ஸ்ரீமதி, சரளா, ரம்யா, சிவகாமி, யோகலட்சுமி என்ன அழகான பெயர்கள்! இளவயசு பெண்கள்? என்ன ஆச்சு, இந்தச் சிறுமிகளுக்கு… தமிழக மக்கள் விக்கித்தும் துக்கித்தும் போயிருக்கின்றனர்!.இளமை கொலுவிருக்கும் இளம் குருத்துக்கள் தற்கொலை செய்து கொள்வது காலக் கொடுமை! யோசித்துப் பார்த்தால் ஏகப்பட்ட காரணிகள்!.முதல் காரணம் பெற்றோர்கள்!.வீட்டு வேலைகள் செய்யும் தோற்றத்தில் உள்ள நடுத்தர வயதுப் பெண்மணி, ஒருவர் தனது மகளின் ஸ்கூல் பையை, தூக்க மாட்டாமல் இடுப்பில் வைத்துக்கொண்டு நடக்கிறார். அவரது மகள், தனியார் பள்ளி யூனிஃபார்மில் கார்ன் பஃபை கொரித்தபடி, கைவீசி ஸ்டைலாக செல்கிறாள். அதீத செல்லம்!."ஓவர் வெயிட்டுக்கா! பாப்பா அப்புறம் முதுகுவலின்னு அழும்!".எங்க வீட்டுக்குப் பால் பாக்கெட் போடும் பெண்மணியின் மகள் ப்ளஸ் டூ முடித்த சமயம்…."என் பொண்ணு நீட் எக்ஸாம் புக்ஸ் கிடைக்கலைன்னு சொல்றா!" என்று சொன்னாள்..நான் உடனே தெரிந்தவர்களிடமும், வாட்ஸ் அப் க்ரூப்பிலும் அது சம்பந்தப்பட்ட புத்தகங்களை இலவசமாகப் பெற முயற்சி செய்தேன்..ஆனால், அவளோ, "அம்மா, பழைய புக்கு(!) வேணாமாம்! ஆன்லைன்ல புதுசு ஆர்டர் பண்ணியிருக்கா!" என்றாள்..செகன்ட் ஹேன்ட் புக்ஸ்களை, சீனியர்களிடம் வாங்கியே (ஏனென்றால் அதில் ஏற்கெனவே எல்லாமே குறிக்கப்பட்டிருக்கும்!) டபுள் டிகிரிகளை முடித்த எனக்கு இந்த மனோபாவம் ஆச்சரியம் அளித்தது..தான் கஞ்சி குடித்தாலும், தன் மகளை இளவரசி போல, தங்கத்தட்டில தாங்கி நடத்துகிறார்கள். அந்தப் பெண்களும் குடும்ப நிலையை அறியாமல், மனம் போனபடி நடக்கிறார்கள். வேறு எங்காவது சிறு கண்டிப்பு, சிறு அவமானம், குத்தல், அசெளகரியம் நடந்தாலும், மனம் உடைந்து, போகிறார்கள். 'கெத்து' காட்டுவதாக நினைத்து சாவை நாடுகிறார்கள்!.அப்ப என்ன செய்யலாம்? :- குழந்தைகளை, யதார்த்தமாக வளருங்கள்… உங்கள் கனவுகளை அவர்கள் மீது திணிக்க வேண்டாம்… பெரிய பள்ளிகளில் பெருமைக்காகப் படிக்க வைப்பது, பேம்பர் செய்வது, ஒரு கடுஞ்சொல் கூட சொல்லாமல் வளர்ப்பது… 'அவள் தப்பே செய்ய மாட்டாள்' என நம்புவது… இனி வேண்டாமே ப்ளீஸ்!.அவர்களை கலை, யோகா, விளையாட்டு, சமையல், நீச்சல் போன்றவற்றில் ஈடுபடச் செய்யுங்கள். ஸ்ட்ரெஸ் குறையும்..அடுத்தது ஆசிரியர்கள்: இரண்டாம் பெற்றோராக, நல்லதொரு வழிகாட்டியாக இருக்க வேண்டிய ஆசிரியர்களின் லட்சணம் 'ஆடியோ லீக்'களில் கொட்டிக் கிடக்கின்றன..ஜாதிப் பெருமை பேசுவதும், செக்ஸ் பேசுவதும், அந்தப் பணிக்கே லாயக்கில்லை!.அடிப்படை கான்செப்ட் புரியாமல் அவர்கள் ஏனோதானோ என்று பாடம் நடத்துவதும், ஒரு ஆயிரம் அதிகமாக கொடுத்தால் வேறு பள்ளிக்குப் போய்விடுவதும்… இப்படிச் செய்தால், என்னத்த நடத்தி… என்னத்த கத்துக்கிட்டு? இதுல மாணவிகளுடன் ஆசிரியைகள் மனம் விட்டுப் பேசிப் பழகணுமாம்!."படி… படி…" என டார்ச்சர் செய்வது குழந்தைகளுக்கு எவ்வளவு மன உளைச்சலைத் தரும் என யாராவது உணர்ந்தால்தானே?.அப்ப என்ன செய்யலாம்? அரசுப் பள்ளி ஆசிரியர்கள் லட்சக்கணக்கில் சம்பளம் வாங்குகிறார்கள். ஆனால், தனியார் பள்ளிகளில் மாதம் பத்து அல்லது பதினைந்தாயிரம் மட்டுமே! திறமையிருக்கோ இல்லையோ, நிர்வாகத்துக்கு இணக்கமாக இருந்தால் போதும் என்ற நினைப்பில்தான் இவர்கள் வண்டி ஓடுகிறது. மாணவிகளுக்கு மட்டுமல்ல… இவர்களுக்கும் மனோதத்துவ கவுன்சிலிங், ஒழுக்கம், கடமை சார்ந்த மேலாண்மை பயிற்சிகள் கட்டாயம் தேவை! கல்வித்துறையும், பெற்றோர் – ஆசிரியர் சங்கமும் விழித்துக் கொள்ள வேண்டிய சமயமிது..மூன்றாவது காரணி, பள்ளிகள்! கல்வித்துறை கொழுத்த வியாபாரமாகி எத்தனையோ வருஷமாச்சு! அதிகாரச் செருக்கு, ஆக்ரமிப்பு, அரசியல் பின்புலம் இவ்வளவும் இருந்தால் ஏன் ஆட மாட்டார்கள்? அதிலும் ஸ்ரீமதி தங்கியிருந்த பள்ளி விடுதிக்கு லைசன்ஸே இல்லையாம்! கெட்டது போ!.அப்ப என்ன செய்யலாம்?: தமிழக முதல்வர், மாணவிகளுக்குத் தொல்லை தருபவர் யாராக இருந்தாலும், கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி கொடுத்திருக்கிறார். தனியார் பள்ளிகளுக்கான 77 நன்னடத்தை விதிமுறைகள் தரப்பட்டுள்ளன. அவற்றை முறையாகப் பின்பற்றினாலே போதுமானது..நான்காவது காரணி… எல்லாவற்றுக்கும் சிகரம் வெச்சது மாதிரியானது… 'அடலஸன்ஸ்' எனப்படும் பதின்ம சஞ்சலங்கள்! மனக் குழப்பங்கள்… அந்த 'லவ்' ஃபீவரை அதிகப்படுத்த இருக்கவே இருக்கு ஃபேஸ் புக், வாட்ஸ் அப், சேட்டிங்குகள்!.பெற்றோர்கள் தரும் இமோஷன்ல் அழுத்தம்….பாடத் திட்டங்களின் சுமை தரும் ஃபியர் அழுத்தம்….ஆசிரியர்கள் தரும் 'படிப்பு' அழுத்தம்….காம்படிடீவ் உலகம் தரும் எக்ஸ்ட்ரா அழுத்தம்….காதல் அவஸ்தைகள் தரும் கன்னாபின்னா ஹார்மோன் அழுத்தம்….இது தவிர, சில பல விஷக் கிருமிகளின் பாலியல் சீண்டல்களின் அழுத்தம்….இப்படி எல்லா அழுத்தங்களையும் தாங்கிக்கொண்டு, தைரியமாக வளர, அந்தச் சிறுமிகளுக்குப் போதிய மனஉறுதியும் பக்குவமும் இல்லை. நாமும் "பாப்பா… பாப்பா" என்னே கொஞ்சிக் கெஞ்சி வளர்த்தாயிற்று. அவர்களும் பிஞ்சிலே பழுத்தாயிற்று! அதனால் நல்லது கெட்டது தெரியாமல் வீம்பும் பிடிவாதமும் மட்டுமே கொண்டு, செத்துப் போவதோடு, மற்றவர்களுக்கும் தீராத வலியைத் தந்து விடுகிறார்கள்..ஐந்தாவது காரணி… மிக முக்கியமானது… மீடியா! ஸ்ரீமதியைப் புதைத்து, ஸாரி… விதைத்து பத்து நாளாகிவிட்டது. ஆனாலும் அந்தச் சிறுமியின் மர்ம மரணத்தின் ஆழம் அதிகரித்துக்கொண்டே போகிறது. சமூக வலைத் தளங்களில் அனைவருமே நீதிமான்களாகவும், புலனாய்வுப் புலிகளாகவும் மாறி ஆளுக்கொரு தீர்ப்பு சொல்லிக்கொண்டிருக்கின்றனர். டீவியில் 'Flash News´ பயங்கர பி.ஜி.எம்முடன் போடுவதைத் தவிர்த்தாலே அவலம் சற்று குறையும்..ஸ்ரீமதி இறந்தது பெரும் துயரம்!ஆதில் யார் யாரோ குளிர்காய்வது வேதனையாக உள்ளது. நடுநிலையாளர்களாக நமக்குசிறப்புப் புலனாய்வுத் துறை மீது நம்பிக்கை உள்ளது. ஸ்ரீமதிக்குநேர்ந்தது என்ன என்று அவர்கள் சொல்லட்டும்! சட்டம் கடமையைச் செய்யட்டும்… லெட்ஸ் வெயிட்! நல்ல தீர்ப்பும் நியாயமும் கிடைக்கும் என நம்பி காத்திருப்போம்… என்றாலும் மனசுக்குள் ஆயிரம் கேள்விகள் மெளனமாகக் கேவுகின்றன…"நீ வாழ்ந்திருக்கலாம் ஸ்ரீமதி!"
ஸ்ரீமதி, சரளா, ரம்யா, சிவகாமி, யோகலட்சுமி என்ன அழகான பெயர்கள்! இளவயசு பெண்கள்? என்ன ஆச்சு, இந்தச் சிறுமிகளுக்கு… தமிழக மக்கள் விக்கித்தும் துக்கித்தும் போயிருக்கின்றனர்!.இளமை கொலுவிருக்கும் இளம் குருத்துக்கள் தற்கொலை செய்து கொள்வது காலக் கொடுமை! யோசித்துப் பார்த்தால் ஏகப்பட்ட காரணிகள்!.முதல் காரணம் பெற்றோர்கள்!.வீட்டு வேலைகள் செய்யும் தோற்றத்தில் உள்ள நடுத்தர வயதுப் பெண்மணி, ஒருவர் தனது மகளின் ஸ்கூல் பையை, தூக்க மாட்டாமல் இடுப்பில் வைத்துக்கொண்டு நடக்கிறார். அவரது மகள், தனியார் பள்ளி யூனிஃபார்மில் கார்ன் பஃபை கொரித்தபடி, கைவீசி ஸ்டைலாக செல்கிறாள். அதீத செல்லம்!."ஓவர் வெயிட்டுக்கா! பாப்பா அப்புறம் முதுகுவலின்னு அழும்!".எங்க வீட்டுக்குப் பால் பாக்கெட் போடும் பெண்மணியின் மகள் ப்ளஸ் டூ முடித்த சமயம்…."என் பொண்ணு நீட் எக்ஸாம் புக்ஸ் கிடைக்கலைன்னு சொல்றா!" என்று சொன்னாள்..நான் உடனே தெரிந்தவர்களிடமும், வாட்ஸ் அப் க்ரூப்பிலும் அது சம்பந்தப்பட்ட புத்தகங்களை இலவசமாகப் பெற முயற்சி செய்தேன்..ஆனால், அவளோ, "அம்மா, பழைய புக்கு(!) வேணாமாம்! ஆன்லைன்ல புதுசு ஆர்டர் பண்ணியிருக்கா!" என்றாள்..செகன்ட் ஹேன்ட் புக்ஸ்களை, சீனியர்களிடம் வாங்கியே (ஏனென்றால் அதில் ஏற்கெனவே எல்லாமே குறிக்கப்பட்டிருக்கும்!) டபுள் டிகிரிகளை முடித்த எனக்கு இந்த மனோபாவம் ஆச்சரியம் அளித்தது..தான் கஞ்சி குடித்தாலும், தன் மகளை இளவரசி போல, தங்கத்தட்டில தாங்கி நடத்துகிறார்கள். அந்தப் பெண்களும் குடும்ப நிலையை அறியாமல், மனம் போனபடி நடக்கிறார்கள். வேறு எங்காவது சிறு கண்டிப்பு, சிறு அவமானம், குத்தல், அசெளகரியம் நடந்தாலும், மனம் உடைந்து, போகிறார்கள். 'கெத்து' காட்டுவதாக நினைத்து சாவை நாடுகிறார்கள்!.அப்ப என்ன செய்யலாம்? :- குழந்தைகளை, யதார்த்தமாக வளருங்கள்… உங்கள் கனவுகளை அவர்கள் மீது திணிக்க வேண்டாம்… பெரிய பள்ளிகளில் பெருமைக்காகப் படிக்க வைப்பது, பேம்பர் செய்வது, ஒரு கடுஞ்சொல் கூட சொல்லாமல் வளர்ப்பது… 'அவள் தப்பே செய்ய மாட்டாள்' என நம்புவது… இனி வேண்டாமே ப்ளீஸ்!.அவர்களை கலை, யோகா, விளையாட்டு, சமையல், நீச்சல் போன்றவற்றில் ஈடுபடச் செய்யுங்கள். ஸ்ட்ரெஸ் குறையும்..அடுத்தது ஆசிரியர்கள்: இரண்டாம் பெற்றோராக, நல்லதொரு வழிகாட்டியாக இருக்க வேண்டிய ஆசிரியர்களின் லட்சணம் 'ஆடியோ லீக்'களில் கொட்டிக் கிடக்கின்றன..ஜாதிப் பெருமை பேசுவதும், செக்ஸ் பேசுவதும், அந்தப் பணிக்கே லாயக்கில்லை!.அடிப்படை கான்செப்ட் புரியாமல் அவர்கள் ஏனோதானோ என்று பாடம் நடத்துவதும், ஒரு ஆயிரம் அதிகமாக கொடுத்தால் வேறு பள்ளிக்குப் போய்விடுவதும்… இப்படிச் செய்தால், என்னத்த நடத்தி… என்னத்த கத்துக்கிட்டு? இதுல மாணவிகளுடன் ஆசிரியைகள் மனம் விட்டுப் பேசிப் பழகணுமாம்!."படி… படி…" என டார்ச்சர் செய்வது குழந்தைகளுக்கு எவ்வளவு மன உளைச்சலைத் தரும் என யாராவது உணர்ந்தால்தானே?.அப்ப என்ன செய்யலாம்? அரசுப் பள்ளி ஆசிரியர்கள் லட்சக்கணக்கில் சம்பளம் வாங்குகிறார்கள். ஆனால், தனியார் பள்ளிகளில் மாதம் பத்து அல்லது பதினைந்தாயிரம் மட்டுமே! திறமையிருக்கோ இல்லையோ, நிர்வாகத்துக்கு இணக்கமாக இருந்தால் போதும் என்ற நினைப்பில்தான் இவர்கள் வண்டி ஓடுகிறது. மாணவிகளுக்கு மட்டுமல்ல… இவர்களுக்கும் மனோதத்துவ கவுன்சிலிங், ஒழுக்கம், கடமை சார்ந்த மேலாண்மை பயிற்சிகள் கட்டாயம் தேவை! கல்வித்துறையும், பெற்றோர் – ஆசிரியர் சங்கமும் விழித்துக் கொள்ள வேண்டிய சமயமிது..மூன்றாவது காரணி, பள்ளிகள்! கல்வித்துறை கொழுத்த வியாபாரமாகி எத்தனையோ வருஷமாச்சு! அதிகாரச் செருக்கு, ஆக்ரமிப்பு, அரசியல் பின்புலம் இவ்வளவும் இருந்தால் ஏன் ஆட மாட்டார்கள்? அதிலும் ஸ்ரீமதி தங்கியிருந்த பள்ளி விடுதிக்கு லைசன்ஸே இல்லையாம்! கெட்டது போ!.அப்ப என்ன செய்யலாம்?: தமிழக முதல்வர், மாணவிகளுக்குத் தொல்லை தருபவர் யாராக இருந்தாலும், கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி கொடுத்திருக்கிறார். தனியார் பள்ளிகளுக்கான 77 நன்னடத்தை விதிமுறைகள் தரப்பட்டுள்ளன. அவற்றை முறையாகப் பின்பற்றினாலே போதுமானது..நான்காவது காரணி… எல்லாவற்றுக்கும் சிகரம் வெச்சது மாதிரியானது… 'அடலஸன்ஸ்' எனப்படும் பதின்ம சஞ்சலங்கள்! மனக் குழப்பங்கள்… அந்த 'லவ்' ஃபீவரை அதிகப்படுத்த இருக்கவே இருக்கு ஃபேஸ் புக், வாட்ஸ் அப், சேட்டிங்குகள்!.பெற்றோர்கள் தரும் இமோஷன்ல் அழுத்தம்….பாடத் திட்டங்களின் சுமை தரும் ஃபியர் அழுத்தம்….ஆசிரியர்கள் தரும் 'படிப்பு' அழுத்தம்….காம்படிடீவ் உலகம் தரும் எக்ஸ்ட்ரா அழுத்தம்….காதல் அவஸ்தைகள் தரும் கன்னாபின்னா ஹார்மோன் அழுத்தம்….இது தவிர, சில பல விஷக் கிருமிகளின் பாலியல் சீண்டல்களின் அழுத்தம்….இப்படி எல்லா அழுத்தங்களையும் தாங்கிக்கொண்டு, தைரியமாக வளர, அந்தச் சிறுமிகளுக்குப் போதிய மனஉறுதியும் பக்குவமும் இல்லை. நாமும் "பாப்பா… பாப்பா" என்னே கொஞ்சிக் கெஞ்சி வளர்த்தாயிற்று. அவர்களும் பிஞ்சிலே பழுத்தாயிற்று! அதனால் நல்லது கெட்டது தெரியாமல் வீம்பும் பிடிவாதமும் மட்டுமே கொண்டு, செத்துப் போவதோடு, மற்றவர்களுக்கும் தீராத வலியைத் தந்து விடுகிறார்கள்..ஐந்தாவது காரணி… மிக முக்கியமானது… மீடியா! ஸ்ரீமதியைப் புதைத்து, ஸாரி… விதைத்து பத்து நாளாகிவிட்டது. ஆனாலும் அந்தச் சிறுமியின் மர்ம மரணத்தின் ஆழம் அதிகரித்துக்கொண்டே போகிறது. சமூக வலைத் தளங்களில் அனைவருமே நீதிமான்களாகவும், புலனாய்வுப் புலிகளாகவும் மாறி ஆளுக்கொரு தீர்ப்பு சொல்லிக்கொண்டிருக்கின்றனர். டீவியில் 'Flash News´ பயங்கர பி.ஜி.எம்முடன் போடுவதைத் தவிர்த்தாலே அவலம் சற்று குறையும்..ஸ்ரீமதி இறந்தது பெரும் துயரம்!ஆதில் யார் யாரோ குளிர்காய்வது வேதனையாக உள்ளது. நடுநிலையாளர்களாக நமக்குசிறப்புப் புலனாய்வுத் துறை மீது நம்பிக்கை உள்ளது. ஸ்ரீமதிக்குநேர்ந்தது என்ன என்று அவர்கள் சொல்லட்டும்! சட்டம் கடமையைச் செய்யட்டும்… லெட்ஸ் வெயிட்! நல்ல தீர்ப்பும் நியாயமும் கிடைக்கும் என நம்பி காத்திருப்போம்… என்றாலும் மனசுக்குள் ஆயிரம் கேள்விகள் மெளனமாகக் கேவுகின்றன…"நீ வாழ்ந்திருக்கலாம் ஸ்ரீமதி!"