ஒரே நாளில் 50 லட்சம் பேருக்கு கொரோனா!

தினசரி பாதிப்பு எண்ணிக்கையை இனி வெளியிடமாட்டோம் சீன அரசு திட்டவட்டம்!
கொரோனா
கொரோனா

சீனாவில் ஒரே நாளில் 50 லட்சம் பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. சீனாவில் மீண்டும் கொரோனா அலை ஏற்பட்டுள்ளதாக தகவல் பரவி வருகிறது. சீனாவில் ஒரு நாளில் 49 லட்சம் முதல் 53 லட்சம் வரை புதிய கொரோனா பாதிப்புகள் உறுதி செய்யப்படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த பாதிப்பானது இன்று 10 சதவீதம் அதிகரிக்கக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒமைக்ரானின் மாறுபாடான பி.எப்.7 என்ற வைரசால் தொற்று பாதிப்பு அதிகரித்து கொண்டே செல்கிறது. இதனால் சீனாவில் அனைத்து மருத்துவமனைகளும் நோயாளிகளால் நிரம்பி வழிகின்றன. அதே போல உயிரிழப்புகளும் அதிகமாக இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

கடந்த 2019ம் ஆண்டு முதலில் சீனாவின் வூகான் மாகாணத்தில் இருந்து தான் முதல் கொரோனா வைரஸ் கண்டறியப்பட்டது. பின்னர் அந்த வைரஸ் உலகம் முழுவதும் பரவி பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது என்பது குறிப்பிடத்தக்கது.

சீனாவில் கடந்த சில நாட்களுக்கு முன்பு கடுமையான கொரோனா கட்டுப்பாடுகனை தளர்த்த வலியுறுத்தி நாடு முழுவதும் போராட்டம் நடைப்பெற்றது. அந்த போராட்டத்தின் விளைவாக கொரோனா கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டன. இந்நிலையில் மீண்டும் அங்கு கொரோனா பாதிப்புகள் அதிகமாகி வருகிறது.

இதுகுறித்து அமெரிக்காவை சேர்ந்த ஆராய்ச்சி நிறுவனம் ஒன்று கூறுகையில், சீனாவில் அடுத்த ஆண்டில் 10 லட்சம் பேர் கொரோனாவுக்கு பலியாவதற்கு வாய்ப்புள்ளது என்று கூறியுள்ளார். இதேபோல் ஹாங்காங் பல்கலைக்கழக ஆய்வாளர்களும் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

இந்நிலையில் சீனாவில் ஒரு நாளில் 50 லட்சம் பேருக்கு கொரோன தொற்று உறுதி செய்யப்பட்டதாக மருத்துவ அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த செய்தி மறுநாளே அந்நாட்டு ஊடகங்களில் இருந்து நீக்கப்பட்டது. கொரோனாவின் தினசரி பாதிப்பு எண்ணிக்கையை இனி வெளியிடமாட்டோம் என சீன அரசு அதிரடியாக அறிவித்துள்ளது.

அதனால் சீனா கொரோனா பாதிப்பு மற்றும் உயிரிழப்புகள் பற்றிய தகவல்களை சரியாக அளிக்கவில்லை என்று குற்றம் சாட்டப்பட்டுள்ளது. கொரோனாவால் ஏற்படும் பாதிப்பு மற்றும் பலி எண்ணிக்கையை குறைத்து சீன அரசாங்கம் தெரிவிப்பதாக கூறப்படுகிறது. சீனாவில் தினசரி கொரோனா பாதிப்புகளை அந்நாட்டின் தேசிய சுகாதார மையம் வெளியிட்டு வருகிறது.

இந்த நிலையில் சீனா, இன்று முதல் தாங்கள் கொரோனா பாதிப்பு குறித்த புள்ளி விவரங்களை வெளியிட மாட்டோம் என்று தெரிவித்துள்ளது. இனி கொரோனா பாதிப்பு தகவல்கள் சீன நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையத்தால் வெளியிடப்படும் என்றும் தெரிவித்துள்ளது. ஆனால் இந்த மாற்றத்திற்கான காரணங்களை குறிப்பிடவில்லை. அதேபோல் சீன நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையம் எப்படி கொரோனா தகவல்களை அளிக்கும் என்பது குறித்தும் கூறப்படவில்லை.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com