சென்னையில் நடைபெறும் உலகக் கோப்பை ஸ்குவாஷ் போட்டிகள்!

சென்னையில் நடைபெறும் உலகக் கோப்பை ஸ்குவாஷ் போட்டிகள்!

மிழக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார் அப்போது அவர், “ஸ்குவாஷ் உலகக் கோப்பை போட்டிகள் தமிழகத்தின் சென்னையில் உள்ள எக்ஸ்பிரஸ் அவென்யூ வணிக வளாகத்தில் நடைபெற இருக்கிறது. இதற்காக தமிழக விளையாட்டுத்துறை பெருமைப்படுகிறது. தமிழ்நாட்டை விளையாட்டின் தலைநகரமாக மாற்ற வேண்டும் என்பதற்காக இந்தப் போட்டி சென்னையில் நடைபெற உள்ளது.

வரும் ஜூன் மாதம் 13ம் தேதி முதல் 17ம் தேதி வரை நடைபெற உள்ள இந்த உலகக் கோப்பை ஸ்குவாஷ் போட்டியில் ஹாங்காங், சீனா, ஜப்பான், எகிப்து, தென் ஆப்பிரிக்கா, மலேஷியா, ஆஸ்திரேலியா, கொலம்பியா ஆகிய எட்டு நாடுகள் பங்கேற்க உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. இதில் பல நாடுகளைச் சேர்ந்த வீரர், வீராங்கனைகள் பங்கேற்க உள்ளனர். இந்த உலகக் கோப்பை ஸ்குவாஷ் போட்டியை நடத்த 1.5 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டு இருக்கிறது.

வரும் நாட்களில் ஒலிம்பிக் போட்டிகளில் ஸ்குவாஷ் போட்டியையும் இடம் பெறச்செய்யும் முயற்சிவும் இது இருக்கும் என்பதை மகிழ்ச்சியோடு தெரிவித்துக்கொள்கிறேன். அதோடு, இந்தப் போட்டிகளைக் காண்பது என்பது பொதுமக்களுக்கும் ஸ்குவாஷ் விளையாட்டு ரசிகர்களுக்கும் ஒரு புது அனுபவமாக இருக்கும். நம்முடைய அரசு இதுபோன்று சர்வதேச அளவிலான போட்டிகளை நடத்துவதற்காக பல்வேறு முயற்சிகளையும் ஊக்கப்படுத்தி வருகிறது” என்று அமைச்சர் தெரிவித்தார். அதைத் தொடர்ந்து, ‘ஜல்லிக்கட்டு வீரர்களுக்கான இட ஒதுக்கீடு குறித்து முதலமைச்சரிடம் ஆலோசித்து முடிவெடுக்கப்படும்’ என்றும் அவர் கூறி உள்ளார்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com