ஈரோடு கிழக்கு தொகுதி வாக்கு எண்ணும் மையத்தில் 3 அடுக்கு பாதுகாப்பு!

ஈரோடு கிழக்கு தொகுதி வாக்கு எண்ணும் மையத்தில் 3 அடுக்கு பாதுகாப்பு!

ஈரோடு கிழக்கு தொகுதி வாக்கு எண்ணும் மையத்தில் 3 அடுக்கு பாதுகாப்பு போடப் பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் கிருஷ்ணன் உன்னி தெரிவித்துள்ளார்.

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் வாக்குப்பதிவுக்காக 52 இடங்களில் 238 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டிருந்தது. காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு 6 மணி வரை நடைபெற்றது. ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் மாலை 6 மணி நிலவரப்படி 74.69% வாக்குகள் பதிவாகியுள்ளன. இதுவரை 82,021 ஆண்கள், 87,907 பெண்கள், மூன்றாம் பாலினத்தவர் 17 பேர் வாக்களித்துள்ளனர். ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் பதிவான வாக்குகள் மார்ச் 2ல் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும். வாக்கு எண்ணும் மையங்களில் 3 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளதாக தேர்தல் அதிகாரி கூறியுள்ளார்

ஈரோடு கிழக்கு தொகுதிக்கான இடைத்தேர்தல் நேற்று 238 வாக்குச் சாவடிகளில் காலை 7 மணிக்கு தொடங்கி விறுவிறுப்பாக நடந்து முடிந்துள்ளது. இந்த நிலையில் ஈரோடு சித்தோடு பொறியியல் கல்லூரியில் அமைந்துள்ள வாக்கு எண்ணும் மையத்திற்கு மாவட்ட ஆட்சியர் கிருஷ்ணன் உண்ணி இன்று நேரில் சென்று ஆய்வு செய்தார்.

இதையடுத்து செய்தியாளர்களை சந்தித்த அவர், வாக்கு எண்ணிக்கைக்கான ஏற்பாடுகள் அனைத்தும் தயார் நிலையில் இருக்கின்றது. பாதுகாப்பு நடைமுறைகள் படி வாக்கு பதிவு இயந்திரம் இருக்கும் 2 இடங்களிலும், சி.ஆர்.பி.எப் மற்றும் ஆயுதப்படை காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்த பட்டுள்ளதாக தெரிவித்தார். தொடர்ந்து பேசிய அவர் போலீசார் 450 பேர் சுழற்சி முறையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளதாகவும் ஸ்டிராங் ரூம் உள்ள பகுதியில் 48 சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டு கண்காணிக்கப் படுவதாகவும் கூறினார்.

மேலும் இரு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பழுதடைந்துள்ளது. எந்ததெந்த மிஷன் பழுதாகி இருக்கின்றதோ அதுவும், அதற்கு மாற்றாக பயன்படுத்தபட்டதும் கணக்கில் எடுத்து கொள்ளப்படும் வாக்கு பதிவு குறித்து விழிப்புணர்வு எற்படுத்தப் பட்டது. கொடி அணி வகுப்பு நடத்தப்பட்டது. மக்களுக்கு போதுமான நம்பிக்கை கொடுத்ததன் அடிப்படையில் வாக்கு சதவீதம் கணிசமாக அதிகரித்துள்ளது. வாக்கு எண்ணிக்கைக்காக 16 டேபிள் போடப்பட்டுள்ளது. வாக்கு எண்ணிக்கை 15 சுற்றுகளாக நடைபெறும்.

விவிபேட் ரேண்டம் முறையில் எண்ணப்படும். சராசரியை விட அதிகமான வாக்கு பதிவாகியுள்ள வாக்கு சாவடிகள் குறித்து தணிக்கைக்கு எடுத்து கொள்ளப்படும் என்று தெரிவித்த அவர் 8 மணிக்கு தபால் வாக்குகளும், அதை தொடர்ந்து வாக்கு பதிவு இயந்திரங்களில் எண்ணிக்கை தொடங்கும் என்றும் மாவட்ட ஆட்சியர் கிருஷ்ணன் உன்னி கூறியுள்ளார்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com