ஆம்ஆத்மி கட்சியால் குஜராத்தில் தோற்றோம்! ராகுல்காந்தி பேச்சு !

ராகுல்காந்தி
ராகுல்காந்தி

ராஜஸ்தான் மாநிலம் ஜெய்பூரில் செய்தியாளர்களை நேற்று சந்தித்த ராகுல் காந்தி குஜராத் தேர்தல் முடிவுகள் குறித்து முதல்முறையாக தனது கருத்துக்களை செய்தியாளர்களிடம் பகிர்ந்து கொண்டார். "பாஜக மிகப்பெரிய அமைப்பு பலம் கொண்ட கட்சியாகும். ஆனால், அவர்களை இமாச்சலில் வீழ்த்தி காட்டியுள்ளது காங்கிரஸ் கட்சி என ராகுல் காந்தி கூறியுள்ளார்.

இந்திய ஒற்றுமை யாத்திரை என்ற பயணம் 100 நாள்களை கடந்தது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய ராகுல் காந்தி, இமாச்சலப் பிரதேசம் மற்றும் குஜராத் தேர்தல் முடிவுகள் குறித்து முக்கிய கருத்தை பகிர்ந்து கொண்டார். இமாச்சலப் பிரதேசத்தில் ஆளும் பாஜகவை வீழ்த்தி காங்கிரஸ் மீண்டும் ஆட்சியை கைப்பற்றியது. அதேவேளை, குஜராத்திலோ, பிஜேபி மாபெரும் வெற்றி பெற்று காங்கிரஸை படுதோல்வி அடைய செய்தது.

இன்னும் வெளிப்படையாகக் கூறினால், ஆம் ஆத்மி கட்சி இல்லை என்றால் குஜராத்திலும் பாஜகவை நாங்கள் வீழ்த்தி இருப்போம். அங்கு காங்கிரஸை குறிவைப்பதற்காக ஆம் ஆத்மி களமிறக்கப்பட்டது. பிராந்திய கட்சிகளால் ஒரு குறிப்பிட்ட சமூகத்தையோ மாநிலத்தையோ மட்டுமே முன்னிறுத்த முடியும். நாட்டில் எத்தனையோ எதிர்க்கட்சிகள் உள்ளன. அவர்களின் செயல்பாடுகளை நாங்கள் ஏற்று கொள்கிறோம்.

அதேவேளை, தேசிய சிந்தனையை முன்னிறுத்தும் காங்கிரஸ் கட்சி அவர்களை விட தனித்துவமானவர்கள். நாங்கள் ஒட்டுமொத்த நாட்டிற்கான சிந்தனை கொண்டு செயல்படுபவர்கள்" என்று தெரிவித்தார். குஜராத்தில் தொடர்ந்து 27 ஆண்டுகள் ஆட்சியில் இருக்கும் பாஜக 156 இடங்களை கைப்பற்றி அமோக வெற்றி பெற்றது. காங்கிரஸ் 17 இடங்களை மட்டுமே வென்ற நிலையில், புதுமுகமான ஆம் ஆத்மி 5 இடங்களை கைப்பற்றியது என ராகுல் காந்தி கூறியுள்ளார்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com