ஒவியம்: பிரபுராம்."மாமியாரும் மருமகளும் கறுப்பு கோட் மாட்டிக்கிட்டு ஏன் சண்டை போடறாங்க?" "இரண்டு பேருமே வக்கீல்டி!" – ஆர். மகாதேவன், திருநெல்வேலி.………………………………………………………... "நாலு பவுன் நகை, ரொக்கம் பத்து லட்சம் இதையெல்லாம் வீட்டுல வச்சுட்டு வந்துட்டியே பயமில்லையா?" "பக்கத்து வீட்டு ரெய்டு நடக்கறதால பயமே இல்ல…" – பி. நிர்மலா தேவி, ஈரோடு.………………………………………………………..."வோட்டுக்குப் பணம் கொடுப்பதைப் பார்த்துக்கொண்டு சும்மா இருக்குறீங்களே…?" "நாங்க சிறப்பு பார்வையாளர்கள்." – எஸ். மோகன், கோவில்பட்டி.………………………………………………………..."உன் வீட்டுல கொரோனா கட்டுப்பாடு தளர்வு நடைமுறைக்கு வந்தாச்சா?" "வந்தாச்சு! ஆன்லைன் மூலமா சண்டை போட்டுக் கொண்டிருந்த என் மாமியாரும் நானும் இப்போ நேர்ல சண்டை போடுறோம்!" – கு. அருணாசலம், தென்காசி. ………………………………………………………... "முதல் குழந்தை பேரு கோவேக்சின். இரண்டாவது கோவிஷீல்டு." "பலே…" "மூணாவது குழந்தை பெயர் டோலோ." – ஆர். யோகமித்ரா, சென்னை.………………………………………………………..."வாழ்வில் ஒருமுறையாவது போரை பார்த்துடணும் மந்திரி?" "அதுக்கு மாறு வேடத்தில்தான் போர்களம் போகனும் அரசே!" – ஆர். சுந்தரராஜன், சிதம்பரம்.………………………………………………………... "நடந்து போயிட்டிருக்கும்போது பொண்டாட்டிகிட்டேயிருந்து போன் வந்தா நின்னு பேசு!" "ஏன்?" "நம்மளப் பொண்டாட்டி பேச்சைக் கேட்டு நடக்கிறவன்னு யாரும் சொல்லிடக் கூடாது பாரு… அதுக்குத்தான்!" – எஸ். கெஜலட்சுமி, லால்குடி.
ஒவியம்: பிரபுராம்."மாமியாரும் மருமகளும் கறுப்பு கோட் மாட்டிக்கிட்டு ஏன் சண்டை போடறாங்க?" "இரண்டு பேருமே வக்கீல்டி!" – ஆர். மகாதேவன், திருநெல்வேலி.………………………………………………………... "நாலு பவுன் நகை, ரொக்கம் பத்து லட்சம் இதையெல்லாம் வீட்டுல வச்சுட்டு வந்துட்டியே பயமில்லையா?" "பக்கத்து வீட்டு ரெய்டு நடக்கறதால பயமே இல்ல…" – பி. நிர்மலா தேவி, ஈரோடு.………………………………………………………..."வோட்டுக்குப் பணம் கொடுப்பதைப் பார்த்துக்கொண்டு சும்மா இருக்குறீங்களே…?" "நாங்க சிறப்பு பார்வையாளர்கள்." – எஸ். மோகன், கோவில்பட்டி.………………………………………………………..."உன் வீட்டுல கொரோனா கட்டுப்பாடு தளர்வு நடைமுறைக்கு வந்தாச்சா?" "வந்தாச்சு! ஆன்லைன் மூலமா சண்டை போட்டுக் கொண்டிருந்த என் மாமியாரும் நானும் இப்போ நேர்ல சண்டை போடுறோம்!" – கு. அருணாசலம், தென்காசி. ………………………………………………………... "முதல் குழந்தை பேரு கோவேக்சின். இரண்டாவது கோவிஷீல்டு." "பலே…" "மூணாவது குழந்தை பெயர் டோலோ." – ஆர். யோகமித்ரா, சென்னை.………………………………………………………..."வாழ்வில் ஒருமுறையாவது போரை பார்த்துடணும் மந்திரி?" "அதுக்கு மாறு வேடத்தில்தான் போர்களம் போகனும் அரசே!" – ஆர். சுந்தரராஜன், சிதம்பரம்.………………………………………………………... "நடந்து போயிட்டிருக்கும்போது பொண்டாட்டிகிட்டேயிருந்து போன் வந்தா நின்னு பேசு!" "ஏன்?" "நம்மளப் பொண்டாட்டி பேச்சைக் கேட்டு நடக்கிறவன்னு யாரும் சொல்லிடக் கூடாது பாரு… அதுக்குத்தான்!" – எஸ். கெஜலட்சுமி, லால்குடி.