பணம் கொடுத்தால் திருநங்கைகள் நம் தலையைத் தொட்டு ஆசிர்வாதம் பண்ணுகிறார்களே?எஸ். கெஜலட்சுமி, லால்குடி..மறைந்த எழுத்தாளர் சு. சமுத்திரம் எழுதிய 'வாடாமல்லி' நாவலைப் படிச்சிருக்கீங்களா? திருநங்கைகள் பற்றிய கதை. அதில் 'சுயம்பு' என்ற இளைஞன், தனக்குள் ஒரு பெண் இருப்பதை அறிந்த நொடி முதல்,அவன் படும் அவஸ்தைகள், அவமானங்கள், நிராகரிப்புகள்,ஏளனப் பார்வைகள், காதல்(!) என எல்லாமே வலிக்க வலிக்கச் சொல்லப்பட்டிருக்கும்..'பிரம்மன் செய்த மரபணுப் பிழை அவர்கள்; பால் மாற்றம் ஊனமல்ல!' என்று நாம் ஓரளவு புரிந்துகொண்டு விட்டோம். ஆனாலும் அவர்கள் பஸ்ஸிலோ, ரயிலிலோ உட்கார்ந்து இருந்தால், பக்கத்து சீட் காலியாகத்தான் இருக்கும். நிரந்தரமான சமூக விலகல்!!.மகாபாரதத்தில் அரவாணிகளைப் பலி கொடுத்து, ஸ்ரீகிருஷ்ணர்சில நிகழ்வுகளைச் செய்ததாகக் கதை இருக்கிறது. அவர்களைசிவ சக்தி ரூபமாக வடநாட்டினர் நினைப்பதால், அங்கெல்லாம்ஏக மரியாதை! திருநங்கைகள் கை தட்டிச் சப்தம் செய்யும்போது, திருஷ்டி கழிகிறதாம்! ஆசிர்வாதம் செய்து சொடுக்கு முறித்தால், பணம் செழிக்குமாம்! நம்பிக்கை!.நம் ஊரில் அந்தப் பழக்கம் இல்லை என்றாலும், அவர்களை நோகடிக்காமலாவது இருப்போமே!.அவர்கள் நம் தலையைத் தொட்டு ஆசிர்வதித்தால், புன்சிரிப்புடன்சின்ன சன்மானம் தரலாம். ஏனென்றால், அவர்கள் இயற்கையால், குடும்பத்தாரால், சமூகத்தால் மட்டுமல்ல… ஆண்டவனாலும் வஞ்சிக்கப்பட்ட பிறவிகள்!.புத்தாண்டு சபதம் எடுத்து கடைப்பிடிக்க முடியாமல் சொதப்பியதுண்டா மேடம்?என். கோமதி, நெல்லை..புத்தாண்டு சபதம்தானே! பேஷா!'முடி'யுமா… 'முடி'யாதான்னு யோசிக்கவே இல்லியே! துணிச்சலா 'முடி'வெடுத்தேன்!.சால்ட் அண்ட் பெப்பர் லுக்கில் ஒரு செல்ஃபி எடுத்து, 'இனி ஹேர் டை அடிப்பதில்லை!' என வாட்ஸ்அப்பில் அனுப்பி வைத்தேன். ஒரே பாராட்டு! லைக்ஸ்!.மறுநாள் கணவருடன் கோயில் விஸிட்! அங்கே ஒரு சின்னக் குழந்தை ஆறு வயசுக்குள்! கையில் இருந்த பழத்தைக் கொடுத்தேன்… வாங்க மறுத்து வெட்கப்பட்டது..உடனே, அந்தக் குழந்தையின் அப்பா, "பாட்டிடா…வாங்கிக்க!" என்று தூண்டினார்..பின்னாலேயே நின்றிருந்த என் கணவர் தமது சட்டைப் பையிலிருந்த ஒரு சாக்லெட்டை நீட்டினார்… உடனே கை நீட்டி வாங்கிக்கொண்டது.."மாமாவுக்கு தாங்க்ஸ் சொல்லு!" இது குழந்தையின் அம்மா. திரும்பிப் பார்த்தால் இவர் அழகாய் 'டை' பூசிக்கொண்டு சிரித்த வண்ணம் நிற்கிறார். அதுவும் நான் காலையில் பூசிவிட்ட ஹேர் டை!."ஏம்மா… இரண்டு ஒண்ணு முடி நரைச்சுட்டா உடனே பாட்டியா? அதுவும் இளநரை!" ட்ரிக்கர் ஆயிட்டேன். இது 'do or dye' விஷயமாச்சே! உடனே முடிவெடுத்தேன்..'இனி 'ஹேர் டை' அடிப்பதில்லை… என் கணவருக்கு!' புத்தாண்டு சபதம்! எப்படியோ நிறைவேத்திட்டோமுல்ல?!.இந்த வாரப் பூங்கொத்து யாருக்கு அனுஷா?-பிரபாவாசன், மேட்டூர்..நாம் சோற்றில் கை வைக்கணுங்கிறதுக்காக, சேற்றில் கால் வைக்குற பெண் விவசாயி வேதாரண்யம் சிவரஞ்சனிக்கு!.இன்ஜினியரிங் படித்த இந்த இளம் பெண் 1250 பாரம்பரிய நெல் ரகங்களை சாகுபடி செய்து வருகிறாராம்! நம்ப இந்தியாவுல, 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட நெல் ரகங்கள் இருந்த பொற்காலம் ஒன்று இருந்தது. ஆனா, இப்ப நாற்பது, ஐம்பது வெரைட்டிகூட இல்லையாம். அதனால, இந்தியா முழுக்கச் சுற்றி அலைஞ்சு, மருத்துவ குணமும், ஊட்டச் சத்துமிக்க பாரம்பரிய நெல் வகைகளைக் கண்டுபிடித்து, அவற்றை இயற்கை முறையில் பயிரிட்டு, விதை நெல்லாகவும் வழங்கி வருகிறாராம்!வெல்டன் சிவரஞ்சனி! பாராட்டுக்குரிய முயற்சி!.தனுஷ் – ஐஸ்வர்யா பிரிவு?-வாணி வெங்கடேஷ், சென்னை..ஏம்மா, நாற்பதாயிரம் சம்பாதிக்கிற பொண்ணுங்களே நாலாவது நாளே 'டிவோர்ஸ்'னு நிக்கும்போது, நானூறு கோடிக்கு அதிபதியான ரஜினியின் செல்ல மகள் மணவாழ்க்கை கசந்த பின்னும் சகிச்சுக்கிட்டு வாழணும்னு நினைக்கிறது அபத்தமில்லையோ?.ரஜினி ஒரு வேளை 'சி.எம்' ஆயிடுவாரோன்னு ஒரு வித அச்சம் கூடிய ஆர்வத்துல இருந்தார் தனுஷ்! எப்போ அரசியல் பிரவேசமில்லைன்னு நிச்சயம் ஆயிடுச்சோ, இனி ஏறி வந்த ஏணி தேவையில்லை; அந்தக் குடும்பத்தின் கண்ட்ரோலும் தேவையில்லை! மனம் போன போக்கில் வாழ இருவருக்குமே உரிமை உண்டே! பதினெட்டு வருஷ நாடக வாழ்க்கை முடிந்து, இனியாவது சுயமாக மகிழ்ச்சியாக வாழ வாழ்த்துவோம்!
பணம் கொடுத்தால் திருநங்கைகள் நம் தலையைத் தொட்டு ஆசிர்வாதம் பண்ணுகிறார்களே?எஸ். கெஜலட்சுமி, லால்குடி..மறைந்த எழுத்தாளர் சு. சமுத்திரம் எழுதிய 'வாடாமல்லி' நாவலைப் படிச்சிருக்கீங்களா? திருநங்கைகள் பற்றிய கதை. அதில் 'சுயம்பு' என்ற இளைஞன், தனக்குள் ஒரு பெண் இருப்பதை அறிந்த நொடி முதல்,அவன் படும் அவஸ்தைகள், அவமானங்கள், நிராகரிப்புகள்,ஏளனப் பார்வைகள், காதல்(!) என எல்லாமே வலிக்க வலிக்கச் சொல்லப்பட்டிருக்கும்..'பிரம்மன் செய்த மரபணுப் பிழை அவர்கள்; பால் மாற்றம் ஊனமல்ல!' என்று நாம் ஓரளவு புரிந்துகொண்டு விட்டோம். ஆனாலும் அவர்கள் பஸ்ஸிலோ, ரயிலிலோ உட்கார்ந்து இருந்தால், பக்கத்து சீட் காலியாகத்தான் இருக்கும். நிரந்தரமான சமூக விலகல்!!.மகாபாரதத்தில் அரவாணிகளைப் பலி கொடுத்து, ஸ்ரீகிருஷ்ணர்சில நிகழ்வுகளைச் செய்ததாகக் கதை இருக்கிறது. அவர்களைசிவ சக்தி ரூபமாக வடநாட்டினர் நினைப்பதால், அங்கெல்லாம்ஏக மரியாதை! திருநங்கைகள் கை தட்டிச் சப்தம் செய்யும்போது, திருஷ்டி கழிகிறதாம்! ஆசிர்வாதம் செய்து சொடுக்கு முறித்தால், பணம் செழிக்குமாம்! நம்பிக்கை!.நம் ஊரில் அந்தப் பழக்கம் இல்லை என்றாலும், அவர்களை நோகடிக்காமலாவது இருப்போமே!.அவர்கள் நம் தலையைத் தொட்டு ஆசிர்வதித்தால், புன்சிரிப்புடன்சின்ன சன்மானம் தரலாம். ஏனென்றால், அவர்கள் இயற்கையால், குடும்பத்தாரால், சமூகத்தால் மட்டுமல்ல… ஆண்டவனாலும் வஞ்சிக்கப்பட்ட பிறவிகள்!.புத்தாண்டு சபதம் எடுத்து கடைப்பிடிக்க முடியாமல் சொதப்பியதுண்டா மேடம்?என். கோமதி, நெல்லை..புத்தாண்டு சபதம்தானே! பேஷா!'முடி'யுமா… 'முடி'யாதான்னு யோசிக்கவே இல்லியே! துணிச்சலா 'முடி'வெடுத்தேன்!.சால்ட் அண்ட் பெப்பர் லுக்கில் ஒரு செல்ஃபி எடுத்து, 'இனி ஹேர் டை அடிப்பதில்லை!' என வாட்ஸ்அப்பில் அனுப்பி வைத்தேன். ஒரே பாராட்டு! லைக்ஸ்!.மறுநாள் கணவருடன் கோயில் விஸிட்! அங்கே ஒரு சின்னக் குழந்தை ஆறு வயசுக்குள்! கையில் இருந்த பழத்தைக் கொடுத்தேன்… வாங்க மறுத்து வெட்கப்பட்டது..உடனே, அந்தக் குழந்தையின் அப்பா, "பாட்டிடா…வாங்கிக்க!" என்று தூண்டினார்..பின்னாலேயே நின்றிருந்த என் கணவர் தமது சட்டைப் பையிலிருந்த ஒரு சாக்லெட்டை நீட்டினார்… உடனே கை நீட்டி வாங்கிக்கொண்டது.."மாமாவுக்கு தாங்க்ஸ் சொல்லு!" இது குழந்தையின் அம்மா. திரும்பிப் பார்த்தால் இவர் அழகாய் 'டை' பூசிக்கொண்டு சிரித்த வண்ணம் நிற்கிறார். அதுவும் நான் காலையில் பூசிவிட்ட ஹேர் டை!."ஏம்மா… இரண்டு ஒண்ணு முடி நரைச்சுட்டா உடனே பாட்டியா? அதுவும் இளநரை!" ட்ரிக்கர் ஆயிட்டேன். இது 'do or dye' விஷயமாச்சே! உடனே முடிவெடுத்தேன்..'இனி 'ஹேர் டை' அடிப்பதில்லை… என் கணவருக்கு!' புத்தாண்டு சபதம்! எப்படியோ நிறைவேத்திட்டோமுல்ல?!.இந்த வாரப் பூங்கொத்து யாருக்கு அனுஷா?-பிரபாவாசன், மேட்டூர்..நாம் சோற்றில் கை வைக்கணுங்கிறதுக்காக, சேற்றில் கால் வைக்குற பெண் விவசாயி வேதாரண்யம் சிவரஞ்சனிக்கு!.இன்ஜினியரிங் படித்த இந்த இளம் பெண் 1250 பாரம்பரிய நெல் ரகங்களை சாகுபடி செய்து வருகிறாராம்! நம்ப இந்தியாவுல, 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட நெல் ரகங்கள் இருந்த பொற்காலம் ஒன்று இருந்தது. ஆனா, இப்ப நாற்பது, ஐம்பது வெரைட்டிகூட இல்லையாம். அதனால, இந்தியா முழுக்கச் சுற்றி அலைஞ்சு, மருத்துவ குணமும், ஊட்டச் சத்துமிக்க பாரம்பரிய நெல் வகைகளைக் கண்டுபிடித்து, அவற்றை இயற்கை முறையில் பயிரிட்டு, விதை நெல்லாகவும் வழங்கி வருகிறாராம்!வெல்டன் சிவரஞ்சனி! பாராட்டுக்குரிய முயற்சி!.தனுஷ் – ஐஸ்வர்யா பிரிவு?-வாணி வெங்கடேஷ், சென்னை..ஏம்மா, நாற்பதாயிரம் சம்பாதிக்கிற பொண்ணுங்களே நாலாவது நாளே 'டிவோர்ஸ்'னு நிக்கும்போது, நானூறு கோடிக்கு அதிபதியான ரஜினியின் செல்ல மகள் மணவாழ்க்கை கசந்த பின்னும் சகிச்சுக்கிட்டு வாழணும்னு நினைக்கிறது அபத்தமில்லையோ?.ரஜினி ஒரு வேளை 'சி.எம்' ஆயிடுவாரோன்னு ஒரு வித அச்சம் கூடிய ஆர்வத்துல இருந்தார் தனுஷ்! எப்போ அரசியல் பிரவேசமில்லைன்னு நிச்சயம் ஆயிடுச்சோ, இனி ஏறி வந்த ஏணி தேவையில்லை; அந்தக் குடும்பத்தின் கண்ட்ரோலும் தேவையில்லை! மனம் போன போக்கில் வாழ இருவருக்குமே உரிமை உண்டே! பதினெட்டு வருஷ நாடக வாழ்க்கை முடிந்து, இனியாவது சுயமாக மகிழ்ச்சியாக வாழ வாழ்த்துவோம்!