ஆழ்வார்கள்! பகுதி–9.-ரேவதி பாலு..பொதுவாக ஆழ்வார்கள் எல்லோருமே திருமாலின் பெருமையை பக்தி பூர்வமாகப் பாடி அவரின் புகழைப் பரப்புவதையே தங்கள் வாழ்நாள் கடமையாகக் கொண்டு வாழ்ந்தவர்கள். இதில் மதுரகவி ஆழ்வார் ஒரு படி கூடுதலாக பெருமாளின் பரமபக்தராகிய நம்மாழ்வாரை தன் குருவாக ஏற்றுக் கொண்டு அவரையே போற்றிப் பாடினார் என்பது தான் மதுரகவி ஆழ்வாரின் விசேஷமான பண்பு. இவருடைய சரித்திரம் ஆச்சாரியனிடம் ஒருவர் சரணடைந்தால் அவர் மூலம் பெருமாளின் அனுக்ரஹம் நமக்கு நிச்சயம் கிடைக்கும் என்று குருவின் பெருமையை உணர்த்துவதாகவும் இருக்கிறது. இளமையிலேயே இனிமையான கவிகளைப் பாடியதால் இவருக்கு மதுரகவி என்னும் பெயர் ஏற்பட்டது என்று சொல்வர். இவருக்கு 'ஆழ்வார்க்கடியான்' என்னும் சிறப்புப் பெயரும் உண்டு..இவர் சித்திரை மாதம் சித்திரை நட்சத்திரத்தில் தூத்துக்குடி மாவட்டம் ஆழ்வார்திருநகரிக்கருகே திருக்கோளூர் என்னும் ஊரில் திருமாலின் வாகனமாகிய கருடாழ்வாரின் அம்சமாக ஒரு பிராமண குடும்பத்தில் அவதரித்தவர். இவரது காலம் 9ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியாகும். இவர் வேத சாத்திரங்களை முறைப்படி கற்றவர். இளம் வயதிலேயே வட நாட்டு யாத்திரை மேற்கொண்டு இருந்தார். அயோத்தியில் ஸ்ரீ ராமபிரானின் கோயிலுக்குச் சென்று தரிசனம் செய்துவிட்டு சிறிது காலம் அங்கேயே தங்கியிருந்தார். அயோத்தியில் இருந்தபோது ஒரு நாள் இரவு ஒரு பேரொளியைக் கண்டு அதிசயித்துப் போனார். அந்த ஒளி எங்கிருந்து வருகிறது என்று கண்டுபிடிக்க எண்ணி அந்த ஒளி வந்த திசையை நோக்கி, தெற்கு நோக்கி, நடக்கத் தொடங்கினார். பூரி, அஹோபிலம், திருவேங்கடம் ஆகிய தேசங்களைத் தாண்டியும் அந்த ஒளி தெரிந்தது. சளைக்காமல் மேலும் தெற்கு நோக்கி நடந்துகொண்டேயிருந்தார். கடைசியாக அவ்வொளி திருக்குருகூரில் மறைந்தது.."இந்த ஊரில் ஏதாவது அதிசயம் இருக்கிறதா?" என்று மதுரகவி ஆழ்வார் அவ்வூர் மக்களை வினவினார். அவர்கள் ஒரு புளியமரத்தடியில் நம்மாழ்வார் தவத்தில் இருப்பதை சுட்டிக்காட்டினார்கள். 16 வருடங்களாக அவர் அங்கேயே இருப்பதை சொன்னார்கள். மதுரகவி ஆழ்வார் வியந்து போனார். இவருடைய ஆன்மாவின் ஒளி அயோத்தி வரை தெரிந்தது என்றால் எப்பேர்ப்பட மகானாக இவர் இருக்க வேண்டும் என்று நினைத்தார்..பத்மாசனத்தில் சின் முத்திரையோடு இருந்த நம்மாழ்வாருக்கு முதலில் உயிர் இருக்கிறதா என்று பரிசோதித்துப் பார்க்க எண்ணி ஒரு சிறு கல்லை அவர் மேல் விட்டெறிந்தார். நம்மாழ்வார் கண் விழித்துப் பார்த்தார். இந்த 16 வருடங்களில் இப்போதுதான் அவர் முதன்முறையாகக் கண் விழித்துப் பார்க்கிறார்..பிறகு அவரால் பேச முடியாமா என்று சோதித்துப் பார்க்க எண்ணி, "செத்ததின் வயிற்றில் சிறியது பிறந்தால் எத்தைத் தின்று எங்கே கிடக்கும்?" என்றார் மதுரகவி ஆழ்வார்..அதற்கு உடனே நம்மாழ்வார், "அத்தைத் தின்று அங்கே கிடக்கும்" என்று பதிலுரைத்தார். இந்த 16 வருடங்களில் அவர் வாய் திறந்து பேசிய முதல் வார்த்தைகள் இவைதான்..இந்த வினா விடையில் ஒரு அருமையான தத்துவம் பொதிந்துள்ளது. செத்ததின், அதாவது உயிர் இல்லாத இந்த உடம்பில் ஜீவாத்மா என்னும் சிறியது பிறந்தால் எதை அனுபவித்துக்கொண்டு எங்கே கிடக்கும் என்னும் பொருள்பட கேட்கப்பட்ட கேள்விக்கு நம்மாழ்வார் "அத்தைத் தின்று அங்கே கிடக்கும்" என்று பதில் கூறினார். அதாவது உடலின் தொடர்பால் உருவாகும் ஐம்புலன் இச்சைகளின் நல்வினை தீவினைகளை அனுபவித்துக்கொண்டு அங்கேயே கிடக்கும் தன் முடிவு காலம் வரை என்று பொருள். அதாவது அந்த ஆத்மாவானது பிறவிச் சுழலிலேயே கட்டுண்டு கிடக்கும்..இந்த பதிலிலிருந்து நம்மாழ்வாரின் மேதாவிலாசத்தையும் அவர் முற்றும் உணர்ந்த ஞானி என்பதையும் உணர்ந்து தன்னைவிட வயதில் அவர் சிறியவராக இருந்தாலும் 'இவரே என் ஆச்சாரியர்' என்று ஏற்றுக்கொண்டார் மதுரகவி ஆழ்வார். உடனே நம்மாழ்வாரின் திருவடிகளில் விழுந்து வணங்கினார். அன்றிலிருந்து நம்மாழ்வாருடனேயே நிரந்தரமாகத் தங்கி அவருக்கு சகல கைங்கர்யங்களும் செய்துகொண்டு அவரது பெருமைகளை பாடிக் கொண்டிருப்பதையே தன் வாழ்க்கையின் நோக்கமாகக்கொண்டார். அவருக்கு நம்மாழ்வார் தவிர வேறு தெய்வமில்லை. திருக்குருகூரில் எழுந்தருளிய நம்மாழ்வாரை குருவாகக் கொண்டு வீடு பேறு பெற்றவர் மதுரகவி ஆழ்வார்..பன்னிரு ஆழ்வார்களில் மதுரகவி ஆழ்வார் மட்டும் திருமாலைப் பாடாமல் திருமாலின் அவதாரங்களை பாடாமல், திருமாலின் அடியாரான நம்மாழ்வாரை மட்டும் பாடி ஞானம் பெற்றார். வேதத்தின் பொருளை எளிய தமிழில் பாடிய நம்மாழ்வாரை 'தமிழ்ச் சடகோபன்' என்று பாடும் மதுரகவி அவர் அருளைப் பரப்புவது தன் வேலை என்பார்..நாலாயிர திவ்யபிரபந்தத்தில் 11 பாசுரங்கள் மதுரகவி ஆழ்வார் நம்மாழ்வாரைப் போற்றிப் பாடுவதாகவே அமைந்துள்ளது. இவர் அந்த ஊர் கோயிலில் நம்மாழ்வாருக்கு ஒரு சிலை அமைத்து அதற்கு தினமும் வழிபாடுகள் செய்து வந்தார். தங்கத்தாலான நம்மாழ்வாரின் விக்கிரகம் ஒன்றை எழுந்தருளப் பண்ணிக்கொண்டு பல ஊர்களுக்குச் சென்று நம்மாழ்வாரின் பெருமையை எடுத்துச்சொல்ல முடிவு செய்தார் மதுரகவி ஆழ்வார்.."வேதம் தமிழ் செய்த பெருமாள் வந்தார், திருவாய்மொழிப் பெருமாள் வந்தார், திருநகரிப் பெருமாள் வந்தார், திருவழுதி வளநாடர் வந்தார், திருக்குருகூர்நம்பி வந்தார், காரிமாறர் வந்தார், சடகோபர் வந்தார், பராங்குசர் வந்தார்" என்று நம்மாழ்வாரின் பல விருதுகளைப் பாடிக்கொண்டே மதுரகவியாழ்வார் மதுரை மாநகரம் சென்றார். விருதுகளைப் பாடிக்கொண்டே செல்வது என்பது அரசன் வருவதற்கு முன்பாக 'பராக், பராக்!' என்று கட்டியம் கூறிக்கொண்டே செல்வது போல..அங்கேயிருந்த சங்ககாலப் புலவர்கள் நம்மாழ்வாரின் பாடல்களை சங்கப்பலகையில் ஏற்றாமல் விருதுகளைப் பாடக்கூடாது என்று எதிர்ப்பு தெரிவித்தனர். அந்த காலத்தில் புலவர்களின் பாடல்களை மதிப்பீடு செய்யும் விதமாக சங்கப்பலகை இருந்தது. புலவர்களின் பாடல்களை அதில் ஏற்றுவார்கள். பலகை அப்பாடலை கீழே தள்ளி விட்டால், சங்காலப் புலவர்கள் அப்பாடலை ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். அந்தப் பாட்டை எழுதிய புலவருக்கும் மதிப்பிருக்காது..நம்மாழ்வார் எட்டுவரி, நான்கு வரி கொண்ட பாடல்கள் நிறைய பாடியுள்ளார். அவற்றையெல்லாம் விட்டு விட்டு ரெண்டே வரியுள்ள. 'கண்ணன் கழலிணை நண்ணும் மனமுடையீர் . என்னும் திருநாமம் திண்ணம் நாரணமே' (திருவாய்மொழி).இதன் பொருளாவது, 'கண்ணனின் திருவடிகளில் ஆசை உடையவர்கள் கண்ணனின் திருநாமத்தை உச்சரித்துக்கொண்டே இருங்கள். அது கண்ணனையே காட்டும். இது திண்ணம்.'.இந்தப் பாடலை பலகையில் மதுரகவியாழ்வார் ஏற்றினார். பலகை அப்பாடலைத் தள்ளாமல் ஏற்றுக்கொண்டது. நம்மாழ்வாரின் பெருமையை சங்ககாலப் புலவர்களும் புரிந்துகொண்டு மதுரகவியாழ்வாரிடம் மன்னிப்புக் கோரினார்கள்..மதுரகவியாழ்வார் ஆச்சார்ய பக்தியின் பெருமையை இந்த உலகிற்கு எடுத்துச் சொல்ல அவதரித்தவர். நம்மாழ்வாரைப் பாடத் தொடங்கிய மதுரகவி ஆழ்வார், ஆழ்வாருக்கு மிகவுமுயிரான கண்ணபிரானை இந்தப் பாட்டில் ஆராதிக்கிறார்..'கண்ணி நுண் சிறுத்தாம்பினால் கட்டுண்ணப். பண்ணிய பெரு மாயன் என் அப்பனில். நண்ணித் தென் குருகூர் நம்பி என்றக்கால். அண்ணிக்கும் அமுது ஊறும் என் நாவுக்கே'.என்னுடைய சுவாமியும் சர்வேஸ்வரனுமான கண்ணபிரான் யசோதைப் பிராட்டி துண்டு துண்டான, மெல்லிய சிறிய கயிற்றினால் தன்னைக் கட்டும்படி அமைத்துக்கொண்டான். அப்படிப்பட்ட எம்பெருமானை விட்டு தென் திசையில் உள்ள திருக்குருகூருக்குத் தலைவரான நம்மாழ்வாரின் திருநாமத்தைச் சொன்னால் அது என்னுடைய நாக்குக்கு இனியதாகவும் அமிர்தமாகவும் உள்ளது. குருகூர் நம்பியைத் தவிர வேறு தெய்வம் நானறியேன் என்றார் மதுரகவியார்..நான்முகன் திருவந்தாதி என்னும் 96 பாடல்கள் கொண்ட நூலையும் இயற்றியிருக்கிறார். இவர் மற்ற ஆழ்வார்களுடன் சேர்ந்து ஒரு கோயிலை மங்களாசாஸனம் செய்திருக்கிறார்..மதுரகவியாழ்வார் மேலும் சிலகாலம் நம்மாழ்வாரின் பெருமையை எடுத்துச் சொல்லி வாழ்ந்து அவரும் தம் ஆசார்யனான நம்மாழ்வாரின் திருவடியைச் சென்று சேர்ந்தார்.
ஆழ்வார்கள்! பகுதி–9.-ரேவதி பாலு..பொதுவாக ஆழ்வார்கள் எல்லோருமே திருமாலின் பெருமையை பக்தி பூர்வமாகப் பாடி அவரின் புகழைப் பரப்புவதையே தங்கள் வாழ்நாள் கடமையாகக் கொண்டு வாழ்ந்தவர்கள். இதில் மதுரகவி ஆழ்வார் ஒரு படி கூடுதலாக பெருமாளின் பரமபக்தராகிய நம்மாழ்வாரை தன் குருவாக ஏற்றுக் கொண்டு அவரையே போற்றிப் பாடினார் என்பது தான் மதுரகவி ஆழ்வாரின் விசேஷமான பண்பு. இவருடைய சரித்திரம் ஆச்சாரியனிடம் ஒருவர் சரணடைந்தால் அவர் மூலம் பெருமாளின் அனுக்ரஹம் நமக்கு நிச்சயம் கிடைக்கும் என்று குருவின் பெருமையை உணர்த்துவதாகவும் இருக்கிறது. இளமையிலேயே இனிமையான கவிகளைப் பாடியதால் இவருக்கு மதுரகவி என்னும் பெயர் ஏற்பட்டது என்று சொல்வர். இவருக்கு 'ஆழ்வார்க்கடியான்' என்னும் சிறப்புப் பெயரும் உண்டு..இவர் சித்திரை மாதம் சித்திரை நட்சத்திரத்தில் தூத்துக்குடி மாவட்டம் ஆழ்வார்திருநகரிக்கருகே திருக்கோளூர் என்னும் ஊரில் திருமாலின் வாகனமாகிய கருடாழ்வாரின் அம்சமாக ஒரு பிராமண குடும்பத்தில் அவதரித்தவர். இவரது காலம் 9ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியாகும். இவர் வேத சாத்திரங்களை முறைப்படி கற்றவர். இளம் வயதிலேயே வட நாட்டு யாத்திரை மேற்கொண்டு இருந்தார். அயோத்தியில் ஸ்ரீ ராமபிரானின் கோயிலுக்குச் சென்று தரிசனம் செய்துவிட்டு சிறிது காலம் அங்கேயே தங்கியிருந்தார். அயோத்தியில் இருந்தபோது ஒரு நாள் இரவு ஒரு பேரொளியைக் கண்டு அதிசயித்துப் போனார். அந்த ஒளி எங்கிருந்து வருகிறது என்று கண்டுபிடிக்க எண்ணி அந்த ஒளி வந்த திசையை நோக்கி, தெற்கு நோக்கி, நடக்கத் தொடங்கினார். பூரி, அஹோபிலம், திருவேங்கடம் ஆகிய தேசங்களைத் தாண்டியும் அந்த ஒளி தெரிந்தது. சளைக்காமல் மேலும் தெற்கு நோக்கி நடந்துகொண்டேயிருந்தார். கடைசியாக அவ்வொளி திருக்குருகூரில் மறைந்தது.."இந்த ஊரில் ஏதாவது அதிசயம் இருக்கிறதா?" என்று மதுரகவி ஆழ்வார் அவ்வூர் மக்களை வினவினார். அவர்கள் ஒரு புளியமரத்தடியில் நம்மாழ்வார் தவத்தில் இருப்பதை சுட்டிக்காட்டினார்கள். 16 வருடங்களாக அவர் அங்கேயே இருப்பதை சொன்னார்கள். மதுரகவி ஆழ்வார் வியந்து போனார். இவருடைய ஆன்மாவின் ஒளி அயோத்தி வரை தெரிந்தது என்றால் எப்பேர்ப்பட மகானாக இவர் இருக்க வேண்டும் என்று நினைத்தார்..பத்மாசனத்தில் சின் முத்திரையோடு இருந்த நம்மாழ்வாருக்கு முதலில் உயிர் இருக்கிறதா என்று பரிசோதித்துப் பார்க்க எண்ணி ஒரு சிறு கல்லை அவர் மேல் விட்டெறிந்தார். நம்மாழ்வார் கண் விழித்துப் பார்த்தார். இந்த 16 வருடங்களில் இப்போதுதான் அவர் முதன்முறையாகக் கண் விழித்துப் பார்க்கிறார்..பிறகு அவரால் பேச முடியாமா என்று சோதித்துப் பார்க்க எண்ணி, "செத்ததின் வயிற்றில் சிறியது பிறந்தால் எத்தைத் தின்று எங்கே கிடக்கும்?" என்றார் மதுரகவி ஆழ்வார்..அதற்கு உடனே நம்மாழ்வார், "அத்தைத் தின்று அங்கே கிடக்கும்" என்று பதிலுரைத்தார். இந்த 16 வருடங்களில் அவர் வாய் திறந்து பேசிய முதல் வார்த்தைகள் இவைதான்..இந்த வினா விடையில் ஒரு அருமையான தத்துவம் பொதிந்துள்ளது. செத்ததின், அதாவது உயிர் இல்லாத இந்த உடம்பில் ஜீவாத்மா என்னும் சிறியது பிறந்தால் எதை அனுபவித்துக்கொண்டு எங்கே கிடக்கும் என்னும் பொருள்பட கேட்கப்பட்ட கேள்விக்கு நம்மாழ்வார் "அத்தைத் தின்று அங்கே கிடக்கும்" என்று பதில் கூறினார். அதாவது உடலின் தொடர்பால் உருவாகும் ஐம்புலன் இச்சைகளின் நல்வினை தீவினைகளை அனுபவித்துக்கொண்டு அங்கேயே கிடக்கும் தன் முடிவு காலம் வரை என்று பொருள். அதாவது அந்த ஆத்மாவானது பிறவிச் சுழலிலேயே கட்டுண்டு கிடக்கும்..இந்த பதிலிலிருந்து நம்மாழ்வாரின் மேதாவிலாசத்தையும் அவர் முற்றும் உணர்ந்த ஞானி என்பதையும் உணர்ந்து தன்னைவிட வயதில் அவர் சிறியவராக இருந்தாலும் 'இவரே என் ஆச்சாரியர்' என்று ஏற்றுக்கொண்டார் மதுரகவி ஆழ்வார். உடனே நம்மாழ்வாரின் திருவடிகளில் விழுந்து வணங்கினார். அன்றிலிருந்து நம்மாழ்வாருடனேயே நிரந்தரமாகத் தங்கி அவருக்கு சகல கைங்கர்யங்களும் செய்துகொண்டு அவரது பெருமைகளை பாடிக் கொண்டிருப்பதையே தன் வாழ்க்கையின் நோக்கமாகக்கொண்டார். அவருக்கு நம்மாழ்வார் தவிர வேறு தெய்வமில்லை. திருக்குருகூரில் எழுந்தருளிய நம்மாழ்வாரை குருவாகக் கொண்டு வீடு பேறு பெற்றவர் மதுரகவி ஆழ்வார்..பன்னிரு ஆழ்வார்களில் மதுரகவி ஆழ்வார் மட்டும் திருமாலைப் பாடாமல் திருமாலின் அவதாரங்களை பாடாமல், திருமாலின் அடியாரான நம்மாழ்வாரை மட்டும் பாடி ஞானம் பெற்றார். வேதத்தின் பொருளை எளிய தமிழில் பாடிய நம்மாழ்வாரை 'தமிழ்ச் சடகோபன்' என்று பாடும் மதுரகவி அவர் அருளைப் பரப்புவது தன் வேலை என்பார்..நாலாயிர திவ்யபிரபந்தத்தில் 11 பாசுரங்கள் மதுரகவி ஆழ்வார் நம்மாழ்வாரைப் போற்றிப் பாடுவதாகவே அமைந்துள்ளது. இவர் அந்த ஊர் கோயிலில் நம்மாழ்வாருக்கு ஒரு சிலை அமைத்து அதற்கு தினமும் வழிபாடுகள் செய்து வந்தார். தங்கத்தாலான நம்மாழ்வாரின் விக்கிரகம் ஒன்றை எழுந்தருளப் பண்ணிக்கொண்டு பல ஊர்களுக்குச் சென்று நம்மாழ்வாரின் பெருமையை எடுத்துச்சொல்ல முடிவு செய்தார் மதுரகவி ஆழ்வார்.."வேதம் தமிழ் செய்த பெருமாள் வந்தார், திருவாய்மொழிப் பெருமாள் வந்தார், திருநகரிப் பெருமாள் வந்தார், திருவழுதி வளநாடர் வந்தார், திருக்குருகூர்நம்பி வந்தார், காரிமாறர் வந்தார், சடகோபர் வந்தார், பராங்குசர் வந்தார்" என்று நம்மாழ்வாரின் பல விருதுகளைப் பாடிக்கொண்டே மதுரகவியாழ்வார் மதுரை மாநகரம் சென்றார். விருதுகளைப் பாடிக்கொண்டே செல்வது என்பது அரசன் வருவதற்கு முன்பாக 'பராக், பராக்!' என்று கட்டியம் கூறிக்கொண்டே செல்வது போல..அங்கேயிருந்த சங்ககாலப் புலவர்கள் நம்மாழ்வாரின் பாடல்களை சங்கப்பலகையில் ஏற்றாமல் விருதுகளைப் பாடக்கூடாது என்று எதிர்ப்பு தெரிவித்தனர். அந்த காலத்தில் புலவர்களின் பாடல்களை மதிப்பீடு செய்யும் விதமாக சங்கப்பலகை இருந்தது. புலவர்களின் பாடல்களை அதில் ஏற்றுவார்கள். பலகை அப்பாடலை கீழே தள்ளி விட்டால், சங்காலப் புலவர்கள் அப்பாடலை ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். அந்தப் பாட்டை எழுதிய புலவருக்கும் மதிப்பிருக்காது..நம்மாழ்வார் எட்டுவரி, நான்கு வரி கொண்ட பாடல்கள் நிறைய பாடியுள்ளார். அவற்றையெல்லாம் விட்டு விட்டு ரெண்டே வரியுள்ள. 'கண்ணன் கழலிணை நண்ணும் மனமுடையீர் . என்னும் திருநாமம் திண்ணம் நாரணமே' (திருவாய்மொழி).இதன் பொருளாவது, 'கண்ணனின் திருவடிகளில் ஆசை உடையவர்கள் கண்ணனின் திருநாமத்தை உச்சரித்துக்கொண்டே இருங்கள். அது கண்ணனையே காட்டும். இது திண்ணம்.'.இந்தப் பாடலை பலகையில் மதுரகவியாழ்வார் ஏற்றினார். பலகை அப்பாடலைத் தள்ளாமல் ஏற்றுக்கொண்டது. நம்மாழ்வாரின் பெருமையை சங்ககாலப் புலவர்களும் புரிந்துகொண்டு மதுரகவியாழ்வாரிடம் மன்னிப்புக் கோரினார்கள்..மதுரகவியாழ்வார் ஆச்சார்ய பக்தியின் பெருமையை இந்த உலகிற்கு எடுத்துச் சொல்ல அவதரித்தவர். நம்மாழ்வாரைப் பாடத் தொடங்கிய மதுரகவி ஆழ்வார், ஆழ்வாருக்கு மிகவுமுயிரான கண்ணபிரானை இந்தப் பாட்டில் ஆராதிக்கிறார்..'கண்ணி நுண் சிறுத்தாம்பினால் கட்டுண்ணப். பண்ணிய பெரு மாயன் என் அப்பனில். நண்ணித் தென் குருகூர் நம்பி என்றக்கால். அண்ணிக்கும் அமுது ஊறும் என் நாவுக்கே'.என்னுடைய சுவாமியும் சர்வேஸ்வரனுமான கண்ணபிரான் யசோதைப் பிராட்டி துண்டு துண்டான, மெல்லிய சிறிய கயிற்றினால் தன்னைக் கட்டும்படி அமைத்துக்கொண்டான். அப்படிப்பட்ட எம்பெருமானை விட்டு தென் திசையில் உள்ள திருக்குருகூருக்குத் தலைவரான நம்மாழ்வாரின் திருநாமத்தைச் சொன்னால் அது என்னுடைய நாக்குக்கு இனியதாகவும் அமிர்தமாகவும் உள்ளது. குருகூர் நம்பியைத் தவிர வேறு தெய்வம் நானறியேன் என்றார் மதுரகவியார்..நான்முகன் திருவந்தாதி என்னும் 96 பாடல்கள் கொண்ட நூலையும் இயற்றியிருக்கிறார். இவர் மற்ற ஆழ்வார்களுடன் சேர்ந்து ஒரு கோயிலை மங்களாசாஸனம் செய்திருக்கிறார்..மதுரகவியாழ்வார் மேலும் சிலகாலம் நம்மாழ்வாரின் பெருமையை எடுத்துச் சொல்லி வாழ்ந்து அவரும் தம் ஆசார்யனான நம்மாழ்வாரின் திருவடியைச் சென்று சேர்ந்தார்.