பேட்டி : ராகவ் குமார்.டிக் டாக் மூலமாக தமிழ்நாட்டின் இளைஞர்கள், இளைஞிகளிடம் புகழ் பெற்ற மிருணாளினி ரவி, தெலுங்கில் ஒரு வெற்றி படம் தந்து, தற்போது சசிகுமார் உடன் எம்.ஜி.ஆர் மகன், விஷாலுடன் எனிமி, விக்ரமுடன் கோப்ரா படங்களில் நடித்து வருகிறார். மிருணாளினி நடித்த எனிமி திரைப்படம் வரும் தீபாவளி நாளில் திரைக்கு வர இருப்பதால், அம்மணி மத்தாப்பு மகிழ்ச்சியில் இருக்கிறார். சினிமாவில் வருவதற்கு முன்பு ஐபிஎம் சாப்ட்வேர் நிறுவனத்தில் உயர் பதவியிலிருந்தவர். ஐபிஎம் நிறுவன வேலையை விட்டுவிட்டு, சினிமாவில் நடிக்க வேண்டிய அவசியம் என்ன? டமால் கேள்வியை முன் வைத்தோம்..டுமீல் பதில் : என்னதான் படித்து வேலைக்குப் போனாலும் எனக்கான, என் விருப்பத்திற்கான தேடல் இருந்ததால் நடிப்பைத் தேர்ந்தெடுத்தேன். நான்ஐபிஎம் கேம்பஸ் இன்டர்வியூவில் செலக்ட் ஆன பின், அப்பாயின்மெண்ட் ஆர்டர் வருவதற்கு ஓரிரு மாதங்கள் இருந்தன. இந்த இடைவெளியில் டப்மாஸ் செய்ய ஆரம்பித்தேன். ஐபிஎம் நிறுவனத்தில் வேலைக்குச் சேர்ந்த பின்பு, படங்களில் நடிக்க நிறைய வாய்ப்புகள் வந்தன. முதல் ஒரு வருடம் வரை எந்த வாய்ப்பையும் ஏற்கவில்லை. அதன் பிறகு சூப்பர் டீலக்ஸ் படத்தில் ஒரு சிறிய ரோலில் நடிக்க வாய்ப்புக் கிடைத்தது. பணிக்கு இடையூறு இல்லாமல் இருந்ததால் ஏற்றுக்கொண்டேன்..டமால் : வேலையை விட்டு, சினிமாவிற்கு வருவதை அப்பா, அம்மா ஏற்றுக் கொண்டார்களா?.டுமீல் : எப்படி ஏற்றுக்கொள்வார்கள்? பயமும், தயக்கமும் நிறையவே இருந்தது. தனது மகனோ, மகளோ சினிமாவில் நடிப்பதை தமிழ்நாட்டு பெற்றோர்கள் பலரும் இன்னும் தயக்கத்துடன்தான் பார்க்கிறார்கள். அதேபோலதான், என் அம்மா, அப்பாவும். சூப்பர் டீலக்ஸ் சூட்டிங் ஸ்பாட்டில் பேரண்ட்ஸ் கூடவே இருந்தார்கள். சினிமாவும் மற்ற பணிகள் போலதான். நாம் சரியாக இருந்தால் இங்கே எல்லாம் சரியாக இருக்கும் என்பதைப் புரிந்துகொண்டார்கள்..டமால் : 'எம்.ஜி.ஆர் மகன்' படத்தில் தாவணியில் வருகிறீர்களே! உங்களுக்குப் பிடித்த ஆடை எது?.டுமீல் : நான் நடித்த தெலுங்கு படம் ஒன்றில், ஒரு பாடல் காட்சியில் தாவணி அணிந்து இருந்தேன். இதைப் பார்த்த டைரக்டர் பொன்ராம் சார், தான் இயக்கும் 'எம்.ஜி.ஆர் மகன்' படத்தில் கிராமப் பின்னணி கொண்ட, படம் முழுவதும் தாவணி அணியும் ஹீரோயின் கேரக்டரில் வாய்ப்பு தந்தார். நான் ஓரளவு உயரமாக இருப்பதால் சேலை நன்றாக இருக்கும் என பலர் சொல்வார்கள். எனக்கும் சேலை பிடிக்கும். நான் அடிக்கடி அம்மாவின் சேலைகளை எடுத்துத் கட்டிக் கொள்வேன். என் அப்பா கூட, 'உன்னை விட, நம் மகளுக்கு உன் சேலை நன்றாக இருக்கிறது' என்று அம்மாவிடம் கிண்டலாகச் சொல்வார்..டமால் : சாப்ட்வேர் பொண்ணுக்கு சமைக்கத் தெரியுமா?.டுமீல் : நன்றாகவே சமைக்கத் தெரியும். எனக்கு ஒன்பது வயதாகும்போது தம்பி பிறந்தான். அந்த சூழ்நிலையில் அம்மாவுக்கு உதவியாக சமைக்க முடிவு செய்தேன். இன்று வரை சமைக்கிறேன். பாலக் பன்னீர், பிரியாணி என் சமையலில் சூப்பராக இருக்கும்..டமால் : இந்த வருட தீபாவளியை எப்படிக் கொண்டாடப் போகிறீர்கள்?.டுமீல் : இந்த வருட தீபாவளிக்கு விஷாலுடன் நான் நடித்த எனிமி திரைப்படம் வெளியாகிறது. ரசிகர்களுடன் சேர்ந்து தியேட்டரில் தீபாவளி கொண்டாடப் போகிறேன். அது ஒரு தனி அனுபவம். இந்த வருடம் தீபாவளிக்கு மத்தாப்பு, பட்டாசு எல்லாம் ஆடியன்ஸ் கை தட்டல்கள்தான்..டமால் : குடும்பத்துடன் தீபாவளி கொண்டாடிய அனுபவங்கள்?.டுமீல் : பெங்களூரில் குடும்பத்தினருடன் தீபாவளி கொண்டாடிய அனுபவங்கள் நிறையவே இருக்கிறது. இருந்தாலும், நான் காலேஜில் படித்த வருடங்களில் குடும்பத்தினருடன் எங்கள் சொந்த ஊரான புதுச்சேரியில் கொண்டாட எண்ணி புதுச்சேரியில் பல உறவினர்களுடன், குறிப்பாக தாத்தா, பாட்டியுடன் கொண்டாடினோம். என்னதான் தீபாவளிக்கு விதவிதமா டிரஸ் பண்ணினாலும், சொந்த பந்தங்களுடன் தீபாவளி கொண்டாடுவது தனி சுகம்தான். போட்டி போட்டுக் கொண்டு பட்டாசு வெடித்ததை மறக்கவே முடியாது..டமால் : டிக் டாக் நிறைய குடும்பங்களில் பிரச்னை ஏற்படுத்துவதாகவும், பெண்களுக்கு இதுபோன்ற விஷயங்கள் நல்லது இல்லை எனவும் சொல்லப்படுகிறது. டப் மாஸ், டிக் டாக் மூலமாக சினிமாவில் நுழைந்தவர் என்ற முறையில் இதற்கான உங்கள் கருத்து?.டுமீல் : இரண்டு தண்டவாளங்களில் பயணிக்கும் ரயிலில் ஏறினால் ஊர் போய் சேரலாம். அதே தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்தால் உலகை விட்டுப் போய் விடலாம். இது ரயிலின் தவறு அல்ல. டிக் டாக் மற்றும் சமூக வலை தளங்களை சரியாகப் பயன்படுத்தினால் முன்னேறலாம். தவறாகப் பயன்படுத்தினால் வாழ்க்கை பிரச்னையில்தான் முடியும்..டமால் : பிட்னெஸ் டிப்ஸ்….டுமீல் : ஜிம்மில் போய் லேடீஸ் ஹெவி உடற்பயிற்சி செய்வதில் உடன்பாடில்லை. யோகா, மூச்சுப் பயிற்சி போன்ற எளிய பயிற்சிகள் பெண்மையை இன்னமும் அழகாக்கும். நான் இப்போது சைவ உணவு மட்டும்தான் சாப்பிடுகிறேன். இது கூட என் பிட்னெஸ்க்கு முக்கியக் காரணம்..டமால் : பிடித்த கடவுள்…?.டுமீல் : விநாயகரும் சிவனும் பிடித்த கடவுள்கள்.
பேட்டி : ராகவ் குமார்.டிக் டாக் மூலமாக தமிழ்நாட்டின் இளைஞர்கள், இளைஞிகளிடம் புகழ் பெற்ற மிருணாளினி ரவி, தெலுங்கில் ஒரு வெற்றி படம் தந்து, தற்போது சசிகுமார் உடன் எம்.ஜி.ஆர் மகன், விஷாலுடன் எனிமி, விக்ரமுடன் கோப்ரா படங்களில் நடித்து வருகிறார். மிருணாளினி நடித்த எனிமி திரைப்படம் வரும் தீபாவளி நாளில் திரைக்கு வர இருப்பதால், அம்மணி மத்தாப்பு மகிழ்ச்சியில் இருக்கிறார். சினிமாவில் வருவதற்கு முன்பு ஐபிஎம் சாப்ட்வேர் நிறுவனத்தில் உயர் பதவியிலிருந்தவர். ஐபிஎம் நிறுவன வேலையை விட்டுவிட்டு, சினிமாவில் நடிக்க வேண்டிய அவசியம் என்ன? டமால் கேள்வியை முன் வைத்தோம்..டுமீல் பதில் : என்னதான் படித்து வேலைக்குப் போனாலும் எனக்கான, என் விருப்பத்திற்கான தேடல் இருந்ததால் நடிப்பைத் தேர்ந்தெடுத்தேன். நான்ஐபிஎம் கேம்பஸ் இன்டர்வியூவில் செலக்ட் ஆன பின், அப்பாயின்மெண்ட் ஆர்டர் வருவதற்கு ஓரிரு மாதங்கள் இருந்தன. இந்த இடைவெளியில் டப்மாஸ் செய்ய ஆரம்பித்தேன். ஐபிஎம் நிறுவனத்தில் வேலைக்குச் சேர்ந்த பின்பு, படங்களில் நடிக்க நிறைய வாய்ப்புகள் வந்தன. முதல் ஒரு வருடம் வரை எந்த வாய்ப்பையும் ஏற்கவில்லை. அதன் பிறகு சூப்பர் டீலக்ஸ் படத்தில் ஒரு சிறிய ரோலில் நடிக்க வாய்ப்புக் கிடைத்தது. பணிக்கு இடையூறு இல்லாமல் இருந்ததால் ஏற்றுக்கொண்டேன்..டமால் : வேலையை விட்டு, சினிமாவிற்கு வருவதை அப்பா, அம்மா ஏற்றுக் கொண்டார்களா?.டுமீல் : எப்படி ஏற்றுக்கொள்வார்கள்? பயமும், தயக்கமும் நிறையவே இருந்தது. தனது மகனோ, மகளோ சினிமாவில் நடிப்பதை தமிழ்நாட்டு பெற்றோர்கள் பலரும் இன்னும் தயக்கத்துடன்தான் பார்க்கிறார்கள். அதேபோலதான், என் அம்மா, அப்பாவும். சூப்பர் டீலக்ஸ் சூட்டிங் ஸ்பாட்டில் பேரண்ட்ஸ் கூடவே இருந்தார்கள். சினிமாவும் மற்ற பணிகள் போலதான். நாம் சரியாக இருந்தால் இங்கே எல்லாம் சரியாக இருக்கும் என்பதைப் புரிந்துகொண்டார்கள்..டமால் : 'எம்.ஜி.ஆர் மகன்' படத்தில் தாவணியில் வருகிறீர்களே! உங்களுக்குப் பிடித்த ஆடை எது?.டுமீல் : நான் நடித்த தெலுங்கு படம் ஒன்றில், ஒரு பாடல் காட்சியில் தாவணி அணிந்து இருந்தேன். இதைப் பார்த்த டைரக்டர் பொன்ராம் சார், தான் இயக்கும் 'எம்.ஜி.ஆர் மகன்' படத்தில் கிராமப் பின்னணி கொண்ட, படம் முழுவதும் தாவணி அணியும் ஹீரோயின் கேரக்டரில் வாய்ப்பு தந்தார். நான் ஓரளவு உயரமாக இருப்பதால் சேலை நன்றாக இருக்கும் என பலர் சொல்வார்கள். எனக்கும் சேலை பிடிக்கும். நான் அடிக்கடி அம்மாவின் சேலைகளை எடுத்துத் கட்டிக் கொள்வேன். என் அப்பா கூட, 'உன்னை விட, நம் மகளுக்கு உன் சேலை நன்றாக இருக்கிறது' என்று அம்மாவிடம் கிண்டலாகச் சொல்வார்..டமால் : சாப்ட்வேர் பொண்ணுக்கு சமைக்கத் தெரியுமா?.டுமீல் : நன்றாகவே சமைக்கத் தெரியும். எனக்கு ஒன்பது வயதாகும்போது தம்பி பிறந்தான். அந்த சூழ்நிலையில் அம்மாவுக்கு உதவியாக சமைக்க முடிவு செய்தேன். இன்று வரை சமைக்கிறேன். பாலக் பன்னீர், பிரியாணி என் சமையலில் சூப்பராக இருக்கும்..டமால் : இந்த வருட தீபாவளியை எப்படிக் கொண்டாடப் போகிறீர்கள்?.டுமீல் : இந்த வருட தீபாவளிக்கு விஷாலுடன் நான் நடித்த எனிமி திரைப்படம் வெளியாகிறது. ரசிகர்களுடன் சேர்ந்து தியேட்டரில் தீபாவளி கொண்டாடப் போகிறேன். அது ஒரு தனி அனுபவம். இந்த வருடம் தீபாவளிக்கு மத்தாப்பு, பட்டாசு எல்லாம் ஆடியன்ஸ் கை தட்டல்கள்தான்..டமால் : குடும்பத்துடன் தீபாவளி கொண்டாடிய அனுபவங்கள்?.டுமீல் : பெங்களூரில் குடும்பத்தினருடன் தீபாவளி கொண்டாடிய அனுபவங்கள் நிறையவே இருக்கிறது. இருந்தாலும், நான் காலேஜில் படித்த வருடங்களில் குடும்பத்தினருடன் எங்கள் சொந்த ஊரான புதுச்சேரியில் கொண்டாட எண்ணி புதுச்சேரியில் பல உறவினர்களுடன், குறிப்பாக தாத்தா, பாட்டியுடன் கொண்டாடினோம். என்னதான் தீபாவளிக்கு விதவிதமா டிரஸ் பண்ணினாலும், சொந்த பந்தங்களுடன் தீபாவளி கொண்டாடுவது தனி சுகம்தான். போட்டி போட்டுக் கொண்டு பட்டாசு வெடித்ததை மறக்கவே முடியாது..டமால் : டிக் டாக் நிறைய குடும்பங்களில் பிரச்னை ஏற்படுத்துவதாகவும், பெண்களுக்கு இதுபோன்ற விஷயங்கள் நல்லது இல்லை எனவும் சொல்லப்படுகிறது. டப் மாஸ், டிக் டாக் மூலமாக சினிமாவில் நுழைந்தவர் என்ற முறையில் இதற்கான உங்கள் கருத்து?.டுமீல் : இரண்டு தண்டவாளங்களில் பயணிக்கும் ரயிலில் ஏறினால் ஊர் போய் சேரலாம். அதே தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்தால் உலகை விட்டுப் போய் விடலாம். இது ரயிலின் தவறு அல்ல. டிக் டாக் மற்றும் சமூக வலை தளங்களை சரியாகப் பயன்படுத்தினால் முன்னேறலாம். தவறாகப் பயன்படுத்தினால் வாழ்க்கை பிரச்னையில்தான் முடியும்..டமால் : பிட்னெஸ் டிப்ஸ்….டுமீல் : ஜிம்மில் போய் லேடீஸ் ஹெவி உடற்பயிற்சி செய்வதில் உடன்பாடில்லை. யோகா, மூச்சுப் பயிற்சி போன்ற எளிய பயிற்சிகள் பெண்மையை இன்னமும் அழகாக்கும். நான் இப்போது சைவ உணவு மட்டும்தான் சாப்பிடுகிறேன். இது கூட என் பிட்னெஸ்க்கு முக்கியக் காரணம்..டமால் : பிடித்த கடவுள்…?.டுமீல் : விநாயகரும் சிவனும் பிடித்த கடவுள்கள்.