படங்கள்: பிரபுராம்."இது மாதிரி என்கிட்டே தொடர்ந்து சண்டை போட்டுக்கிட்டே இருந்தா ஒருநாள் மிருகமா மாறிவிடுவேன் ஜாக்கிரதை."."அட நீங்க வேற… எலியைப் பாத்தெல்லாம் நான் பயப்பட மாட்டேன்.".*****************************."உங்க கணவர் உங்ககிட்ட பயங்கரமா நடிப்பார் போலிருக்கே?"."எப்படிச் சொல்றீங்க?"."ஓபன் ஹார்ட் சர்ஜரி பண்ணும்போது இதயத்துல இருக்கற என் மனைவிக்கு காயம்படாம பண்ணுங்க டாக்டர்னு சொன்னாரே!"–ஏ. எஸ். கோவிந்தராஜன், சென்னை.*****************************."கொஞ்ச நாளைக்கு கட்சியை விட்டு ஒதுங்கி இருக்கலாம்னு நினைக்கிறேன்யா!"."நல்ல முடிவு தலைவரே… இல்லைன்னா கட்சி மேலிடம் உங்களைக் கட்சியை விட்டே ஒதுக்கிடுவாங்க!".*****************************."ஆறு மாசத்துக்கு முன்னால நீங்க அந்தக் கட்சியிலிருந்து விலகினது நல்லதாப் போச்சு தலைவரே?"."என்னடா சொல்ற?"."இப்போ அந்தக் கட்சி நல்லா வளர்ச்சி அடைஞ்சிருக்கு."-சி.ஆர்.ஹரிஹரன், கேரளா.*****************************."எங்க வீட்டுக்கு வந்த திருடன், கையில ஆசிட் எடுத்திட்டு வந்திருந்தான் சார்!"."பீரோ சாவி தரலைன்னா, உங்க மேல ஊத்தலாம்னா?"."இல்லை சார்… எங்க வீட்டு நகைகளோட தரத்தை செக் பண்ண சார்!".*****************************."தேர்தல் விதிகளை நீங்க மதிக்காமல் நடந்துக்க என்ன காரணம்?"."நான் பகுத்தறிவுவாதி யுவரானர்… எந்த விதியையும் நான் நம்பமாட்டேன்."– வி. ரேவதி, தஞ்சை
படங்கள்: பிரபுராம்."இது மாதிரி என்கிட்டே தொடர்ந்து சண்டை போட்டுக்கிட்டே இருந்தா ஒருநாள் மிருகமா மாறிவிடுவேன் ஜாக்கிரதை."."அட நீங்க வேற… எலியைப் பாத்தெல்லாம் நான் பயப்பட மாட்டேன்.".*****************************."உங்க கணவர் உங்ககிட்ட பயங்கரமா நடிப்பார் போலிருக்கே?"."எப்படிச் சொல்றீங்க?"."ஓபன் ஹார்ட் சர்ஜரி பண்ணும்போது இதயத்துல இருக்கற என் மனைவிக்கு காயம்படாம பண்ணுங்க டாக்டர்னு சொன்னாரே!"–ஏ. எஸ். கோவிந்தராஜன், சென்னை.*****************************."கொஞ்ச நாளைக்கு கட்சியை விட்டு ஒதுங்கி இருக்கலாம்னு நினைக்கிறேன்யா!"."நல்ல முடிவு தலைவரே… இல்லைன்னா கட்சி மேலிடம் உங்களைக் கட்சியை விட்டே ஒதுக்கிடுவாங்க!".*****************************."ஆறு மாசத்துக்கு முன்னால நீங்க அந்தக் கட்சியிலிருந்து விலகினது நல்லதாப் போச்சு தலைவரே?"."என்னடா சொல்ற?"."இப்போ அந்தக் கட்சி நல்லா வளர்ச்சி அடைஞ்சிருக்கு."-சி.ஆர்.ஹரிஹரன், கேரளா.*****************************."எங்க வீட்டுக்கு வந்த திருடன், கையில ஆசிட் எடுத்திட்டு வந்திருந்தான் சார்!"."பீரோ சாவி தரலைன்னா, உங்க மேல ஊத்தலாம்னா?"."இல்லை சார்… எங்க வீட்டு நகைகளோட தரத்தை செக் பண்ண சார்!".*****************************."தேர்தல் விதிகளை நீங்க மதிக்காமல் நடந்துக்க என்ன காரணம்?"."நான் பகுத்தறிவுவாதி யுவரானர்… எந்த விதியையும் நான் நம்பமாட்டேன்."– வி. ரேவதி, தஞ்சை