வாசகர்கள் ஜமாய்க்கிறாங்க!.கோதுமை சேமியா பாயசம்.தேவை: கோதுமை சேமியா, மில்க் மெய்ட் கொஞ்சம், முந்திரி, திராட்சை, ஏலக்காய், நெய்.செய்முறை: அடுப்பில் வாணலி வைத்து அதில் நெய் விட்டு முந்திரி, திராட்சை வறுத்து எடுத்து தனியாக வைத்துக் கொள்ளவும். அதனுடன் ஏலக்காயை பொடி செய்து வைக்கவும். பின்பு சேமியாவை 2 ஸ்பூன் நெய் விட்டு வறுத்தெடுத்து அதில் தண்ணீர் சேர்த்து நன்கு வேக வைக்கவும். அது நன்கு வெந்ததும் அதில் மில்க் மெய்ட் ஊற்றி நன்கு கிளறிவிட்டு, இறக்கி முந்திரி, திராட்சை போடவும். தேவைப்பட்டால் 2 ஸ்பூன் சர்க்கரை போடலாம். மில்க் மெய்ட் விட்டாலே நல்ல இனிப்பாக இருக்கும். பாயசம் ரெடி. சாப்பிட மிகவும் சுவையானதாக இருக்கும். குழந்தைகள் மிகவும் விரும்பி சாப்பிடுவார்கள்..சிகப்பு குடை மிளகாய் சட்னி.தேவை: நல்ல சிகப்பு குடை மிளகாய் 1 அல்லது 2, வத்தல் மிளகாய், பச்சை மிளகாய் காரத்திற்கு தகுந்தாற்போல, உப்பு, புளி, பெருங்காயம், தேங்காய் துருவல் கொஞ்சமாக.செய்முறை: முதலில் குடை மிளகாயை சிறிய துண்டங்களாக நறுக்கி எடுத்து அதை 1 ஸ்பூன் எண்ணெய் விட்டு நன்றாக வதக்கி எடுத்துக் கொள்ளவும். அதே வாணலியை அடுப்பில் வைத்து மிளகாய், பெருங்காயம், தேங்காய் துருவல் எல்லாம் போட்டு வதக்கி அதனுடன் உப்பு, புளி கொஞ்சம் ஆக வைத்து எல்லாம் ஒன்றாக சேர்த்து, மிக்ஸியில் போட்டு அரைத்தால் சூப்பரான சுவையான சட்னி ரெடி. இந்த சட்னி இட்லி, தோசை, சப்பாத்தி எல்லாவற்றிற்கும் தொட்டுச் சாப்பிடலாம். மிகவும் நன்றாக இருக்கும்..எண்ணெய் அதிகம் இல்லாமல் செய்யும் காய்கறி ஃபிரை.தேவை: வெண்டைக்காய், நீளமான பச்சை கத்திரிக்காய், வாழைக்காய், நீளமான குடை மிளகாய் இவை எல்லாம் தனித்தனியாக நீளமாக குறுக்கே கட் பண்ணி வைத்துக் கொள்ளவும். கடலை மாவு, அரிசி மாவு – ஒரு கரண்டி அளவு, மஞ்சள், உப்பு – தேவைக்கு ஏற்ப.செய்முறை: ஒரு பாத்திரத்தில் ஒரு கரண்டி கடலை மாவு, ஒரு கரண்டி அரிசி மாவு, மஞ்சள் தூள், உப்பு, சோடா உப்பு ஒரு சிட்டிகை இவை எல்லாம் ஒன்றாக போட்டு தண்ணீர் விட்டு கெட்டியாக பஜ்ஜி மாவு பதத்தில் கலந்து கொள்ளவும். இந்த கலவையை காய்கறியில் எல்லா பக்கமும் நன்றாக தடவிவிட்டு ஒரு தட்டில் எடுத்து வைத்துக் கொள்ளவும். பின்பு அடுப்பில் தோசைக்கல்லை மிதமான சிம்மில் வைத்து அதில் காய்கறிகளை ஒன்று ஒன்றாக திருப்பித், திருப்பி போட்டு நன்கு மொறு மொறு என்று ஆகும்வரை நன்கு வேக விடவும். இதை பொறுமையாக செய்ய வேண்டும். நன்கு இது ரோஸ்ட் ஆனதும் சாப்பிட மிகவும் சுவையாக இருக்கும்.-ராஜி பார்த்தசாரதி, திருச்சி.க்ரிஸ்பி பிரெட் ஃபிரை.தேவை: ஓரம் நீக்கிய பிரெட் – 6 துண்டுகள், சாட் மசாலாத் தூள் – ½ ஸ்பூன், மிளகாய் தூள் – அரை ஸ்பூன், மிளகுத் தூள், மசாலா தூள், மாங்காய் தூள் – தலா அரை ஸ்பூன், எண்ணெய் – பொரிக்க, உப்பு – தேவைக்கு.செய்முறை: எல்லா தூள்களையும் உப்பு சேர்த்து கலந்து வைக்கவும். ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் சிறு துண்டுகளாகவோ, முக்கோணமாகவோ வெட்டிப் போட்டு பொன்னிறமாக பொரித்து டிஸ்யூ பேப்பரில் வைத்து எண்ணெயை வடித்து மசாலா கலவை தூவி நன்றாக கலந்து விடவும். மாலை நேர ஸ்நாக்ஸாக சாப்பிட சிறுவர்களுக்கு ஏற்றது..வாழைக்காய் சப்ஜி.தேவை: வாழைக்காய் – 1, குடை மிளகாய் – 1, பெரிய வெங்காயம் – 2, தக்காளி – 2, கேரட் – 1, உப்பு, எண்ணெய் – தேவைக்குவறுத்து அரைக்க: காய்ந்த மிளகாய் – 2, தனியா – 2 ஸ்பூன், சீரகம் – 1 ஸ்பூன், உரித்த பூண்டு – 4 பற்கள், இஞ்சி – சிறிது, பச்சை மிளகாய் – 1, தேங்காய் துருவல் – 4 ஸ்பூன், முந்திரி பருப்பு – 8.செய்முறை: வறுத்து அரைக்க கொடுத்தவைகளை வெறும் வாணலியில் ஒவ்வொன்றாக போட்டு அடுப்பில் சிம்மில் வைத்து வாசனை வரும்வரை வறுத்து ஆற வைத்து, மிக்ஸியில் நைசாக அரைக்கவும். வாணலியில் சிறிது எண்ணெய் ஊற்றி நறுக்கிய வெங்காயம், தக்காளி, வாழைக்காய், கேரட் சேர்த்து வதக்கவும். காய்கறிகள் வதங்கியதும், அரைத்த விழுதையும் உப்பு, நறுக்கிய குடை மிளகாயைச் சேர்த்து ஒரு கொதி வந்ததும் நறுக்கிய கொத்தமல்லி தழையை தூவி இறக்கவும். நாண், சப்பாத்தி, பூரி, தயிர் சாதத்திற்கு நல்ல சைட்டிஷ் இது.-எம். வசந்தா, சென்னை.பருப்பைக் குறைக்க வேண்டுமா?.பல சமயங்களில் பருப்பைக் குறைவாகப் பயன்படுத்த டாக்டர்கள் சொல்வதுண்டு. எப்படி பருப்பைக் குறைப்பது?சாம்பார், ரசம் போன்றவைக்கு பருப்பு இன்றியமையாததல்லவா? இதற்கு ஒரு வழி இருக்கிறது. பாதி பருப்பைப் பயன்படுத்தி, செறிவான சாம்பார் செய்யலாம். இந்தவிதத்தில் தேங்காயும் குறைவாக பயன்படுத்தி சுவை குன்றாமல் சமைக்கலாம். அந்த வழி என்ன என்று பார்ப்போமா?.நாம் செய்ய வேண்டியது என்னவென்றால் வெண்டைக்காய் தவிர காய்கறிகளை அரைத்து பயன்படுத்த வேண்டும். பரங்கிக்காய், முட்டைகோஸ், பட்டாணி, சர்க்கரை வள்ளிக்கிழங்கு, முள்ளங்கி, காரட், தக்காளி, வெங்காயம், காளிஃபிளவர், மாங்காய், கொத்துமல்லித் தழை (தண்டுடன்). இந்த எல்லா காய்களையும் தண்ணீரில் ஒரிரு நிமிடம் வேக வைத்து நன்கு ஆறியபின் மிக்ஸியின் நன்றாக தண்ணீருடனேயே அரைத்துக் கொள்ளவும். வாணலியில் எண்ணெய் வைத்து கடுகு, மிளகாய் தாளித்ததில் இந்த அரைத்த கலவையைச் சேர்த்து மேலும் தண்ணீர் சேர்த்து உப்பு, மஞ்சள் பொடி, சிறிது வெல்லம், தேவையான மசாலாக்கள் சேர்த்து நன்றாக கொதிக்க வைத்து, தேவையான கெட்டி பதம் (குழம்பு பதம்) வந்தவுடன் இறக்கிவிடவும்..இன்னும் கெட்டியாக வேண்டுமானால் பொட்டுக்கடலை மாவு/ கோதுமை மாவு அல்லது அரிசி மாவு சிறிது கலக்கிச் சேர்க்கலாம். மிகவும் சுவையான குழம்பு இது.-லக்ஷ்மி கணபதி, கோயம்புத்தூர்.மராத்தி க்விக் கடீ!.தேவை: நல்ல தயிர் – 3 கப், கடலை மாவ – 1 கப், தண்ணீர் – 5 கப், பச்சை மிளகாய் – 4, இஞ்சி – 1 துண்டு, சீனி – 1 டீஸ்பூன், நெய் – 2 டேபிள் ஸ்பூன், மஞ்சள் பொடி – அரை டீஸ்பூன், மிளகாய் பொடி – அரை டீஸ்பூன்,பெருங்காயப் பொடி – 1 சிட்டிகை, கடுகு, சீரகம், வெந்தயம் – அரை டீஸ்பூன், கறிவேப்பிலை – கொஞ்சம், உப்பு – தேவைக்கு.செய்முறை: வாணலியில் சிறிது நெய் விட்டு காய்ந்ததும், சலித்த கடலை மாவைப் போட்டு, வாசனை போக லேசாக வறுத்து எடுத்துக் கொள்ளவும். ஆறிய பின் கொஞ்சம் தண்ணீரில் போட்டு கட்டியில்லாமல் கரைத்துப் பின் தயிரில் மிக்ஸ் செய்து மத்தினால் ஒரு நிமிடம் சிலுப்பிக் கொள்ளவும். மீதித் தண்ணீரை இத்துடன் சேர்க்கவும்..இஞ்சி, பச்சை மிளகாயைப் பொடியாக நறுக்கிப் போட்டு, மிளகாய்ப் பொடி, சர்க்கரை, உப்பு, மஞ்சள் பொடி, பெருங்காயப் பொடி ஆகியவைகளை கலந்து அடிக்கனமான வாணலியில் விட்டு அடுப்பின்மீது வைத்து சிம்மில் 10 நிமிடங்கள் கொதிக்கச் செய்து இறக்க "கடீ" ரெடி..மற்றுமொறு வாணலியில் நெய்விட்டு காய்ந்ததும் கடுகு, சீரகம், வெந்தயம், கறிவேப்பிலை தாளித்து கடீயில் போட்டு நன்றகாகக் கிண்டவும். சூடான கிச்சடி சாதத்துடன் கடீ சேர்த்து சாப்பிட டேஸ்ட்டியாக இருக்கும். நோ தேங்காய்.-ஆர். மீனலதா, மும்பை
வாசகர்கள் ஜமாய்க்கிறாங்க!.கோதுமை சேமியா பாயசம்.தேவை: கோதுமை சேமியா, மில்க் மெய்ட் கொஞ்சம், முந்திரி, திராட்சை, ஏலக்காய், நெய்.செய்முறை: அடுப்பில் வாணலி வைத்து அதில் நெய் விட்டு முந்திரி, திராட்சை வறுத்து எடுத்து தனியாக வைத்துக் கொள்ளவும். அதனுடன் ஏலக்காயை பொடி செய்து வைக்கவும். பின்பு சேமியாவை 2 ஸ்பூன் நெய் விட்டு வறுத்தெடுத்து அதில் தண்ணீர் சேர்த்து நன்கு வேக வைக்கவும். அது நன்கு வெந்ததும் அதில் மில்க் மெய்ட் ஊற்றி நன்கு கிளறிவிட்டு, இறக்கி முந்திரி, திராட்சை போடவும். தேவைப்பட்டால் 2 ஸ்பூன் சர்க்கரை போடலாம். மில்க் மெய்ட் விட்டாலே நல்ல இனிப்பாக இருக்கும். பாயசம் ரெடி. சாப்பிட மிகவும் சுவையானதாக இருக்கும். குழந்தைகள் மிகவும் விரும்பி சாப்பிடுவார்கள்..சிகப்பு குடை மிளகாய் சட்னி.தேவை: நல்ல சிகப்பு குடை மிளகாய் 1 அல்லது 2, வத்தல் மிளகாய், பச்சை மிளகாய் காரத்திற்கு தகுந்தாற்போல, உப்பு, புளி, பெருங்காயம், தேங்காய் துருவல் கொஞ்சமாக.செய்முறை: முதலில் குடை மிளகாயை சிறிய துண்டங்களாக நறுக்கி எடுத்து அதை 1 ஸ்பூன் எண்ணெய் விட்டு நன்றாக வதக்கி எடுத்துக் கொள்ளவும். அதே வாணலியை அடுப்பில் வைத்து மிளகாய், பெருங்காயம், தேங்காய் துருவல் எல்லாம் போட்டு வதக்கி அதனுடன் உப்பு, புளி கொஞ்சம் ஆக வைத்து எல்லாம் ஒன்றாக சேர்த்து, மிக்ஸியில் போட்டு அரைத்தால் சூப்பரான சுவையான சட்னி ரெடி. இந்த சட்னி இட்லி, தோசை, சப்பாத்தி எல்லாவற்றிற்கும் தொட்டுச் சாப்பிடலாம். மிகவும் நன்றாக இருக்கும்..எண்ணெய் அதிகம் இல்லாமல் செய்யும் காய்கறி ஃபிரை.தேவை: வெண்டைக்காய், நீளமான பச்சை கத்திரிக்காய், வாழைக்காய், நீளமான குடை மிளகாய் இவை எல்லாம் தனித்தனியாக நீளமாக குறுக்கே கட் பண்ணி வைத்துக் கொள்ளவும். கடலை மாவு, அரிசி மாவு – ஒரு கரண்டி அளவு, மஞ்சள், உப்பு – தேவைக்கு ஏற்ப.செய்முறை: ஒரு பாத்திரத்தில் ஒரு கரண்டி கடலை மாவு, ஒரு கரண்டி அரிசி மாவு, மஞ்சள் தூள், உப்பு, சோடா உப்பு ஒரு சிட்டிகை இவை எல்லாம் ஒன்றாக போட்டு தண்ணீர் விட்டு கெட்டியாக பஜ்ஜி மாவு பதத்தில் கலந்து கொள்ளவும். இந்த கலவையை காய்கறியில் எல்லா பக்கமும் நன்றாக தடவிவிட்டு ஒரு தட்டில் எடுத்து வைத்துக் கொள்ளவும். பின்பு அடுப்பில் தோசைக்கல்லை மிதமான சிம்மில் வைத்து அதில் காய்கறிகளை ஒன்று ஒன்றாக திருப்பித், திருப்பி போட்டு நன்கு மொறு மொறு என்று ஆகும்வரை நன்கு வேக விடவும். இதை பொறுமையாக செய்ய வேண்டும். நன்கு இது ரோஸ்ட் ஆனதும் சாப்பிட மிகவும் சுவையாக இருக்கும்.-ராஜி பார்த்தசாரதி, திருச்சி.க்ரிஸ்பி பிரெட் ஃபிரை.தேவை: ஓரம் நீக்கிய பிரெட் – 6 துண்டுகள், சாட் மசாலாத் தூள் – ½ ஸ்பூன், மிளகாய் தூள் – அரை ஸ்பூன், மிளகுத் தூள், மசாலா தூள், மாங்காய் தூள் – தலா அரை ஸ்பூன், எண்ணெய் – பொரிக்க, உப்பு – தேவைக்கு.செய்முறை: எல்லா தூள்களையும் உப்பு சேர்த்து கலந்து வைக்கவும். ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் சிறு துண்டுகளாகவோ, முக்கோணமாகவோ வெட்டிப் போட்டு பொன்னிறமாக பொரித்து டிஸ்யூ பேப்பரில் வைத்து எண்ணெயை வடித்து மசாலா கலவை தூவி நன்றாக கலந்து விடவும். மாலை நேர ஸ்நாக்ஸாக சாப்பிட சிறுவர்களுக்கு ஏற்றது..வாழைக்காய் சப்ஜி.தேவை: வாழைக்காய் – 1, குடை மிளகாய் – 1, பெரிய வெங்காயம் – 2, தக்காளி – 2, கேரட் – 1, உப்பு, எண்ணெய் – தேவைக்குவறுத்து அரைக்க: காய்ந்த மிளகாய் – 2, தனியா – 2 ஸ்பூன், சீரகம் – 1 ஸ்பூன், உரித்த பூண்டு – 4 பற்கள், இஞ்சி – சிறிது, பச்சை மிளகாய் – 1, தேங்காய் துருவல் – 4 ஸ்பூன், முந்திரி பருப்பு – 8.செய்முறை: வறுத்து அரைக்க கொடுத்தவைகளை வெறும் வாணலியில் ஒவ்வொன்றாக போட்டு அடுப்பில் சிம்மில் வைத்து வாசனை வரும்வரை வறுத்து ஆற வைத்து, மிக்ஸியில் நைசாக அரைக்கவும். வாணலியில் சிறிது எண்ணெய் ஊற்றி நறுக்கிய வெங்காயம், தக்காளி, வாழைக்காய், கேரட் சேர்த்து வதக்கவும். காய்கறிகள் வதங்கியதும், அரைத்த விழுதையும் உப்பு, நறுக்கிய குடை மிளகாயைச் சேர்த்து ஒரு கொதி வந்ததும் நறுக்கிய கொத்தமல்லி தழையை தூவி இறக்கவும். நாண், சப்பாத்தி, பூரி, தயிர் சாதத்திற்கு நல்ல சைட்டிஷ் இது.-எம். வசந்தா, சென்னை.பருப்பைக் குறைக்க வேண்டுமா?.பல சமயங்களில் பருப்பைக் குறைவாகப் பயன்படுத்த டாக்டர்கள் சொல்வதுண்டு. எப்படி பருப்பைக் குறைப்பது?சாம்பார், ரசம் போன்றவைக்கு பருப்பு இன்றியமையாததல்லவா? இதற்கு ஒரு வழி இருக்கிறது. பாதி பருப்பைப் பயன்படுத்தி, செறிவான சாம்பார் செய்யலாம். இந்தவிதத்தில் தேங்காயும் குறைவாக பயன்படுத்தி சுவை குன்றாமல் சமைக்கலாம். அந்த வழி என்ன என்று பார்ப்போமா?.நாம் செய்ய வேண்டியது என்னவென்றால் வெண்டைக்காய் தவிர காய்கறிகளை அரைத்து பயன்படுத்த வேண்டும். பரங்கிக்காய், முட்டைகோஸ், பட்டாணி, சர்க்கரை வள்ளிக்கிழங்கு, முள்ளங்கி, காரட், தக்காளி, வெங்காயம், காளிஃபிளவர், மாங்காய், கொத்துமல்லித் தழை (தண்டுடன்). இந்த எல்லா காய்களையும் தண்ணீரில் ஒரிரு நிமிடம் வேக வைத்து நன்கு ஆறியபின் மிக்ஸியின் நன்றாக தண்ணீருடனேயே அரைத்துக் கொள்ளவும். வாணலியில் எண்ணெய் வைத்து கடுகு, மிளகாய் தாளித்ததில் இந்த அரைத்த கலவையைச் சேர்த்து மேலும் தண்ணீர் சேர்த்து உப்பு, மஞ்சள் பொடி, சிறிது வெல்லம், தேவையான மசாலாக்கள் சேர்த்து நன்றாக கொதிக்க வைத்து, தேவையான கெட்டி பதம் (குழம்பு பதம்) வந்தவுடன் இறக்கிவிடவும்..இன்னும் கெட்டியாக வேண்டுமானால் பொட்டுக்கடலை மாவு/ கோதுமை மாவு அல்லது அரிசி மாவு சிறிது கலக்கிச் சேர்க்கலாம். மிகவும் சுவையான குழம்பு இது.-லக்ஷ்மி கணபதி, கோயம்புத்தூர்.மராத்தி க்விக் கடீ!.தேவை: நல்ல தயிர் – 3 கப், கடலை மாவ – 1 கப், தண்ணீர் – 5 கப், பச்சை மிளகாய் – 4, இஞ்சி – 1 துண்டு, சீனி – 1 டீஸ்பூன், நெய் – 2 டேபிள் ஸ்பூன், மஞ்சள் பொடி – அரை டீஸ்பூன், மிளகாய் பொடி – அரை டீஸ்பூன்,பெருங்காயப் பொடி – 1 சிட்டிகை, கடுகு, சீரகம், வெந்தயம் – அரை டீஸ்பூன், கறிவேப்பிலை – கொஞ்சம், உப்பு – தேவைக்கு.செய்முறை: வாணலியில் சிறிது நெய் விட்டு காய்ந்ததும், சலித்த கடலை மாவைப் போட்டு, வாசனை போக லேசாக வறுத்து எடுத்துக் கொள்ளவும். ஆறிய பின் கொஞ்சம் தண்ணீரில் போட்டு கட்டியில்லாமல் கரைத்துப் பின் தயிரில் மிக்ஸ் செய்து மத்தினால் ஒரு நிமிடம் சிலுப்பிக் கொள்ளவும். மீதித் தண்ணீரை இத்துடன் சேர்க்கவும்..இஞ்சி, பச்சை மிளகாயைப் பொடியாக நறுக்கிப் போட்டு, மிளகாய்ப் பொடி, சர்க்கரை, உப்பு, மஞ்சள் பொடி, பெருங்காயப் பொடி ஆகியவைகளை கலந்து அடிக்கனமான வாணலியில் விட்டு அடுப்பின்மீது வைத்து சிம்மில் 10 நிமிடங்கள் கொதிக்கச் செய்து இறக்க "கடீ" ரெடி..மற்றுமொறு வாணலியில் நெய்விட்டு காய்ந்ததும் கடுகு, சீரகம், வெந்தயம், கறிவேப்பிலை தாளித்து கடீயில் போட்டு நன்றகாகக் கிண்டவும். சூடான கிச்சடி சாதத்துடன் கடீ சேர்த்து சாப்பிட டேஸ்ட்டியாக இருக்கும். நோ தேங்காய்.-ஆர். மீனலதா, மும்பை