சென்னை திரும்பும் மக்கள்! கடும் போக்குவரத்து நெரிசல் !

போக்குவரத்து நெரிசல்
போக்குவரத்து நெரிசல்

தீபாவளி பண்டிகையையொட்டி விடுமுறைக்காக சொந்த ஊருக்கு சென்றிருந்த மக்கள் விடுமுறை முடிந்ததால் இன்று சென்னைக்கு திரும்பினர். இதனால் இன்று தேசிய நெடுஞ்சாலைகளில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.

சனி ஞாயிறு திங்கள் என வரிசையாக தீபாவளி விடுமுறை வந்ததால் , தீபாவளி பண்டிகையையொட்டி சென்னையில் இருந்து லட்சக்கணக்கான மக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு சென்றிருந்தனர். சொந்த ஊர்களுக்கு சென்றவர்கள் வசதிக்காவும், பள்ளி, கல்லூரி மாணவர்களின் கோரிக்கையை ஏற்று நேற்று செவ்வாய்க்கிழமை தமிழக அரசு நேற்று விடுமுறை அளித்திருந்தது,

நேற்றுடன் விடுமுறை முடிந்ததையடுத்து தென் மாவட்டங்களில் இருந்து சென்னை நோக்கி அரசு மற்றும் தனியார் பேருந்துகளிலும் தனது சொந்த வாகனங்களிலும் மக்கள் சென்னை நோக்கி வருகின்றனர். இதனால் திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலைகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.

பொதுமக்கள்
பொதுமக்கள்

சிறப்பு பேருந்து, தனியார் ஆம்னி பஸ்கள், கார், வேன்கள் என்று பண்டிகை கொண்டாட்டத்திற்காக சொந்த ஊர்களுக்கு மக்களை அழைத்து சென்ற வாகனங்கள் இன்று அதிகாலை முதல் சென்னை திரும்பத் தொடங்கியுள்ளது. இதனால் சென்னையின் புறநகர் பகுதிகளான தாம்பரம், பெருங்களத்தூர், மதுரவாயல் கோயம்பேடு உள்ளிட்ட இடங்களில் போக்குவரத்து நெரிசல் காணப்படுகிறது.

பள்ளி, கல்லூரி மற்றும் அலுவலகம் செல்வோர் என அனைத்து தரப்பினரும் விடுமுறை முடிந்து இன்று சென்னை திரும்பியுள்ளனர். இதனால், குறிப்பாக சென்னை கோயம்பேட்டில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com