மாமல்லபுரத்தில் நடைபெறும் 44வது செஸ் ஒலிம்பியாட் போட்டி பற்றி…– எஸ். கெஜலட்சுமி ராஜேந்திரன், லால்குடி.பெரிய பெருமைதான் கெஜலட்சுமி! உலகையே திரும்பிப் பார்க்க வைத்திருக்கிறது நம்ப சென்னை செஸ் ஒலிம்பியாட். செஸ் ஒலிம்பியாட்டை நடத்தணுங்கிற இந்தியக் கனவு நனவாக… அடேயப்பா 95 வருஷமாயிருக்கு! காத்திருந்து… காத்திருந்து… அதுவும் தமிழ்நாட்டுல நடப்பது எக்ஸ்ட்ரா கெளரவம்..ஒலிம்பியாட் வரலாற்றுல, டாப் டூ சதுரங்க ராஜாக்களான ரஷ்யாவும் சீனாவும் களத்துல இல்லைங்கிறது நமக்கெல்லாம் ஒரு ஹைய்யா ஜாலி விஷயம்தான்! ஆனா, அமெரிக்கா, உக்ரைன் கில்லாடிங்க இருக்காங்க! அவங்கள்ளாம் பலமுறை கோல்ட் வின்னர்ஸ்! எப்படியும் நம்ப ஆளுங்க தெறிக்க விடுவாங்க பாருங்க!.பை தி வே… கோனேரு ஹம்பி தலைமையில் கலக்கப் போற இந்தியப் பெண்கள் அணிக்கும், மற்ற வீராங்கனைகளுக்கும் அட்வான்ஸ் வாழ்த்துகள்! சாதுர்யமாகக் 'காய்'களை நகர்த்தி, வெற்றிக் 'கனியைப் பறிச்சுட்டு வாங்க செஸ் 'பூ'ம்பாவைகளே!.பின்குறிப்பு: காவிரி தென்கரையில, தேவராப் பாடல் பெற்ற ஸ்தலமான பூவனூர் ஸ்ரீசதுரங்க வல்லப நாதர் திருக்கோயில் பிரசித்தமாக உள்ளது. சதுரங்க ஆட்டத்துல சிறந்து விளங்கிய இவ்வூர் மன்னரின் மகள் உமையம்மையுடன் சிவபெருமான் சதுரங்கம் விளையாடி வெற்றி பெற்று, உமையைத் திருமணமும் செய்துகொண்டாராம்..அதன் அடிப்படையில் பார்த்தா, சதுரங்க விளையாட்டின் தாயகமே தமிழகம்தான்! வரலாறு முக்கியம் இல்லையா?!.*********************.நடிகர் சூர்யாவுக்கு தேசிய விருது அளிக்கப்பட்டது சர்ச்சைக்குள்ளாகி உள்ளதே!– புவனா நாகராஜன், செம்பனார்கோவில்.நடிகர் சூர்யாவின் மேனேஜரான தங்கதுரை என்பவர் தேசியத் திரைப்பட விருது தேர்வுக் குழுவில் இடம் பெற்றிருப்பதால் இந்த விமர்சனம் எழுந்துள்ளது..'சூரரைப் போற்று' நல்ல படம்தான்! சூர்யாவும் சிறப்பாகவே நடித்திருந்தார். ஆனால், 'கடைசி விவசாயி' படத்தில் நடித்திருந்த நல்லாண்டிக்குக் கிடைத்திருந்தால் மகிழ்ந்திருப்பேன். ஏனென்றால் அவருக்கு இனி அப்படி ஒரு கேரக்டர் அமையாது..'அய்யப்பனும் கோஷியும்' படத்தில் நடித்திருந்த பிஜூ மேனன் – சிறந்த துணை நடிகராம்! ஜூரிஸ்…ஃபுல் படம் பார்த்தீங்களா?.'கமலி C/o நடுக்காவேரி'யில் நடிச்ச கயல் ஆனந்தி நடிப்பு, அபர்ணா முரளியை மிஞ்சிய ஒன்று!.சரி விடுங்க… விருது, வெண்டைக்காய்னாலே, லாபியிங் என்றொரு விஷயம் புதுசா என்ன?.*********************."தமிழக வனப்பகுதிகளில் உள்ள அனைத்து அந்நிய மரங்களும் அகற்றப்படும்… தமிழகத்தில் இனி யூகலிப்டஸ் மரங்களை நடக்கூடாது" என தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதி மன்றம் உத்தரவு போட்டிருக்கிறதே!– சங்கரி தேவநாதன், திருச்சி.அந்நிய மரங்களை வெட்டுவது ஒரு புறம் இருக்கட்டும், உள்ளூர் மரங்களை யார் நடணும்னும் ஒரு வார்த்தை கண்டீஷனா சொல்லிட்டீங்கன்னா, நல்லாயிருக்கும்..தைல மரங்களாவது, மலைப் பகுதிகள்ல மண் சரிவு ஏற்படாம காப்பாத்துது. மருத்துவ குணமிக்க, 'தைலம்' கிடைக்குது. ஆனா, அதைவிட மோசமானது சீமைக் கருவேலம். அது, நிலத்தடி நீரை மட்டுமல்லாது, காற்றில் இருக்குற ஈரப்பதத்தைக்கூட ஒரேயடியா உறிஞ்சுடும். அந்தக் கருவேல மரங்களை வேரோட பிடுங்கி எடுக்கவும் ஒரு உத்தரவு போடுங்க ஜட்ஜ் அய்யா! அதுதான் ஊர் முழுக்க மண்டிக் கிடக்குது!.*********************.மாலை வேளை டிபனுக்கு அப்படி என்ன அட்ராக்ஷன்?-வாசுதேவன், பெங்களூரு.'கல்யாண மாலை வேளை'யைத்தான் 'மாலை வேளை'ன்னு சுருக்கிக் சொல்றீங்க… அப்படித்தானே வாசு ஸார்? சொஜ்ஜி – பஜ்ஜிதான் ஆண்டாண்டு காலமா பெண் பார்க்கும் படலத்துக்குத் தரப்பட்ட டிபன்! அதில் டிபன் எவ்வளவு மொக்கையா இருந்தாலும், பொண்ணு நல்லா இருந்தா ஒ.கே சொல்றதும், பொண்ணு சுமாரா இருந்தாலும், டிபன் சூபரா இருந்தா டபுள் ஒகே சொல்றதும் ஆண்களுக்கான ஆல் டைம் டெம்ப்ளேட்! அதுதான் அவ்வளவு அட்ராக்ஷன்!.ஆனால், அந்த உபச்சாரம் எல்லாம் இப்ப மிஸ்ஸிங்! ஏதாவது ஒரு காஃபி ஷாப்ல, ஆணும் பெண்ணும் சந்திக்கிறாங்க! மாப்பிள்ளை பிடிக்கலைன்னா, பில்லுக்கு உண்டான பாதிக் காசை அந்தப் பொண்ணு வெச்சுட்டுப் போயிடுவா! மாப்பிள்ளைப் பையன் "வட போச்சே!".
மாமல்லபுரத்தில் நடைபெறும் 44வது செஸ் ஒலிம்பியாட் போட்டி பற்றி…– எஸ். கெஜலட்சுமி ராஜேந்திரன், லால்குடி.பெரிய பெருமைதான் கெஜலட்சுமி! உலகையே திரும்பிப் பார்க்க வைத்திருக்கிறது நம்ப சென்னை செஸ் ஒலிம்பியாட். செஸ் ஒலிம்பியாட்டை நடத்தணுங்கிற இந்தியக் கனவு நனவாக… அடேயப்பா 95 வருஷமாயிருக்கு! காத்திருந்து… காத்திருந்து… அதுவும் தமிழ்நாட்டுல நடப்பது எக்ஸ்ட்ரா கெளரவம்..ஒலிம்பியாட் வரலாற்றுல, டாப் டூ சதுரங்க ராஜாக்களான ரஷ்யாவும் சீனாவும் களத்துல இல்லைங்கிறது நமக்கெல்லாம் ஒரு ஹைய்யா ஜாலி விஷயம்தான்! ஆனா, அமெரிக்கா, உக்ரைன் கில்லாடிங்க இருக்காங்க! அவங்கள்ளாம் பலமுறை கோல்ட் வின்னர்ஸ்! எப்படியும் நம்ப ஆளுங்க தெறிக்க விடுவாங்க பாருங்க!.பை தி வே… கோனேரு ஹம்பி தலைமையில் கலக்கப் போற இந்தியப் பெண்கள் அணிக்கும், மற்ற வீராங்கனைகளுக்கும் அட்வான்ஸ் வாழ்த்துகள்! சாதுர்யமாகக் 'காய்'களை நகர்த்தி, வெற்றிக் 'கனியைப் பறிச்சுட்டு வாங்க செஸ் 'பூ'ம்பாவைகளே!.பின்குறிப்பு: காவிரி தென்கரையில, தேவராப் பாடல் பெற்ற ஸ்தலமான பூவனூர் ஸ்ரீசதுரங்க வல்லப நாதர் திருக்கோயில் பிரசித்தமாக உள்ளது. சதுரங்க ஆட்டத்துல சிறந்து விளங்கிய இவ்வூர் மன்னரின் மகள் உமையம்மையுடன் சிவபெருமான் சதுரங்கம் விளையாடி வெற்றி பெற்று, உமையைத் திருமணமும் செய்துகொண்டாராம்..அதன் அடிப்படையில் பார்த்தா, சதுரங்க விளையாட்டின் தாயகமே தமிழகம்தான்! வரலாறு முக்கியம் இல்லையா?!.*********************.நடிகர் சூர்யாவுக்கு தேசிய விருது அளிக்கப்பட்டது சர்ச்சைக்குள்ளாகி உள்ளதே!– புவனா நாகராஜன், செம்பனார்கோவில்.நடிகர் சூர்யாவின் மேனேஜரான தங்கதுரை என்பவர் தேசியத் திரைப்பட விருது தேர்வுக் குழுவில் இடம் பெற்றிருப்பதால் இந்த விமர்சனம் எழுந்துள்ளது..'சூரரைப் போற்று' நல்ல படம்தான்! சூர்யாவும் சிறப்பாகவே நடித்திருந்தார். ஆனால், 'கடைசி விவசாயி' படத்தில் நடித்திருந்த நல்லாண்டிக்குக் கிடைத்திருந்தால் மகிழ்ந்திருப்பேன். ஏனென்றால் அவருக்கு இனி அப்படி ஒரு கேரக்டர் அமையாது..'அய்யப்பனும் கோஷியும்' படத்தில் நடித்திருந்த பிஜூ மேனன் – சிறந்த துணை நடிகராம்! ஜூரிஸ்…ஃபுல் படம் பார்த்தீங்களா?.'கமலி C/o நடுக்காவேரி'யில் நடிச்ச கயல் ஆனந்தி நடிப்பு, அபர்ணா முரளியை மிஞ்சிய ஒன்று!.சரி விடுங்க… விருது, வெண்டைக்காய்னாலே, லாபியிங் என்றொரு விஷயம் புதுசா என்ன?.*********************."தமிழக வனப்பகுதிகளில் உள்ள அனைத்து அந்நிய மரங்களும் அகற்றப்படும்… தமிழகத்தில் இனி யூகலிப்டஸ் மரங்களை நடக்கூடாது" என தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதி மன்றம் உத்தரவு போட்டிருக்கிறதே!– சங்கரி தேவநாதன், திருச்சி.அந்நிய மரங்களை வெட்டுவது ஒரு புறம் இருக்கட்டும், உள்ளூர் மரங்களை யார் நடணும்னும் ஒரு வார்த்தை கண்டீஷனா சொல்லிட்டீங்கன்னா, நல்லாயிருக்கும்..தைல மரங்களாவது, மலைப் பகுதிகள்ல மண் சரிவு ஏற்படாம காப்பாத்துது. மருத்துவ குணமிக்க, 'தைலம்' கிடைக்குது. ஆனா, அதைவிட மோசமானது சீமைக் கருவேலம். அது, நிலத்தடி நீரை மட்டுமல்லாது, காற்றில் இருக்குற ஈரப்பதத்தைக்கூட ஒரேயடியா உறிஞ்சுடும். அந்தக் கருவேல மரங்களை வேரோட பிடுங்கி எடுக்கவும் ஒரு உத்தரவு போடுங்க ஜட்ஜ் அய்யா! அதுதான் ஊர் முழுக்க மண்டிக் கிடக்குது!.*********************.மாலை வேளை டிபனுக்கு அப்படி என்ன அட்ராக்ஷன்?-வாசுதேவன், பெங்களூரு.'கல்யாண மாலை வேளை'யைத்தான் 'மாலை வேளை'ன்னு சுருக்கிக் சொல்றீங்க… அப்படித்தானே வாசு ஸார்? சொஜ்ஜி – பஜ்ஜிதான் ஆண்டாண்டு காலமா பெண் பார்க்கும் படலத்துக்குத் தரப்பட்ட டிபன்! அதில் டிபன் எவ்வளவு மொக்கையா இருந்தாலும், பொண்ணு நல்லா இருந்தா ஒ.கே சொல்றதும், பொண்ணு சுமாரா இருந்தாலும், டிபன் சூபரா இருந்தா டபுள் ஒகே சொல்றதும் ஆண்களுக்கான ஆல் டைம் டெம்ப்ளேட்! அதுதான் அவ்வளவு அட்ராக்ஷன்!.ஆனால், அந்த உபச்சாரம் எல்லாம் இப்ப மிஸ்ஸிங்! ஏதாவது ஒரு காஃபி ஷாப்ல, ஆணும் பெண்ணும் சந்திக்கிறாங்க! மாப்பிள்ளை பிடிக்கலைன்னா, பில்லுக்கு உண்டான பாதிக் காசை அந்தப் பொண்ணு வெச்சுட்டுப் போயிடுவா! மாப்பிள்ளைப் பையன் "வட போச்சே!".