கதை: மீனாட்சி அண்ணாமலைஓவியம்: தமிழ்."சிவா, சிவப்பு சிக்னல் விழுந்துடுச்சு. கேட் திறக்க சிறிது நேரம் ஆகும். ஒரு பாட்டை போட்டுவிடேன்" என்று ரவி கேட்கும்போது காரின் கதவை ஒரு சிறுவன் தட்டினான்.."அண்ணா ப்ளீஸ் ஒரு புத்தகம் பத்து ருபாய்தான். பொது அறிவு புத்தகம், காந்தி, நேரு, பட்டேல், விவேகானந்தர் போன்ற அறிஞர்களின் வாழ்க்கை வரலாறு என நிறைய புத்தகங்கள் இருக்கிறது" என்று கெஞ்சினான்.."ரவி, இந்த பையனை பல மாதங்களாகவே இங்கு பார்க்கிறேன். கேட் முடியவுடன் புத்தகத்தை தூக்கிக் கொண்டு சுறுசுறுப்பாய் ஓடி ஓடி விற்கிறான்" என்றான் சிவா.."நாளை வெள்ளிக்கிழமைதானே சுவாமி சுலோகம், சமையல் குறிப்பு போன்ற புத்தகங்களை எடுத்துக்கொண்டு பெண்கள் இருக்கும் பக்கமாய் சென்று விற்பான் பாரேன்" என்ற ரவி, "இந்த மாதிரி பையன்கள்தான் படிப்பை பாதியிலேயே நிறுத்திவிட்டு பிஞ்சிலேயே பழுதது, பின்னாளில் ரவுடிகளாக வளர்ந்து விடுகிறார்கள்" என்றான்.."எனக்கு அந்த பையன் நல்லவனாகத்தான் தெரிகிறான். வறுமை காரணமாக சிறுவயதிலேயே உழைக்க வேண்டியது காரணமாக இருக்கலாம். உனக்காக அவனுக்கு ஒரு பரீட்சை வைத்து அவனை எடை போடுவோம்" என்றான் சிவா..வீட்டிற்கு வந்த சிறுவன் அன்பு தூங்கிக் கொண்டிருந்த பாட்டியை பாட்டி, பாட்டி என்று கூப்பிட்டுப் பார்த்தான். பாட்டி கண்ணைத் திறக்கவில்லை. அவள்தான் கடந்த கால நினைவுகளில் மூழ்கிப் போயிருந்தாளே! பேருந்து புறப்படும் சத்தம் கேட்டு, பேரனுடன் ஓடி வந்த வெள்ளச்சி பாட்டி, வேக வேகமாக பஸ்ஸில் ஏறினாள். "நான் ஓர சீட்டில் உட்கார்ந்து கொண்டு வேடிக்கை பார்த்து வருகிறேன் பாட்டி" என்ற அன்பு, "ஏன் பாட்டி தூங்கிக் கொண்டிருந்த என்னை அவசரமாக எழுப்பி சென்னைக்கு அழைத்துச் செல்கிறீர்கள்?" என்று கேட்டான். பாட்டியின் கண்ணீரை கண்டு கலவரமாக "ஏன் பாட்டி நாம் கிராமத்திற்கு திரும்பி வர மாட்டோமா? நான் பள்ளிக்கு செல்வது எப்படி? படிப்பது எப்படி?" என்று கேட்டான்.."இனிமேல் நாம் சென்னையில்தான் இருக்கப் போகிறோம். நீ அங்கேயே படித்து உன் அம்மா, அப்பா போல பெரிய ஆபீசில் வேலை செய்ய வேண்டும்" என்றபடி பேரனின் தலையை வெள்ளச்சி வருட அன்பு பாட்டியின் மடியில் சுகமாக தூங்கிப் போனான்..முதல்நாள் இரவே போன் செய்திருந்ததால், சரோஜா கோயம்பேடு பஸ் ஸ்டேண்டில் வந்து காத்திருந்தாள். அன்பரசுவை முதன்முறையாக பார்த்த சரோஜா என்ன அழகா அய்யர்வூட்டு புள்ள மாதிரி இருக்கான். சின்ன வயசுலேயே ஆத்தா அப்பனை இழந்துவிட்டானே என்று கண் கலங்கினாள். பின் வெள்ளச்சி பக்கம் திரும்பி, "சித்தி நாங்க இருக்கும் இடமெல்லாம் கொஞ்சம் கலீஜாதான் இருக்கும். உங்க அக்காவை சென்னையில் மீன் விற்கிறவருக்குத்தானே கட்டிக் கொடுத்தீங்க. உங்கக்காவும் மீன் விக்கிற மாதிரி என்னையும் ஒரு மீன்காரருக்கே கட்டி வச்சிட்டா" என்றாள் சரோஜா.."கொஞ்சநாள் நாங்க உன் வீட்டில் தங்கிக் கொள்கிறோம். பிறகு வேறு வீடு பார்த்துக் கொள்கிறேன்" என்றாள் வெள்ளச்சி.."என் வீடும், மனசும் கடல் மாதிரிதான் சித்தி. நீங்கள் எங்கும் போக வேண்டாம். என் வீட்டிலேயே எனக்கு துணையாக தங்கிக் கொள்ளுங்கள்" என்றாள் சரோஜா. வெள்ளச்சி சத்தமாக சிரித்துவிட்டு "உன் மனசு உண்மையிலேயே பெருசுதாண்டி. இரண்டு ரூம் உள்ள வீட்டைப் போய் கடல் மாதிரி" என்கிறாயே என்றாள்.."சித்தி, அன்புவை இங்கேயே ஸ்கூல்ல சேர்த்து விட்டுடறேன். ரெண்டு தெரு தள்ளி அம்மன் கோயில் வாசலில் அம்மாவோட கடை ஒண்ணு பூட்டியே இருக்கிறது. நீங்க அங்கேயே பூக்கடை வைத்துக் கொள்ளலாம்" என்றாள் சரோஜா. எதிர்காலத்தைப் பற்றி கவலைப்பட்ட வெள்ளச்சிக்கு கடவுளே சரோஜா வடிவில் வந்து வழிகாட்டிவிட்டார். ஒரு கதவு அடைபட்டால் மறு கதவை திறந்து கடவுள் நல்ல வழிகாட்டுவார் என்பது உண்மைதான் என நினைத்த வெள்ளச்சி ஒரு நல்ல நாளில் அம்மனை வேண்டியபடியே வியாபாரத்தை தொடங்கினாள்.."ஒருநாள் பாட்டி உன் பேரன்தான் பள்ளியிலேயே முதல் மாணவனாக வருகிறானாமே" என்று பக்கத்து கடை ராமு கேட்டான். ஆனால், அன்பு அடிக்கடி பள்ளிக்குச் செல்லாமல் லீவு போடுகிறானே என்று ராமு வருத்தப்பட்டான்.."என் மகளும் மருமகனும் நன்றாக படித்து வேலைக்கு போனவர்கள்தான். அதனால்தான் என் பேரனும் நன்றாக படிக்கிறான்" என்றாள்..வசதியாக வாழ்ந்த பேரன் ஓடியாடி விளையாட வேண்டிய வயதில் என்கூட இருந்து வறுமையில் கஷ்டப்படுகிறான் என்று வெள்ளச்சியம்மா வருந்தினாள்.."ஏன் பாட்டி, அவனுக்கு உன்னை விட்டால் யாருமில்லையா?" என்று ராமு கேட்க, "எனக்கு பிறந்தது ஒரே மகள். அவளும் நன்கு படித்து பெரிய வேலைக்குப் போனாள். அந்நேரம் பார்த்து அவள் அப்பா இறந்துவிட, அம்மாவிற்கு மாப்பிள்ளை பாத்துவைக்க துப்பில்லை என்றெண்ணினாளோ என்னவோ கூட வேலை செய்யும் உயர்ந்த சாதிப் பையனை அதுவும் வசதியான வீட்டுப் பையனை காதலித்து எனக்குத் தெரியாமல் திருமணம் செய்துகொண்டாள். நான் வீட்டில் சேர்க்கவில்லை. மாப்பிள்ளை வீட்டைப் பற்றி கேட்க வேண்டுமா? தனிக்குடித்தனத்தில் நன்றாகத்தான் வாழ்ந்து வந்தாள். அன்பரசுவை பெற்றெடுத்து நன்றாக வளர்ந்து வந்தாள். யார் கண்பட்டதோ, ஒருநாள் பையனை பள்ளிக்கு அனுப்பிவிட்டு, காரில் ஒரு திருமணத்திற்கு செல்லும்போது கார் மரத்தில் மோதி எம் பெண்ணும் மாப்பிள்ளையும் அந்த இடத்திலேயே இறந்து போனார்கள். பெத்த மனம் பித்தாச்சே இருவருக்கும் ஈமகாரியங்களை செய்துவிட்டு பேரனை என்னுடன் அழைத்துக் கொண்டு வந்துவிட்டேன்" என்றாள் வெள்ளச்சி.."மாப்பிள்ளை இறந்த பின் அவர்கள் வீட்டில் சொத்து பிரச்னை தலை தூக்கியது. பேரனுக்கும் பங்கு தர தாத்தா நினைத்தபோது மாப்பிள்ளையின் அண்ணனும், அக்காவும் உறவே வேண்டாமென்று நம் கெளரவத்தை கெடுத்து ஓடிப்போனவனை இறந்தவனை மறந்து விடுங்கள். பேரனை அழைத்து வந்து உறவை புதுப்பிக்க முயல வேண்டாம் என்று பெற்றோரை மிரட்டியிருக்கிறார்கள். ஒருநாள் மாப்பிள்ளையின் உறவுக்காரர் ஒருவர் என்னிடம் வந்து உன் பேரனை கொல்ல சதி செய்கிறார்கள். அவனை எங்காவது கூட்டிக்கொண்டு கண்காணாமல் போய்விடுங்கள் என்றார். எனவேதான் மறுநாள் கருக்கலிலேயே யாரிடமும் சொல்லாமல் கொள்ளாமல் அன்புடன் சென்னைக்கு பஸ் ஏறிவந்துவிட்டேன்" என்றாள் வெள்ளச்சி..ஒரு நாள், சார் ஒரு புத்தகம் பத்து ரூபாய்தான் என்று கூறியபடி அன்பரசு புத்தகம் விற்றுக் கொண்டிருந்தான். அங்கே ஊனமுற்ற ஒரு சிறுவனும் பிச்சையெடுத்துக் கொண்டிருந்தான். அன்பு அவனுக்கு இரண்டு ரூபாய் கொடுத்தான். கேட்டில், காரில் அமர்ந்திருந்த சிவா, ரவியிடம் "சிறுவயதிலேயே அந்த பையனின் பரோபகாரத்தை பார்த்தாயா?" என்றான். "நாளை வைக்கும் பரீட்சையில் அவன் வெற்றி பெற்றால் அவனுக்கு நாம் உதவி செய்யலாம்" என்று கூறினான். "நாமிருவரும் ஒரே அலுவலகத்தில் வேலை செய்வதாலும், நண்பர்களாக இருப்பதாலும் ஒரே காரில் வேலைக்கு வந்து செல்கிறோம். பெட்ரோல் செலவை மிச்சப்படுத்தி அப்பணத்தை ஏழை பிள்ளைகள் படிப்பிற்கு உதவி வருகிறோம். அப்படி இவனுக்கும் கொடுத்து உதவுவோம்" என்றான் சிவா.."தம்பி இங்கே வா. ஏதாவது ஆன்மிக புத்தகம் இருந்தால் கொடு" என்று கேட்டு வாங்கினான் சிவா. "சரிண்ணா, நான் வருகிறேன்" என்று நகர்ந்த அன்பு கீழே இருந்த ரூபாய் நோட்டை குனிந்து எடுத்து பாக்கெட்டில் வைத்துக்கொண்டான்.."ஐநூறு ரூபாய் நோட்டை நான்தான் கீழே போட்டேன். பணத்தை எடுத்தவன் திருப்பி கொடுத்தானா பார்த்தாயா ரவி" என்றான் சிவா.."நான்தான் அன்றே சொன்னேனே இவன் போன்ற ரோட்டோரத்து பிள்ளைகள் எல்லாம் ஒழுக்கமற்றவர்களாகத்தான் இருப்பார்கள்" என்ற ரவியிடம் "ஒரு வாரம்வரை பார்ப்போம். பிறகு அவனை கூப்பிட்டு கேட்கலாம்" என்றான் சிவா..சில நாட்கள் கழித்து காரருகே வந்த அன்பரசு, "அண்ணா இங்கே போன வாரம் நீங்கள் ஐநூறு ரூபாய் நோட்டை தவற விட்டீர்களா?" என்று சிவாவிடம் தயங்கியபடியே கேட்டான். "உங்கள் காரருகே இருந்த நோட்டை நான்தான் எடுத்தேன். நீங்கள் அடிக்கடி கார் கண்ணாடியை ஏற்றி இறக்கி என்னை பார்த்தீர்கள். உங்கள் நோட்டாக இருந்தால் என்னை கூப்பிட்டு கேட்டிருப்பீர்களே. நீங்கள் கேட்காததால் அது உங்களுடையதல்ல என நினைத்துவிட்டேன்" என்றான்..காரை சாலை ஓரம் நிறுத்திய சிவா, அவனை அருகில் கூப்பிட்டு "இதை அன்றே என்னிடம் கேட்டிருக்கலாமே" என்றான்.."அண்ணா, தப்புதான். மன்னிச்சுடுங்க போன மாதம் இதே போல சிக்னலில் ஒரு லன்ச் பேக் கீழே கிடந்தது. பலரிடம் விசாரித்தேன். ஒரு அண்ணா என்னுடையதுதான் என்று சொல்லி வாங்கி சென்றுவிட்டார். சிறிது நேரம் கழித்து இங்கு வந்த ஒரு அக்கா இங்கு வந்து லன்ச்பேக் ஏதாவது கீழே கிடந்ததா என்று விசாரித்தார். அதனால்தான் இம்முறை பணம் யாருடையது என்று யாரிடமும் நான் கேட்கவில்லை" என்றான் அன்பு.."ஓகோ பணமாக கிடந்தால் நீயே வைத்துக் கொள்வாயோ?" என்று அதட்டினான் சிவா.."அண்ணா, எனக்கு அப்பா, அம்மா கிடையாது. பாட்டிதான் என்னை வளர்க்கிறார்கள். பொய் சொல்லக் கூடாது, திருடக் கூடாது. பிறர் பொருளுக்கு ஆசைப்படக்கூடாது என்று அடிக்கடி எனக்கு பாட்டி புத்திமதி சொல்வார்கள்" என்றான் அன்பு.."சரி அந்த பணத்தை என்ன செய்தாய்?" என சிவா கேட்டான்.."அம்மன் கோயில் வாசலில் பூ விற்கும் என் பாட்டி ஒரு மரப்பெட்டி மீதுதான் உட்கார்ந்திருப்பார்கள். போன வாரம், அந்த மரப்பெட்டியும் உடைந்துபோய், பாட்டிக்கு காலில் அடிபட்டு விட்டது. எனக்கு நினைவு தெரிந்த நாளில் இருந்து பாட்டி நாற்காலியில் உட்கார்ந்து பார்த்ததில்லை. கிராமத்தில்கூட திண்ணையில் சாய்ந்து கொண்டும், வராண்டா சுவற்றில் சாய்ந்துகொண்டும்தான் உட்காருவார்கள். தியேட்டருக்கோ, ஓட்டலுக்கோ எப்போதாவது செல்லும்போது நாற்காலியை ஆசையாக தடவிப் பார்ப்பார்கள். எனவே, பாட்டிக்கு ஒரு நாற்காலி வாங்க ஆசைப்பட்ட நான் பள்ளி செல்லும் நேரம் போக மற்ற நேரமெல்லாம் இந்த சிக்னலில் புத்தகம் விற்று காசு சேர்த்து வருகிறேன். அந்தப் பணத்துடன் இந்த ஐநூறு ரூபாயையும் சேர்த்து பாட்டிக்கு ஒரு நாற்காலி வாங்கினேன்" என்றான் அன்பரசு.."பாட்டியை கூப்பிட்டு, இனிமேல் இந்த நாற்காலியில் உட்கார்ந்துகொண்டு வியாபாரம் செய் என்று உட்காரச் சொன்னேன். ஆனால், பாட்டியோ நாற்காலி வாங்க ஏது பணம்? திருடினியா? என்று கேட்டுவிட்டு, எப்பொழுதும் திட்டக்கூட செய்யாதவள் என்னை அடிக்க வந்தார். நடந்ததை நான் சொன்னபின் முதலில் இந்த நாற்காலியை வாங்கிய கடையிலேயே கொடுத்துவிட்டு பணம் வாங்கிவா, இல்லையென்றால் விற்றுவிட்டு பணம் கொண்டு வா என்று சொன்னார்கள். அடுத்தவர் பணத்தில் வாழக்கூடாது. நீ படித்து வேலைக்கு போய் சம்பாதித்து என்னை சுழல் நாற்காலியில் உட்கார வை என்றும் புத்திமதி சொன்னார்கள்" என்றான்.."பணத்தை உரியவர்களிடம் சேர்த்துவிட்டு வந்தால்தான், இனி எந்த காலத்திலும் நீ வாங்கித் தரும் நாற்காலியில் உட்காருவேன் என்றும் சொல்லிவிட்டார்கள். அண்ணா பணம் உங்களதுதானா" என்று கேட்ட அன்பரசுவிடம் ஒன்றும் பேசாமல் பணத்தை பெற்றுக்கொண்டு சிவாவும் ரவியும் அங்கிருந்து சென்றுவிட்டனர். அன்பரசுவும் வீட்டிற்கு வந்து நடந்ததை பாட்டியிடம் கூறி மன்னிப்பு கேட்டான்..மறுநாள் பூக்காரம்மா வெள்ளச்சி யாரு என்று விசாரித்தபடி அம்மன் கோயில் வாசலில் நின்றபடி விசாரித்தவரிடம் அய்யா என்ன காரணமா அவரை தேடுகிறீர்கள்? நான்தான் வெள்ளச்சி என்ற பாட்டியிடம் விசாரித்தவர் ஒரு கடிதத்தை கொடுத்துவிட்ட ஒரு நாற்காலியையும் வைத்துவிட்டு சென்றார். 'உங்கள் மகன் கொடுத்ததாக நினைத்து இந்த நாற்காலியை ஏற்றுக் கொள்ளுங்கள். இது உங்கள் பேரனின் நேர்மைக்கு என் பரிசு' என்று கடிதத்தில் எழுதியிருந்ததை பாட்டிக்கு படித்துச் சொன்னான் அன்பரசு.மறைவில் நின்றபடி ரவியும், சிவாவும் அதை பார்த்துக் கொண்டிருந்தனர்.
கதை: மீனாட்சி அண்ணாமலைஓவியம்: தமிழ்."சிவா, சிவப்பு சிக்னல் விழுந்துடுச்சு. கேட் திறக்க சிறிது நேரம் ஆகும். ஒரு பாட்டை போட்டுவிடேன்" என்று ரவி கேட்கும்போது காரின் கதவை ஒரு சிறுவன் தட்டினான்.."அண்ணா ப்ளீஸ் ஒரு புத்தகம் பத்து ருபாய்தான். பொது அறிவு புத்தகம், காந்தி, நேரு, பட்டேல், விவேகானந்தர் போன்ற அறிஞர்களின் வாழ்க்கை வரலாறு என நிறைய புத்தகங்கள் இருக்கிறது" என்று கெஞ்சினான்.."ரவி, இந்த பையனை பல மாதங்களாகவே இங்கு பார்க்கிறேன். கேட் முடியவுடன் புத்தகத்தை தூக்கிக் கொண்டு சுறுசுறுப்பாய் ஓடி ஓடி விற்கிறான்" என்றான் சிவா.."நாளை வெள்ளிக்கிழமைதானே சுவாமி சுலோகம், சமையல் குறிப்பு போன்ற புத்தகங்களை எடுத்துக்கொண்டு பெண்கள் இருக்கும் பக்கமாய் சென்று விற்பான் பாரேன்" என்ற ரவி, "இந்த மாதிரி பையன்கள்தான் படிப்பை பாதியிலேயே நிறுத்திவிட்டு பிஞ்சிலேயே பழுதது, பின்னாளில் ரவுடிகளாக வளர்ந்து விடுகிறார்கள்" என்றான்.."எனக்கு அந்த பையன் நல்லவனாகத்தான் தெரிகிறான். வறுமை காரணமாக சிறுவயதிலேயே உழைக்க வேண்டியது காரணமாக இருக்கலாம். உனக்காக அவனுக்கு ஒரு பரீட்சை வைத்து அவனை எடை போடுவோம்" என்றான் சிவா..வீட்டிற்கு வந்த சிறுவன் அன்பு தூங்கிக் கொண்டிருந்த பாட்டியை பாட்டி, பாட்டி என்று கூப்பிட்டுப் பார்த்தான். பாட்டி கண்ணைத் திறக்கவில்லை. அவள்தான் கடந்த கால நினைவுகளில் மூழ்கிப் போயிருந்தாளே! பேருந்து புறப்படும் சத்தம் கேட்டு, பேரனுடன் ஓடி வந்த வெள்ளச்சி பாட்டி, வேக வேகமாக பஸ்ஸில் ஏறினாள். "நான் ஓர சீட்டில் உட்கார்ந்து கொண்டு வேடிக்கை பார்த்து வருகிறேன் பாட்டி" என்ற அன்பு, "ஏன் பாட்டி தூங்கிக் கொண்டிருந்த என்னை அவசரமாக எழுப்பி சென்னைக்கு அழைத்துச் செல்கிறீர்கள்?" என்று கேட்டான். பாட்டியின் கண்ணீரை கண்டு கலவரமாக "ஏன் பாட்டி நாம் கிராமத்திற்கு திரும்பி வர மாட்டோமா? நான் பள்ளிக்கு செல்வது எப்படி? படிப்பது எப்படி?" என்று கேட்டான்.."இனிமேல் நாம் சென்னையில்தான் இருக்கப் போகிறோம். நீ அங்கேயே படித்து உன் அம்மா, அப்பா போல பெரிய ஆபீசில் வேலை செய்ய வேண்டும்" என்றபடி பேரனின் தலையை வெள்ளச்சி வருட அன்பு பாட்டியின் மடியில் சுகமாக தூங்கிப் போனான்..முதல்நாள் இரவே போன் செய்திருந்ததால், சரோஜா கோயம்பேடு பஸ் ஸ்டேண்டில் வந்து காத்திருந்தாள். அன்பரசுவை முதன்முறையாக பார்த்த சரோஜா என்ன அழகா அய்யர்வூட்டு புள்ள மாதிரி இருக்கான். சின்ன வயசுலேயே ஆத்தா அப்பனை இழந்துவிட்டானே என்று கண் கலங்கினாள். பின் வெள்ளச்சி பக்கம் திரும்பி, "சித்தி நாங்க இருக்கும் இடமெல்லாம் கொஞ்சம் கலீஜாதான் இருக்கும். உங்க அக்காவை சென்னையில் மீன் விற்கிறவருக்குத்தானே கட்டிக் கொடுத்தீங்க. உங்கக்காவும் மீன் விக்கிற மாதிரி என்னையும் ஒரு மீன்காரருக்கே கட்டி வச்சிட்டா" என்றாள் சரோஜா.."கொஞ்சநாள் நாங்க உன் வீட்டில் தங்கிக் கொள்கிறோம். பிறகு வேறு வீடு பார்த்துக் கொள்கிறேன்" என்றாள் வெள்ளச்சி.."என் வீடும், மனசும் கடல் மாதிரிதான் சித்தி. நீங்கள் எங்கும் போக வேண்டாம். என் வீட்டிலேயே எனக்கு துணையாக தங்கிக் கொள்ளுங்கள்" என்றாள் சரோஜா. வெள்ளச்சி சத்தமாக சிரித்துவிட்டு "உன் மனசு உண்மையிலேயே பெருசுதாண்டி. இரண்டு ரூம் உள்ள வீட்டைப் போய் கடல் மாதிரி" என்கிறாயே என்றாள்.."சித்தி, அன்புவை இங்கேயே ஸ்கூல்ல சேர்த்து விட்டுடறேன். ரெண்டு தெரு தள்ளி அம்மன் கோயில் வாசலில் அம்மாவோட கடை ஒண்ணு பூட்டியே இருக்கிறது. நீங்க அங்கேயே பூக்கடை வைத்துக் கொள்ளலாம்" என்றாள் சரோஜா. எதிர்காலத்தைப் பற்றி கவலைப்பட்ட வெள்ளச்சிக்கு கடவுளே சரோஜா வடிவில் வந்து வழிகாட்டிவிட்டார். ஒரு கதவு அடைபட்டால் மறு கதவை திறந்து கடவுள் நல்ல வழிகாட்டுவார் என்பது உண்மைதான் என நினைத்த வெள்ளச்சி ஒரு நல்ல நாளில் அம்மனை வேண்டியபடியே வியாபாரத்தை தொடங்கினாள்.."ஒருநாள் பாட்டி உன் பேரன்தான் பள்ளியிலேயே முதல் மாணவனாக வருகிறானாமே" என்று பக்கத்து கடை ராமு கேட்டான். ஆனால், அன்பு அடிக்கடி பள்ளிக்குச் செல்லாமல் லீவு போடுகிறானே என்று ராமு வருத்தப்பட்டான்.."என் மகளும் மருமகனும் நன்றாக படித்து வேலைக்கு போனவர்கள்தான். அதனால்தான் என் பேரனும் நன்றாக படிக்கிறான்" என்றாள்..வசதியாக வாழ்ந்த பேரன் ஓடியாடி விளையாட வேண்டிய வயதில் என்கூட இருந்து வறுமையில் கஷ்டப்படுகிறான் என்று வெள்ளச்சியம்மா வருந்தினாள்.."ஏன் பாட்டி, அவனுக்கு உன்னை விட்டால் யாருமில்லையா?" என்று ராமு கேட்க, "எனக்கு பிறந்தது ஒரே மகள். அவளும் நன்கு படித்து பெரிய வேலைக்குப் போனாள். அந்நேரம் பார்த்து அவள் அப்பா இறந்துவிட, அம்மாவிற்கு மாப்பிள்ளை பாத்துவைக்க துப்பில்லை என்றெண்ணினாளோ என்னவோ கூட வேலை செய்யும் உயர்ந்த சாதிப் பையனை அதுவும் வசதியான வீட்டுப் பையனை காதலித்து எனக்குத் தெரியாமல் திருமணம் செய்துகொண்டாள். நான் வீட்டில் சேர்க்கவில்லை. மாப்பிள்ளை வீட்டைப் பற்றி கேட்க வேண்டுமா? தனிக்குடித்தனத்தில் நன்றாகத்தான் வாழ்ந்து வந்தாள். அன்பரசுவை பெற்றெடுத்து நன்றாக வளர்ந்து வந்தாள். யார் கண்பட்டதோ, ஒருநாள் பையனை பள்ளிக்கு அனுப்பிவிட்டு, காரில் ஒரு திருமணத்திற்கு செல்லும்போது கார் மரத்தில் மோதி எம் பெண்ணும் மாப்பிள்ளையும் அந்த இடத்திலேயே இறந்து போனார்கள். பெத்த மனம் பித்தாச்சே இருவருக்கும் ஈமகாரியங்களை செய்துவிட்டு பேரனை என்னுடன் அழைத்துக் கொண்டு வந்துவிட்டேன்" என்றாள் வெள்ளச்சி.."மாப்பிள்ளை இறந்த பின் அவர்கள் வீட்டில் சொத்து பிரச்னை தலை தூக்கியது. பேரனுக்கும் பங்கு தர தாத்தா நினைத்தபோது மாப்பிள்ளையின் அண்ணனும், அக்காவும் உறவே வேண்டாமென்று நம் கெளரவத்தை கெடுத்து ஓடிப்போனவனை இறந்தவனை மறந்து விடுங்கள். பேரனை அழைத்து வந்து உறவை புதுப்பிக்க முயல வேண்டாம் என்று பெற்றோரை மிரட்டியிருக்கிறார்கள். ஒருநாள் மாப்பிள்ளையின் உறவுக்காரர் ஒருவர் என்னிடம் வந்து உன் பேரனை கொல்ல சதி செய்கிறார்கள். அவனை எங்காவது கூட்டிக்கொண்டு கண்காணாமல் போய்விடுங்கள் என்றார். எனவேதான் மறுநாள் கருக்கலிலேயே யாரிடமும் சொல்லாமல் கொள்ளாமல் அன்புடன் சென்னைக்கு பஸ் ஏறிவந்துவிட்டேன்" என்றாள் வெள்ளச்சி..ஒரு நாள், சார் ஒரு புத்தகம் பத்து ரூபாய்தான் என்று கூறியபடி அன்பரசு புத்தகம் விற்றுக் கொண்டிருந்தான். அங்கே ஊனமுற்ற ஒரு சிறுவனும் பிச்சையெடுத்துக் கொண்டிருந்தான். அன்பு அவனுக்கு இரண்டு ரூபாய் கொடுத்தான். கேட்டில், காரில் அமர்ந்திருந்த சிவா, ரவியிடம் "சிறுவயதிலேயே அந்த பையனின் பரோபகாரத்தை பார்த்தாயா?" என்றான். "நாளை வைக்கும் பரீட்சையில் அவன் வெற்றி பெற்றால் அவனுக்கு நாம் உதவி செய்யலாம்" என்று கூறினான். "நாமிருவரும் ஒரே அலுவலகத்தில் வேலை செய்வதாலும், நண்பர்களாக இருப்பதாலும் ஒரே காரில் வேலைக்கு வந்து செல்கிறோம். பெட்ரோல் செலவை மிச்சப்படுத்தி அப்பணத்தை ஏழை பிள்ளைகள் படிப்பிற்கு உதவி வருகிறோம். அப்படி இவனுக்கும் கொடுத்து உதவுவோம்" என்றான் சிவா.."தம்பி இங்கே வா. ஏதாவது ஆன்மிக புத்தகம் இருந்தால் கொடு" என்று கேட்டு வாங்கினான் சிவா. "சரிண்ணா, நான் வருகிறேன்" என்று நகர்ந்த அன்பு கீழே இருந்த ரூபாய் நோட்டை குனிந்து எடுத்து பாக்கெட்டில் வைத்துக்கொண்டான்.."ஐநூறு ரூபாய் நோட்டை நான்தான் கீழே போட்டேன். பணத்தை எடுத்தவன் திருப்பி கொடுத்தானா பார்த்தாயா ரவி" என்றான் சிவா.."நான்தான் அன்றே சொன்னேனே இவன் போன்ற ரோட்டோரத்து பிள்ளைகள் எல்லாம் ஒழுக்கமற்றவர்களாகத்தான் இருப்பார்கள்" என்ற ரவியிடம் "ஒரு வாரம்வரை பார்ப்போம். பிறகு அவனை கூப்பிட்டு கேட்கலாம்" என்றான் சிவா..சில நாட்கள் கழித்து காரருகே வந்த அன்பரசு, "அண்ணா இங்கே போன வாரம் நீங்கள் ஐநூறு ரூபாய் நோட்டை தவற விட்டீர்களா?" என்று சிவாவிடம் தயங்கியபடியே கேட்டான். "உங்கள் காரருகே இருந்த நோட்டை நான்தான் எடுத்தேன். நீங்கள் அடிக்கடி கார் கண்ணாடியை ஏற்றி இறக்கி என்னை பார்த்தீர்கள். உங்கள் நோட்டாக இருந்தால் என்னை கூப்பிட்டு கேட்டிருப்பீர்களே. நீங்கள் கேட்காததால் அது உங்களுடையதல்ல என நினைத்துவிட்டேன்" என்றான்..காரை சாலை ஓரம் நிறுத்திய சிவா, அவனை அருகில் கூப்பிட்டு "இதை அன்றே என்னிடம் கேட்டிருக்கலாமே" என்றான்.."அண்ணா, தப்புதான். மன்னிச்சுடுங்க போன மாதம் இதே போல சிக்னலில் ஒரு லன்ச் பேக் கீழே கிடந்தது. பலரிடம் விசாரித்தேன். ஒரு அண்ணா என்னுடையதுதான் என்று சொல்லி வாங்கி சென்றுவிட்டார். சிறிது நேரம் கழித்து இங்கு வந்த ஒரு அக்கா இங்கு வந்து லன்ச்பேக் ஏதாவது கீழே கிடந்ததா என்று விசாரித்தார். அதனால்தான் இம்முறை பணம் யாருடையது என்று யாரிடமும் நான் கேட்கவில்லை" என்றான் அன்பு.."ஓகோ பணமாக கிடந்தால் நீயே வைத்துக் கொள்வாயோ?" என்று அதட்டினான் சிவா.."அண்ணா, எனக்கு அப்பா, அம்மா கிடையாது. பாட்டிதான் என்னை வளர்க்கிறார்கள். பொய் சொல்லக் கூடாது, திருடக் கூடாது. பிறர் பொருளுக்கு ஆசைப்படக்கூடாது என்று அடிக்கடி எனக்கு பாட்டி புத்திமதி சொல்வார்கள்" என்றான் அன்பு.."சரி அந்த பணத்தை என்ன செய்தாய்?" என சிவா கேட்டான்.."அம்மன் கோயில் வாசலில் பூ விற்கும் என் பாட்டி ஒரு மரப்பெட்டி மீதுதான் உட்கார்ந்திருப்பார்கள். போன வாரம், அந்த மரப்பெட்டியும் உடைந்துபோய், பாட்டிக்கு காலில் அடிபட்டு விட்டது. எனக்கு நினைவு தெரிந்த நாளில் இருந்து பாட்டி நாற்காலியில் உட்கார்ந்து பார்த்ததில்லை. கிராமத்தில்கூட திண்ணையில் சாய்ந்து கொண்டும், வராண்டா சுவற்றில் சாய்ந்துகொண்டும்தான் உட்காருவார்கள். தியேட்டருக்கோ, ஓட்டலுக்கோ எப்போதாவது செல்லும்போது நாற்காலியை ஆசையாக தடவிப் பார்ப்பார்கள். எனவே, பாட்டிக்கு ஒரு நாற்காலி வாங்க ஆசைப்பட்ட நான் பள்ளி செல்லும் நேரம் போக மற்ற நேரமெல்லாம் இந்த சிக்னலில் புத்தகம் விற்று காசு சேர்த்து வருகிறேன். அந்தப் பணத்துடன் இந்த ஐநூறு ரூபாயையும் சேர்த்து பாட்டிக்கு ஒரு நாற்காலி வாங்கினேன்" என்றான் அன்பரசு.."பாட்டியை கூப்பிட்டு, இனிமேல் இந்த நாற்காலியில் உட்கார்ந்துகொண்டு வியாபாரம் செய் என்று உட்காரச் சொன்னேன். ஆனால், பாட்டியோ நாற்காலி வாங்க ஏது பணம்? திருடினியா? என்று கேட்டுவிட்டு, எப்பொழுதும் திட்டக்கூட செய்யாதவள் என்னை அடிக்க வந்தார். நடந்ததை நான் சொன்னபின் முதலில் இந்த நாற்காலியை வாங்கிய கடையிலேயே கொடுத்துவிட்டு பணம் வாங்கிவா, இல்லையென்றால் விற்றுவிட்டு பணம் கொண்டு வா என்று சொன்னார்கள். அடுத்தவர் பணத்தில் வாழக்கூடாது. நீ படித்து வேலைக்கு போய் சம்பாதித்து என்னை சுழல் நாற்காலியில் உட்கார வை என்றும் புத்திமதி சொன்னார்கள்" என்றான்.."பணத்தை உரியவர்களிடம் சேர்த்துவிட்டு வந்தால்தான், இனி எந்த காலத்திலும் நீ வாங்கித் தரும் நாற்காலியில் உட்காருவேன் என்றும் சொல்லிவிட்டார்கள். அண்ணா பணம் உங்களதுதானா" என்று கேட்ட அன்பரசுவிடம் ஒன்றும் பேசாமல் பணத்தை பெற்றுக்கொண்டு சிவாவும் ரவியும் அங்கிருந்து சென்றுவிட்டனர். அன்பரசுவும் வீட்டிற்கு வந்து நடந்ததை பாட்டியிடம் கூறி மன்னிப்பு கேட்டான்..மறுநாள் பூக்காரம்மா வெள்ளச்சி யாரு என்று விசாரித்தபடி அம்மன் கோயில் வாசலில் நின்றபடி விசாரித்தவரிடம் அய்யா என்ன காரணமா அவரை தேடுகிறீர்கள்? நான்தான் வெள்ளச்சி என்ற பாட்டியிடம் விசாரித்தவர் ஒரு கடிதத்தை கொடுத்துவிட்ட ஒரு நாற்காலியையும் வைத்துவிட்டு சென்றார். 'உங்கள் மகன் கொடுத்ததாக நினைத்து இந்த நாற்காலியை ஏற்றுக் கொள்ளுங்கள். இது உங்கள் பேரனின் நேர்மைக்கு என் பரிசு' என்று கடிதத்தில் எழுதியிருந்ததை பாட்டிக்கு படித்துச் சொன்னான் அன்பரசு.மறைவில் நின்றபடி ரவியும், சிவாவும் அதை பார்த்துக் கொண்டிருந்தனர்.