-ஜி.எஸ்.எஸ்..ஊழல் செய்வது யாராக இருந்தாலும் அவர் சந்தேகமில்லாமல் கண்டிக்கப்பட வேண்டியவர். தண்டிக்கப்பட வேண்டியவர்..என்றாலும் உச்சத்தில் உள்ள ஒரு பெண்மணி ஊழலில் ஈடுபடுவது தெரியவரும்போது அவர் அதிக கவனம் பெறுகிறார். இந்த விதத்தில் ஒரு வங்கியின் உச்ச பதவியில் இருந்த ஒரு பெண்மணி, தேசிய பங்குச் சந்தையின் தலைமைப் பதவியை வகித்த ஒரு பெண்மணி, மூன்று மாநிலங்களில் முதல்வர் பதவி வகித்த பெண்கள், ஒரு பெண் தாசில்தார் ஆகியோர் ஊடகங்களில் அதிக அளவில் இடம் பெற்றனர்..இதுபோன்ற செய்திகளைப் படிக்கும்போது கணிசமானவர்களின் மனதில் ஓர் அதிர்ச்சி கூட ஏற்படுகிறது. 'ஒரு பெண்ணா இருந்துகிட்டு இப்படி ஊழலில் ஈடுபட்டு இருக்காங்களே'!.தன் கணவன் ஊழல் செய்கிறான் என்பது தெரிந்தும் மௌனத்தின் மூலம் அதற்குத் துணை போகும் பெண்கள் பலர் உண்டு. சொல்லப்போனால் அதனால் கிடைக்கும் ஆதாயத்தை வரவேற்கும் பெண்களும் உண்டு. ஒரு திரைப்படத்தில் கூட 'ஓர் ஆண் லஞ்சம் வாங்கிய பணமெல்லாம் அவன் குடும்பத்துக்குதானே போகுது. எனவே தண்டனையை அந்தக் குடும்பத்தினரும் அனுபவிக்க வேண்டியதுதான்' என்று கூறப்பட்டது..இப்படி மறைமுகமாக ஊழலுக்குத் துணைபோவது ஒரு புறமிருக்க, நேரடியாக ஊழலில் ஈடுபடும் பெண்களின் சதவிகிதம் குறைவுதானா?.இந்த ஆண்டின் தொடக்கத்தில் 'டிரான்ஸ்பரென்ஸி இன்டர்நேஷனல்' என்ற பிரபல சர்வதேச நிறுவனம் உலகெங்கும் நிலவும் ஊழல் குறித்த தனது அறிக்கையை வெளியிட்டது. கடந்த பத்து வருடங்களாகவே உலக அளவில் ஊழல் குறையவில்லை என்றது அந்த அறிக்கை. போதாக்குறைக்கு வறுமை நாடுகளில் ஊழலின் அளவு அதிகரிக்கிறதாம்..ஊழலைத் தவிர்ப்பதற்காக சில நாடுகள் ஒரு வித்தியாசமான செயல்முறையை பின்பற்றத் தொடங்கியுள்ளன. அதாவது அதிக அளவில் பெண்களை பணிக்கு அமர்த்துவது. மெக்சிகோ நாட்டில் போக்குவரத்துப் போலீசார் அதிக அளவில் லஞ்சத்தில் ஈடுபடுகிறார்கள் என்ற நிலை இருந்தது. இதனால், போக்குவரத்துக் காவல்துறை முழுவதும் பெண்களை நியமித்தது அந்த அரசு. பெரு என்ற நாட்டின் அரசும் இதேபோன்ற முடிவை செயல்படுத்தி உள்ளது..இதற்குக் கூறப்பட்ட காரணம் பெண்கள் ஊழல் செய்ய அஞ்சுவார்கள் என்பதுதான்..உலக வங்கி ஓர் அறிக்கையை 2001ல் வெளியிட்டது. இதில் 100 நாடுகளில் செய்யப்பட்ட ஆராய்ச்சியில் எங்கெல்லாம் பாராளுமன்ற மற்றும் சட்டசபை உறுப்பினர்கள் அதிக அளவில் பெண்களாக இருக்கிறார்களோ அங்கெல்லாம் அதிகாரிகள் லஞ்சம் பெறுவது குறைவாகவே இருக்கிறதாம்..இத்தாலியில் கடந்த ஆறு ஆண்டுகளில் நடைபெற்ற ஆராய்ச்சியின் முடிவும் இதைத்தான் கூறுகிறது..ஆக, பெரும் ஊழலில் ஈடுபட்ட பெண்களைப் பற்றிய செய்திகள் நம் காதுகளை எட்டினாலும் ஒட்டுமொத்தமாகப் பார்க்கும்போது பெண்கள் ஊழலில் ஈடுபடுவது, ஒப்பீட்டளவில், குறைவாகவே இருக்கிறது எனலாம்..இதற்கான காரணங்கள் என்னவாக இருக்கும் என்பதைப் பார்ப்போம். .'குடும்பத்தின் பிம்பம் சிதைந்து போகுமே' என்ற கவலை பெண்களுக்கு அதிகம் இருக்க வாய்ப்பு உண்டு. ஊழல் செய்வது தெரியவந்து தான் மாட்டிக் கொண்டால் தன் குழந்தைகளைப் பற்றி சமூகம் எப்படி விமர்சிக்கும் என்ற பயம் ஒரு தாய்க்கு அதிகம் இருக்க வாய்ப்பு உண்டு. தவிர உலக அளவில் ரிஸ்க் எடுத்துக்கொள்ள முன் வருபவர்களில் பெண்களின் சதவிகிதத்தை விட ஆண்களின் சதவிகிதம் அதிகம் என்கிறது ஓர் ஆய்வு..மற்றொரு காரணம் ஊழலில் பெருமளவு ஈடுபடுவதற்கான வாய்ப்பு பெண்களுக்குக் குறைவாக இருக்கிறது. காலகாலமாக உயர்பதவிகளில் ஆண்கள்தான் இருந்து வந்திருக்கிறார்கள். பல்வேறு அமைப்புகளில் உள்ள இவர்கள் அலுவலகத்துக்கு வெளியே 'கிளப்'புகள் போன்ற சமூக, கேளிக்கை அமைப்புகளில் உறுப்பினர்களாக இருக்கிறார்கள். அங்கே அடிக்கடி சந்திக்கிறார்கள். புதிதாக எந்த வகையில் ஊழல் செய்யலாம், கிடைக்கும் ஆதாயத்தை எப்படி பங்கு பிரித்துக் கொள்ளலாம், மாட்டிக் கொள்ளாமல் ஊழல் செய்வது எப்படி போன்றவை குறித்தெல்லாம் விவாதிக்க அவர்களுக்கு வாய்ப்பு அதிகம்..நல்லொழுக்க சிந்தனைகள் பெண்களிடம் சற்று அதிகமாக இருக்கிறது என்கிறது மற்றொரு ஆய்வு. பெரும் நிறுவனங்களில் முடிவெடுக்கும் இடத்தில் பெண்கள் இருந்தால் அங்கே ஊழல் நடைமுறைகள் குறைவாக உள்ளனவாம்..ஊழலில் ஈடுபடாமை என்ற பிம்பம் பெண்களுக்கு இருக்கிறது. அதனால்தான் விதிவிலக்குகள் தெரிய வரும்போது அவை அதிக வியப்பையும் விமர்சனத்தையும் சந்திக்கின்றன. ஆனால் இந்த நிலை தொழில்நுட்ப முன்னேற்றங்கள், உயர்பதவிகளில் மிக அதிக அளவில் பெண்கள் அமர்த்தப்படுதல், அவர்களுக்கிடையே கூட்டணி ஏற்படும்போது நச்சுக் கருத்துகள் பரவுதல் ஆகியவை காரணமாக பெண்களும் ஊழலில் ஈடுபட வாய்ப்பு அதிகமாகும் என்கிறார்கள். என்றாலும் இப்போதைய நிலைமையில் இந்தக் கோணத்தில் பெண்களுக்கான பிம்பம் அதிகம் பழுது படவில்லை என்பது ஆறுதல் அளிக்கும் விஷயம்.
-ஜி.எஸ்.எஸ்..ஊழல் செய்வது யாராக இருந்தாலும் அவர் சந்தேகமில்லாமல் கண்டிக்கப்பட வேண்டியவர். தண்டிக்கப்பட வேண்டியவர்..என்றாலும் உச்சத்தில் உள்ள ஒரு பெண்மணி ஊழலில் ஈடுபடுவது தெரியவரும்போது அவர் அதிக கவனம் பெறுகிறார். இந்த விதத்தில் ஒரு வங்கியின் உச்ச பதவியில் இருந்த ஒரு பெண்மணி, தேசிய பங்குச் சந்தையின் தலைமைப் பதவியை வகித்த ஒரு பெண்மணி, மூன்று மாநிலங்களில் முதல்வர் பதவி வகித்த பெண்கள், ஒரு பெண் தாசில்தார் ஆகியோர் ஊடகங்களில் அதிக அளவில் இடம் பெற்றனர்..இதுபோன்ற செய்திகளைப் படிக்கும்போது கணிசமானவர்களின் மனதில் ஓர் அதிர்ச்சி கூட ஏற்படுகிறது. 'ஒரு பெண்ணா இருந்துகிட்டு இப்படி ஊழலில் ஈடுபட்டு இருக்காங்களே'!.தன் கணவன் ஊழல் செய்கிறான் என்பது தெரிந்தும் மௌனத்தின் மூலம் அதற்குத் துணை போகும் பெண்கள் பலர் உண்டு. சொல்லப்போனால் அதனால் கிடைக்கும் ஆதாயத்தை வரவேற்கும் பெண்களும் உண்டு. ஒரு திரைப்படத்தில் கூட 'ஓர் ஆண் லஞ்சம் வாங்கிய பணமெல்லாம் அவன் குடும்பத்துக்குதானே போகுது. எனவே தண்டனையை அந்தக் குடும்பத்தினரும் அனுபவிக்க வேண்டியதுதான்' என்று கூறப்பட்டது..இப்படி மறைமுகமாக ஊழலுக்குத் துணைபோவது ஒரு புறமிருக்க, நேரடியாக ஊழலில் ஈடுபடும் பெண்களின் சதவிகிதம் குறைவுதானா?.இந்த ஆண்டின் தொடக்கத்தில் 'டிரான்ஸ்பரென்ஸி இன்டர்நேஷனல்' என்ற பிரபல சர்வதேச நிறுவனம் உலகெங்கும் நிலவும் ஊழல் குறித்த தனது அறிக்கையை வெளியிட்டது. கடந்த பத்து வருடங்களாகவே உலக அளவில் ஊழல் குறையவில்லை என்றது அந்த அறிக்கை. போதாக்குறைக்கு வறுமை நாடுகளில் ஊழலின் அளவு அதிகரிக்கிறதாம்..ஊழலைத் தவிர்ப்பதற்காக சில நாடுகள் ஒரு வித்தியாசமான செயல்முறையை பின்பற்றத் தொடங்கியுள்ளன. அதாவது அதிக அளவில் பெண்களை பணிக்கு அமர்த்துவது. மெக்சிகோ நாட்டில் போக்குவரத்துப் போலீசார் அதிக அளவில் லஞ்சத்தில் ஈடுபடுகிறார்கள் என்ற நிலை இருந்தது. இதனால், போக்குவரத்துக் காவல்துறை முழுவதும் பெண்களை நியமித்தது அந்த அரசு. பெரு என்ற நாட்டின் அரசும் இதேபோன்ற முடிவை செயல்படுத்தி உள்ளது..இதற்குக் கூறப்பட்ட காரணம் பெண்கள் ஊழல் செய்ய அஞ்சுவார்கள் என்பதுதான்..உலக வங்கி ஓர் அறிக்கையை 2001ல் வெளியிட்டது. இதில் 100 நாடுகளில் செய்யப்பட்ட ஆராய்ச்சியில் எங்கெல்லாம் பாராளுமன்ற மற்றும் சட்டசபை உறுப்பினர்கள் அதிக அளவில் பெண்களாக இருக்கிறார்களோ அங்கெல்லாம் அதிகாரிகள் லஞ்சம் பெறுவது குறைவாகவே இருக்கிறதாம்..இத்தாலியில் கடந்த ஆறு ஆண்டுகளில் நடைபெற்ற ஆராய்ச்சியின் முடிவும் இதைத்தான் கூறுகிறது..ஆக, பெரும் ஊழலில் ஈடுபட்ட பெண்களைப் பற்றிய செய்திகள் நம் காதுகளை எட்டினாலும் ஒட்டுமொத்தமாகப் பார்க்கும்போது பெண்கள் ஊழலில் ஈடுபடுவது, ஒப்பீட்டளவில், குறைவாகவே இருக்கிறது எனலாம்..இதற்கான காரணங்கள் என்னவாக இருக்கும் என்பதைப் பார்ப்போம். .'குடும்பத்தின் பிம்பம் சிதைந்து போகுமே' என்ற கவலை பெண்களுக்கு அதிகம் இருக்க வாய்ப்பு உண்டு. ஊழல் செய்வது தெரியவந்து தான் மாட்டிக் கொண்டால் தன் குழந்தைகளைப் பற்றி சமூகம் எப்படி விமர்சிக்கும் என்ற பயம் ஒரு தாய்க்கு அதிகம் இருக்க வாய்ப்பு உண்டு. தவிர உலக அளவில் ரிஸ்க் எடுத்துக்கொள்ள முன் வருபவர்களில் பெண்களின் சதவிகிதத்தை விட ஆண்களின் சதவிகிதம் அதிகம் என்கிறது ஓர் ஆய்வு..மற்றொரு காரணம் ஊழலில் பெருமளவு ஈடுபடுவதற்கான வாய்ப்பு பெண்களுக்குக் குறைவாக இருக்கிறது. காலகாலமாக உயர்பதவிகளில் ஆண்கள்தான் இருந்து வந்திருக்கிறார்கள். பல்வேறு அமைப்புகளில் உள்ள இவர்கள் அலுவலகத்துக்கு வெளியே 'கிளப்'புகள் போன்ற சமூக, கேளிக்கை அமைப்புகளில் உறுப்பினர்களாக இருக்கிறார்கள். அங்கே அடிக்கடி சந்திக்கிறார்கள். புதிதாக எந்த வகையில் ஊழல் செய்யலாம், கிடைக்கும் ஆதாயத்தை எப்படி பங்கு பிரித்துக் கொள்ளலாம், மாட்டிக் கொள்ளாமல் ஊழல் செய்வது எப்படி போன்றவை குறித்தெல்லாம் விவாதிக்க அவர்களுக்கு வாய்ப்பு அதிகம்..நல்லொழுக்க சிந்தனைகள் பெண்களிடம் சற்று அதிகமாக இருக்கிறது என்கிறது மற்றொரு ஆய்வு. பெரும் நிறுவனங்களில் முடிவெடுக்கும் இடத்தில் பெண்கள் இருந்தால் அங்கே ஊழல் நடைமுறைகள் குறைவாக உள்ளனவாம்..ஊழலில் ஈடுபடாமை என்ற பிம்பம் பெண்களுக்கு இருக்கிறது. அதனால்தான் விதிவிலக்குகள் தெரிய வரும்போது அவை அதிக வியப்பையும் விமர்சனத்தையும் சந்திக்கின்றன. ஆனால் இந்த நிலை தொழில்நுட்ப முன்னேற்றங்கள், உயர்பதவிகளில் மிக அதிக அளவில் பெண்கள் அமர்த்தப்படுதல், அவர்களுக்கிடையே கூட்டணி ஏற்படும்போது நச்சுக் கருத்துகள் பரவுதல் ஆகியவை காரணமாக பெண்களும் ஊழலில் ஈடுபட வாய்ப்பு அதிகமாகும் என்கிறார்கள். என்றாலும் இப்போதைய நிலைமையில் இந்தக் கோணத்தில் பெண்களுக்கான பிம்பம் அதிகம் பழுது படவில்லை என்பது ஆறுதல் அளிக்கும் விஷயம்.