அது ஒரு பொற்காலம்.சிறுகச்சிறுக சேர்த்த பணத்தில் அண்ணாநகரில் இரண்டு கிரெளண்ட் இடம் வாங்கி, இரண்டு படுக்கை அறை, சமயலறை, ஹால், ஸிட் அவட் என சின்னதாக வீடு கட்டி 40 வருடங்களுக்கு முன் குடிபோனோம்..வீட்டைச் சுற்றி வேலிகட்டி, கீரை, கொத்தமல்லி, புதினா, கறிவேப்பிலை போன்றவை… மா, பலா, விதவிதமான வாழை, சப்போட்டா, ஆரஞ்சு, எலுமிச்சை, நார்த்தங்காய் என பழ வகைகள்… பச்சைமிளகாய், வெங்காயம், தக்காளி, பீன்ஸ், அவரைக்காய், பீர்க்கங்காய், காக்கணங்காய், புடலங்காய், இரு வகை பூசணிக்காய் போன்ற காய் வகைகள்… தென்னை, முருங்கை, புளி போன்ற மரங்கள்… போதாத குறைக்கு பலவகை பூக்கள் என நட ஆரம்பித்தார் என் கணவர்..ஆறு மாதங்களுக்குள் ஒவ்வொன்றும் செழிப்பாக காய்த்துக் கொட்டிட, யார் வந்தாலும் இளநீர், தேங்காய், பழம், வெற்றிலை என கர்ணனையும் மிஞ்சும் அளவிற்கு தானம் செய்தோம்..எப்பவுமே, ஆவக்காய், மாவடு, எலுமிச்சை, இஞ்சி, புளி போன்றவற்றில் ஊர்காய் போடுவதும், கறிவேப்பிலை, கொத்தமல்லி வைத்து பொடி, துவையல் அரைப்பதும், என நாள்பூரா எனக்கு வேலை இருக்கும். அக்கம் பக்கத்தினருக்கு என்னால் கொடுத்து மாளவே முடியாது. ஒவ்வொரு சமயம், அவர்களையே பறித்துக் கொள்ளச் சொல்வேன்..வேப்பம்பூ, முருங்கை இலை, என எல்லோரும் பறித்துச் செல்வார்கள். சரஸ்வதி பூஜை, பொங்கல், சதுர்த்தி என்றால், எல்லோர் வீட்டிலும் எங்கள் வீட்டு மாவிலை தோரணம் தான், வாழைக் கன்றுதான். என் மகள் வேறு எல்லோருக்கும் பிள்ளையார் செய்து கொடுப்பாள்..என் கணவர் அடிக்கடி டூர் போய்விடுவார். அதனால், செடிகள் வாடிவிடுமே என்ற காரணத்தால், ட்யூப் மாட்டி, ஆங்கங்கே ஓட்டைப் போட்டு, Sprinkler போல நாலா பக்கமும் தண்ணீர் பாயும் படி வழி செய்தார். டூர் முடிந்து வரும்போதே, வீட்டில் உள்ள எங்களையெல்லாம் தேடமாட்டார்… செடி கொடிகளில் ஏதாவது வாடி விட்டதா? என பார்த்தபின் தான் உள்ளே வருவார். இப்படி பல வருடம் காய், பழம், பூ எதுவுமே வாங்காமல், அன்றாடம் காய்க்கும் காய்கறிகள் சாப்பிட்டு செழிப்பாக, ஆரோக்கியமாக வாழ்ந்தோம்..ஒரு சமயம் எங்கள் வீட்டில் எத்தனை காய், கனிகள் வளர்ந்து தொங்கியதென்றால்… எங்கள் வீட்டில் துணி காயவைக்க கூட இடமில்லாமல் போனது . ஏனென்றால், நான் துணிக்கு கட்டிய கொடிகளில் எல்லாம் கூட (மொட்டை மாடி உட்பட) காய்கள் தொங்கியது. எங்களுக்கு காய்கறி வாங்கும் செலவே இல்லாமல் போனது. எனது உபயோகம் போக, திருமணமாகி சென்ற மகள் வீட்டிற்கும் அவ்வப்போது எடுத்துச்செல்வேன்..முன்பெல்லாம் வீட்டைச் சுற்றி வேலி தான் போட்டிருப்போம். இதனால், வேலி வழி நுழைந்து சில முன்பின் தெரியாத நபர்கள் காய்கள் பறித்து திருடி செல்வது உண்டு. வீட்டில் வாழும் எங்களுக்கு இதனால் ஆபத்து என்பதைக் காட்டிலும், செடிகளை மிதித்து நாசம் செய்கிறார்களே என்ற ஆதாங்கத்தால், வீட்டைச் சுற்றி சுவர் கட்டினோம்..தோட்டத்தில் ஒரு பெரிய குழி தோண்டி, மக்கும் குப்பை மற்றும் காய்கறி தோலால் நிரப்பி உரம் தயாரித்தோம். தூங்கி குளித்து சாப்பிடும் நேரம் போக, லுங்கியுடன் தோட்டத்தில் தான் இருப்பார் என் கணவர்..இப்போது, எங்கள் மகன் வேலைக்கு சென்றதும், இந்த வீட்டைக் கொடுத்து ஒரு பிளாட் வாங்கினோம். எங்கள் பிளாட்டில் ஒரு துளசி வைக்கக்கூட இடம் இல்லை. ஒரு கிலோ தக்காளி 200 ரூபாய், ஒரு கிலோ பீன்ஸ் 100 ரூபாய், அரை டஜன் வாழைப்பழம் 30 ரூபாய், ஒரு வாழைக்காய் 10 ரூபாய், ஒருநேந்திரம் பழம் 10 ரூபாய் என இதுதான் இன்றைய எங்கள் வாழ்க்கை!.இயற்கை எழில் கொஞ்சும் தனி வீடு, போதும் போதும் என சொல்லும் அளவிற்கு வீட்டிலேயே காய்கறிகள் என்று நாங்கள் வாழ்ந்த வாழ்க்கை ஒரு பொற்காலம். இனி அது போல் பார்க்க முடியாது.கங்கா ராமநாதன், சென்னை.……………………………………………...ஏற்றமிகு ஏலக்காய்.ஏலக்காயில் இயற்கையாக காணப்படும் எண்ணெய்களில் அரிய மருத்துவ குணங்கள் நிரம்பி உள்ளன. ஏலக்காயை நமது அன்றாட வாழ்வில் எவ்வாறெல்லாம் பயன் படுத்தலாம் என்று பார்ப்போம்….குழந்தைகளுக்கு வாந்தி ஏற்பட்டால் இரண்டு ஏலக்காய்களை பொடியாக்கி, அந்தப் பொடியை தேனில் குழைத்து குழந்தையின் நாக்கில் மூன்று வேளை தடவினால் வாந்தி உடனே நின்று விடும்..மூக்கடைப்பில் அவதிப்படுபவர்களுக்கு ஏலக்காய் தகுந்த நிவாரணம் தருகிறது. நான்கைந்து ஏலக்காய்களை நெருப்பில் போட்டு, அந்தப் புகையை சுவாசித்தாலே மூக்கடைப்பு உடனே திறந்து கொள்ளும்..மனஅழுத்தப் பிரச்சினை உள்ளவர்கள், 'ஏலக்காய் டீ' குடித்தால் இயல்பு நிலைக்கு வருவார்கள்..நா வறட்சி, வாயில் உமிழ்நீர் ஊறுதல், தலைவலி, வாந்தி, குமட்டல், நீர்ச்சுருக்கு, மார்புச்சளி, செரிமானக் கோளாறு ஆகிய பிரச்சினைகளுக்கு ஏலக்காயை வாயில் போட்டு மென்றாலே நிவாரணம் பெற முடியும். அதேநேரம், ஏலக்காயை அதிகமாக, அடிக்கடி வாயில் போட்டு மெல்லுவது நல்லதல்ல..ஏலக்காயில் பாக்டீரியா எதிர்ப்பு அதிகம் உள்ளதால், வாயில் துர்நாற்றம் ஏற்படுத்தும் கிருமிகளை அழித்துவிடும்..ஏலக்காய் கெட்ட கொழுப்புகளைக் கட்டுப் படுத்துவதுடன், உடலில் உள்ள ரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்த வல்லது..வெயிலில் அதிகம் அலைந்தால் தலைசுற்றல், மயக்கம் ஏற்படும். இதற்கு நான்கைந்து ஏலக்காய்களை நசுக்கி, அரை டம்ளர் தண்ணீரில் போட்டு, கஷாயமாகக் காய்ச்சி, அதில் சிறிது பனை வெல்லம் போட்டு குடித்தால் தலைசுற்றல் உடனே நீங்கும். மயக்கமும் மாயமாய் மறைந்துவிடும்..ஏலக்காய் ரத்தத்தில் இருக்கும் சர்க்கரையின் அளவையும் கட்டுப்படுத்தும்..சுவாச கோளாறுகளை போக்கும் சக்தியும் ஏலக்காய்க்கு உள்ளது. ஆஸ்துமா நோயாளிகளுக்கும் ஏற்றது..விக்கலால் அவதிப்படுவோர் இரண்டு ஏலக்காய்களை நசுக்கி, அத்துடன் நான்கைந்து புதினா இலைகளைப் போட்டு, அரை டம்ளர் தண்ணீரில் நன்கு காய்ச்சி வடிகட்டி, மிதமான சூட்டில் இந்தக் கஷாயத்தைக் குடித்தாலே போதும்..வாயுத் தொல்லையால் அவதிப்படுவோர், ஏலக்காயை நன்கு காய வைத்து பொடியாக்கி, அந்தப் பொடியில் அரை டீஸ்பூன் எடுத்து, அரை டம்ளர் தண்ணீரில் கொதிக்கவிட வேண்டும். உணவு உட்கொள்வதற்கு முன்பாக, இந்த ஏலக்காய் தண்ணீரைக் குடித்தால் வாயுத் தொல்லை உடனே நீங்கிவிடும்..சாப்பிட பிடிக்கவில்லை என்று கூறுபவர்கள், தினமும் ஒரு ஏலக்காயை வாயில் போட்டு மென்றால், பசி எடுக்கும். ஜீரண உறுப்புகள் சீராக இயங்கும்.தொகுப்பு – ஆர். பிரசன்னா, ஸ்ரீரங்கம்.……………………………………………...நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் பீர்க்கங்காய்!.பீர்க்கங்காயில் நார்ச்சத்து, வைட்டமின்கள் ஏ,பி.சி மற்றும் தாது உப்புகள் போன்றவை இருப்பதால் நீரிழிவு நோயாளிகள் பீர்க்கங்காயை உணவில் சேர்த்துக் கொள்ளலாம். இது சத்துணவாகவும், டானிக் மருந்து போலவும் செயல்பட்டு உடல் நலத்தைக் காக்கும். நீரிழிவு நோயாளிகளுக்கும் சற்று பருமனாக உள்ளவர்களுக்கும் ஏற்றதாகும். ரத்தத்தில் கிரகிக்கக் கூடியது. இதை அளவாக எடுத்துக் கொள்ள வேண்டும். அதிகமானால் பித்தம், சீதலை போன்றவை ஏற்பட வாய்ப்புண்டு. இதில் தாது உப்புகளும், வைட்டமின்களும் இருப்பதால் தொற்றுநோய் கிருமிகள் தாக்காமல் உடலை பாதுகாக்கும். பாகற்காய்க்கு பதிலாக நீரிழிவு நோயாளிகள் இதை உணவில் சேர்த்துக் கொள்ளலாம்..பீர்க்கங்காய் இலைகளை சாறாக்கி சிறிது நேரம் சூடு படுத்தி அதில் ஒரு தேக்கரண்டி எடுத்து சாப்பிட்டு வந்தால் நீரிழிவு நோய் கட்டுக்குள் இருக்கும். சொறி, சிரங்கு, புண். காய்ச்சல் உள்ளவர்கள் பீர்க்கங்காய் சேர்த்துக் கொள்ளுங்கள். புண்கள், சிரங்கு உள்ளவர்கள் பீர்க்கங்காய் இலைச் சாற்றை தடவினால் நிவாரணம் கிடைக்கும். கண்பார்வை நன்றாய் தெரியும். நோய் எதிர்ப்புச் சக்தியுடன் மேம்படச் செய்யும். தோல் நோயாளிகள் தவறாமல் இதைச் சேர்த்துக் கொண்டால் தோல் நோய்களிலிருந்து விரைவில் குணம் கிடைக்கும்..வயிற்றில் அமில சுரப்பி அதிகமாவதைத் தடுக்கும். வயிற்றில் புண்கள் வராமல் காக்கும். மேலும் உடலை குளிர்ச்சியாக வைத்திருக்கும்.-எஸ். மாரிமுத்து, சென்னை.சோர்வு நீக்கும் கீரை.உணவில் அடிக்கடி கீரையை சேர்த்துக் கொள்வோருக்கு வயிற்றுப் புண், மலச்சிக்கல், வாயுத் தொல்லை போன்ற பிரச்னைகள் வராது. கீரையில் தண்டுக்கீரை நல்ல மருத்துவ குணம் உடையதாகும். முற்றாத இளம் தண்டுக்கீரை சமையலுக்குச் சிறந்தது. சிலர் கீரையின் இலைகளை மட்டும் எடுத்துக்கொண்டு தண்டுகளை குப்பையில் போட்டு விடுகின்றனர். இது தவறு..தண்டுக்கீரையை பொறுத்தவரை அதன் தண்டில்தான் விசேஷம் உள்ளது. அதனால் தண்டோடு சேர்த்து சாப்பிடுவதே நல்லது. இக்கீரையின் தண்டுகளை மெல்லியதாக வெட்டி, பாசிப் பருப்புடன் சேர்த்து, வேக வைத்து கூட்டாகவோ, சாம்பராகவோ சமைத்துச் சாப்பிட்டால் நல்ல சுவை கிடைக்கும். அல்லது தண்டை சிறு சிறு துண்டுகளாக நறுக்கி, தண்ணீரில் போட்டு வேக வைத்து சூப்பாகவும் குடிக்கலாம்.ச. லெட்சுமி, செங்கோட்டை.……………………………………………...நோய்களை விரட்டும் விதைகள்!.பூனைக்காலி.நரம்பு தொடர்பான நோயால் பாதிக்கப்பட்டவர்கள் பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் ஆண்மைதன்மை பிரச்னையில் பாதிக்கப்பட்டவர்களுக்கு இந்த பூனைக்காலி அருமையான மருந்தாகும். நரம்புத் தளர்ச்சி நீக்கி நரம்பு மண்டலத்தை பலமாக்குவதோடு பக்கவாத பிரச்னையையும் குணப்படுத்த உதவுகிறது. நரம்புத் தளர்ச்சியால் ஏற்படும் கை, கால் நடுக்கத்தை குணப்படுத்தும்..பூனைக்காலி விதைகளை எடுத்து சுத்தம் செய்து பின்னர் அதனை சிறிது நேரம் லேசாக வறுத்து, அப்படி வறுத்தால்தான் பூனைக்காலி விதையின் மேல் உள்ள ஓட்டினை நீக்க முடியும்..ஓடு நீக்கியபின் கிடைக்கும் பருப்பினை பாலில் சிறிது நேரம் வேக வைத்து பின்னர் நன்றாக உலர வைக்க வேண்டும். பின் அதை பொடியாக்கி வைத்துக் கொள்ள வேண்டும்..அரை தேக்கரண்டி பூனைக் காலி விதை பொடி அளவு எடுத்து தினமும் பாலில் கலந்து அல்லது தேனின் கலந்து காலையிலும் இரவிலும் சாப்பிட்டு வந்தால் சிறந்த பலன் கிடைக்கும்..சப்ஜா.உடல் சூட்டைக் குறைக்கும். உடல் சூட்டினால் அவதிப்படுபவர்கள் சப்ஜா விதையினை இரவு படுக்கைக்கு போகும் முன் தண்ணீரில் ஊற வைத்து காலையில் எழுந்தவுடன் தண்ணீரில் ஊற வைத்த சப்ஜா விதையின் பால் அல்லது நாட்டுச் சர்க்கரையுடன் கலந்து குடித்தால் உடல் சூட்டிற்கு மிகவும் நல்லது. மேலும் உடல் குளிர்ச்சியாக வைத்திருக்க உதவதுடன் கண் எரிச்சலை குணப்படுத்தம்..மலசிக்கலை குணப்படுத்தும் இதில் அதிகளவு நார்ச்சத்து இருப்பதால் சப்ஜா விதையை ஊற வைத்து தினமும் சாப்பிட்டு வந்தால் மூலநோய் பிரச்னை விரைவில் குணமாகும். மேலும் உடலில் உள்ள நச்சுகள் மற்றும் கழிவுகள் வெளியேற உதவும். உடல் எடையைக் குறைக்கும். காலையில் வெறும் வயிற்றில் தண்ணீரை ஊறிய சப்ஜா விதையை குடித்து வந்தால் உடல் எடை கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கும். இதை சாப்பிட்டால் நீண்ட நேரத்திற்கு பசி எடுக்காது, கெட்ட கொழுப்பை குறைக்கும் தன்மை உள்ளது. பசி எடுக்காது, கெட்ட கொழுப்பை குறிக்கும் தன்மை உள்ளது. சர்க்கரையின் அளவை குறைக்க உதவும். நீரில் ஊறிய சப்ஜா விதையை சாப்பிட்டுவர சர்க்கரை அளவு குறையும்..நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கும். உடலில் புத்துணர்வு ஏற்படும். ரத்த சோகை வராது. இதில் இரும்புச் சத்து அதிகம் உள்ள நெஞ்செரிச்சல் மற்றும் அசிடிட்டியில் அவதிப்படுபவர். இரவில் ஊற வைத்த சப்ஜா விதையினை மறுநாள் காலையில் வெறும் வயிற்றில் பாலுடன் சேர்ந்து குடித்தால் நல்ல பலன் கிடைக்கும். மஞ்சள் காமாலை நோயினால் அவதிப்படுபவர் சப்ஜா விதையினை இளநீரில் விதையின் ஊற வைத்து சாப்பிட்டு வந்தால் நோயின் தாக்கம் பெருமளவு குறையும். இதை அதிகமாக எடுத்துக் கொள்ளக் கூடாது. வயிற்றப் போக்கு ஏற்படும். கர்ப்பிணி பெண்கள் சாப்பிடக் கூடாது. அறுவை சிகிச்சை செய்தவர்களும், செய்ய இருப்பவர்களும் இதை எடுக்கக் கூடாது.-எஸ். மாரிமுத்து, சென்னை
அது ஒரு பொற்காலம்.சிறுகச்சிறுக சேர்த்த பணத்தில் அண்ணாநகரில் இரண்டு கிரெளண்ட் இடம் வாங்கி, இரண்டு படுக்கை அறை, சமயலறை, ஹால், ஸிட் அவட் என சின்னதாக வீடு கட்டி 40 வருடங்களுக்கு முன் குடிபோனோம்..வீட்டைச் சுற்றி வேலிகட்டி, கீரை, கொத்தமல்லி, புதினா, கறிவேப்பிலை போன்றவை… மா, பலா, விதவிதமான வாழை, சப்போட்டா, ஆரஞ்சு, எலுமிச்சை, நார்த்தங்காய் என பழ வகைகள்… பச்சைமிளகாய், வெங்காயம், தக்காளி, பீன்ஸ், அவரைக்காய், பீர்க்கங்காய், காக்கணங்காய், புடலங்காய், இரு வகை பூசணிக்காய் போன்ற காய் வகைகள்… தென்னை, முருங்கை, புளி போன்ற மரங்கள்… போதாத குறைக்கு பலவகை பூக்கள் என நட ஆரம்பித்தார் என் கணவர்..ஆறு மாதங்களுக்குள் ஒவ்வொன்றும் செழிப்பாக காய்த்துக் கொட்டிட, யார் வந்தாலும் இளநீர், தேங்காய், பழம், வெற்றிலை என கர்ணனையும் மிஞ்சும் அளவிற்கு தானம் செய்தோம்..எப்பவுமே, ஆவக்காய், மாவடு, எலுமிச்சை, இஞ்சி, புளி போன்றவற்றில் ஊர்காய் போடுவதும், கறிவேப்பிலை, கொத்தமல்லி வைத்து பொடி, துவையல் அரைப்பதும், என நாள்பூரா எனக்கு வேலை இருக்கும். அக்கம் பக்கத்தினருக்கு என்னால் கொடுத்து மாளவே முடியாது. ஒவ்வொரு சமயம், அவர்களையே பறித்துக் கொள்ளச் சொல்வேன்..வேப்பம்பூ, முருங்கை இலை, என எல்லோரும் பறித்துச் செல்வார்கள். சரஸ்வதி பூஜை, பொங்கல், சதுர்த்தி என்றால், எல்லோர் வீட்டிலும் எங்கள் வீட்டு மாவிலை தோரணம் தான், வாழைக் கன்றுதான். என் மகள் வேறு எல்லோருக்கும் பிள்ளையார் செய்து கொடுப்பாள்..என் கணவர் அடிக்கடி டூர் போய்விடுவார். அதனால், செடிகள் வாடிவிடுமே என்ற காரணத்தால், ட்யூப் மாட்டி, ஆங்கங்கே ஓட்டைப் போட்டு, Sprinkler போல நாலா பக்கமும் தண்ணீர் பாயும் படி வழி செய்தார். டூர் முடிந்து வரும்போதே, வீட்டில் உள்ள எங்களையெல்லாம் தேடமாட்டார்… செடி கொடிகளில் ஏதாவது வாடி விட்டதா? என பார்த்தபின் தான் உள்ளே வருவார். இப்படி பல வருடம் காய், பழம், பூ எதுவுமே வாங்காமல், அன்றாடம் காய்க்கும் காய்கறிகள் சாப்பிட்டு செழிப்பாக, ஆரோக்கியமாக வாழ்ந்தோம்..ஒரு சமயம் எங்கள் வீட்டில் எத்தனை காய், கனிகள் வளர்ந்து தொங்கியதென்றால்… எங்கள் வீட்டில் துணி காயவைக்க கூட இடமில்லாமல் போனது . ஏனென்றால், நான் துணிக்கு கட்டிய கொடிகளில் எல்லாம் கூட (மொட்டை மாடி உட்பட) காய்கள் தொங்கியது. எங்களுக்கு காய்கறி வாங்கும் செலவே இல்லாமல் போனது. எனது உபயோகம் போக, திருமணமாகி சென்ற மகள் வீட்டிற்கும் அவ்வப்போது எடுத்துச்செல்வேன்..முன்பெல்லாம் வீட்டைச் சுற்றி வேலி தான் போட்டிருப்போம். இதனால், வேலி வழி நுழைந்து சில முன்பின் தெரியாத நபர்கள் காய்கள் பறித்து திருடி செல்வது உண்டு. வீட்டில் வாழும் எங்களுக்கு இதனால் ஆபத்து என்பதைக் காட்டிலும், செடிகளை மிதித்து நாசம் செய்கிறார்களே என்ற ஆதாங்கத்தால், வீட்டைச் சுற்றி சுவர் கட்டினோம்..தோட்டத்தில் ஒரு பெரிய குழி தோண்டி, மக்கும் குப்பை மற்றும் காய்கறி தோலால் நிரப்பி உரம் தயாரித்தோம். தூங்கி குளித்து சாப்பிடும் நேரம் போக, லுங்கியுடன் தோட்டத்தில் தான் இருப்பார் என் கணவர்..இப்போது, எங்கள் மகன் வேலைக்கு சென்றதும், இந்த வீட்டைக் கொடுத்து ஒரு பிளாட் வாங்கினோம். எங்கள் பிளாட்டில் ஒரு துளசி வைக்கக்கூட இடம் இல்லை. ஒரு கிலோ தக்காளி 200 ரூபாய், ஒரு கிலோ பீன்ஸ் 100 ரூபாய், அரை டஜன் வாழைப்பழம் 30 ரூபாய், ஒரு வாழைக்காய் 10 ரூபாய், ஒருநேந்திரம் பழம் 10 ரூபாய் என இதுதான் இன்றைய எங்கள் வாழ்க்கை!.இயற்கை எழில் கொஞ்சும் தனி வீடு, போதும் போதும் என சொல்லும் அளவிற்கு வீட்டிலேயே காய்கறிகள் என்று நாங்கள் வாழ்ந்த வாழ்க்கை ஒரு பொற்காலம். இனி அது போல் பார்க்க முடியாது.கங்கா ராமநாதன், சென்னை.……………………………………………...ஏற்றமிகு ஏலக்காய்.ஏலக்காயில் இயற்கையாக காணப்படும் எண்ணெய்களில் அரிய மருத்துவ குணங்கள் நிரம்பி உள்ளன. ஏலக்காயை நமது அன்றாட வாழ்வில் எவ்வாறெல்லாம் பயன் படுத்தலாம் என்று பார்ப்போம்….குழந்தைகளுக்கு வாந்தி ஏற்பட்டால் இரண்டு ஏலக்காய்களை பொடியாக்கி, அந்தப் பொடியை தேனில் குழைத்து குழந்தையின் நாக்கில் மூன்று வேளை தடவினால் வாந்தி உடனே நின்று விடும்..மூக்கடைப்பில் அவதிப்படுபவர்களுக்கு ஏலக்காய் தகுந்த நிவாரணம் தருகிறது. நான்கைந்து ஏலக்காய்களை நெருப்பில் போட்டு, அந்தப் புகையை சுவாசித்தாலே மூக்கடைப்பு உடனே திறந்து கொள்ளும்..மனஅழுத்தப் பிரச்சினை உள்ளவர்கள், 'ஏலக்காய் டீ' குடித்தால் இயல்பு நிலைக்கு வருவார்கள்..நா வறட்சி, வாயில் உமிழ்நீர் ஊறுதல், தலைவலி, வாந்தி, குமட்டல், நீர்ச்சுருக்கு, மார்புச்சளி, செரிமானக் கோளாறு ஆகிய பிரச்சினைகளுக்கு ஏலக்காயை வாயில் போட்டு மென்றாலே நிவாரணம் பெற முடியும். அதேநேரம், ஏலக்காயை அதிகமாக, அடிக்கடி வாயில் போட்டு மெல்லுவது நல்லதல்ல..ஏலக்காயில் பாக்டீரியா எதிர்ப்பு அதிகம் உள்ளதால், வாயில் துர்நாற்றம் ஏற்படுத்தும் கிருமிகளை அழித்துவிடும்..ஏலக்காய் கெட்ட கொழுப்புகளைக் கட்டுப் படுத்துவதுடன், உடலில் உள்ள ரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்த வல்லது..வெயிலில் அதிகம் அலைந்தால் தலைசுற்றல், மயக்கம் ஏற்படும். இதற்கு நான்கைந்து ஏலக்காய்களை நசுக்கி, அரை டம்ளர் தண்ணீரில் போட்டு, கஷாயமாகக் காய்ச்சி, அதில் சிறிது பனை வெல்லம் போட்டு குடித்தால் தலைசுற்றல் உடனே நீங்கும். மயக்கமும் மாயமாய் மறைந்துவிடும்..ஏலக்காய் ரத்தத்தில் இருக்கும் சர்க்கரையின் அளவையும் கட்டுப்படுத்தும்..சுவாச கோளாறுகளை போக்கும் சக்தியும் ஏலக்காய்க்கு உள்ளது. ஆஸ்துமா நோயாளிகளுக்கும் ஏற்றது..விக்கலால் அவதிப்படுவோர் இரண்டு ஏலக்காய்களை நசுக்கி, அத்துடன் நான்கைந்து புதினா இலைகளைப் போட்டு, அரை டம்ளர் தண்ணீரில் நன்கு காய்ச்சி வடிகட்டி, மிதமான சூட்டில் இந்தக் கஷாயத்தைக் குடித்தாலே போதும்..வாயுத் தொல்லையால் அவதிப்படுவோர், ஏலக்காயை நன்கு காய வைத்து பொடியாக்கி, அந்தப் பொடியில் அரை டீஸ்பூன் எடுத்து, அரை டம்ளர் தண்ணீரில் கொதிக்கவிட வேண்டும். உணவு உட்கொள்வதற்கு முன்பாக, இந்த ஏலக்காய் தண்ணீரைக் குடித்தால் வாயுத் தொல்லை உடனே நீங்கிவிடும்..சாப்பிட பிடிக்கவில்லை என்று கூறுபவர்கள், தினமும் ஒரு ஏலக்காயை வாயில் போட்டு மென்றால், பசி எடுக்கும். ஜீரண உறுப்புகள் சீராக இயங்கும்.தொகுப்பு – ஆர். பிரசன்னா, ஸ்ரீரங்கம்.……………………………………………...நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் பீர்க்கங்காய்!.பீர்க்கங்காயில் நார்ச்சத்து, வைட்டமின்கள் ஏ,பி.சி மற்றும் தாது உப்புகள் போன்றவை இருப்பதால் நீரிழிவு நோயாளிகள் பீர்க்கங்காயை உணவில் சேர்த்துக் கொள்ளலாம். இது சத்துணவாகவும், டானிக் மருந்து போலவும் செயல்பட்டு உடல் நலத்தைக் காக்கும். நீரிழிவு நோயாளிகளுக்கும் சற்று பருமனாக உள்ளவர்களுக்கும் ஏற்றதாகும். ரத்தத்தில் கிரகிக்கக் கூடியது. இதை அளவாக எடுத்துக் கொள்ள வேண்டும். அதிகமானால் பித்தம், சீதலை போன்றவை ஏற்பட வாய்ப்புண்டு. இதில் தாது உப்புகளும், வைட்டமின்களும் இருப்பதால் தொற்றுநோய் கிருமிகள் தாக்காமல் உடலை பாதுகாக்கும். பாகற்காய்க்கு பதிலாக நீரிழிவு நோயாளிகள் இதை உணவில் சேர்த்துக் கொள்ளலாம்..பீர்க்கங்காய் இலைகளை சாறாக்கி சிறிது நேரம் சூடு படுத்தி அதில் ஒரு தேக்கரண்டி எடுத்து சாப்பிட்டு வந்தால் நீரிழிவு நோய் கட்டுக்குள் இருக்கும். சொறி, சிரங்கு, புண். காய்ச்சல் உள்ளவர்கள் பீர்க்கங்காய் சேர்த்துக் கொள்ளுங்கள். புண்கள், சிரங்கு உள்ளவர்கள் பீர்க்கங்காய் இலைச் சாற்றை தடவினால் நிவாரணம் கிடைக்கும். கண்பார்வை நன்றாய் தெரியும். நோய் எதிர்ப்புச் சக்தியுடன் மேம்படச் செய்யும். தோல் நோயாளிகள் தவறாமல் இதைச் சேர்த்துக் கொண்டால் தோல் நோய்களிலிருந்து விரைவில் குணம் கிடைக்கும்..வயிற்றில் அமில சுரப்பி அதிகமாவதைத் தடுக்கும். வயிற்றில் புண்கள் வராமல் காக்கும். மேலும் உடலை குளிர்ச்சியாக வைத்திருக்கும்.-எஸ். மாரிமுத்து, சென்னை.சோர்வு நீக்கும் கீரை.உணவில் அடிக்கடி கீரையை சேர்த்துக் கொள்வோருக்கு வயிற்றுப் புண், மலச்சிக்கல், வாயுத் தொல்லை போன்ற பிரச்னைகள் வராது. கீரையில் தண்டுக்கீரை நல்ல மருத்துவ குணம் உடையதாகும். முற்றாத இளம் தண்டுக்கீரை சமையலுக்குச் சிறந்தது. சிலர் கீரையின் இலைகளை மட்டும் எடுத்துக்கொண்டு தண்டுகளை குப்பையில் போட்டு விடுகின்றனர். இது தவறு..தண்டுக்கீரையை பொறுத்தவரை அதன் தண்டில்தான் விசேஷம் உள்ளது. அதனால் தண்டோடு சேர்த்து சாப்பிடுவதே நல்லது. இக்கீரையின் தண்டுகளை மெல்லியதாக வெட்டி, பாசிப் பருப்புடன் சேர்த்து, வேக வைத்து கூட்டாகவோ, சாம்பராகவோ சமைத்துச் சாப்பிட்டால் நல்ல சுவை கிடைக்கும். அல்லது தண்டை சிறு சிறு துண்டுகளாக நறுக்கி, தண்ணீரில் போட்டு வேக வைத்து சூப்பாகவும் குடிக்கலாம்.ச. லெட்சுமி, செங்கோட்டை.……………………………………………...நோய்களை விரட்டும் விதைகள்!.பூனைக்காலி.நரம்பு தொடர்பான நோயால் பாதிக்கப்பட்டவர்கள் பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் ஆண்மைதன்மை பிரச்னையில் பாதிக்கப்பட்டவர்களுக்கு இந்த பூனைக்காலி அருமையான மருந்தாகும். நரம்புத் தளர்ச்சி நீக்கி நரம்பு மண்டலத்தை பலமாக்குவதோடு பக்கவாத பிரச்னையையும் குணப்படுத்த உதவுகிறது. நரம்புத் தளர்ச்சியால் ஏற்படும் கை, கால் நடுக்கத்தை குணப்படுத்தும்..பூனைக்காலி விதைகளை எடுத்து சுத்தம் செய்து பின்னர் அதனை சிறிது நேரம் லேசாக வறுத்து, அப்படி வறுத்தால்தான் பூனைக்காலி விதையின் மேல் உள்ள ஓட்டினை நீக்க முடியும்..ஓடு நீக்கியபின் கிடைக்கும் பருப்பினை பாலில் சிறிது நேரம் வேக வைத்து பின்னர் நன்றாக உலர வைக்க வேண்டும். பின் அதை பொடியாக்கி வைத்துக் கொள்ள வேண்டும்..அரை தேக்கரண்டி பூனைக் காலி விதை பொடி அளவு எடுத்து தினமும் பாலில் கலந்து அல்லது தேனின் கலந்து காலையிலும் இரவிலும் சாப்பிட்டு வந்தால் சிறந்த பலன் கிடைக்கும்..சப்ஜா.உடல் சூட்டைக் குறைக்கும். உடல் சூட்டினால் அவதிப்படுபவர்கள் சப்ஜா விதையினை இரவு படுக்கைக்கு போகும் முன் தண்ணீரில் ஊற வைத்து காலையில் எழுந்தவுடன் தண்ணீரில் ஊற வைத்த சப்ஜா விதையின் பால் அல்லது நாட்டுச் சர்க்கரையுடன் கலந்து குடித்தால் உடல் சூட்டிற்கு மிகவும் நல்லது. மேலும் உடல் குளிர்ச்சியாக வைத்திருக்க உதவதுடன் கண் எரிச்சலை குணப்படுத்தம்..மலசிக்கலை குணப்படுத்தும் இதில் அதிகளவு நார்ச்சத்து இருப்பதால் சப்ஜா விதையை ஊற வைத்து தினமும் சாப்பிட்டு வந்தால் மூலநோய் பிரச்னை விரைவில் குணமாகும். மேலும் உடலில் உள்ள நச்சுகள் மற்றும் கழிவுகள் வெளியேற உதவும். உடல் எடையைக் குறைக்கும். காலையில் வெறும் வயிற்றில் தண்ணீரை ஊறிய சப்ஜா விதையை குடித்து வந்தால் உடல் எடை கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கும். இதை சாப்பிட்டால் நீண்ட நேரத்திற்கு பசி எடுக்காது, கெட்ட கொழுப்பை குறைக்கும் தன்மை உள்ளது. பசி எடுக்காது, கெட்ட கொழுப்பை குறிக்கும் தன்மை உள்ளது. சர்க்கரையின் அளவை குறைக்க உதவும். நீரில் ஊறிய சப்ஜா விதையை சாப்பிட்டுவர சர்க்கரை அளவு குறையும்..நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கும். உடலில் புத்துணர்வு ஏற்படும். ரத்த சோகை வராது. இதில் இரும்புச் சத்து அதிகம் உள்ள நெஞ்செரிச்சல் மற்றும் அசிடிட்டியில் அவதிப்படுபவர். இரவில் ஊற வைத்த சப்ஜா விதையினை மறுநாள் காலையில் வெறும் வயிற்றில் பாலுடன் சேர்ந்து குடித்தால் நல்ல பலன் கிடைக்கும். மஞ்சள் காமாலை நோயினால் அவதிப்படுபவர் சப்ஜா விதையினை இளநீரில் விதையின் ஊற வைத்து சாப்பிட்டு வந்தால் நோயின் தாக்கம் பெருமளவு குறையும். இதை அதிகமாக எடுத்துக் கொள்ளக் கூடாது. வயிற்றப் போக்கு ஏற்படும். கர்ப்பிணி பெண்கள் சாப்பிடக் கூடாது. அறுவை சிகிச்சை செய்தவர்களும், செய்ய இருப்பவர்களும் இதை எடுக்கக் கூடாது.-எஸ். மாரிமுத்து, சென்னை