தரித்திருந்தது தெரிய வந்தது,' என்று அவர் கசப்புடன் கூறியபோது, அந்தக் குழந்தையின் மேல் ஒரு மறைமுக வெறுப்பு அவருக்கு தொடர்ந்து இருந்திருக்கக்கூடும் என்று பட்டது.வழக்கு நடந்து கொண்டிருந்தபோது தன் குழந்தையை தான் பலமாக குலுக்கிவிட்டு அவன் தலையை கணினித் திரை மீது மோதியதாகக் கூறினார். வேறொரு சமயம் நாயின் தாக்குதலால்தான் குழந்தை இறந்தது என்றாள்..சிறையிலிருந்து தன் தோழிக்கு தொலைபேசியில் 'நான் நாயின் மீது வேண்டுமென்றே பழி போட்டேன். அது ஒரு பொய்,' என்று அவர் கூறியது உறுதிப்படுத்தப்பட அவரது மனநிலை காரணமாக அவரை விடுவிக்க வேண்டும் என்ற வாதம் தவிடுபொடியானது.வழக்கு நடந்தபோது நீதிமன்றத்தில் அடிக்கடி அலெக்ஸாண்ட்ரா அழுதார். ஆனால் அதற்காக பரிதாபப்பட்டவர்கள் மிகக் குறைவே..எந்த டாக்டரும் பரிந்துரைக்காத நிலையில் தனது மன இறுக்கத்தைக் குறைத்துக் கொள்ள அவராகவே சில மாத்திரைகளை, குழந்தை இறந்த அன்று காலை உட்கொண்டார் என்று மனவியல் மருத்துவர் சாட்சி சொன்னார்.எப்படியோ, சமூக ஊடகத்தின் மீது கொண்ட வெறித்தனமான ஈடுபாடு தாய்மை உணர்வை மழுங்கடித்து விட்டது.
– ஜி.எஸ்.எஸ்..'அலெக்ஸாண்ட்ரா டோபியாஸ' என்ற பெண் அந்தக் கொலையை செய்வதற்கு முன் தினம் இணையத்தில் ஒரு ஆளுமைத் தேர்வில் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு பதில்களை அளித்தார். அவரது பதில்கள் மதிப்பீடு செய்யப்பட்டு அவரைப் பற்றி எதிர்மறையாக சில வாக்கியங்கள் கூறப்பட்டு இருந்தன. அந்தக் கணிப்பீடை அலெக்ஸாண்ட்ராவே தன் முகநூல் பக்கத்தில் வெளியிட்டிருந்தார்..'உங்கள் மனநிலையை நீங்கள் மிகவும் மாற்றிக் கொள்ள வேண்டும். உங்களை, நீங்கள் உட்பட, யாராலும் கையாளுவது மிக கஷ்டம்!' என்பதுதான் அது.இருபத்திரண்டு வயதான அலெக்ஸாண்ட்ரா பட்டப்படிப்பை முடித்து இருந்தவர். மேற்படிப்பு படிக்க வேண்டும் என்றுகூட நினைத்திருந்தார். இந்த நிலையில் திருமணம் செய்து கொண்டார். ஒரு குழந்தையும் பிறந்தது. அதற்கு மூன்று மாதங்கள் ஆகியிருந்தது..ஜனவரி 2010 அன்று ஒரு நாள் அலெக்ஸாண்ட்ரா தன் முகநூலில் 'ஃபார்ம்வில்' என்ற ஒரு விளையாட்டை மும்முரமாக விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது அவரது குழந்தை அழத் தொடங்கியது. பாதி விளையாட்டில் தன் கவனத்தை அந்தக் குழந்தை திசை திருப்பியதற்காக அந்தக் குழந்தையைப் போட்டு வேகமாக உலுக்கினாள். அதிர்ச்சியில் அந்த குழந்தை அழுகையை நிறுத்தியது..தன் கோபத்தைக் குறைத்துக் கொள்வதற்காக அலெக்ஸாண்ட்ரா ஒரு சிகரெட் புகைத்தாள். அந்த நிலையில் குழந்தை மீண்டும் மெதுவாக அழத் தொடங்கியது. அலெக்ஸாண்ட்ரா வெறி பிடித்தவள் போல தன் குழந்தையை வெகு வேகமாக தொடர்ந்து குலுக்கினாள். ஒரு கட்டத்தில் குழந்தை தன் மூச்சை நிறுத்திக் கொண்டது..உடனே அலெக்ஸாண்ட்ரா ஆம்புலன்சுக்கு தொடர்பு கொண்டாள். '14 வாரங்கள் நிறைந்த என் குழந்தை திடீரென்று மூச்சு பேச்சில்லாமல் கிடக்கிறான். உடனே வாருங்கள்' என்றாள்..மருத்துவர்கள் சோதித்தபோது குழந்தை இறந்திருந்தது. காவல்துறைக்கு தகவல் அனுப்ப அவர்கள் அலெக்ஸாண்ட்ராவை விசாரணைக்கு உட்படுத்தினார்கள்.'குழந்தை சோபாவின் மீது படுத்துக் கொண்டிருந்தது. அப்போது வீட்டுக்கு உள்ளே நுழைந்த ஒரு நாய் அவனைக் கீழே தள்ளி விட்டு ஓடிவிட்டது. கீழே விழுந்தபோது அவன் தலையில் அடிபட்டது. அவன் மூச்சு நின்று விட்டது' என்று அடுக்கினாள். அவள் கூறுவது அனைத்தும் பொய் என்பதை மருத்துவ சோதனைகள் நிரூபித்தன. காவல்துறையினர் தொடர்ந்து கேள்விகள் கேட்க, தான் வெறியுடன் குலுக்கியதால்தான் குழந்தை இறந்தான் என்பதை ஒத்துக் கொண்டாள்..அலெக்சாண்ட்ராவின் நண்பர்களும் சில உறவினர்களும் அவள் இப்படிச் செய்தது தங்களுக்கு பேரதிர்ச்சியாக இருந்தது என்றார்கள் (யாருக்குதான் இருக்காது?). என்றாலும் அதற்கு இரு வருடங்களுக்கு முன் அவள் அம்மா திடீரென்று இறந்ததை சுட்டிக்காட்டினார்கள். தவிர மனவியல் மருத்துவரிடம் அலெக்ஸாண்ட்ரா தொடர்ந்து சிகிச்சை எடுத்துக் கொண்டு வந்திருந்தார் என்பதையும் அவரிடம் தான் சிறுமியாக இருந்தபோது ஒருவனால் கற்பழிக்கப்பட்டதைக் கூறினார் என்பதையும் குறிப்பிட்டார்கள்..குழந்தையைக் கொன்றதற்கு சில வாரங்களுக்கு முன்புதான் அலெக்ஸாண்ட்ராவுக்கும் அவள் கணவனுக்கும் மிகவும் கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டு அது அடிதடியில் முடிந்தது என்பதும் தெரியவந்தது..அலெக்சாண்ட்ராவுக்கு ஐம்பது வருட சிறை தண்டனை விதித்தது நீதிமன்றம்.'யாரால் எந்த விதத்திலும் தன்னைப் பாதுகாத்துக் கொள்ள முடியாதோ அப்படிப்பட்ட ஒரு குழந்தையின் உயிர் அவன் அம்மாவின் கைகளாலேயே பறிக்கப்பட்டிருக்கிறது. இதற்கான காரணம் மிகவும் அற்பமானது. முகநூலில் தான் விளையாடிக்கொண்டிருந்த விளையாட்டை குழந்தையின் அழுகை தடைசெய்தது என்பதற்காக ஒரு கொலை நடந்து இருக்கிறது' என்று நீதிபதி அதிர்ச்சி விலகாமல் தன் தீர்ப்பில் குறிப்பிட்டார்..அலெக்ஸாண்ட்ராவின் கணவர் எட்மன்ட்சன் என்பவர் மிகவும் மனமுடைந்து போய் இருந்தார். தடயவியல் நிபுணர்கள் தனது மகன் தனது இறுதிநேரத்தில் சொல்ல முடியாத வலியை அனுபவித்து இருக்கிறார் என்று கூறியதைக் கேட்ட போது அவர் கதறி அழுதார்..'நான் செய்ததற்காக என்னை வெறுக்கிறேன்' என்று மட்டும் கூறினாள் அலெக்ஸாண்ட்ரா. 'கல்லூரியில் சேர்வதாக இருந்தபோது தான் கருத்தரித்திருந்தது தெரிய வந்தது,' என்று அவர் கசப்புடன் கூறியபோது, அந்தக் குழந்தையின் மேல் ஒரு மறைமுக வெறுப்பு அவருக்கு தொடர்ந்து இருந்திருக்கக்கூடும் என்று பட்டது.வழக்கு நடந்து கொண்டிருந்தபோது தன் குழந்தையை தான் பலமாக குலுக்கிவிட்டு அவன் தலையை கணினித் திரை மீது மோதியதாகக் கூறினார். வேறொரு சமயம் நாயின் தாக்குதலால்தான் குழந்தை இறந்தது என்றாள்..சிறையிலிருந்து தன் தோழிக்கு தொலைபேசியில் 'நான் நாயின் மீது வேண்டுமென்றே பழி போட்டேன். அது ஒரு பொய்,' என்று அவர் கூறியது உறுதிப்படுத்தப்பட அவரது மனநிலை காரணமாக அவரை விடுவிக்க வேண்டும் என்ற வாதம் தவிடுபொடியானது.வழக்கு நடந்தபோது நீதிமன்றத்தில் அடிக்கடி அலெக்ஸாண்ட்ரா அழுதார். ஆனால் அதற்காக பரிதாபப்பட்டவர்கள் மிகக் குறைவே..எந்த டாக்டரும் பரிந்துரைக்காத நிலையில் தனது மன இறுக்கத்தைக் குறைத்துக் கொள்ள அவராகவே சில மாத்திரைகளை, குழந்தை இறந்த அன்று காலை உட்கொண்டார் என்று மனவியல் மருத்துவர் சாட்சி சொன்னார்.எப்படியோ, சமூக ஊடகத்தின் மீது கொண்ட வெறித்தனமான ஈடுபாடு தாய்மை உணர்வை மழுங்கடித்து விட்டது.