இது மங்கையர்மலரின் விவிதபாரதி…. பகுதி – 6. -ஆதிரை வேணுகோபால்.மங்கையர் மலரின்… விவித பாரதியில் இன்று நாம் கேட்க விரும்பும் பாடல் மெல்லிசை சக்கரவர்த்தி என அழைக்கப்படும் (மெலடி கிங்) வி. குமார் அவர்களின் இசையமைப்பில் வந்த ஒரு பாடல். இவரது இசையானது சமகாலத்தில் இசையமைத்து வந்த எம் எஸ் விஸ்வநாதன், கே.வி. மகாதேவன் போன்றோரின் இசை அமைப்பில் இருந்து மாறுபட்ட மெல்லிசையாகக் காணப்பட்டது. இவர் இந்திய மற்றும் மேற்கத்திய இசைக் கருவிகளை கலந்து பயன்படுத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது. தனக்கென ஒரு தனிப்பாணியுடன் ஓர் இசை சாம்ராஜ்யத்தை உருவாக்கி, பல ஆண்டுகள் பணிபுரிந்து எண்ணற்ற வெற்றிப் படங்களுக்கு இசையமைத்து ஏராளமான செவிக்கினிய கீதங்களை தந்தவர் இசையமைப்பாளர் வி குமார். காதோடு தான் நான் பேசுவேன், உன்னிடம் மயங்குகிறேன், நான் உன்னை வாழ்த்திப் பாடுகிறேன், சிவப்பு கல்லு மூக்குத்தி, வா வாத்தியாரே வூட்டாண்ட, பல்லவ நாட்டு ராஜகுமாரிக்கு, போன்ற பாடல்கள் இவரின் தலைசிறந்த பாடல்கள் ஆகும். இவர் இசை அமைத்த முதல் திரைப்படம் கே பாலச்சந்தரின் இயக்கத்தில் நடிகர் நாகேஷ் நடித்து வெளிவந்த 'நீர்க்குமிழி'. இந்த திரைப்பட இசை அமைப்பிற்கு பக்கபலமாகவும், அசோசியேட் இசை அமைப்பாளராகவும் இருந்தவர் ஏ கே சேகர். (இன்றைய இசைப்புயல் ஏ. ஆர். ரகுமான் அவர்களின் தந்தை) இதற்குப் பிறகு பாலச்சந்தர் இயக்கிய பல படங்களுக்கு இவர்தான் இசை அமைத்தார்.."இவள் ஒரு சீதை" திரைப்படத்தில் எஸ்பிபி பாடி இன்றுவரை அனைவராலும் ரசிக்கக்கூடிய "பல்லவ நாட்டு ராஜகுமாரிக்கு பருவம் பதினெட்டு" என்றவி. குமாரின் பாடல் மெட்டிற்கு வெறும் ஐந்தே நிமிடங்களில் பாடல் எழுதினாராம் கவியரசர். (அந்த காலத்தில் இந்த விஷயம் பரபரப்பாக பேசப்பட்டது) இன்றும் இளைய தலைமுறை குழந்தைகளும் விரும்பிப் பாடும் "வா வாத்யாரே ஊட்டாண்டே" என்ற "பொம்மலாட்டம்" பட பாடல் வி குமார் இசையில் நடிகை மனோரமா பாடியது இது அனைவருக்கும் தெரிந்ததுதான். ஆனால் எல்.ஆர் ஈஸ்வரி பாடவேண்டிய இந்தப் பாடலை அவரது நேரம் கிடைக்காததால் மனோரமாவை பாட வைத்து விட்டார். அதேபோல் தெளிந்த நீரோடை போன்ற மெல்லிய, சாந்தமான பாடல்கள் என்றால் பி சுசீலாவிற்கும், சிருங்கார மிக்க ஆர்ப்பாட்டமான பாடல்கள் என்றால் அது எல்.ஆர் ஈஸ்வரிக்கும் என்றிருந்த திரையுலகில் மாற்றம் கொண்டு வந்தவர் இவரே." வெள்ளிவிழா" திரைப்படத்தில் வரும் "காதோடு தான் நான் பாடுவேன் " என்ற இதமான மெல்லிய பாடலை எல்.ஆர் ஈஸ்வரி க்கும் ,"நான் சத்தம் போட்டு தான் பாடுவேன் என்ற ஆர்ப்பாட்டமான பாடலை பி சுசிலா விற்கும் தந்து வெற்றி கண்டவர் வி குமார்.சரிப்பா நீங்க இங்க இசைக்க வந்த பாட்டை சொல்லுங்க'ன்னு நீங்க சொல்றது என் காதில் விழுகிறது. இதோ சொல்லிடறேன்..வி குமார் அவர்களின் அற்புத இசையில் எஸ்பிபி மற்றும் சுசீலாம்மா குரலில் 1977 ஆம் ஆண்டு வெளிவந்த "தூண்டில் மீன்" என்ற படத்தில் இடம்பெற்ற. "வாழ்வில் சௌபாக்கியம் வந்தது…. வாழ்வில் சௌபாக்கியம் வந்தது….வந்தேன் என்றது…. தேன் தந்தேன் என்றது…. என் தங்கமே உன்னிடம் சங்கமம். என் நெஞ்சிலே மங்கையின் குங்குமம்" என்ற பாடல்தான்.கணவன் மனைவிக்கு இடையே உள்ள பந்தத்தை அழகாக விவரிக்கும் அதி அற்புதமான பாடல் இது. கணவன் மனைவிக்கு இடையே அந்நியோன்யம் காதல் ,புரிதல், ரசனை, அனைத்தும் கலந்துள்ள தேனிசை பாடல் இது.."தேவன் கலைக்கோவில் பூந்தேர் ஒன்று….தேவி வடிவாக கண்டேன் இன்று...என்று ஆண் குரல் பெண்மையை விவரித்து வர்ணிக்க, பதிலுக்கு பெண்குரல் "பூவிதழ் தன்னைப் பறித்து பூஜையை மெல்ல நடத்து"என நாசுக்காக சம்மதம் தெரிவிக்கின்றது. இப்படி சிருங்கார ரசத்தை விரசம் இன்றி சிலேடையாக கூறும் பாங்கு வாலி அவர்களுக்கே உரித்தானது..பாடலுக்கு மோகன் சர்மாவும், லஷ்மி அவர்களும்… அற்புதமாக வாயசைத்திருப்பர். இந்தப் பாடல் அன்றைய விவித பாரதியில் வரும் "உங்கள் விருப்பம்" மற்றும் சிலோன் ரேடியோவில் ஒலிபரப்பப்படும் "விடுமுறை விருப்பம்" ஆகிய நிகழ்ச்சிகளில் நித்தம் நித்தம் ஒலிபரப்பாகும். தேனினும் இனிய எண்ணற்ற கீதங்கள் வி.குமார் அவர்கள் இசையமைத்தது என்று தெரியாமலேயே வானொலியில் கேட்டு மகிழும் ரசிகர்கள் இன்றளவும் உண்டு..(எம்ஜிஆர் அவர்களால் மெல்லிசை மாமணி என்ற பட்டம் இவருக்கு வழங்கப்பட்டது). வி. குமார் அவர்களின் இசை நம் நெஞ்சங்களை மட்டுமல்ல விண்ணையும் தொடும். கேளுங்க கேளுங்க கேட்டுக்கொண்டே இருங்க. "வாழ்வில் சௌபாக்கியம் தன்னாலே வரும்.'".என்றென்றும் அன்புடன்ஆதிரை வேணுகோபால்
இது மங்கையர்மலரின் விவிதபாரதி…. பகுதி – 6. -ஆதிரை வேணுகோபால்.மங்கையர் மலரின்… விவித பாரதியில் இன்று நாம் கேட்க விரும்பும் பாடல் மெல்லிசை சக்கரவர்த்தி என அழைக்கப்படும் (மெலடி கிங்) வி. குமார் அவர்களின் இசையமைப்பில் வந்த ஒரு பாடல். இவரது இசையானது சமகாலத்தில் இசையமைத்து வந்த எம் எஸ் விஸ்வநாதன், கே.வி. மகாதேவன் போன்றோரின் இசை அமைப்பில் இருந்து மாறுபட்ட மெல்லிசையாகக் காணப்பட்டது. இவர் இந்திய மற்றும் மேற்கத்திய இசைக் கருவிகளை கலந்து பயன்படுத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது. தனக்கென ஒரு தனிப்பாணியுடன் ஓர் இசை சாம்ராஜ்யத்தை உருவாக்கி, பல ஆண்டுகள் பணிபுரிந்து எண்ணற்ற வெற்றிப் படங்களுக்கு இசையமைத்து ஏராளமான செவிக்கினிய கீதங்களை தந்தவர் இசையமைப்பாளர் வி குமார். காதோடு தான் நான் பேசுவேன், உன்னிடம் மயங்குகிறேன், நான் உன்னை வாழ்த்திப் பாடுகிறேன், சிவப்பு கல்லு மூக்குத்தி, வா வாத்தியாரே வூட்டாண்ட, பல்லவ நாட்டு ராஜகுமாரிக்கு, போன்ற பாடல்கள் இவரின் தலைசிறந்த பாடல்கள் ஆகும். இவர் இசை அமைத்த முதல் திரைப்படம் கே பாலச்சந்தரின் இயக்கத்தில் நடிகர் நாகேஷ் நடித்து வெளிவந்த 'நீர்க்குமிழி'. இந்த திரைப்பட இசை அமைப்பிற்கு பக்கபலமாகவும், அசோசியேட் இசை அமைப்பாளராகவும் இருந்தவர் ஏ கே சேகர். (இன்றைய இசைப்புயல் ஏ. ஆர். ரகுமான் அவர்களின் தந்தை) இதற்குப் பிறகு பாலச்சந்தர் இயக்கிய பல படங்களுக்கு இவர்தான் இசை அமைத்தார்.."இவள் ஒரு சீதை" திரைப்படத்தில் எஸ்பிபி பாடி இன்றுவரை அனைவராலும் ரசிக்கக்கூடிய "பல்லவ நாட்டு ராஜகுமாரிக்கு பருவம் பதினெட்டு" என்றவி. குமாரின் பாடல் மெட்டிற்கு வெறும் ஐந்தே நிமிடங்களில் பாடல் எழுதினாராம் கவியரசர். (அந்த காலத்தில் இந்த விஷயம் பரபரப்பாக பேசப்பட்டது) இன்றும் இளைய தலைமுறை குழந்தைகளும் விரும்பிப் பாடும் "வா வாத்யாரே ஊட்டாண்டே" என்ற "பொம்மலாட்டம்" பட பாடல் வி குமார் இசையில் நடிகை மனோரமா பாடியது இது அனைவருக்கும் தெரிந்ததுதான். ஆனால் எல்.ஆர் ஈஸ்வரி பாடவேண்டிய இந்தப் பாடலை அவரது நேரம் கிடைக்காததால் மனோரமாவை பாட வைத்து விட்டார். அதேபோல் தெளிந்த நீரோடை போன்ற மெல்லிய, சாந்தமான பாடல்கள் என்றால் பி சுசீலாவிற்கும், சிருங்கார மிக்க ஆர்ப்பாட்டமான பாடல்கள் என்றால் அது எல்.ஆர் ஈஸ்வரிக்கும் என்றிருந்த திரையுலகில் மாற்றம் கொண்டு வந்தவர் இவரே." வெள்ளிவிழா" திரைப்படத்தில் வரும் "காதோடு தான் நான் பாடுவேன் " என்ற இதமான மெல்லிய பாடலை எல்.ஆர் ஈஸ்வரி க்கும் ,"நான் சத்தம் போட்டு தான் பாடுவேன் என்ற ஆர்ப்பாட்டமான பாடலை பி சுசிலா விற்கும் தந்து வெற்றி கண்டவர் வி குமார்.சரிப்பா நீங்க இங்க இசைக்க வந்த பாட்டை சொல்லுங்க'ன்னு நீங்க சொல்றது என் காதில் விழுகிறது. இதோ சொல்லிடறேன்..வி குமார் அவர்களின் அற்புத இசையில் எஸ்பிபி மற்றும் சுசீலாம்மா குரலில் 1977 ஆம் ஆண்டு வெளிவந்த "தூண்டில் மீன்" என்ற படத்தில் இடம்பெற்ற. "வாழ்வில் சௌபாக்கியம் வந்தது…. வாழ்வில் சௌபாக்கியம் வந்தது….வந்தேன் என்றது…. தேன் தந்தேன் என்றது…. என் தங்கமே உன்னிடம் சங்கமம். என் நெஞ்சிலே மங்கையின் குங்குமம்" என்ற பாடல்தான்.கணவன் மனைவிக்கு இடையே உள்ள பந்தத்தை அழகாக விவரிக்கும் அதி அற்புதமான பாடல் இது. கணவன் மனைவிக்கு இடையே அந்நியோன்யம் காதல் ,புரிதல், ரசனை, அனைத்தும் கலந்துள்ள தேனிசை பாடல் இது.."தேவன் கலைக்கோவில் பூந்தேர் ஒன்று….தேவி வடிவாக கண்டேன் இன்று...என்று ஆண் குரல் பெண்மையை விவரித்து வர்ணிக்க, பதிலுக்கு பெண்குரல் "பூவிதழ் தன்னைப் பறித்து பூஜையை மெல்ல நடத்து"என நாசுக்காக சம்மதம் தெரிவிக்கின்றது. இப்படி சிருங்கார ரசத்தை விரசம் இன்றி சிலேடையாக கூறும் பாங்கு வாலி அவர்களுக்கே உரித்தானது..பாடலுக்கு மோகன் சர்மாவும், லஷ்மி அவர்களும்… அற்புதமாக வாயசைத்திருப்பர். இந்தப் பாடல் அன்றைய விவித பாரதியில் வரும் "உங்கள் விருப்பம்" மற்றும் சிலோன் ரேடியோவில் ஒலிபரப்பப்படும் "விடுமுறை விருப்பம்" ஆகிய நிகழ்ச்சிகளில் நித்தம் நித்தம் ஒலிபரப்பாகும். தேனினும் இனிய எண்ணற்ற கீதங்கள் வி.குமார் அவர்கள் இசையமைத்தது என்று தெரியாமலேயே வானொலியில் கேட்டு மகிழும் ரசிகர்கள் இன்றளவும் உண்டு..(எம்ஜிஆர் அவர்களால் மெல்லிசை மாமணி என்ற பட்டம் இவருக்கு வழங்கப்பட்டது). வி. குமார் அவர்களின் இசை நம் நெஞ்சங்களை மட்டுமல்ல விண்ணையும் தொடும். கேளுங்க கேளுங்க கேட்டுக்கொண்டே இருங்க. "வாழ்வில் சௌபாக்கியம் தன்னாலே வரும்.'".என்றென்றும் அன்புடன்ஆதிரை வேணுகோபால்