பிரதமர் காரில் ஏற முயன்ற முதல்வர்; தடுத்த பாதுகாப்புப் படை வீரர்கள்!

பிரதமர் மோடி - முதல்வர் பூபேந்திர படேல்
பிரதமர் மோடி - முதல்வர் பூபேந்திர படேல்

பிரதமர் மோடியின் காரில் ஏற முயன்ற குஜராத் முதல்வர் பூபேந்திர படேலை தேசிய பாதுகாப்பு படை வீரர் தடுத்த விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

 குஜராத்தில் விரைவில் சட்டப்பேரவை தேர்தல் நடக்கவுள்ள நிலையில், அங்கு ஆளுங்கட்சியான பாஜக  மீண்டும் ஆட்சியை பிடிக்க தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறது.

பிரதமர் மோடி இதற்காக அடிக்கடி குஜராத் சென்று பல ஆயிரம் கோடிக்கான திட்டங்களை தொடங்கி வைத்து, பிரசாரம் செய்து வருகிறார்.

சமீபத்தில் குஜராத்தில் அவர் 2 நாட்கள் சுற்றுப் பயணம் மேற்கொண்டபோது, பிரதமர் மோடியின் காரில் அம்மாநில முதல்வர் பூபேந்திர படேல் ஏற முயன்றார். அவரை தேசிய பாதுகாப்பு படை வீரர் ஒருவர் தடுக்கும் வீடியோ காட்சி சமூக வலைதளங்களில் தற்போது வைரலாகி வருகிறது.

 ஒரு மாநிலத்தின் முதல்வர் இவ்வாறு பாதுகாப்பு படை வீரரால் அவமதிக்கப்பட்டது இப்போது சர்ச்சையாகி வருகிறது. குஜராத் முதல்வர் பூபேந்திர படேல் அவமதிக்கப்பட்டதற்கு காங்கிரஸ், ஆம் ஆத்மி உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com