கவிதை!.-ஜி.அர்ஜுனன், செங்கல்பட்டு.இதுவரைஉன்னை முந்திப்போகநினைத்ததில்லை!.இப்போதெல்லாம்மூன்றுகால் போட்டியிலும்நீயேதான் முதலிடம் பிடிக்கிறாய்!.எண்பது வயதிலும்எனக்கு எதுவும்தெரியாதென்றே நம்புகிறாய்நீ இல்லா விட்டால்எனக்கு வாழத் தெரியாதுஎன்றும் புலம்புகிறாய்.உண்மைதான்….நான் கட்டியிருக்கும்கந்தல் வேட்டியைக் கூடநீதான் கசக்கி பிழிகிறாய்நான் குடிக்கும் கஞ்சிக்கு கூடஉப்பு போதுமா போதாதாஎன்று நீதான் முடிவு செய்கிறாய்.எனக்கு எதுவும் தெரியாதெனசொல்லுவதில்தான்உனக்கு மகிழ்ச்சி.அதுவும் எனக்குத் தெரியும்..அதனால்தான் நான்எதுவும் தெரியாதவனாகவேஇருக்க விரும்புகிறேன்!.ஆனாலும்….முதுமையில்உறவுகளோடு ஒன்றி வாழகிழவிகளால் முடியும்.கிழவர்களால் முடியாது என்கிறார்களே….அது உண்மையாய் தெரிவதால்..இப்போதெல்லாம்எப்படியும் உன்னைமுந்திவிட வேண்டும்என்றே நினைக்கிறேன்..நீ இருந்து நான் போனால்எனக்கு அது சொர்க்கம்!நீ போய் நான் இருந்தால்அதுதான் எனக்கு நரகம்!.அதனால்நான் முந்திப் போகதாயேஅனுமதி கொடு.
கவிதை!.-ஜி.அர்ஜுனன், செங்கல்பட்டு.இதுவரைஉன்னை முந்திப்போகநினைத்ததில்லை!.இப்போதெல்லாம்மூன்றுகால் போட்டியிலும்நீயேதான் முதலிடம் பிடிக்கிறாய்!.எண்பது வயதிலும்எனக்கு எதுவும்தெரியாதென்றே நம்புகிறாய்நீ இல்லா விட்டால்எனக்கு வாழத் தெரியாதுஎன்றும் புலம்புகிறாய்.உண்மைதான்….நான் கட்டியிருக்கும்கந்தல் வேட்டியைக் கூடநீதான் கசக்கி பிழிகிறாய்நான் குடிக்கும் கஞ்சிக்கு கூடஉப்பு போதுமா போதாதாஎன்று நீதான் முடிவு செய்கிறாய்.எனக்கு எதுவும் தெரியாதெனசொல்லுவதில்தான்உனக்கு மகிழ்ச்சி.அதுவும் எனக்குத் தெரியும்..அதனால்தான் நான்எதுவும் தெரியாதவனாகவேஇருக்க விரும்புகிறேன்!.ஆனாலும்….முதுமையில்உறவுகளோடு ஒன்றி வாழகிழவிகளால் முடியும்.கிழவர்களால் முடியாது என்கிறார்களே….அது உண்மையாய் தெரிவதால்..இப்போதெல்லாம்எப்படியும் உன்னைமுந்திவிட வேண்டும்என்றே நினைக்கிறேன்..நீ இருந்து நான் போனால்எனக்கு அது சொர்க்கம்!நீ போய் நான் இருந்தால்அதுதான் எனக்கு நரகம்!.அதனால்நான் முந்திப் போகதாயேஅனுமதி கொடு.