சர்வதேச மகளிர் டென்னிஸ் போட்டி; சென்னையில் ஏற்பாடுகள்! 

சர்வதேச மகளிர் டென்னிஸ் போட்டி; சென்னையில் ஏற்பாடுகள்! 

சர்வதேச மகளிர் டென்னிஸ் போட்டி சென்னையில் முதன்முறையாக நடத்தப்பட உள்ளது.சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள டென்னிஸ் விளையாட்டு மைதானத்தில் வருகிற செப்டம்பர் 12-ம் தேதி தொடங்கப்பட உள்ள நிலையில் அதற்கான ஏற்பாடுகள் குறித்து மாநில விளையாட்டுத் துறை அமைச்சர் மெய்யநாதன் இன்று ஆய்வு மேற்கொண்டார்.  

அதன் பின்னர் செய்தியாளர்களிடம் அமைச்சர் மெய்யநாதன் கூறியதாவது: 

தமிழக மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான சர்வதேச மகளிர் டென்னிஸ் போட்டியை தமிழக அரசு WTO உடன் இணைந்து சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள டென்னிஸ் விளையாட்டு மைதானத்தில் செப்டம்பர் 10-ம் தேதி முதல் 18-ம் தேதி வரை நடக்கவுள்ளது.

அதற்காக  உலகத் தரத்தில் மைதானத்தின் சீரமைப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. செஸ் ஒலிம்பியாட் போல் டென்னிஸ் குறித்து மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் தமிழ்நாட்டு டென்னிஸ் வீரர்–வீராங்கனைகள் இந்த மைதானத்தில் பயிற்சியை செப்டம்பர் 8-ம் தேதி முதல் தொடங்க உள்ளனர். 

–இவ்வாறு அவர் தெரிவித்தார்.  

இப்போட்டியில் இந்தியாவின் டாப் 2 ஒற்றையர் டென்னிஸ் வீராங்கனைகளான அங்கிதா ரெய்னா (169) மற்றும் கர்மன் தண்டி (494) ஆகியோர் நேரடியாக பிரதான போட்டிக்கான வைல்டு கார்டுகளைப் பெறுவார்கள்  என்று எதிர்பார்க்கப் படுகிறது. 

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com