பேட்டி கண்டவர் : லதானந்த்.'செடி டாக்டர்' என பலராலும் அறியப்படும் கோவை ராமசந்திரன் உஷா அவர்களின் பேட்டி தொடர்கிறது….காய்கறி மற்றும் பூஞ்செடிகளை வளர்க்கும்போது பூச்சிகளின் தாக்குதல் அதிகமாக இருக்கிறதே? பூச்சி கொல்லிகளை எப்படிப் பயன்படுத்துவது?.பூச்சி கொல்லி என்று சொல்லாதீர்கள்; பூச்சி விரட்டி என்று சொல்லுங்கள். இயற்கை விவசாயி திரு.நம்மாழ்வார் சொல்லிய வார்த்தை இது..உலகம் மனிதர்களுக்கு மட்டுமானது இல்லை. அனைத்து ஜீவ ராசிகளுக்குமானதுதானே? செடிகளில் தொல்லை கொடுக்கும் பூச்சிகளை விரட்டத்தான் வேண்டும்; கொல்லக்கூடாது! உதாரணமாக, செடியில் மொட்டுக்கள் தோன்றும்போது எறும்புகள் நிறைய வரும். மொட்டு மலரவே விடாமல் அவை தின்றுவிடும். இதைச் சமாளிக்க வீட்டில் உபயோகிக்கும் பட்டைப் பொடியை தூவினாலே போதும்; எறும்புகள் ஓடி விடும்! ஆரம்பம் முதலே கவனம் வைத்தால் பூச்சி வராது. எல்லாப் பூச்சிகளுக்கும் இது செல்லுபடியாகாது. அந்தச் சமயங்களில் ஆர்கானிக் பூச்சி விரட்டிகள் பயன் படுத்தத்தான் வேண்டும்..ஒரு முறை கத்திரிச் செடியில் பூச்சித் தொல்லை அதிகம் இருந்தது. நர்சரியில் போய் கேட்டேன். ஒரு பாட்டில் மருந்து தந்து, ஜாக்கிரதையாய் உபயோகியுங்கள் என்று சொன்னார்கள்..அவர்கள் சொன்ன முறைப்படி, செடிக்கு தெளித்து விட்டு, அந்த பாட்டிலை அலமாரியில் வைத்திருந்தேன். அதற்கு பக்கத்தில் கனமான பிளாஸ்டிக் பிடி போட்ட கத்தரிக்கோல் ஒன்று இருந்திருக்கிறது. இந்த பாட்டில் சரிந்து அந்தக் கத்தரிக்கோல் மீது விழுந்து, பாட்டிலில் இருந்த திரவத்தின் சில துளிகள் அதன் மேல் சிந்தியிருக்கின்றன. மறு நாள் அந்த அலமாரியை திறந்தபொழுது, அந்த பிளாஸ்டிக் கைப்பிடி அப்படியே மெழுகு போல உருகியிருந்தது..என்னால் அந்த காட்சி தந்த அதிர்ச்சியைத் தாங்க முடியவில்லை. சில சொட்டுக்கள் தான். அதற்கே அந்த பிளாஸ்டிக் தீயில் உருகியதுபோல உருகிப் போனது என்றால், அந்த ரசாயனம் உடலில் போனால் என்ன ஆகும் என்ற கேள்வி திரும்ப திரும்ப என் மனதில் எழுந்தது. அன்றே முடிவெடுத்தேன் எந்த விதமான ரசாயன உரமோ, பூச்சிகொல்லியோ உபயோகிப்பதில்லை என்று. அன்று முதல் ஆர்கானிக் பூச்சி விரட்டி, பூச்சிகொல்லிகளையேதான் காய்கறி செடிகளுக்குப் போட்டு வருகிறேன். அதையே பரிந்துரைக்கவும் செய்கிறேன்..மாடியில் செடி வைப்பதைப் பற்றி கொஞ்சம் சொல்லுங்க…..நஞ்சில்லாத காய்கறிகளை நம் வீட்டு மொட்டை மாடியில் சுலபமாய் வளர்க்கலாம். அரசாங்கம் இன்று அதற்குத் தேவையான பொருட்கள் அனைத்தையும் மிக குறைந்த விலையில் தருகிறது..காய்கறிச் செடி வளர்ப்பது ஒன்றும் கடினமான செயல் இல்லை. கொஞ்சம் நேரமும், நிறைய ஆர்வமும், சரியான வழிமுறைகளையும் தெரிந்துக்கொண்டால் வீட்டுக்குத் தேவையான காய்கறி, கீரைகளை நாமே வெகு சுலபமாய் வளர்க்கலாம்..நிறைய செலவு ஆகுமா?.ஜீரோ பட்ஜெட் மாடித் தோட்டம் என்பது சாத்தியமில்லை. தொட்டி, மண், க்ரோ பேக் போன்றவை வாங்க வேண்டி இருக்கும். எடுத்தவுடன் மாடித் தோட்ட அமைப்பாளர்களை அழைத்து ஆயிரக்கணக்கில் செலவு செய்து, நிறையச் செடிகள் வைக்க வேண்டாம்..முதலில் கீரை ஆரம்பியுங்கள். பிறகு அதில் நல்ல அறுவடை கிடைத்ததும் கத்திரி, வெண்டை என்று ஆரம்பியுங்கள். காரணம் என்னவென்றால், அமைப்பாளர்கள் செடியை வைத்துவிட்டுப் போய்விடுவார்கள். ஒவ்வொரு நாளும் வந்து கவனிக்க வேண்டும் என்றால் எக்கசக்க பில் வரும். ஆனால் நீங்களே செய்ய வேண்டும் என்றால் அதற்காகக் கொஞ்சம் விஷயங்களைத் தெரிந்துக்கொள்ள வேண்டும். எடுத்தவுடன் சக்ஸஸ், கிலோ கணக்கில் காய்கள் அறுவடை எல்லாம் சினிமாவில்தான் நடக்கும். பொறுமை மிக அவசியம். ஐநூறு ரூபாய் முதல் போதும். அதற்கும் குறைவாகவும் செய்யலாம்..செடி வைக்க எந்த மாதிரி தொட்டி சிறந்தது?.பொதுவாகச் செடிகளை வளர்க்க மண் தொட்டிகளே சரியானவை. காரணம், மண் தொட்டியில் இருக்கும் கண்ணுக்குத் தெரியாத சிறு துவாரங்கள் வழியாய்க் காற்றின் சுழற்சி இருக்கும் என்பதுதான். ஆனால் மண் தொட்டியின் எடையும் அதிகம்; கையாளும் பொழுது உடைந்து விடும் சாத்தியங்களும் அதிகம்.அடுத்து சிமென்ட் தொட்டிகள்: அவற்றிலும் இதே பிரச்சனைதான். எடை அதிகம்..க்ரோ பேக்ஸ் (Grow bags) எனப்படும் பிளாஸ்டிக் பைகள் தற்சமயம் பலராலும் விரும்பி வாங்கப்படுகின்றன. தரமானவைகளாய்ப் பார்த்து வாங்கினால், நன்கு உழைக்கும். பராமரிப்பதும் சுலபம். லேசான எடை என்பதால் மாடிக்கு ஏற்றது. ஓர் இடத்தில் இருந்து இன்னோர் இடத்துக்கு நகர்த்துவதும் சுலபம்..அடுத்தது பிளாஸ்டிக் தொட்டிகள். இவையும் க்ரோபேக் போலத்தான். ஆனால் பூஞ்செடிகளை வைக்க ஏற்ற பொலிவுடன் இருக்கும். மேலும் பூஞ்செடிகள் வளர்ந்ததும், சின்னத் தொட்டியில் இருந்து பெரிய தொட்டிக்கு மாற்றுவதற்கும் இவையே ஏற்றவை. அதனால் பிளாஸ்டிக் தொட்டிகளில் செம்பருத்தி, நந்தியா வெட்டை, மல்லி போன்ற பெரிய செடிகளை வளர்க்கலாம்..பயன்படுத்தப்பட்ட பிளாஸ்டிக் தண்ணீர் கேன்கள் இருந்தால் அவற்றின் மேல் பக்கம் மட்டும் கத்தரித்துவிட்டு, அவற்றிலும் செடி நடலாம்..பெரிய பிளாஸ்டிக் டிரம்கள் மற்றும் பெயின்ட் டப்பாக்களில் முருங்கை, நெல்லி, எலுமிச்சை, மாதுளம் போன்ற மரங்களையும் நடலாம்..இவை தவிரப் பழைய அரிசி பை, பிளாஸ்டிக் கவர் எதில் வேண்டுமானாலும் மண் போட்டுக் கீரை போன்றனவற்றை வைக்கலாம்..நீங்கள் புதிய வீடு கட்டுக்கிறீர்கள் அல்லது அழகாய் மாடித் தோட்டம் அமைக்கும் ஆசை இருந்தால், மாடியில் நீள வாக்கில் தொட்டி போல நீளமான அமைப்புகளை நெடுக ஏற்படுத்தி அவற்றில் எல்லா வகைச் செடிகளும் நடலாம்..இங்கே குறிப்பிடுவது எல்லாம் சில வழி முறைகள்தான். ஆர்வம் இருந்தால் 200 லிட்டர் நீல வண்ண டிரம்களில் வாழை, மா மரங்கள் கூட வளர்க்கலாம்..கோகோ பித், காம்போஸ்ட் பற்றி சொல்லுங்க….செடி நடத் தேவையான க்ரோ பேக் வாங்கி விட்டோம். அடுத்து எதில் நடுவது என்றுப் பார்ப்போம்..இன்று பிரபலமாய் இருப்பது கோகோ பித் என்னும் தேங்காய் நார்க் கழிவு. இது மண்ணுக்கு மாற்று. ஆனால் இதில் எந்த விதமான சத்தும் இருக்காது. எடை குறைவாய் இருப்பதால் மாடியில் எடை அதிகமாகாது. ஈரப் பதத்தைத் தக்க வைத்துக்கொள்ளும் என்பதால் பயன் படுத்தப்படும் தண்ணீரின் அளவும் குறையும்..இவை கட்டிகளாய் வரும். அவற்றைத் தண்ணீரில் ஊற வைத்தால் பல மடங்காய்ப் பெருகும். சராசரியாய் ஐந்து மடங்கு கொள்ளளவில் பெருகும்..இந்தத் தேங்காய் நார்க் கட்டிகள் ஒரு கிலோ, ஐந்து கிலோ என்ற அளவுகளில் கிடைக்கும்..அவற்றை அப்படியே உபயோகிக்கக்கூடாது. ஒரு பெரிய பக்கெட் அல்லது டப்பில் நீரை நிரப்பி, அவற்றை ஊற வைக்க வேண்டும். பல மடங்காய்ப் பெருகும். அதை நன்கு பிழிந்து, வெய்யில் காய வைத்து எடுத்துவைத்துக்கொண்டு, தேவையான பொழுது உபயோகப்படுத்திக்கொள்ளலாம். முக்கியமான விஷயம், கழுவி உலர்த்தாமல் தேங்காய் நார்க் கட்டிகளை உடைத்து அப்படியே உபயோக்கிக்கக் கூடாது. அதில் கலந்திருக்கும் உப்பு, செடிகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தும்..இப்பொழுது தேங்காய் நார்க் கழிவு தயார். அடுத்து மண். செம்மண் அல்லது தோட்டத்து மண். நல்ல தரமான மண் நர்சரியில் கிடைக்கும்..அடுத்து காம்போஸ்ட் அல்லது மண்புழு உரம் அல்லது தொழு உரம்..காம்போஸ்ட் என்பது நாம் வீட்டில் காய்கறி கழிவுகளால் தயாரிக்கப்படுவது. இதைச் செய்யும் முறையை விரிவாய்ச் சொல்கிறேன்..மண்புழு உரம் நர்சரியில் கிடைக்கும். கிலோ 15 ரூபாயில் இருந்து 25 ரூபாய் வரை வில்லை இருக்கும். அடுத்துத் தொழு உரம் என்கிற சாணக் குப்பை அல்லது மாட்டுச் சாண உரம். இதுவும் கடைகளில் கிடைக்கும். முக்கியமான விஷயம்… மாட்டுச் சாணத்தை அப்படியே பச்சையாய்ச் செடிக்குப் போடக் கூடாது. அதன் சூட்டில் செடி அப்படியே கருகிவிடும். தொழு உரம் என்பது மாதக் கணக்கில் மக்கிய சாணம் என்பதால் செடிகளுக்கு நல்ல உரம்..இப்பொழுது மண் கலவை தயாரிக்க, 30% மண், 30% கோகோ பித், 30% மண்புழு உரம் அல்லது தொழு உரம் அல்லது காம்போஸ்ட்..மீதமுள்ள 10%க்கு ஆட்டுச் சாணம் ஒரு கைப்பிடி. இதுவும் கடைகளில் கிடைக்கிறது. இலை, குச்சிகளை எரித்த சாம்பல் ஒரு ஸ்பூன், வேப்பம் புண்ணாக்கு இரண்டு ஸ்பூன், இரண்டு ஸ்பூன் போன் மீல் (Bone meal) இதுவும் எல்லா உரக் கடைகளிலும் கிடைக்கும். இவற்றைக் கலந்து பைகளில் நிரப்ப வேண்டும்..அடுத்து விதைகள் ஊன்ற வேண்டியதுதானே?.(பசுமை பேசுவோம்…)
பேட்டி கண்டவர் : லதானந்த்.'செடி டாக்டர்' என பலராலும் அறியப்படும் கோவை ராமசந்திரன் உஷா அவர்களின் பேட்டி தொடர்கிறது….காய்கறி மற்றும் பூஞ்செடிகளை வளர்க்கும்போது பூச்சிகளின் தாக்குதல் அதிகமாக இருக்கிறதே? பூச்சி கொல்லிகளை எப்படிப் பயன்படுத்துவது?.பூச்சி கொல்லி என்று சொல்லாதீர்கள்; பூச்சி விரட்டி என்று சொல்லுங்கள். இயற்கை விவசாயி திரு.நம்மாழ்வார் சொல்லிய வார்த்தை இது..உலகம் மனிதர்களுக்கு மட்டுமானது இல்லை. அனைத்து ஜீவ ராசிகளுக்குமானதுதானே? செடிகளில் தொல்லை கொடுக்கும் பூச்சிகளை விரட்டத்தான் வேண்டும்; கொல்லக்கூடாது! உதாரணமாக, செடியில் மொட்டுக்கள் தோன்றும்போது எறும்புகள் நிறைய வரும். மொட்டு மலரவே விடாமல் அவை தின்றுவிடும். இதைச் சமாளிக்க வீட்டில் உபயோகிக்கும் பட்டைப் பொடியை தூவினாலே போதும்; எறும்புகள் ஓடி விடும்! ஆரம்பம் முதலே கவனம் வைத்தால் பூச்சி வராது. எல்லாப் பூச்சிகளுக்கும் இது செல்லுபடியாகாது. அந்தச் சமயங்களில் ஆர்கானிக் பூச்சி விரட்டிகள் பயன் படுத்தத்தான் வேண்டும்..ஒரு முறை கத்திரிச் செடியில் பூச்சித் தொல்லை அதிகம் இருந்தது. நர்சரியில் போய் கேட்டேன். ஒரு பாட்டில் மருந்து தந்து, ஜாக்கிரதையாய் உபயோகியுங்கள் என்று சொன்னார்கள்..அவர்கள் சொன்ன முறைப்படி, செடிக்கு தெளித்து விட்டு, அந்த பாட்டிலை அலமாரியில் வைத்திருந்தேன். அதற்கு பக்கத்தில் கனமான பிளாஸ்டிக் பிடி போட்ட கத்தரிக்கோல் ஒன்று இருந்திருக்கிறது. இந்த பாட்டில் சரிந்து அந்தக் கத்தரிக்கோல் மீது விழுந்து, பாட்டிலில் இருந்த திரவத்தின் சில துளிகள் அதன் மேல் சிந்தியிருக்கின்றன. மறு நாள் அந்த அலமாரியை திறந்தபொழுது, அந்த பிளாஸ்டிக் கைப்பிடி அப்படியே மெழுகு போல உருகியிருந்தது..என்னால் அந்த காட்சி தந்த அதிர்ச்சியைத் தாங்க முடியவில்லை. சில சொட்டுக்கள் தான். அதற்கே அந்த பிளாஸ்டிக் தீயில் உருகியதுபோல உருகிப் போனது என்றால், அந்த ரசாயனம் உடலில் போனால் என்ன ஆகும் என்ற கேள்வி திரும்ப திரும்ப என் மனதில் எழுந்தது. அன்றே முடிவெடுத்தேன் எந்த விதமான ரசாயன உரமோ, பூச்சிகொல்லியோ உபயோகிப்பதில்லை என்று. அன்று முதல் ஆர்கானிக் பூச்சி விரட்டி, பூச்சிகொல்லிகளையேதான் காய்கறி செடிகளுக்குப் போட்டு வருகிறேன். அதையே பரிந்துரைக்கவும் செய்கிறேன்..மாடியில் செடி வைப்பதைப் பற்றி கொஞ்சம் சொல்லுங்க…..நஞ்சில்லாத காய்கறிகளை நம் வீட்டு மொட்டை மாடியில் சுலபமாய் வளர்க்கலாம். அரசாங்கம் இன்று அதற்குத் தேவையான பொருட்கள் அனைத்தையும் மிக குறைந்த விலையில் தருகிறது..காய்கறிச் செடி வளர்ப்பது ஒன்றும் கடினமான செயல் இல்லை. கொஞ்சம் நேரமும், நிறைய ஆர்வமும், சரியான வழிமுறைகளையும் தெரிந்துக்கொண்டால் வீட்டுக்குத் தேவையான காய்கறி, கீரைகளை நாமே வெகு சுலபமாய் வளர்க்கலாம்..நிறைய செலவு ஆகுமா?.ஜீரோ பட்ஜெட் மாடித் தோட்டம் என்பது சாத்தியமில்லை. தொட்டி, மண், க்ரோ பேக் போன்றவை வாங்க வேண்டி இருக்கும். எடுத்தவுடன் மாடித் தோட்ட அமைப்பாளர்களை அழைத்து ஆயிரக்கணக்கில் செலவு செய்து, நிறையச் செடிகள் வைக்க வேண்டாம்..முதலில் கீரை ஆரம்பியுங்கள். பிறகு அதில் நல்ல அறுவடை கிடைத்ததும் கத்திரி, வெண்டை என்று ஆரம்பியுங்கள். காரணம் என்னவென்றால், அமைப்பாளர்கள் செடியை வைத்துவிட்டுப் போய்விடுவார்கள். ஒவ்வொரு நாளும் வந்து கவனிக்க வேண்டும் என்றால் எக்கசக்க பில் வரும். ஆனால் நீங்களே செய்ய வேண்டும் என்றால் அதற்காகக் கொஞ்சம் விஷயங்களைத் தெரிந்துக்கொள்ள வேண்டும். எடுத்தவுடன் சக்ஸஸ், கிலோ கணக்கில் காய்கள் அறுவடை எல்லாம் சினிமாவில்தான் நடக்கும். பொறுமை மிக அவசியம். ஐநூறு ரூபாய் முதல் போதும். அதற்கும் குறைவாகவும் செய்யலாம்..செடி வைக்க எந்த மாதிரி தொட்டி சிறந்தது?.பொதுவாகச் செடிகளை வளர்க்க மண் தொட்டிகளே சரியானவை. காரணம், மண் தொட்டியில் இருக்கும் கண்ணுக்குத் தெரியாத சிறு துவாரங்கள் வழியாய்க் காற்றின் சுழற்சி இருக்கும் என்பதுதான். ஆனால் மண் தொட்டியின் எடையும் அதிகம்; கையாளும் பொழுது உடைந்து விடும் சாத்தியங்களும் அதிகம்.அடுத்து சிமென்ட் தொட்டிகள்: அவற்றிலும் இதே பிரச்சனைதான். எடை அதிகம்..க்ரோ பேக்ஸ் (Grow bags) எனப்படும் பிளாஸ்டிக் பைகள் தற்சமயம் பலராலும் விரும்பி வாங்கப்படுகின்றன. தரமானவைகளாய்ப் பார்த்து வாங்கினால், நன்கு உழைக்கும். பராமரிப்பதும் சுலபம். லேசான எடை என்பதால் மாடிக்கு ஏற்றது. ஓர் இடத்தில் இருந்து இன்னோர் இடத்துக்கு நகர்த்துவதும் சுலபம்..அடுத்தது பிளாஸ்டிக் தொட்டிகள். இவையும் க்ரோபேக் போலத்தான். ஆனால் பூஞ்செடிகளை வைக்க ஏற்ற பொலிவுடன் இருக்கும். மேலும் பூஞ்செடிகள் வளர்ந்ததும், சின்னத் தொட்டியில் இருந்து பெரிய தொட்டிக்கு மாற்றுவதற்கும் இவையே ஏற்றவை. அதனால் பிளாஸ்டிக் தொட்டிகளில் செம்பருத்தி, நந்தியா வெட்டை, மல்லி போன்ற பெரிய செடிகளை வளர்க்கலாம்..பயன்படுத்தப்பட்ட பிளாஸ்டிக் தண்ணீர் கேன்கள் இருந்தால் அவற்றின் மேல் பக்கம் மட்டும் கத்தரித்துவிட்டு, அவற்றிலும் செடி நடலாம்..பெரிய பிளாஸ்டிக் டிரம்கள் மற்றும் பெயின்ட் டப்பாக்களில் முருங்கை, நெல்லி, எலுமிச்சை, மாதுளம் போன்ற மரங்களையும் நடலாம்..இவை தவிரப் பழைய அரிசி பை, பிளாஸ்டிக் கவர் எதில் வேண்டுமானாலும் மண் போட்டுக் கீரை போன்றனவற்றை வைக்கலாம்..நீங்கள் புதிய வீடு கட்டுக்கிறீர்கள் அல்லது அழகாய் மாடித் தோட்டம் அமைக்கும் ஆசை இருந்தால், மாடியில் நீள வாக்கில் தொட்டி போல நீளமான அமைப்புகளை நெடுக ஏற்படுத்தி அவற்றில் எல்லா வகைச் செடிகளும் நடலாம்..இங்கே குறிப்பிடுவது எல்லாம் சில வழி முறைகள்தான். ஆர்வம் இருந்தால் 200 லிட்டர் நீல வண்ண டிரம்களில் வாழை, மா மரங்கள் கூட வளர்க்கலாம்..கோகோ பித், காம்போஸ்ட் பற்றி சொல்லுங்க….செடி நடத் தேவையான க்ரோ பேக் வாங்கி விட்டோம். அடுத்து எதில் நடுவது என்றுப் பார்ப்போம்..இன்று பிரபலமாய் இருப்பது கோகோ பித் என்னும் தேங்காய் நார்க் கழிவு. இது மண்ணுக்கு மாற்று. ஆனால் இதில் எந்த விதமான சத்தும் இருக்காது. எடை குறைவாய் இருப்பதால் மாடியில் எடை அதிகமாகாது. ஈரப் பதத்தைத் தக்க வைத்துக்கொள்ளும் என்பதால் பயன் படுத்தப்படும் தண்ணீரின் அளவும் குறையும்..இவை கட்டிகளாய் வரும். அவற்றைத் தண்ணீரில் ஊற வைத்தால் பல மடங்காய்ப் பெருகும். சராசரியாய் ஐந்து மடங்கு கொள்ளளவில் பெருகும்..இந்தத் தேங்காய் நார்க் கட்டிகள் ஒரு கிலோ, ஐந்து கிலோ என்ற அளவுகளில் கிடைக்கும்..அவற்றை அப்படியே உபயோகிக்கக்கூடாது. ஒரு பெரிய பக்கெட் அல்லது டப்பில் நீரை நிரப்பி, அவற்றை ஊற வைக்க வேண்டும். பல மடங்காய்ப் பெருகும். அதை நன்கு பிழிந்து, வெய்யில் காய வைத்து எடுத்துவைத்துக்கொண்டு, தேவையான பொழுது உபயோகப்படுத்திக்கொள்ளலாம். முக்கியமான விஷயம், கழுவி உலர்த்தாமல் தேங்காய் நார்க் கட்டிகளை உடைத்து அப்படியே உபயோக்கிக்கக் கூடாது. அதில் கலந்திருக்கும் உப்பு, செடிகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தும்..இப்பொழுது தேங்காய் நார்க் கழிவு தயார். அடுத்து மண். செம்மண் அல்லது தோட்டத்து மண். நல்ல தரமான மண் நர்சரியில் கிடைக்கும்..அடுத்து காம்போஸ்ட் அல்லது மண்புழு உரம் அல்லது தொழு உரம்..காம்போஸ்ட் என்பது நாம் வீட்டில் காய்கறி கழிவுகளால் தயாரிக்கப்படுவது. இதைச் செய்யும் முறையை விரிவாய்ச் சொல்கிறேன்..மண்புழு உரம் நர்சரியில் கிடைக்கும். கிலோ 15 ரூபாயில் இருந்து 25 ரூபாய் வரை வில்லை இருக்கும். அடுத்துத் தொழு உரம் என்கிற சாணக் குப்பை அல்லது மாட்டுச் சாண உரம். இதுவும் கடைகளில் கிடைக்கும். முக்கியமான விஷயம்… மாட்டுச் சாணத்தை அப்படியே பச்சையாய்ச் செடிக்குப் போடக் கூடாது. அதன் சூட்டில் செடி அப்படியே கருகிவிடும். தொழு உரம் என்பது மாதக் கணக்கில் மக்கிய சாணம் என்பதால் செடிகளுக்கு நல்ல உரம்..இப்பொழுது மண் கலவை தயாரிக்க, 30% மண், 30% கோகோ பித், 30% மண்புழு உரம் அல்லது தொழு உரம் அல்லது காம்போஸ்ட்..மீதமுள்ள 10%க்கு ஆட்டுச் சாணம் ஒரு கைப்பிடி. இதுவும் கடைகளில் கிடைக்கிறது. இலை, குச்சிகளை எரித்த சாம்பல் ஒரு ஸ்பூன், வேப்பம் புண்ணாக்கு இரண்டு ஸ்பூன், இரண்டு ஸ்பூன் போன் மீல் (Bone meal) இதுவும் எல்லா உரக் கடைகளிலும் கிடைக்கும். இவற்றைக் கலந்து பைகளில் நிரப்ப வேண்டும்..அடுத்து விதைகள் ஊன்ற வேண்டியதுதானே?.(பசுமை பேசுவோம்…)