#BREAKING; நளினி உள்ளிட்ட 6 பேர் விடுதலை : உச்ச நீதி மன்றம் உத்தரவு.

#BREAKING; நளினி உள்ளிட்ட 6 பேர் விடுதலை : உச்ச நீதி மன்றம் உத்தரவு.

நாட்டின் முன்னாள் பிரதமர் ராஜீவ் கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு சிறையில் உள்ள நளினி உள்ளிட்ட 6 பேரையும் விடுதலை செய்து உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் நளினி உள்ளிட்ட 6 பேருடன் பேரறிவாளனும் குற்றம் சாட்டப்பட்டு சிறையில் இருந்தார். அவர் தன்னை விடுவிக்கக் கோரி சுப்ரீம் கோர்ட்டில் மனு செய்ய, அதன் அடிப்படையில் அவர் விடுதலை செய்யப்பட்டார்.

அதையே காரணம் காட்டி, நளினி உட்பட மீதி 6 பேரும் தங்களையும் விடுவிக்க் கோரி  உச்ச நீதி மன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்.

இந்நிலையில் தமிழ்நாடு அரசின் பரிந்துரையை ஏற்று அவர்களை விடுதலை செய்ய ஆளுநர் ஆர்.என்.ரவி முடிவெடுக்காத நிலையில், உச்சநீதிமன்றம் நளினி உட்பட 6 பேரையும் விடுதலை செய்து இன்று அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com