என்கொயரி!.உரையாடியவர் : பத்மினி பட்டாபிராமன்.ஒரு பொதுத் துறையில் (Public Sector) உயர் அதிகாரியாக 36 ஆண்டுகள் பணியாற்றி ஓய்வு பெற்றவர் திருமதி. நிர்மலா வெங்கட்ராமன்..பணியில் நேர்மையாகவும் கண்டிப்பாகவும் பணியாற்றுபவர்களுக்கு வரும் சோதனைகள் பலவற்றை இவரும் சந்தித்திருக்கிறார். தான் சந்தித்த சவால்களைப் பற்றிக் கூறுகிறார்.."பதவி உயர்வு வந்தபோது வேறு ஊரில் நிர்வாகப் பொறுப்பை ஏற்க வேண்டியிருந்தது. அதை ஏற்று குடும்பத்தைப் பிரிந்து, அங்கே அலுவலகம் அருகே வீடு எடுத்து தங்கி, சனிக்கிழமைகளில் கூட கோப்புக்களைப் பார்த்து ஆவன செய்வேன். தலைமைப் பொறுப்பில் இருந்ததால், அலுவலகப் பணிகள் நேரப்படி நடப்பதையும், கணக்குகள் சரிவர இருப்பதையும், கட்டுப்பாட்டுடன் அலுவலகம் இயங்குவதை கண்காணிப்பதையும் நான் கவனிக்க வேண்டியிருந்தது..அங்கே ஒரு சிலர் அவர்களது தேவைக்காக சில விதிமுறைகளை மீறி கையெழுத்துப் போட நிர்பந்தித்தார்கள். மிரட்ட ஆரம்பித்தார்கள். மனசாட்சிப்படி, நேர்மையாக நடக்க வேண்டுமென்ற உறுதியான கொள்கையில் இருந்ததால் மறுத்து விட்டேன்..ஒரு நாள் எனது அலுவலக எம்.டியிடமிருந்து அழைப்பு. கடந்த வாரம் சில கடினமான வேலைகளைத் திறம்பட முடித்திருந்ததால் பாராட்டுவாரோ என்று எண்ணிச் சென்றேன். என் முன் ஒரு கடிதத்தை நீட்டினார். யாரோ எழுதிய மொட்டைக் கடிதாசு. நான் அலுவலகத்திற்கு சரியாக வருவதில்லை என்றும், சரிவர நிர்வாகம் செய்வதில்லை என்றும் அதில் எழுதப் பட்டிருந்தது. ஆத்திரம், கோபம், அழுகை அவமானம் என்று எல்லாம் எனக்குள் பொங்கியது. அடக்கிக்கொண்டேன்.."எனக்கு உங்களைப் பற்றித் தெரியும் மேடம்… உங்கள் கடும் உழைப்பு, நேர்மை. இவற்றைப் பற்றி அலுவலகமே அறியும். இருந்தாலும் டிபார்ட்மென்ட் ரீதியான ஒரு என்கொயரி நடத்த வேண்டியிருக்கும்" என்றார்.."தைரியம் இருந்தால் அவர்கள் உங்கள் முன்னே வந்து பேசச் சொல்லுங்கள். நானும் வருகிறேன். என்றைக்கு நான் ஆஃபீஸ் வரவில்லை… எங்கே என்ன தவறு நேர்ந்தது என்று சொல்லச் சொல்லுங்கள்" என்று வாதிட்டேன். தைரியமாக அந்தப் பிரச்னையை எதிர்கொண்டேன்..விசாரணை நடந்து என் மீது எந்தத் தவறும் இல்லை என்று நிரூபண மாகியது. பின்னர் மேலும் பிரமோஷன் பெற்று, நல்ல பெயரோடு இரண்டு ஆண்டுகள் முன் ஓய்வு பெற்றேன்..'சோதனைகள் வரும்போது பயந்து விடாமல் துணிந்து, அதை எதிர்கொள்ள வேண்டும் என்று தெரிந்து கொண்டோம் மேடம்' என்று சில ஜூனியர்கள் சொன்னபோது மனம் நிறைவாக இருந்தது."
என்கொயரி!.உரையாடியவர் : பத்மினி பட்டாபிராமன்.ஒரு பொதுத் துறையில் (Public Sector) உயர் அதிகாரியாக 36 ஆண்டுகள் பணியாற்றி ஓய்வு பெற்றவர் திருமதி. நிர்மலா வெங்கட்ராமன்..பணியில் நேர்மையாகவும் கண்டிப்பாகவும் பணியாற்றுபவர்களுக்கு வரும் சோதனைகள் பலவற்றை இவரும் சந்தித்திருக்கிறார். தான் சந்தித்த சவால்களைப் பற்றிக் கூறுகிறார்.."பதவி உயர்வு வந்தபோது வேறு ஊரில் நிர்வாகப் பொறுப்பை ஏற்க வேண்டியிருந்தது. அதை ஏற்று குடும்பத்தைப் பிரிந்து, அங்கே அலுவலகம் அருகே வீடு எடுத்து தங்கி, சனிக்கிழமைகளில் கூட கோப்புக்களைப் பார்த்து ஆவன செய்வேன். தலைமைப் பொறுப்பில் இருந்ததால், அலுவலகப் பணிகள் நேரப்படி நடப்பதையும், கணக்குகள் சரிவர இருப்பதையும், கட்டுப்பாட்டுடன் அலுவலகம் இயங்குவதை கண்காணிப்பதையும் நான் கவனிக்க வேண்டியிருந்தது..அங்கே ஒரு சிலர் அவர்களது தேவைக்காக சில விதிமுறைகளை மீறி கையெழுத்துப் போட நிர்பந்தித்தார்கள். மிரட்ட ஆரம்பித்தார்கள். மனசாட்சிப்படி, நேர்மையாக நடக்க வேண்டுமென்ற உறுதியான கொள்கையில் இருந்ததால் மறுத்து விட்டேன்..ஒரு நாள் எனது அலுவலக எம்.டியிடமிருந்து அழைப்பு. கடந்த வாரம் சில கடினமான வேலைகளைத் திறம்பட முடித்திருந்ததால் பாராட்டுவாரோ என்று எண்ணிச் சென்றேன். என் முன் ஒரு கடிதத்தை நீட்டினார். யாரோ எழுதிய மொட்டைக் கடிதாசு. நான் அலுவலகத்திற்கு சரியாக வருவதில்லை என்றும், சரிவர நிர்வாகம் செய்வதில்லை என்றும் அதில் எழுதப் பட்டிருந்தது. ஆத்திரம், கோபம், அழுகை அவமானம் என்று எல்லாம் எனக்குள் பொங்கியது. அடக்கிக்கொண்டேன்.."எனக்கு உங்களைப் பற்றித் தெரியும் மேடம்… உங்கள் கடும் உழைப்பு, நேர்மை. இவற்றைப் பற்றி அலுவலகமே அறியும். இருந்தாலும் டிபார்ட்மென்ட் ரீதியான ஒரு என்கொயரி நடத்த வேண்டியிருக்கும்" என்றார்.."தைரியம் இருந்தால் அவர்கள் உங்கள் முன்னே வந்து பேசச் சொல்லுங்கள். நானும் வருகிறேன். என்றைக்கு நான் ஆஃபீஸ் வரவில்லை… எங்கே என்ன தவறு நேர்ந்தது என்று சொல்லச் சொல்லுங்கள்" என்று வாதிட்டேன். தைரியமாக அந்தப் பிரச்னையை எதிர்கொண்டேன்..விசாரணை நடந்து என் மீது எந்தத் தவறும் இல்லை என்று நிரூபண மாகியது. பின்னர் மேலும் பிரமோஷன் பெற்று, நல்ல பெயரோடு இரண்டு ஆண்டுகள் முன் ஓய்வு பெற்றேன்..'சோதனைகள் வரும்போது பயந்து விடாமல் துணிந்து, அதை எதிர்கொள்ள வேண்டும் என்று தெரிந்து கொண்டோம் மேடம்' என்று சில ஜூனியர்கள் சொன்னபோது மனம் நிறைவாக இருந்தது."