கத்தார் நாட்டில் உலகக் கோப்பை கால்பந்து போட்டிகள் வெகு விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இந்தியாவிலும் இப்போட்டிகளை ரசிகர்கள் வெகுவாக ரசித்து கண்டு களித்து வருகின்றனர்.
இந்நிலையில், கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு, ராமநாதபுரத்தில் ஒரு பேக்கரி நிறுவனம் கால்பந்து கோப்பை வடிவில், சிறப்பு கிறிஸ்துமஸ் கேக் தயரித்து பார்வைக்கு வைத்துள்ளனர். இந்த கேக்கை பொதுமக்கள் ஆர்வமுடன் பார்த்துச் செல்கின்றனர்.
உலக கோப்பை கால்பந்து திருவிழாவை முன்னிட்டு ஐஸ்வர்யா பேக்கரிஸ் சார்பாக அதனை கொண்டாடும் விதத்திலும் இன்றைய இளைஞர்களிடையே விளையாட்டு ஆர்வத்தை தூண்டும் விதத்திலும் ஆளுயர உலகக் கால்பந்து கோப்பையை வடிவமைத்துள்ளனர்.
இந்த ஆளுயர கேக் சுமார் 60 கிலோ சர்க்கரை மற்றும் 260 முட்டைகள் கொண்டு சுமார் ஐந்தரை அடி உயரத்தில் தயாரித்து வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனை பொதுமக்கள் ஆர்வமுடன் விரும்பி பார்த்து செல்பி எடுத்து செல்கின்றனர்