காஷ்மீரில் 4 தீவிரவாதிகள் சுட்டுக் கொலை!

ஜம்மு காஷ்மீர்
ஜம்மு காஷ்மீர்

 காஷ்மீரில் தீவிரவாதிகளை சுற்றிவளைத்து பாதுகாப்புப் படையினர் நடத்திய தாக்குதலில் 4 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

 இது குறித்து ஜம்மு காஷ்மீர் கூடுதல் டிஜிபி முகேஷ் சிங் கூறியதாவது;

 காஷ்மீரின் சோபியான் மாவட்டத்தில்  ஜெய்ஷ் இ முகமது இயக்கத்தை சேர்ந்த 3 தீவிரவாதிகள் மற்றும் லஷ்கர் இ தொய்பா இயக்கத்தைச் சேர்ந்த ஒரு தீவிரவாதி ஆகியோர் பதுங்கியிருப்பதாக தகவல் தெரிய வந்தது.

இதையடுத்து அப்பகுதியில் போலீஸ் தேடுதல் வேட்டை நடத்தியது. அப்போது சோபியான் மாவட்டத்தின் ட்ராச் பகுதியில் அந்த 4 தீவிரவாதிகள் தங்கியிருந்த இடம் கண்டறியப் பட்டது.

இதையடுத்து அந்த இடத்தை போலீஸ் சுற்றிவளைத்து நடத்திய தாக்குதலில் 4 தீவிரவாதிகளும் சுட்டுக் கொல்லப்பட்டனர். அதில் 2 பேர் ஜெய்ஷ் இ முகமது தீவிரவாதிகள் என அடையாளம் காணப்பட்டுள்ளது.

இவர்கள் இருவரும் புல்வாமா காவல் நிலையத்தின் சிறப்பு அதிகாரி கொலை வழக்கில் சம்பந்தப்பட்டவர்களாவர். மேலும்  ட்ராச் பகுதியில் தீவிரவாதிகளை மடக்கிப் பிடிக்கும் என்கவுன்ட்டர் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

 -இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com