-நாமக்கல் எம்.வேலு.ஓவியம்: லலிதா.நாமக்கல் போய்விட்டு நான்கு நாட்கள் கழித்துத் திரும்பி வந்து பார்த்தால் பாத்ரூம் ஜன்னலில் ஒரு கூடு. அதைக் கண்டவுடன் அதிர்ந்து போன மல்லிகா கணவனை அவசரமாய் அழைத்தாள்..வந்து பார்த்தான் சோமு. ஜன்னலில் இரண்டு கண்ணாடிகளுக்கும் இடையில் கிரில் கம்பிமேல் அந்த கூடு இருந்தது.."பாருங்க… நாலு நாள் வீட்டுல ஆள் இல்லை. இதான் சமயம்னு வந்து காக்கா கூடு கட்டிட்டு போயிருக்கு" என்றாள்.."ஏ மண்டு மண்டு… காக்கா எல்லாம் மரங்கள்லதான் கூடு கட்டும். இது எனக்குத் தெரிஞ்சு புறாவோட வேலையாத்தான் இருக்கும்" என்று சிரித்தான்.."பறவைங்க பாவம்னு, நீ மொட்டை மாடில கிண்ணத்துல தண்ணி வைக்கிறே… இதுல சாதம், பிஸ்கட், முறுக்கு வேற. அதுங்க வந்து சாப்பிட்டிட்டு தண்ணியைக் குடிச்சுட்டு கூடும் கட்டிட்டு போவுதுங்க…"."இருக்கும்ங்க… எனக்கு இப்போத்தான் புரியுது. அப்போல்லாம் காக்கா குருவிங்கத்தான் வந்து தண்ணி குடிக்கும். கொஞ்ச நாளா ரெண்டு புறாக்களும் வருது. அதுங்கத்தான் இந்த வேலை பண்ணியிருக்கும்னு நினைக்கிறேன். அந்த ரெண்டும் சேர்ந்துக்கிட்டு ஜன்னல்ல வந்து கூடு கட்டியிருக்குங்க பாருங்களேன்…" என்றாள்.."மக்கு மக்கு… ரெண்டும் சேர்ந்து கட்டாது. எப்போவும் ஆண் புறாத்தான் கூடு கட்டும். பெண் புறா அதுல வந்து முட்டை போடறதோட சரி" என்று சிரித்தான்..அப்போதுதான் பார்த்தாள், ஃப்ளஷ் டேன்க் மூடி மேல் குச்சி கூளங்களும், இறக்கை முடிகளும் கிடந்தன. "பாருங்க. இதுங்க தினம் வந்து கூடு கட்டி டேன்க் மூடியையே நாசம் பண்ணியிருக்குங்க…" என்றவள், கொஞ்சம் மூச்சை இழுத்துப் பார்த்துவிட்டு, "லேசா நாத்தம் வேற அடிக்குதுங்க… போயி அந்த பிளாஸ்டிக் ஸ்டூலை எடுத்து வந்து போட்டு கூட்டை லாவகமா எடுத்துக் கொண்டு தூர எறிஞ்சுட்டு வாங்க" என்றாள்..சிரித்தான். "அடியேய்… எப்படியும் இந்த வாரம்தான் கூடு கட்டி முட்டை போட்டிருக்குங்க. ரெண்டு மூணு வாரத்துக்குள்ளே குஞ்சு பொரிச்சுட்டு போய்டப் போகுதுங்க… அதுங்க கூட்டை பாவம், நாம ஏன் கலைப்பானேன்.. போயிட்டுப் போகுதுங்க விடு… எத்தனை முட்டை போட்டிருக்குங்கனு வேணா பார்த்துடலாம்" என்று சொல்லியபடி டாய்லேட் பேசின் மேல் இரண்டு கால்களையும் வைத்து ஏறினான்.."பார்த்துங்க… நீங்க முட்டைய பார்க்கறேனுட்டு, பேசினை உடைச்சுடப் போறீங்க…" என்று சிரிப்புடன் எச்சரித்தாள்..தலையை உயர்த்தி எக்கிக்கொண்டு பார்த்தவன், "ஹை… ரெண்டு முட்டை கிடக்குதுடி… அவ்வளவுதான்… இனிமே போடாது" என்று அவன் சொல்லிக் கொண்டிருக்கையிலேயே ஒரு புறா ஜன்னலின் வெளிப்பகுதியில் பறந்து வந்து ஜன்னலை உரசிக்கொண்டு உட்கார்ந்தது. ஆள் அரவம் கண்டதும், சிட்டாய் பறந்துவிட்டது..பேசினைவிட்டு இறங்கியவன் சிரித்துக்கொண்டே "பாவம் அடை காக்கலாம்னு புறா வந்திருக்கும்போல… நாம நிக்கிறதை பார்த்தவுடனே ஓடி போச்சுது பாவம்… சரி வா, அதுகளை தொந்தரவு பண்ண வேணாம்" என்று அவளை இழுத்துக்கொண்டு வெளியே வந்தான்.."அப்போ நீங்க கூட்டை எடுத்துப் போடலை?" என்றாள் கொஞ்சம் கோபமாய்.."ஏய்… பைத்தியமாடி நீ… நான்தான் ரெண்டு மூணு வாரத்துல குஞ்சுபொரிச்சுட்டு போய்டப் போகுதுங்கறேன், அதுக்குள்ளே அதுக கூட்டைக் கலைச்சு அந்தப் பாவத்தை ஏத்துக்கச் சொல்றியே. போ..போ.. போய் வேற வேலைகளை பாரு…" என்றுவிட்டு பாத்ரூம் கதவைத் தாழிட்டான்..சாயங்காலம் பள்ளிக்கூடம் விட்டு வந்த பாபு விஷயம் கேள்விப்பட்டு ரொம்பவும் பரவசமானான். "அம்மா அம்மா, நானும் புறா முட்டை எப்படி இருக்குனு பார்க்கறேம்மா. ப்ளீஸ்…" என்றபடி ஓடிப் போய் பிளாஸ்டிக் ஸ்டூலை எடுத்துக்கொண்டு போனான். அதைக் கண்டு அவனை விரட்டினாள் மல்லிகா…."அது என்னடா, கோழி முட்டை மாதிரிதான் இருக்கும். அதை போயி பார்த்தே ஆகணுமா… போ போயி முகத்தை அலம்பிட்டு வா, பால் குடுக்கறேன், குடுச்சிட்டு போய், உட்கார்ந்து வீட்டு பாடத்தை எழுது….போ போ…" என்று விரட்டினாள்..அப்போதைக்கு விட்டுவிட்டாலும் அம்மா இல்லாத நேரம் பார்த்து அவசர அவசரமாய் பிளாஸ்டிக் ஸ்டூலை எடுத்துப் போட்டு எக்கிக்கொண்டு பார்த்தான்… முடியவில்ல…. எட்டாத உயரத்தில் கூடு இருந்தது..பாபு திரும்பத் திரும்ப முட்டையை பார்க்கவேண்டுமென்று கேட்டதால் சோமு அவனை அப்படியே தூக்கிப் பிடித்துக்கொண்டு பார்க்க வைத்தான். கண்களை அகல விரித்துக் கொண்டு, "ஹை… புறா முட்டை.. புறா முட்டை" என்று குதூகளித்தான் அவன்..இடையிடையே புறா ஒன்று வந்து உட்காருவதும் போவதுமாய் இருந்தது..தினமும் பாத்ரூம் போகும்போதெல்லாம் கூட்டின் மேல்தான் அவர்கள் கவனம் இருந்தது. கூட்டை எட்டி எட்டிப் பார்ப்பதும், இன்னும் குஞ்சு பொரிக்கவில்லை என்று தவிப்பதுமாய் இருந்தனர். எப்போதும் அதுபற்றியே பேச்சு..ஒருநாள் புறா முட்டையில் ஆம்லேட் போடமுடியுமா என்று கேட்டான் பாபு. அதிர்ந்து போன மல்லிகா, "ச்சீ ச்சீ. அதெல்லாம் கூடாது. அதுமில்லாம இன்னும் நாலஞ்சு நாளில் குஞ்சும் பொரிச்சுடும்" என்றாள்..கொஞ்ச நாட்கள் கழித்து, லேசாய் கீச் கீச் சப்தம் கேட்டது. மல்லிக்காவுக்கு சந்தேகம் வந்தது, ஒருவேளை குஞ்சு பொரிந்துவிட்டதோ என்று. மறுபடியும் ஸ்டூலைப் போட்டு எட்டி பார்த்ததில் இரண்டு குஞ்சுகளும் குறுகிக்கொண்டு உட்கார்ந்திருந்தன..அடுத்த பத்து நாட்களில் இரண்டு குஞ்சுகளும் காணமல் போய்விட்டன..மல்லிகாவுக்கு சந்தேகம். புறாக் குஞ்சுகள் பறந்து போயினவா, இல்லை எலி ஏதும் தூக்கிக் கொண்டு போய்விட்டதா என்று..அன்று சாயங்காலமாக வழக்கம்போல கிண்ணத்தில் தண்ணீர் வைக்க மொட்டை மாடிக்குப் போகும்போது அவளுக்கு அந்த சந்தேகம் மறுபடியும் வந்தது. அந்த இரண்டு புறாக்களும் முன்னே மாதிரி தினமும் வருவதில்லை. எப்போதாவதுதான் வருகின்றன. இப்போது அவை மட்டும் வருமா இல்லை தன் குஞ்சுகளையும் கூட்டிக்கொண்டு வருமா ?.மாடிக்கு போனவளுக்கு ஆச்சரியம். இப்போது அங்கே வேறு இரண்டு புறாக்கள், வெள்ளை நிறத்தில் உட்கார்ந்திருந்தன. அத்துடன் இரண்டும் மூக்கோடு மூக்காய் உரசிக் கொண்டிருந்தன..தண்ணீர் கொண்டு போன கப்பை அப்படியே கைப்பிடி சுவற்றில் வைத்துவிட்டு அவசரமாய், "ஏங்க, நம்ம வீட்டுல திரும்பவும் வேற ஒரு புறா புதுசா வந்து கூடு கட்டப் போவுதுங்க…" என்றபடி ஓடோடி வந்தாள்,.முற்றும்.
-நாமக்கல் எம்.வேலு.ஓவியம்: லலிதா.நாமக்கல் போய்விட்டு நான்கு நாட்கள் கழித்துத் திரும்பி வந்து பார்த்தால் பாத்ரூம் ஜன்னலில் ஒரு கூடு. அதைக் கண்டவுடன் அதிர்ந்து போன மல்லிகா கணவனை அவசரமாய் அழைத்தாள்..வந்து பார்த்தான் சோமு. ஜன்னலில் இரண்டு கண்ணாடிகளுக்கும் இடையில் கிரில் கம்பிமேல் அந்த கூடு இருந்தது.."பாருங்க… நாலு நாள் வீட்டுல ஆள் இல்லை. இதான் சமயம்னு வந்து காக்கா கூடு கட்டிட்டு போயிருக்கு" என்றாள்.."ஏ மண்டு மண்டு… காக்கா எல்லாம் மரங்கள்லதான் கூடு கட்டும். இது எனக்குத் தெரிஞ்சு புறாவோட வேலையாத்தான் இருக்கும்" என்று சிரித்தான்.."பறவைங்க பாவம்னு, நீ மொட்டை மாடில கிண்ணத்துல தண்ணி வைக்கிறே… இதுல சாதம், பிஸ்கட், முறுக்கு வேற. அதுங்க வந்து சாப்பிட்டிட்டு தண்ணியைக் குடிச்சுட்டு கூடும் கட்டிட்டு போவுதுங்க…"."இருக்கும்ங்க… எனக்கு இப்போத்தான் புரியுது. அப்போல்லாம் காக்கா குருவிங்கத்தான் வந்து தண்ணி குடிக்கும். கொஞ்ச நாளா ரெண்டு புறாக்களும் வருது. அதுங்கத்தான் இந்த வேலை பண்ணியிருக்கும்னு நினைக்கிறேன். அந்த ரெண்டும் சேர்ந்துக்கிட்டு ஜன்னல்ல வந்து கூடு கட்டியிருக்குங்க பாருங்களேன்…" என்றாள்.."மக்கு மக்கு… ரெண்டும் சேர்ந்து கட்டாது. எப்போவும் ஆண் புறாத்தான் கூடு கட்டும். பெண் புறா அதுல வந்து முட்டை போடறதோட சரி" என்று சிரித்தான்..அப்போதுதான் பார்த்தாள், ஃப்ளஷ் டேன்க் மூடி மேல் குச்சி கூளங்களும், இறக்கை முடிகளும் கிடந்தன. "பாருங்க. இதுங்க தினம் வந்து கூடு கட்டி டேன்க் மூடியையே நாசம் பண்ணியிருக்குங்க…" என்றவள், கொஞ்சம் மூச்சை இழுத்துப் பார்த்துவிட்டு, "லேசா நாத்தம் வேற அடிக்குதுங்க… போயி அந்த பிளாஸ்டிக் ஸ்டூலை எடுத்து வந்து போட்டு கூட்டை லாவகமா எடுத்துக் கொண்டு தூர எறிஞ்சுட்டு வாங்க" என்றாள்..சிரித்தான். "அடியேய்… எப்படியும் இந்த வாரம்தான் கூடு கட்டி முட்டை போட்டிருக்குங்க. ரெண்டு மூணு வாரத்துக்குள்ளே குஞ்சு பொரிச்சுட்டு போய்டப் போகுதுங்க… அதுங்க கூட்டை பாவம், நாம ஏன் கலைப்பானேன்.. போயிட்டுப் போகுதுங்க விடு… எத்தனை முட்டை போட்டிருக்குங்கனு வேணா பார்த்துடலாம்" என்று சொல்லியபடி டாய்லேட் பேசின் மேல் இரண்டு கால்களையும் வைத்து ஏறினான்.."பார்த்துங்க… நீங்க முட்டைய பார்க்கறேனுட்டு, பேசினை உடைச்சுடப் போறீங்க…" என்று சிரிப்புடன் எச்சரித்தாள்..தலையை உயர்த்தி எக்கிக்கொண்டு பார்த்தவன், "ஹை… ரெண்டு முட்டை கிடக்குதுடி… அவ்வளவுதான்… இனிமே போடாது" என்று அவன் சொல்லிக் கொண்டிருக்கையிலேயே ஒரு புறா ஜன்னலின் வெளிப்பகுதியில் பறந்து வந்து ஜன்னலை உரசிக்கொண்டு உட்கார்ந்தது. ஆள் அரவம் கண்டதும், சிட்டாய் பறந்துவிட்டது..பேசினைவிட்டு இறங்கியவன் சிரித்துக்கொண்டே "பாவம் அடை காக்கலாம்னு புறா வந்திருக்கும்போல… நாம நிக்கிறதை பார்த்தவுடனே ஓடி போச்சுது பாவம்… சரி வா, அதுகளை தொந்தரவு பண்ண வேணாம்" என்று அவளை இழுத்துக்கொண்டு வெளியே வந்தான்.."அப்போ நீங்க கூட்டை எடுத்துப் போடலை?" என்றாள் கொஞ்சம் கோபமாய்.."ஏய்… பைத்தியமாடி நீ… நான்தான் ரெண்டு மூணு வாரத்துல குஞ்சுபொரிச்சுட்டு போய்டப் போகுதுங்கறேன், அதுக்குள்ளே அதுக கூட்டைக் கலைச்சு அந்தப் பாவத்தை ஏத்துக்கச் சொல்றியே. போ..போ.. போய் வேற வேலைகளை பாரு…" என்றுவிட்டு பாத்ரூம் கதவைத் தாழிட்டான்..சாயங்காலம் பள்ளிக்கூடம் விட்டு வந்த பாபு விஷயம் கேள்விப்பட்டு ரொம்பவும் பரவசமானான். "அம்மா அம்மா, நானும் புறா முட்டை எப்படி இருக்குனு பார்க்கறேம்மா. ப்ளீஸ்…" என்றபடி ஓடிப் போய் பிளாஸ்டிக் ஸ்டூலை எடுத்துக்கொண்டு போனான். அதைக் கண்டு அவனை விரட்டினாள் மல்லிகா…."அது என்னடா, கோழி முட்டை மாதிரிதான் இருக்கும். அதை போயி பார்த்தே ஆகணுமா… போ போயி முகத்தை அலம்பிட்டு வா, பால் குடுக்கறேன், குடுச்சிட்டு போய், உட்கார்ந்து வீட்டு பாடத்தை எழுது….போ போ…" என்று விரட்டினாள்..அப்போதைக்கு விட்டுவிட்டாலும் அம்மா இல்லாத நேரம் பார்த்து அவசர அவசரமாய் பிளாஸ்டிக் ஸ்டூலை எடுத்துப் போட்டு எக்கிக்கொண்டு பார்த்தான்… முடியவில்ல…. எட்டாத உயரத்தில் கூடு இருந்தது..பாபு திரும்பத் திரும்ப முட்டையை பார்க்கவேண்டுமென்று கேட்டதால் சோமு அவனை அப்படியே தூக்கிப் பிடித்துக்கொண்டு பார்க்க வைத்தான். கண்களை அகல விரித்துக் கொண்டு, "ஹை… புறா முட்டை.. புறா முட்டை" என்று குதூகளித்தான் அவன்..இடையிடையே புறா ஒன்று வந்து உட்காருவதும் போவதுமாய் இருந்தது..தினமும் பாத்ரூம் போகும்போதெல்லாம் கூட்டின் மேல்தான் அவர்கள் கவனம் இருந்தது. கூட்டை எட்டி எட்டிப் பார்ப்பதும், இன்னும் குஞ்சு பொரிக்கவில்லை என்று தவிப்பதுமாய் இருந்தனர். எப்போதும் அதுபற்றியே பேச்சு..ஒருநாள் புறா முட்டையில் ஆம்லேட் போடமுடியுமா என்று கேட்டான் பாபு. அதிர்ந்து போன மல்லிகா, "ச்சீ ச்சீ. அதெல்லாம் கூடாது. அதுமில்லாம இன்னும் நாலஞ்சு நாளில் குஞ்சும் பொரிச்சுடும்" என்றாள்..கொஞ்ச நாட்கள் கழித்து, லேசாய் கீச் கீச் சப்தம் கேட்டது. மல்லிக்காவுக்கு சந்தேகம் வந்தது, ஒருவேளை குஞ்சு பொரிந்துவிட்டதோ என்று. மறுபடியும் ஸ்டூலைப் போட்டு எட்டி பார்த்ததில் இரண்டு குஞ்சுகளும் குறுகிக்கொண்டு உட்கார்ந்திருந்தன..அடுத்த பத்து நாட்களில் இரண்டு குஞ்சுகளும் காணமல் போய்விட்டன..மல்லிகாவுக்கு சந்தேகம். புறாக் குஞ்சுகள் பறந்து போயினவா, இல்லை எலி ஏதும் தூக்கிக் கொண்டு போய்விட்டதா என்று..அன்று சாயங்காலமாக வழக்கம்போல கிண்ணத்தில் தண்ணீர் வைக்க மொட்டை மாடிக்குப் போகும்போது அவளுக்கு அந்த சந்தேகம் மறுபடியும் வந்தது. அந்த இரண்டு புறாக்களும் முன்னே மாதிரி தினமும் வருவதில்லை. எப்போதாவதுதான் வருகின்றன. இப்போது அவை மட்டும் வருமா இல்லை தன் குஞ்சுகளையும் கூட்டிக்கொண்டு வருமா ?.மாடிக்கு போனவளுக்கு ஆச்சரியம். இப்போது அங்கே வேறு இரண்டு புறாக்கள், வெள்ளை நிறத்தில் உட்கார்ந்திருந்தன. அத்துடன் இரண்டும் மூக்கோடு மூக்காய் உரசிக் கொண்டிருந்தன..தண்ணீர் கொண்டு போன கப்பை அப்படியே கைப்பிடி சுவற்றில் வைத்துவிட்டு அவசரமாய், "ஏங்க, நம்ம வீட்டுல திரும்பவும் வேற ஒரு புறா புதுசா வந்து கூடு கட்டப் போவுதுங்க…" என்றபடி ஓடோடி வந்தாள்,.முற்றும்.